Jump to content

10 000 அடி உயரத்தில் இருந்து விழுந்த சிறுமிக்கு என்ன ஆச்சு தெரியுமா?


Recommended Posts

Lion_Air_Flight_904_wreckage_-_Bali_-_13_April_2013.jpg

பொதுவாகவே விமானவிபத்துக்கள் நடைபெற்றால் அதில் பயணம் செய்யும் அனைவருமே இறந்துவிடுவார்கள் மிக மிக அரிதாகத்தான் அதில் பயணம் செய்யும் சிலர் உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அப்படி உயிர்தப்பினாலும் கை கால்களை இழந்தோ அல்லது நிரந்தர பாதிப்புக்களுடனேதான் நாம் உயிர்வாழமுடியும் ஆனால் நாம் இப்போது ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம்

 

 

 
1971 டிசம்பரில் ஜூலியான கோபிக் என்ற 17 வயதுச்சிறுமி தனது ஹை ஸ்கூல் பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் தாயுடன் சேர்ந்து புல்காப்பா என்ற இடத்தில் இருந்து லீமா என்ற இடத்திற்கு விமானத்தின் மூலம் புறப்படுகின்றார்கள் பட்டமளிப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் லஸ்னா 508 என்ற தனியார் விமானத்தின் மூலம் இவர்கள் புறப்படுகின்றார்கள் லீமா என்ற இடத்தில் இருக்கும் தன் தந்தையுடன் பட்டமளிப்புவிழாவைக்கொண்டாடுவதற்காகவே அவர்கள் விரைவாக தமது பிரயாணத்தை ஆரம்பித்திருந்தார்கள்
 

 

இரண்டு நகரங்களுக்குமிடையில் ஒரு மணி நேர பிரயாண இடைவெளிதான் இருந்தது அவர்கள் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது வானிலை திடீர் என மோசமடைகின்றது எங்கும் கும்மிருட்டு மழையுடன் மின்னலடிக்க ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் பயணிகள் பயத்தில் அலறினாலும் கேப்டன் அவர்களை சமாதானப்படுத்துகின்றார் ஆனால் திடீர் என ஒரு பெரிய மின்னல் விமானத்தின் இறக்கையை தாக்கிவிட விமானம் இருளில் மூழ்கிவிடுகின்றது எல்லாம் முடிந்துவிட்டது என ஜூலியானாவின் அம்மா கூறிவிட விமானத்தின் எஞ்சினும் செயலிழந்துவிடுகின்றது கட்டுப்பாட்டை இழந்தவிமானம் கீழே விழ ஆரம்பிக்கின்றது உள்ளேயிருந்த பிரயாணிகள் அலற ஆரம்பிக்கின்றார்கள் சடுதியாக விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துவிட ஜூலியானவின் தாயார்  ஜூலியானாவின் கண்முன்னாலேயே வெளியே தூக்கிவீசப்படுகின்றார்

 

palne%2Bcrush%2Bsurviar.jpg
 

 

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரும் தூக்கிவீசப்படுகின்றார் ஆனால் அவர் சீட் பெல்ட்டினால் சீட்டில் இணைக்கப்பட்டிருந்தார் 3 நபர்கள் அடுத்தடுத்து அமரக்கூடிய அந்த சீட் அவருடன் சேர்த்து வெளியில் வீசப்பட்டிருந்தது விபத்து நடந்தபகுதிக்கு கீழேதான் மிக அடர்த்தியான அமேசான் காடு அமைந்திருந்தது வெளியே தூக்கிவீசப்பட்ட ஜூலியானா கீழே விழ ஆரம்பித்தார் ஆனால் ஹெலிஹாப்டரின் இறக்கை சுற்றுவதைப்போல் அவரது சீட் மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது ஜீலியானாவிற்கு உலகமே மிகவேகமாக சுற்ற ஆரம்பித்திருந்தது அந்தவேகத்தில் சீட் சுழன்றுகொண்டு கீழே விழ ஆரம்பிக்க்க ஜூலியானா மயங்கிவிடுகின்றார்

காட்டுக்குள் விழுந்த ஜூலியானா சுமார் 20 மணித்தியாலங்கள்வரை மயக்கன்  நிலையிலேயே இருந்திருக்கிறார் விழித்ததும் சீட்பெல்டில் இருந்து தன்னைவிடுவித்துக்கொள்கின்றார் அப்போதுதான்  நடந்த கொடூர சம்பவம் கனவல்ல என்பதும் நடுக்காட்டிற்குள் தான் தனி ஆளாக தப்பியிருப்பதையும் அவர் உணர்ந்துகொள்கின்றார் அதிஷ்டவசமாக அவரது கடிகாரம் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்தது அப்போது நேரம் அதிகாலை 9 மணி மழைபெய்துகொண்டிருந்தது

