Jump to content

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - 44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

44 வருடகால பிரிட்டனின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது

அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

47799115-9969593-Emma_Raducanu_gleams_as

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.

4522.jpg

இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இறுதியாக 1977 ஆம் ஆண்டில் விம்பிள்டனில் ஒரு பெரிய கிண்ணத்தை வென்ற பிரிட்டிஷ் பெண்மணியான வர்ஜீனியா வேட் உணர்ச்சிவசப்பட்ட எமா ரடுகானுவை உற்சாகப்படுத்தினார்.

இந் நிலையில் எம்மா ரடுவானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எலிசபத் மகாராணி, "இது மிகவும் இளம் வயதில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை, இது உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்று" எனக் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் விம்பிள்டனில் மரியா ஷரபோவாவுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் கிண்ணம் ஒன்றை கைப்பற்றிய இளம் வயதுடைய வீராங்கனை எம்மா ரடுவானு ஆவார்.

 

https://www.virakesari.lk/article/113127

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற இளம்புயல் எம்மா ரடுகானு - யார் இவர்?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
எம்மா ரடுகானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எம்மா ரடுகானு

வயது 18. அமெரிக்க ஓப்பன் தொடருக்கு முன் உலக தர வரிசையில் 150ஆவது இடம்.

இறுதி போட்டிக்குச் செல்வது குறித்தெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லாமல், விமான பயணச் சீட்டை எல்லாம் முன்பதிவு செய்து வைத்திருந்த எம்மா ரடுகானு தான் இன்று 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்.

தன்னை எதிர்த்து விளையாடிய லேலா ஃபர்னாண்டஸை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி, தொடரை தனதாக்கிக் கொண்டார் எம்மா.

கடந்த 44 ஆண்டுகளாக மகளிர் பிரிவில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் கிராண்ட் ஸ்லாம் வெல்வார் என்கிற காத்திருப்புக்கு அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வென்று முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் எம்மா ரடுகானு.

1977ஆம் ஆண்டு வெர்ஜீனியா வேட் என்பவர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரை வென்றது தான் பிரிட்டனின் கடைசி கிராண்ட் ஸ்லாம் வெற்றி. அதன் பிறகு 44 ஆண்டுகளுக்கு பிரிட்டனால் ஒரு கிராண்ட் ஸ்லாம் வெற்றியைக் கூட காண முடியவில்லை.

எம்மா ரடுகானுவுக்கு முன், வெர்ஜீனியா வேட் தான் 1968ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரை வென்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனத்தாய்க்கும் ரோமேனிய தந்தைக்கு கனடாவில் பிறந்த எம்மா ரடுகானு, தன் பெற்றோருடன் தனது இரண்டாவது வயதில் பிரிட்டனுக்கு வந்தார். லண்டனில் வளர்ந்த ரடுகானு, பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, கோகார்ட்டிங் போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டு, தென்கிழக்கு லண்டனில் ப்ரோம்லி டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது ஐந்து.

ஒரே வெற்றி - பல சாதனை

எம்மா ரடுகானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எம்மா ரடுகானு

1. வெர்ஜீனியா வேடுக்குப் பிறகு அமெரிக்க ஓப்பன் தொடரை வென்ற பிரிட்டிஷ் பெண்மணி

2. உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற வீராங்கனை (2004-ல் மரியா ஷரபோவாவின் சாதனை முறியடிப்பு)

3. மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற பிரிட்டன் வீராங்கனை

4. ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் தொடரை வென்ற இளம் வயது வீராங்கனை (2014-ல் செரீனா வில்லியம்ஸின் சாதனை முறியடிப்பு)... என ஒரு வெற்றி மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் எம்மா ரடுகானு.

பிரிட்டனின் ராணி எலிசபெத், எம்மா ரடுகானுவின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

எம்மா ரடுகானு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எம்மா ரடுகானு

இந்த வெற்றி மூலம், உலக அளவில் மகளிர் வீராங்கனைகள் பட்டியலில் 23ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். பிரிட்டனின் நம்பர் 1 வீராங்கனையாகியுள்ளார் எம்மா ரடுகானு.

அவர் அமெரிக்க கிராண்ட் ஸ்லாமில் மிக சிறப்பாக விளையாடினார். அவர் இன்னும் பல பட்டங்கள் வெல்ல வாய்பு இருக்கிறது என பிரிட்டனின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை லாரா ராப்சன் பிபிசி 5 ரேடியோவிடம் கூறியுள்ளார்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மல்லுகட்டும் போட்டியில், 150ஆவது மற்றும் 73ஆவது இடத்தில் இருந்த வீராங்கனைகள், மகளிர் அமெரிக்க ஓப்பன் தொடரில் மோதியதையே ஆச்சர்யத்துடன் பார்த்த டென்னிஸ் உலகம், எம்மா ரடுகானு நேர் செட்களில் வென்றதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது.

மறுபக்கம் சமூக வலைதளங்களில் எம்மாவின் வெற்றியை பல நாட்டவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/sport-58534537

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ....சுப்பர் ...இப்ப தான் 18 வயசு எண்டால் இன்னும் நிறைய சாதனைகள் செய்வார் என்று எதிர் பார்க்கலாம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அம்மா எம்மா ரடுகானு .......!  💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.