Jump to content

சீனாவின் மாவோ ஆட்சியில் மாம்பழங்கள் வணங்கப்பட்டது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் மாவோ ஆட்சியில் மாம்பழங்கள் வணங்கப்பட்டது ஏன்?

  • எம், மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
மாவோ

கடந்த மாதத்தில் ஒருநாள் பாகிஸ்தான் அரசு பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்களைக் கொண்ட பெட்டிகளை அனுப்பியது. ஆனால் அமெரிக்காவும் சீனாவும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன. கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் வெளிநாட்டுப் பழங்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இந்தச் செய்தியை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டது.

பழங்கள் வேண்டாம் என்று கூறிய நாடுகளில் கனடா, நேபாளம், இலங்கை உள்ளிட்டவையும் அடக்கம். மொத்தம் 32 நாடுகளுக்கு பழங்களை அனுப்பியதாகவும் அவற்றில் பெரும்பாலான நாடுகள் அவற்றை ஏற்பதற்குத் தயக்கம் காட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இது ஏதோ வர்த்தக நடவடிக்கை என்றோ, வணிகத்துக்காக அனுப்பப்பட்ட பழங்கள் திருப்பியனுப்பப்பட்டன என்றோ நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த மாம்பழங்கள் பாகிஸ்தானின் ராஜீய உறவின் அடையாளமாக வழங்கப்பட்டவை. இப்போது பல நாடுகளால் மறுக்கப்பட்ட மாம்பழங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு வரலாற்றையே எழுதியிருக்கின்றன.

சீனாவில் உள்நாட்டுப் போர் முடிந்து மாவோ சே துங் ஆட்சியில் இருந்த காலம். முன்னோக்கிய பெரும் பாய்ச்சல், பெரும் பஞ்சம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சீனாவில் சிந்தனைகளை ஒன்று திரட்டுவதற்காகவும், ஆட்சிக்கு எதிரானவர்களை அழிப்பதற்காகவும் 1966-ஆம் ஆண்டில் மாவோவால் பண்பாட்டுப் புரட்சி கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது.

ஸ்டூடன்ட்ஸ் ரெட் கார்ட்ஸ் எனப்படும் மாணவர் செம்படையை இதற்காக மாவோ உருவாக்கினார். ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவு. ஆனால் அவர்களே மாவோவுக்குச் சிக்கலாக மாறினார்கள் என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

மாணவர் செம்படைக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டன. அதிகாரப் போட்டியால் குழப்பம் உருவானது. மாணவர் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் என அனைத்தும் பிரிந்து நின்றன. இந்தச் சண்டையை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு வெறொரு வழியைத் தேட வேண்டிய நிலை மாவோவுக்கு ஏற்பட்டது.

மாம்பழம்
 
படக்குறிப்பு,

மாவோவின் புகைப்படத்துடன் வெளியான சுவரொட்டி

அவர்களை ஒடுக்குவதற்காக கிங்ஹுவை பல்கலைக்கழகத்துக்கு சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்பினார். அவர்களிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. சிறு சிவப்புப் புத்தகத்தையும் தாயத்தையும் மட்டுமே கொண்டு சென்றனர். அவர்களை மாணவர்கள் கடுமையாகத் தாக்கினர். பல்கலைக்கழகத்தில் இருந்தை அமிலத்தை வீசினர். அதில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நீண்ட மோதலுக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் சமரசமாகி சரணடைந்தனர்.

இந்த அரிய பணியை செய்து முடித்ததற்காக தொழிலாளர்களுக்கு மாவோ சே துங் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

மாம்பழங்கள்.

அதற்கு முந்தைய நாள் வரை மாவோவுக்கு 'மாம்பழம்' என்றால் என்னவென்றே தெரியாது.

பிறகு ஏன் மாம்பழத்தைக் கொடுத்தார் என்று கேட்கிறீர்களா?

