Jump to content

ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள் – அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாளைக்கு இரண்டுவேளை மாத்திரம் சாப்பிடுங்கள் – அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஒருநாளைக்கு மூன்றுவேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்கவேண்டும் ; தியாகம் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
jagath-kumara.jpg
தற்போதைய கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை அடுத்தசில நாட்களிற்கு மக்கள் தியாகங்களை செய்யவேண்டும் மூன்றுவேளையும் உணவுண்பதை தவிர்த்து இரண்டுவேளை சாப்பிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் அனேகமான மக்கள் அவலநிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன்,எவரும் 2000 ரூபாயுடன் வாழமுடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய்க்கு பதில்; 20,000 ரூபாயை அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்றால் வழங்கியிருப்போம் என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் அனைவரும் தியாகங்களை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்களும் எங்கள் சம்பளத்தினை கொவிட் நிதியத்திற்கு வழங்கியிருந்தோம், அனைவரும் இதுவரை ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுபவர்களாகயிருந்தால் அவர்கள் இன்னும் சில நாட்களிற்கு இரண்டுவேளைமாத்திரம் உணவுண்ணவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்,
அவ்வாறு வாழ்ந்தவாறு இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் நாங்கள் செய்யும் தியாகங்களே எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/136800

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரே நாங்க இருவேளை தான் உண்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள்,வயோதிபர்கள் எப்படி இரண்டு வேளை மட்டும் உண்பது..நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.சொல்பவருக்கு மனர்ஸ் இல்லயா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, யாயினி said:

குழந்தைகள்,வயோதிபர்கள் எப்படி இரண்டு வேளை மட்டும் உண்பது..நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.சொல்பவருக்கு மனர்ஸ் இல்லயா..?

உங்களுக்கு நீரோ மன்னன் கதை தெரியும் தானே!
பாண் இல்லை மன்னா என்று சொல்ல கேக் சாப்பிட சொன்னவராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுமைகோட்டின்கீழ் உள்ள நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளையும் உண்பதில்லை,  உண்ண அவர்கள் வருவாய் இடம் கொடுப்பதில்லை,

இலங்கை ஒரு வறுமைகோட்டின்கீழ் உள்ள நாடு ஏற்கனவே பல்லாயிரம் குடும்பங்கள் இரண்டுவேளைதான் உண்டிருப்பார்கள் , இப்போ அவர்கள் நிலமை பட்டினி சாவின் விளிம்பில் இருக்கும்.

தமிழர்கள் ஓரளவு பரவாயில்லை சனதொகையும் குறைவு வெளிநாட்டில் பத்து குடும்பங்களில் ஒருத்தராவது இருப்பார்கள் நெருக்கடியை சமாளித்து கொள்வார்கள், அதற்காக தமிழர்களில் வறியோர் இல்லையென்று அர்த்தமல்ல, ஒப்பீட்டளவில் அவர்களைவிட  குறைவு.

சிங்களவர்களின் நிலை அப்படியல்ல, இதனால் அதிக பாதிப்படைவது சிங்கள குடும்பங்களே, எம்மைவிட சில மடங்கு சனதொகை அதிகமாக உள்ள அவர்களில் கிராமபுறங்களில் வாழும் பல லட்சம் சிங்களவர் ஒரு றாத்தல் பாணும் பருப்போடும் ஒரு நாளை ஓட்டியவர்கள், அந்த வறுமையின் காரணமாகவே ஆமிக்கும் போனார்கள்.

உலக யுத்தங்களின் போதும், பெரும் பஞ்சத்தின் போதும் அரசுகள் தமது குடிமக்களை அளவாக உண்ணும்படி வேண்டுகோள் விடுத்ததாக அறிந்திருக்கிறோம், உலகின்  ஏழைநாடுகள் பலவே பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் இலங்கையவிட எங்கோ போய்விட்ட இக்காலத்தில்  இலங்கையின் பொருளாதாரம் பங்களாதேசத்திடம் கடன் வாங்கும் நிலையில் போய் நிற்கிறது.

