Jump to content

மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா

image_f7591787b4.jpg

மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி லக்ஷ்மன், செப்டெம்பர் 14ஆம் திகதியன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளார்.

  தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 திசெம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தனது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்பட்டார்.

பேராசிரியர் லக்ஷ்மன் நன்கறியப்பட்ட பொருளியலாளர் ஆவார். இவர் 1994 இலிருந்து 1999 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார். 2005இல் கல்வியல் துறையில் அவர் ஆற்றிய பணிக்காக தேசமான்ய விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராவார்

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மத்திய-வங்கியின்-ஆளுநர்-இராஜினாமா/175-280620

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசு 80தாம் நம்ப முடிகிறதா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

வயசு 80தாம் நம்ப முடிகிறதா 

இந்த வயசில அறளை பெயராம, எப்படி வேலை செய்திருப்பார்? 🤔
 

தனது 80வது வயது வரை வேலையில் இருக்க வேண்டும் என்ற  இலட்சியத்தில் இருந்தாராம். ஆறு கிழமை முன்னதாக விலகுகிறார்.

 

பழைய கவர்னர், கப்ரியல் வருவதால், இவர் போறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

வயசு 80தாம் நம்ப முடிகிறதா 

வீட்டில் இம்சை இல்லை என்றால் ஆண்கள் என்றுமே மார்க்கண்டேயர்கள் தான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "நான் இருந்தேன் தேருக்குள்ளே, மூணு முடிச்சாலே விழுந்தேன் சேரிக்குள்ளே." சாமியாரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பழைய கவர்னர், கப்ரியல் வருவதால்

அது கப்ரியல் அல்ல, கப்ரால்

அதுவும் சாதா கப்ரால் அல்ல "கப்சா" கப்ரால் , கப்ரால் கோதாவில் இறங்கினால் பொருளாதார வளர்ச்சி வானை முட்டும். புள்ளி விபரங்களில் பொறி பறக்கும் கோயபல்ஸ் இற்கே டப் கொடுக்கும் அளவுக்கு கப்சா விடுவார் அதனாலேயே இலங்கையர்களால் கப்சா கப்ரால் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது கப்ரியல் அல்ல, கப்ரால்

அதுவும் சாதா கப்ரால் அல்ல "கப்சா" கப்ரால் , கப்ரால் கோதாவில் இறங்கினால் பொருளாதார வளர்ச்சி வானை முட்டும். புள்ளி விபரங்களில் பொறி பறக்கும் கோயபல்ஸ் இற்கே டப் கொடுக்கும் அளவுக்கு கப்சா விடுவார் அதனாலேயே இலங்கையர்களால் கப்சா கப்ரால் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

நாட்டின், பிரச்சணையின் முக்கியமான அறிகுறி, வியாபார நிறுவன கிட்டங்கிகளை, பதுக்கல் என்று, அரசே கொள்ளையடித்து மக்களுக்கு கொடுப்பது....

வியாபார நிறுவனங்கள் இனி இயங்க பயப்படு்ம்... தவிர்க்கு்ம்....

பாரிய பிரச்சணைகள் வரும்... சிங்களமக்கள் கொந்தளிப்பர்....

ஊரில், யுத்தகாலத்தில் சமாளிக்க செய்ததை, செய்ய தமிழ் மக்கள் தயார்.

புலித்துவக்கு, செய்யாததை, கண் பார்க்க முடியாத கிருமி செய்கிறது....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மரவள்ளி வைச்சிட்டன்😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.