அவை பாகிஸ்தானின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக சீனாவுக்கு வந்து சேர்ந்தவை. முந்தைய நாளில்தான் அப்போது பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் அர்ஷத் ஹுசைனில் மாவோவுக்கு அவை பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

"அந்த காலகட்டத்தில் வடக்கு சீனாவில் மாம்பழங்களைப் பற்றி யாருக்குமே தெரியாது. அதனால் மாவோ கொடுத்த பழங்களை சாப்பிடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். முகர்ந்து பார்த்தனர். தடவிக் கொடுத்தனர். இது என்ன மந்திரப் பழம் என்று வியந்து கொண்டிருந்தனர்," என்கிறார் அறிவியலாளர் ஃபிரெட் முர்க்.

ஊர்வலம்

அந்த நேரத்தில் தலைமைப் பொறுப்புகள் மாணவர் அமைப்புகளிடம் இருந்து தொழிலாளர் அமைப்புகளிடம் மாற்றப்பட வேண்டும் என்றும் மாவோ உத்தரவிட்டிருந்தார். அது ஒரு வழியாக கலகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. மாம்பழங்கள் மாவோவுடன் நெருங்கிய தொடர்புடையவையாக மாறின.

மக்கள் அதை வணக்கத்துக்குரியதாக கருதத் தொடங்கினார்கள். ஒரு வகையில் பண்பாட்டுப் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பழம் என்ற பெருமையும் மாம்பழத்துக்குக் கிடைத்தது. அதற்கு புனிதத் தன்மை வழங்கப்பட்டது.

மாவோ கொடுத்த மாம்பழங்களை பிரித்துச் சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர். சிலர் இசையை ஒலித்தபடி மாம்பழத்தை வீதிவீதியாக எடுத்துச் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரேயொரு மாம்பழம் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

மாவோ
 
படக்குறிப்பு,

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மாம்பழங்கள்

மாவோ கொடுத்த சில மாம்பழங்கள் அழுகத் தொடங்கியபோது, அவற்றை அறுத்து நீரில் போட்டு, அதைப் புனித நீராகக் கருதத் தொடங்கினர். ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு கரண்டி அளவு நீரைக் குடித்து மகிழ்ந்தனர். மாம்பழங்கள் செய்தித்தாள்களை ஆக்கிரமித்தன. சுவரொட்டிகளில் இடம்பிடித்தன.

புனிதப் பழமாகக் கருதப்பட்ட மாம்பழம் ஒரு கட்டத்தில், மாவோவிடம் இருந்து வந்த பரிசு என்பதையும் தாண்டி, மாம்பழமே மாவோதான் என்ற அளவுக்கு அதன் பெருமை உச்சத்துக்குச் சென்றது. மாவோவையும் மாம்பழத்தையும் புகழ்ந்து பாடல்களும் பாடப்பட்டன.

அதன் பிறகு 1976-ஆம் ஆண்டு மாவோ இறக்கும்வரை அவரது புகழ் சீனா முழுவதும் பரவியிருந்தது. அதன் பிறகு மாம்பழம் மீதான புனிதத் தன்மையும் குறைந்து விட்டது.

இப்போது பெய்ஜிங்கின் எல்லா பழக்கடைகளிலும் மாம்பழங்கள் கிடைக்கும். அது சீனர்களின் உணவுப் பொருள் பட்டியலில் அங்கமாகி விட்டது. ஆனாலும் சீனாவின் வரலாற்றில் அதற்கு நிரந்தர இடம் உண்டு.

https://www.bbc.com/tamil/global-58485304

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான கட்டுரை ஏராளன்! நன்றி.

பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் ஷியாவுல் ஹக் அவர் சென்ற விமானம் வெடித்துச் சிதறி இறந்தார்! எல்லாப் பாதுகாப்பு பரிசோதனைகளும்  விமானத்திற்குச் செய்யப் பட்ட பின்னர், ஒரு பெட்டி மாம்பழங்கள் கடைசி நேரத்தில் ஏற்றப் பட்டதாக ஒரு செய்தியில் வாசித்தேன்!

பவர்புல்லான பழம் தான் போல மாம்பழம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழம் மாவோப்பழம் ஆன கதை போலும். சுவாரஸ்யமாய் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.