ஒரு காலம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பங்களாதேச காரருக்கு நம்மவர்கள்  ஐரோப்பியர் ரேஞ்சுக்கு விலாசம் காட்டியிருப்பார்கள் .இப்போ வங்காளிகள் எங்கு இலங்கையரை கண்டாலும் நாங்கள் உங்கள் நாட்டுக்கு  கடன் கொடுத்திருக்கிறோம் என்று விரட்டி விரட்டி சொல்வார்கள், அவர்கள் பழக்க வழக்கம் அப்படித்தான்.

அருகாமையில் உள்ள உலகின் அதிக சனதொகையை கொண்ட இந்தியா சீனாகூட இப்படி ஒரு கோரிக்கையை தமது குடிமக்களுக்கு விடுத்ததாக நினைவில் இல்லை, மேற்குலகமும் இந்தியாவும் பெரிதாக உதவாமல் ஒதுங்கி கொண்டன இனிமேல் ஆட்சி மாற்றம் ஒன்று இலங்கையில் நிகழும்வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

 இன்னும் எத்தன காலம் பயங்கரவாதம், புலிகள், யுத்த வெற்றியை வைத்து சிங்களவர் மத்தியில் வண்டி ஓட்டுவீர்கள், இனி அதுபற்றி பேசினால் சிங்களவர்களே கடுப்பாவார்கள்.

ராஜநாகத்தின் வாலை பிடித்து இழுத்தால் அது திரும்பி நம்மைவிட உயரத்திற்கு எழுந்து படம் எடுத்து வந்து கொல்லவரும், அதுபோல்தான் சேர்த்த பழிபாவம் திரும்பி வந்து உங்களைவிட உயரமாய் எழுந்து நிற்கிறது அது இனி உங்களை ஆட்சி கட்டிலில் ஒருபோதும் அமரவிடாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் அநேகம் பேர் இந்த லொக் டவுனில்  தோட்டம் செய்தல்,கோழி ,ஆடு வளர்த்தல் போன்ற வேலைகளில் இறங்கி விட்டார்கள் ...இதை முதலிலே செய்திருந்தால் பொருளாதாரம் ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்திருக்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உங்களுக்கு நீரோ மன்னன் கதை தெரியும் தானே!
பாண் இல்லை மன்னா என்று சொல்ல கேக் சாப்பிட சொன்னவராம்.

இதென்ன கதை வேறை மாதிரி போகுது?   😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உங்களுக்கு நீரோ மன்னன் கதை தெரியும் தானே!
பாண் இல்லை மன்னா என்று சொல்ல கேக் சாப்பிட சொன்னவராம்.

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதென்ன கதை வேறை மாதிரி போகுது?   😷

நானும் வாசித்த போது யோசிச்சன். 

பிறகு ரோம் எண்டா என்ன, பரிஸ்/வெசாயில்ஸ் என்றால் என்ன எல்லாம் நம்ம ஈயு சொந்தங்கள்தானே எண்டு விடுட்டன்🤣.

54 minutes ago, Justin said:

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதிரி வேண்டுகோள் மக்களிடம் வைக்கும் போதெல்லாம் மக்கள் அதனை வரவேற்றதாக வரலாறு எங்கேயும் கிடையாது. 1967ல் பஞ்சம் ஏற்பட்டபோது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான காங்கிரஸ் (பழைய காங்கிரஸ். அப்போதே இந்திரா காங்கிரஸ் என ஒன்று தோன்றி பின்னர் அதுவே காங்கிரஸ் ஆன கதை வேறு) மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னது, தற்செயலாக அதைத் தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலில் பேசு பொருளானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

இல்லை இந்தக் கதை ஒருதடவை இலங்கை பார்லிமென்டிலும்  ஒலித்தது...என் எம் பெரெரா காலம்...அரிசி இல்லையெண்டால் கோழி சாப்பிடலாமென்றும் சொன்னவை....காலம் நினைவில் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இதென்ன கதை வேறை மாதிரி போகுது?   😷

அவசரத்திற்கு சரியா நினைவு வரேல்ல!

9 hours ago, Justin said:

ஏராளன், நீரோ மன்னன் றோம் எரியும் போது பிடில் வாசிச்ச ஆள்!

"பாண் இல்லா விட்டால் கேக் சாப்பிடச் சொல்லு!" என்றது பிரெஞ்சு ராணி மேரி அன்ரனெற்! ஆட்சி கவிழ்ந்த பின்னர் இவரது தலையைக் கொய்து பொது இடத்தில் பார்வைக்கு வைத்தார்களாம்!

நன்றி அண்ணை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.