 

https___prod.static9.net.au___media_2018_11_02_16_07_0211_koepcke2_env.jpg
 

 

உடல்முழுவதும் வலி அவரால் நடக்கவேமுடியவில்லை அதோடு மழையில் நன்றாக நனைந்துமிருந்தார் இதனால் வேறுவழியில்லாமல் ஒரு சீட்டின் கீழே சுருண்டு படுத்துக்கொண்டார் ஜூலியானா சிறிது நேரத்தில் என் உடலில்  எந்த உணர்ச்சியையும் உணரமுடியவில்லை என்று கூறுகிறார் ஜூலியானா அதன்பின்னர் மீண்டும் மயங்கிவிடுகிறார்  நாள் முழுவதும் மயக்கத்திலேயே சீட்டின் அடியில் கழிந்துவிடுகின்றது

எழுந்து நடக்கவே ஒரு நாள் ஆகின்றது எழுந்து நடக்கும்போதுதான் தனது தோள்மூட்டு உடைந்திருப்பட்தையும் தொடையில் பெரிய வெட்டுக்காயம் இருப்பதையும் தெரிந்துகொள்கின்றார் ஜூலியானா ஆனால் அதிஷ்டவசமாக இரத்தம் அதிகம் வெளியேறவில்லை அதோடு உடைந்த தோள்மூட்டு எலும்பு தோலைக்கிழிக்கவில்லை

 

ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தில் புழுப்பிடித்துவிடுகின்றது இதனால் கையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றவேண்டியேற்பட்டுவிடுமோ என ஜூலியான பயப்படுகிறார் ஆனாலும் அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை

வைத்தியர்கள் பின்னர்தான் அவரது முதுகெலும்பிலும் உடைவுகள் இருந்திருப்பதாக கூறுகின்றார்கள் ஆபத்துவேளைகளில் உடலில் சுரக்கும் அட்ரினலின் ஹோமோன்காரணமாகத்தான் இவற்றின் வலியை உணராமல் தொடர்ந்தும் ஜூலியானா இயங்கியிருக்கின்றார்

நீண்டமுயற்சிக்குப்பின் வலியிலும் அவர் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கின்றார்  முதலைகள் பாம்புகள் விஷப்பூச்சிகள் நிறைந்திருக்கும் காடுதான் அமேசன் அதில் இருந்து தன்னந்தனியாகதப்பிவருதல் என்பது மிக்ச்சவாலான விடயம்தான்

அங்குதான் அவருக்கு அவரது தந்தைகற்றுக்கொடுத்தவிடயங்கள் நினைவுக்கு வருகின்றது அவரது தந்தை ஒரு சூலொஜிஸ்ட் தாவரங்கள் காடுகள் உயிரங்கள் பற்றிய புலமைகொண்டவர் அவர் அதோடு ஜூலியானாவின் சிறியவயதில் அவர்கள் வசித்த வீடும் இதே மாதிரியான காட்டுப்பகுதிக்குள்தான் அமைந்திருந்தது இவற்றினால் காட்டின் அசாதாரண சூழ்னிலைகளில் எப்படி உயிர்தப்புவது என்பதைப்பற்றிய பல விடயங்களை ஜூலியான சிறியவயதிலேயே அறிந்திருந்தார் இதுதான் அவர் உயிர்தப்புவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது

உடனடியாக வேறுயாராவது உயிருடன் இருக்கிறார்களா எனத்தேட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு கிடைத்தவையெல்லாம் பிணங்கள் மட்டுமே தன் தாயையும் தேட ஆரம்பிக்கின்றார் ஆனால் அவர்தொடர்பாக எந்த தடயமும் ஜூலியானாவிற்கு கிடைக்கவில்லை இதானால் உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு உடைகள் மருந்துகள் கிடைக்கின்றதா என உடைந்தவிமானத்திற்குள்ளே தேட ஆரம்பிக்கின்றார் ஜூலியானா

