Jump to content

ஆன்லைன் ஷாப்பிங்: ஆசை வார்த்தை, சரளமான ஆங்கில பேச்சு - இருவர் ஏமாந்த கதை, வல்லுநர் அறிவுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் ஷாப்பிங்: ஆசை வார்த்தை, சரளமான ஆங்கில பேச்சு - இருவர் ஏமாந்த கதை, வல்லுநர் அறிவுரை

  • பிரபுராவ் ஆனந்த்
  • பிபிசி தமிழுக்காக
47 நிமிடங்களுக்கு முன்னர்
கணினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் முதல் பகுதி இது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர் புகைப்படங்கள் எடுப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பதால் கேமரா வாங்குவதற்காக இணையதளத்தில் கேமரா மாடல்கள் மற்றும் விலை பட்டியல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி, அவரது பேஸ்புக் பக்கத்தில் சலுகை விலையில் கேமரா விற்பனைக்கு உள்ளதாக ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அதில் குறிப்பிட்ட அந்த கேமராவின் விலை 30 ஆயிரத்து 500 ரூபாய். ஆனால் சலுகை விலையில் கேமராவிற்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கேமரா வாங்கும் ஆர்வத்தில் இருந்த அந்த இளைஞர் பேஸ்புக்கில் இருந்த லிங்கை க்ளிக் செய்து கேமராவை ஆர்டர் செய்துள்ளார்.

வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த அழைப்பு

சற்று நேரத்தில் அந்த இளைஞரின் செல்போனிற்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் கேமரா வாங்கியதற்கு நன்றி எனவும், நீங்கள் மேலும் 60 ஆயிரம் செலுத்தினால் உங்கள் கேமராவுடன், ஆப்பிள் ஐ போன், ஆன்ட்ராய்டு போன் மேலும் சில எலட்ரானிக் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் இலவசமாக கிடைக்கும் என்றதுடன், அனைத்து பொருட்களின் புகைப்படங்களையும் அந்த இளைஞரின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர்.

கணினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனை நம்பிய அந்த இளைஞர் தனது வங்கி கணக்கில் இருந்து அவர்கள் கேட்ட தொகையை இணைய வழி பண பரிவர்த்தனை செய்துள்ளார். இரண்டு நாட்களாகியும் பொருள் வீடு வந்து சேரவில்லை. எனவே அந்த இளைஞர் தனக்கு வந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொருட்கள் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் உங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள அனைத்து பொருட்களும் விலை உயர்ந்த பொருட்கள் என்பதால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வர வரி செலுத்த வேண்டும். எனவே மேலும் 90 ஆயிரம் ரூபாயை அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு மற்றொரு வங்கி கணக்கு எண் விபரங்களை கொடுத்துள்ளனர். இதனை நம்பிய அந்த இளைஞர் `கூகுள் பே` மூலமாக பணம் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து அந்த ஆன்லைன் நிறுவனம் செல்போனில் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு வெவ்வேறு தேதிகளில் அந்த இளைஞரின் அப்பா வெளிநாட்டில் சம்பாதித்து சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக இளைஞரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்த 21.83 லட்சம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், கேமரா உள்பட எந்த பொருளும் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர் ஒரு வாரமாக வீட்டின் அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளைஞரின் பெரியப்பா நடந்ததை விசாரித்துள்ளார். அதில் மோசடி கும்பல் ஒன்று அந்த இளைஞரை ஏமாற்றியது தெரியவந்ததையடுத்து அந்த இளைஞரின் பெரியப்பா ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கை நேரில் சந்தித்து நடந்ததை கூறி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனையை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரனையில் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்குகள் அனைத்தும் மேற்கு வங்கத்தை சேர்ந்தது என தெரியவந்தது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த மோசடி கும்பல் குறித்த முழு விபரங்களும் கிடைத்தன.

இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படை இன்னும் ஓரிரு நாட்களில் மேற்கு வங்கத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் வட்டாரத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சம்பவம்

கடந்த 3ஆம் தேதி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் இதே போல மற்றொருஆன்லைன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பரிசு விழுந்ததாக கூறி ரூ.92 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் அந்த இளைஞர், "எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி. நான் சமீபத்தில் கல்லுரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறேன்.

நான் கடந்த மாதம் 27ஆம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றின் மூலம் நாடித்துடிப்பு கண்டறியும் உபகரணம் (pulse meter)ஒன்று வாங்கினேன். அதன் பிறகு என்னுடைய வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதில் "நீங்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிய நாடித்துடிப்பு கண்டறியும் உபகரணத்திற்கு ரூ.9.30 லட்சம் பரிசு விழுந்துள்ளது. இந்த தொகையை பெற கமிஷன் தொகையாக ரூ.9 ஆயிரத்தி 300 செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.

அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது ஒரு பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். வங்கி அல்லது செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதை போல் அந்த பெண் நான் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் மிகவும் துல்லியமாக பதில் அளித்தார். இதனால் வாடிக்கையாளர் மையத்தில் இருந்து தான் அழைத்து நமக்கு பரிசு விழுந்தது குறித்து சொல்கிறார்கள் என நம்பினேன்."

சைபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்தடுத்து பணம் அனுப்பினேன்

"வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிய வங்கி கணக்கிற்கு 9,300 ரூபாய் செலுத்தினேன். ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த பரிசு தொகை எனக்கு கிடைக்கவில்லை. பின்னர் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த பெண் நீங்கள் உரிய நேரத்தில் வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்தாததால் நீங்கள் அனுப்பிய தொகை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத் தொகையை செயல்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர மேலும் ரூ.27 ஆயிரத்து 900 அனுப்ப வேண்டும் அப்படி செலுத்தினால் நீங்கள் முன்னதாக செலுத்திய பணமும் மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும் பயப்பட வேண்டாம் என அந்த பெண் கூறினார்.

நான் மீண்டும் அவர்கள் கேட்ட தொகையை செலுத்தினேன், அப்போது வங்கி பண பரிவர்த்தனையில் நிலுவை தொகை இருப்பதாக கூறி ரூ.49 ஆயிரத்து 800 அனுப்பும் படி மீண்டும் வாட்ஸ் ஆப் மூலம் செய்தி வந்தது.

நான் அவர்கள் கேட்ட தொகையை கொஞ்சமும் கூட யோசிக்காமல் செலுத்தினேன். கடைசியாக 5 ஆயிரத்து 550 ரூபாயை அனுப்பினால் உங்கள் பரிசுத்தொகை வீடு தேடி வந்துவிடும் என்ற செய்தி வந்தது. நான் அந்த தொகையையும் செலுத்தினேன் ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை.

இவ்வாறு பல தவணைகளில் மொத்தமாக ரூ.92 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது உடனடியாக அந்த வாட்சப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு அலுவலக முகவரி கேட்டேன் அதற்கு அந்த பெண் இந்த நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இயங்கி வருவதால் இந்தியாவில் அலுவலகம் இல்லை என தெரிவித்தார்.

அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டது எனக்கு தெரியவந்தது. மீண்டும் அந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு என்னை நீங்கள் ஏமற்றியது எனக்கு தெரிந்து விட்டது விரைவில் காவல்துறையிடம் புகார் அளித்து உங்களை பிடித்து விடுவேன். என்னிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன் தொடர்பை துண்டித்த அந்த பெண் என்னுடைய எண்ணை ப்ளாக் செய்து விட்டார்.

தன்னை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த தொகை ரூ.92 ஆயிரத்து 220 ஐ பெற்றுத்தர கோரி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்," என்றார்.

கொரோனா சமயத்தில் அதிகரித்த மோசடிகள்

சைபர் பாதுகாப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாள்களில் பதிவாகிய இரு வழக்குகள். ஆனால் அங்குமட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெருந்தொற்று காலத்தில் இம்மாதிரியான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓராண்டில் மக்களிடையே ஆன்லைன் பயன்பாடு அதிகரித்துள்ளது போலவே மோசடிகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் தமிழகத்தின் ஒங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி அர்ஜுன் சரவணன்.

"அறியாமை மற்றும் பேராசை இந்த இரண்டு காரணங்களால்தான் ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுகின்றன," என்கிறார் அவர்.

"அதேபோன்று ஒரு குறிப்பிட்ட மோசடி குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டால் மோசடி நபர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர்.'

இப்போது பெரிதும் உங்கள் கார்டின் எண்களை யாரும் கேட்பதில்லை ஏனென்றால் அதுகுறித்த விழிப்புணர்வு வந்துவிட்டது.

எனவே புதுப்புது வழிகளில் ஏமாற்ற முயற்சிப்பார்கள். சில சமயங்களில் பாலியல் பலவீனங்களை கொண்டு மோசடியில் ஈடுபடுவர்." என்கிறார் அவர்.

அரசாங்கம் இதுகுறித்த விழிப்புணர்வை அனைத்து தளங்களிலும் ஏற்படுத்தி வருகிறது அதேபோன்று மக்களும் இதுகுறித்து வெளியில் பேச தயாராக இருக்க வேண்டும் என்கிறார் அர்ஜுன் சரவணன்.

அதுமட்டுமல்லாம் இம்மாதிரியான ஆன்லைன் பரிவர்த்தனைகளில் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் அப்படியே அம்மாதிரியான சூழல் வந்தால் ஒரு சிறிய தொகையை அனுப்பி விட்டு அதற்கான உறுதி வந்த பிறகு மேற்கொண்ட பரிவர்த்தனையை செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோன்று ஆன்லைன் ஷாப்பிங்கில் பரிவர்த்தனை செய்யும் போது நாம் பணம் செலுத்த எத்தனிக்கும் வலைதளம் உண்மையானதா அல்லது பாதுகாப்பானதா என்பதை சோதித்த பிறகு பரிவர்த்தனை செய்யலாம் என்ற எச்சரிக்கையையும் காவல்துறையின் சைபர் பிரிவு கூறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ராமநாதபுரம் சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் திபாகர் பிபிசி தமிழிடம் பேசுகையில்,

"நீங்கள் செலுத்திய பணம் ஒரு மோசடி கும்பலின் வங்கி கணக்கு என தெரிய வந்தால் உடனடியாக 155260 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் பணம் செலுத்தி ஏமாந்த வங்கி எண்ணை தெரிவிக்கலாம். 24 மணி நேரத்திற்குள் நீங்கள் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கில் இருந்து அந்த நபர் எடுக்கவில்லை என்றால் பணத்தை அந்த வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாமல் நிறுத்தி வைக்க முடியும்." என்கிறார்.

நீங்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருந்தால், உங்கள் அனுபவங்களை bbctamizh@gmail.com என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம்.

https://www.bbc.com/tamil/india-58509192

பேராசை பெரு நட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.