Jump to content

திருக்குறளின் படைமாட்சி அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் '7 படையுறுப்புகள்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும்.

"தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து."

இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:-

தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது.

(படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.)

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ''உரம் முதல் கோடி ஈறாயின'' என்பதை அறிய பல வருடங்களாக நான் மிகவும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என்னால் அறிய முடியவில்லை. பின்னர், கடந்த சில நாட்களிற்கு முன்னர்(கோராவில்தான் முதன்முதலில் எழுதினேன்) நான் செ.சொ.பே.மு. மற்றும் 'போரியல், அன்றும் இன்றும்' என்னும் நூல்களை வாசித்த போதுதான் இதற்கான விடையினை என்னால் முற்று முழுதாக அறிய முடிந்தது. நான் கண்டறிந்ததை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இவை பற்றி மேலும் அறிய:போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 5.2.6 ஐக் காணவும் .

இவை தான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 படையுறுப்புகள்.

  1. தூசி, உரம், ஆக்கம், தலைத்தார், தார் & கொடிப்படை - முன்னணி
    1. தூசி (Mobile troops) - இவர்கள் எல்லா உறுப்புகளிற்கும் முன்செல்வர். இவர் எதிரிப்படைகள் பற்றிய முக்கிய செய்திகளை அறிந்து அவர்தம் தந்திரவழிவகை இடங்களை, ஆநிரைகளைக் கைப்பற்றி பின்வரும் படைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வர். இவர் ஏனைய படைகளினின்று பல கல் முன்னிருப்பர்.
    2. உரம்/ ஆக்கம்(Point section) -
      1. உரம் - சமர்க்களத்தில் முதற்றாராய்(முதல்+தார்) நின்று ஆடி வீழ்ந்து வெற்றிக்கு உரமாவதால் வழங்கப்பட்ட பெயர் (முன்வரிசையில் நிற்பவர்கள் வீடு திரும்புதல் அரிது என்பது உலக வழக்கு)
      2. ஆக்கம் - போரை ஆக்கிவைப்பதால் எழுந்த பெயர்
    3. நெற்றி(Leading Platoon) - தார்ப்பகுதியின் முற்படையாம் தலைத் தாரின் முன்னுறுப்பு
    4. தலைத்தார்(Van guard) - தாரிற்கு முன்னே செல்வதும் தாரின் முற்பகுதியுமாகியது தலைத்தார் ஆகும்
    5. தார்(Advance guard) - தூசி முன்னே இருப்பினும் இல்லாதிருப்பினும் பேரணிக்கு முன்னே சென்று பெரும் காவலாக விளங்குபவை.
    6. கொடிப்படை(Main guard) - மேற்கண்ட அனைத்தையும் தன்னகத்தே கொண்டவை கொடிப்படை எனப்படும்
  2. நிரை(திவா.) - சமர்க்களத்தில் அடுத்தடுத்து வரிசையாக நிற்பவர்களைக் குறித்த சொல் .
  3. பேரணி (main body or centre of an army) - படையின் நடுவணி
    1. "பேரணியி னின்ற பெருங்களிறுகள் " (சீவக.277, உரை);
    2. அணி - பேரணி பலவாக பிரிக்கப்பட்டால் ஆகும் சிற்றணிகள்
  4. கை(Flank) - பேரணியின் இருபக்கவாட்டிலும் செல்லும் படைகள்.
  5. கோடி/ கூழை (Rearguard) - பின்னணி
    1. கோடி - இன்றளவும் ஈழத்தில் வீடுள்ள காணியின் கடைப்பகுதியை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது தனிச்சொல்லாக வழக்கில் இல்லை. கூட்டுச்சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் மிக அரிதாகவே. தமிழ்நாட்டில் எங்கேனும் சிற்றுர்களில் வழக்கில் இருக்கிறதா என்பது அறியில்லை(Unknown).
      1. த.நா. வழக்கில் உள்ள கூட்டுச்சொற்கள் - தெருக்கோடி, கோடி வீட்டுப் பெண் | புலன கிட்டிப்பு(credit): Devasena
  6. கடைக்கூழை - கூழையினும் கடைநிலை அணி
  7. சிறகு(Wing) - முழுப் படையினையும் கிட்டத்தட்ட ஒரு பின்னமாகப்(fraction) பிரிக்கப்பட்டதால் வரும் ஒரு வித மாச்சதளம்(Big squad) போன்றது.

 


இது தொடர்பாக நான் உருவாக்கிய ஒரு விளக்கப்படம்.

main-qimg-9bd13b7ae64e4e1bb84e75d3b86c3047.png

 

main-qimg-eb00b93751f870b890e87f74f80cbc72.png

 


உசாத்துணை:

  • குறள் 0767 - திறன்
  • Wing vs Flank - What's the difference?
  • செ.சொ.பே.மு.
  • சூடாமணி - 184 வது பாடல்
  • சூடாமணி நிகண்டு, சரஸ்வதி மகால், பக்கம் 590- 594
  • "தூசியுங் கூழையு நெற்றியுங் கையும் அணியு மென்ப தப்படைக் குறுப்பே. கூழை யென்பது பேரணி யாகும். தாரே முன்செல் கொடிப்படை யாகும்." (402-405) -பிங்கலம்
  • "போரியல் அன்றும் இன்றும்" நூல்

படிமப்புரவு:-

  • நானே கணினியில் உருவாக்கியது

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கசடறக் கற்றலின் வெளிப்பாடு. கற்றது உணர விரித்துரைக்கும் இவ்வெளிப்பாடே ஏனையோர்க்கும் நன்மை பயப்பது. சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஒன்றைக் கசடறக் கற்றலின் வெளிப்பாடு. கற்றது உணர விரித்துரைக்கும் இவ்வெளிப்பாடே ஏனையோர்க்கும் நன்மை பயப்பது. சிறப்பு. 

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.