இப்படியே 4 நாட்கள் கழிந்துவிட வெளியே செல்லும்வழியைத்தேடி நடக்க ஆரம்பிக்கின்றார் ஜூலியானா திடீர் என பெரிய கழுகு ஒன்று கீழே வந்து அமர்ந்துவிடுகின்றது அப்போத்தான் அங்கே மேலும் சில பிணங்கள் இருப்பதை பார்க்கிறார் ஜூலியானா தன் தாயாக இருக்குமோ என்ற பயத்தில் ஓடிச்சென்று பார்த்தால் அது அவரது தாயாரல்ல இவ்வாறு திக்குத்தெரியாமல் நடந்து செல்லும் நாட்களில் மீட்பு விமானத்தின் சத்தத்தையும் ஜூலியானா கேட்கத்தவறவில்லை ஆனால் தான் கீழே இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவுமே இருக்கவில்லை அதோடு 20 30 அடி உயரத்திற்கு அடர்த்தியான மரங்கள் இருப்பதால் கீழே இருக்கும் ஜூலியானாவை விமானத்தில் இருப்பவர்களால் பார்க்கவும்முடியாது நாட்கள் செல்கின்றன உயிரோடு தப்பவேண்டுமென்றால் காட்டைவிட்டுத்தப்பி சென்றாகவேண்டும்

 

7ecf7b59d73569d1bf91638533f78117.jpg
 
 
 

 

வேறு வழியே இல்லை உதவுவதற்கும் யாருமில்லை காட்டில் நீருக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை பெய்யும் மழை நீரை சேகரித்து அவரால் குடிக்கமுடிந்தது ஆனால் உணவை தேடுவது அவளவு இலகுவானதாக இருக்கவில்லை காட்டில் இருக்கும் கிழங்குகள் பழங்களை உண்னமுடியாது அவை விசமுள்ளவையாக இருந்தால் உடனடியாக மரணம்தான் ஆனால் அதிஷ்டவசமாக விமானத்தில் ஒரு சாக்லேட் பையொன்றை கண்டுபிடித்திருந்தார் அதற்குள்ளும் சில துண்டுகளே இருந்தன எனவே நாள் ஒன்றுக்கு இரண்டு துண்டுகளை தன் உணவுத்தேவைக்கு பயன்படுத்தவேண்டியேற்பட்டது ஆனாலும் அவை முடிந்ததும் பசியால் மிகவும் துடித்துப்போனார் ஜூலியானா

இதனால் வேறுவழியில்லாமல் கண்ணில் தென்படும் தவளைகளை பிடித்து உண்பது என்றமுடிவுக்கு வருகிறார் ஆனால் அவர்மிகவும் பலவீனமாக இருந்தமையால் அவரால் தவளைகளைப்பிடிக்கமுடியவில்லை பின்னர்தான் அவை விஷமுள்ள தவளைகள் என்றவிடயம் தெரியவருகின்றது

அப்போதுதான் ஒரு நீரோடையை கண்டுபிடிக்கின்றார் ஜூலியானவின் தந்தை காட்டில் தொலைந்துபோனால் நீரோடையைக்கண்டுபிடித்து  அது ஓடும்திசையில் அதோடுசென்றால் காட்டில் இருந்து தப்பிப்பதற்கான வழிகிடைக்கும் என அவரது சிறியவயதில் கூறியது அவருக்கு நினைவுக்கு வந்தது

நீரோடைகள் பல இணைந்தே ஆறாக ஓடுகின்றன எனவே இலகுவாக காட்டில் இருந்து வெளியே சென்றுவிடமுடியும் எனவே இந்த ஐடியாவை ஜூலியானா பின்பற்ற ஆரம்பித்தார்

ஆரம்பத்தில் சில நாட்கள் காத்திருந்து உயிர்தப்பியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் இணைந்து உயிர்தப்புவது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் ஆனால் அது ஆபத்து என உணர்ந்துகொண்டதால் ஜூலியானா முடிவெடுத்திருந்தார் ஆனால் வெளியே சென்றுகொண்டிருக்கும்போது தனது சூக்களில் ஒன்றை ஜூலியானா தொலைத்திருந்தார் இதனால் தாரையில் இருக்கும் பாம்புகள் தொடர்பான பயம் அவருக்கு அதிகரித்தது அதோடு அவரது கண்ணாடியும் தொலைந்துவிட்டது இதனால் பார்வையிலும் தெளிவு இருக்கவில்லை அதோடு அவரது கடிகாரமும் நின்றுவிட்டது இதனால் காலில் இருக்கும் ஒரு சூவின் உதவியுடன் பாஅம்பு இருக்கின்றதா என தரையை தடவிதடவிதடவி சோதனைசெய்துகொண்டே நடந்தார் ஜூலியானா

நீரோடை ஆறாகமாறியது ஆனால் ஆற்றின் குறுக்காக பெரிய மரம் ஒன்றுமுறிந்துவீழ்ந்திருந்தது இதனால் பாதை தடைப்பட்டது ஆரம்பத்தில் நம்பிக்கையிழந்தாலும் மீண்டும் முயற்சிசெய்து மரத்தைக்கடந்து முன்னேற ஆரம்பித்தார் ஜூலியானா சிறிது தூரம் சென்றதும் அவரது கண்முன்னால் ஒரு படகு தெரிந்தது ஆரம்பத்தில் இது கற்பனை என எண்ணினாலும் அருகில் சென்று தொட்டுப்பார்த்ததும் அது உண்மை என ஜூலியானாவிற்கு புரிந்துவிட்டது

 

சந்தோஷத்தில் ஜூலியானாவிற்கு தலைகால்புரியவில்லை உடனடியாக போர்ட்டில் ஏறினார் போட் நீரோட்டத்தில் தானாக செல்ல ஆரம்பித்தது ஜூலியானாவால் துடுப்பை இயக்கமுடியவில்லை காரணம் அவரது கையில் இருந்த புழுப்பிடித்த காயம் அதோடு புழுக்கள் இன்னும் சற்று ஆழத்துக்கு சென்றிருந்த்ன.அப்போதுதான் போர்ட்டில்  இருந்த எண்ணைக்கான் அவரது கண்களுக்கு தெரியவருகின்றது சிறியவயதில் நாயின் காலில் இருந்த புழுப்பிடித்த காயத்திற்கு ஜூலியானவின் தந்தை எண்ணை ஊற்ரியது நினைவுக்குவர அதையே ஜூலியானாவும் செய்தார் மிகுந்த எரிச்சல் வலி ஏற்பட்டாலும் அது வேலைசெய்தது 30 புழுக்களை அவரால் வெளியே பிடுங்கி எடுக்கமுடிந்தது ஆனால் படகு மீண்டும் காட்டிற்குள்தான் சென்றுகொண்டிருந்தது

மீண்டும் மயங்கிய ஜூலியானா கண்விழிக்கும்போது தரையௌயும் அதில் கட்டப்பட்டிருந்த சிறியகுடிசையையும் காண்கின்றார் அவரால் படகில் இருந்து கீழிறங்க முடியவில்லை நீண்டமுயற்சிக்குப்பின் ஜூலியானா தரையிறங்கி குடிசையை நோக்கி ஓடுகின்றார் அங்கே 2 பழங்குடி இனத்தவர்கள் இவரைக்கண்டவுடன் மிரண்டுவிடுகின்றார்கள் இரத்தச்சிவப்பில் கண்கள் உடல்முழுவதும் இரத்தத்துடன் தங்கமுடியைக்கொண்ட பெண் இதே உருவத்தில் அவர்கள் வழிபடும் பேய் தெய்வமொன்று ஆற்றில் வாழ்வதாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள் ஒருவேளை அதுதானோ என அவர்கள் ஆரம்பத்தில் பயந்துவிட்டார்கள் 

 

article-2418765-1BC8EA47000005DC-452_636x382.jpg
 

 

விபரீதன்  நடப்பதற்கு முன்னர் ஜூலியானா தனக்குத்தெரிந்த ஸ்பானிஸ் மொழியில் நடந்தவிபத்திய அவர்களுக்கு கூறி உதவி கேட்க புரிந்துகொண்ட அவர்கள் அருகில் இருந்த நகரத்திற்கு  ஜூலியானாவை அழைத்துச்சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜூலியானா விபத்து நடந்த 11 வது நாளில்தான் இது  நடைபெற்றது

அந்த விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே ஒரு நபர் இவர்தான் என்ற விடயம் பின்னர்தான் ஜூலியானாவிற்கு தெரியவருகின்றது திரைப்பட இயக்குனர் வேர்னர் ஹேர்சொக் இந்தவிமானத்தில் செல்வதற்கு டிக்கட்டை பதிவுசெய்து இறுதினேரத்தில் கான்சல் செய்திருந்தார் அவர் இந்த விடயத்தை அறிந்ததும் இந்த சம்பவத்தை வைத்து wings of hope என்ற திரைப்படதை இயக்கி வெளியிட்டிருக்கிறார் அவர்

https://www.manithanfacts.com/2021/08/girl fell from plane pla.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆச்சரியமான விடயம்தான் ........!  👍

பகிர்வுக்கு நன்றி நண்பரே ......selfywalking ......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.