Jump to content

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

அதனால் தான் அந்த தெளிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டு என்று எழுதியிருக்கின்றேன் பிரபா.

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும், படிப்பறிவின்மையும் மிக அதிகம். அதனால் தான் இந்த நீட் பிரச்சனையை மற்ற மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அறிய ஆவல். அத்துடன்  கேரள, ஆந்திர, கர்னாடக மானிலங்கள் ஆகிய தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதையும் அறிய முடிந்தால் நல்லது.

ஏராளன் குறிப்பிட்டுள்ளது போன்று, இதை ஒரு அரசியல் பிரச்சனையாக தமிழக கட்சிகள் (திராவிட, பார்ப்பனிய, தமிழ் தேசிய என்று பாரபட்சம் இன்றி) மாற்றிவிட்டுள்ளன.

நீங்கள் கூறியது போல இதை அரசியலாக்கிவிட்டார்கள்தான்.. இந்திய பிரதமர் குஜாராத்தில் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்துள்ளார் என வாசித்த நினைவு.. இப்பொழுது நிலைமை வேறு.. 

ஆனால் நான் நினைப்பது இந்த தேர்வினால் அடையும் நன்மைகள் என்ன? நன்மை அடைபவர்கள் யார்? பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தெரிவாகி உள்ளார்கள்? என்பதில்தான் இந்த நீட் தேவையா சரியா என்பது தங்கியுள்ளது.. 

மற்றைய மாநிலத்தவர்கள் இதனை வரவேற்கிறார்கள் என்றால் அங்கே யார் அதிகம் நன்மையடைகிறார்கள் என்பதில்தான் உண்மை தெரியவரும்..உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறுகிறார்களா தெரியவில்லை.. ஏனெனில்  ஏற்கனவே வறிய நிலையில் உள்ளவர்களால் இந்த தேர்வை எழுவதற்கான பயிற்சியையோ, கட்டணத்தையோ அவர்களாலும் கட்ட முடியாது தானே! 

ஆக மொத்தம் இந்த நீட் தேர்வு இந்தியா மாணவரகளுக்கு அவசியமா? 

மேலும் சாதி, வர்க்கவேறுபாடு மற்றைய மாநிலங்களில் அதிகம் உள்ளது என்பது சரியாக இருந்தாலும், இந்த நீட் தேர்வால் எப்படி அது குறையும் என்றோ வர்க்க வேறுபாடு குறையும் என்றோ எதிர்வு கூற முடியும்.. 

சாதி, வர்க்க வேறுபாட்டை இல்லாதெழிக்க சக மனிதனை மனிதனாக பார்க்கும் அறிவு இருக்கவேண்டும்.. மதத்தாலும், சாதியத்தாலும் ஆட்சி செய்யும் அரசிடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்கலாம்? 

 

 

 

Link to comment
Share on other sites

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

தெலுங்கு மானிலத்தை சேர்ந்த தெரிந்தவர் அங்கே தெலுங்கில் எழுத முடியும் என்று சொன்னவர். ஆனபடியால்  பெரிய மொழியான தமிழிலும்  கூடியதாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் இலங்கையர் மாதிரி இல்லை ஆங்கிலத்தில் தான் எழுத விரும்புவார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 15:05, நிழலி said:

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

[இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே..

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.]

இந்தியாவின் பிற மானிலங்களில்  நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் ஏன் வரவேற்கிறார்கள் இந்த கேள்விக்கான விடை இப்போ தான் கிடைத்தது.தமிழ்நாட்டை தவிர இந்திய இதர மானிலங்களில் உள்ளோர் வசதி படைத்தவர்கள். தமிழ்நாட்டில் தான் ஏழைகள்,ஏழைகளின் பிள்ளைகள் வர்க்கம் சாதி வெறியுள்ளது.
நான் முன்பு எதிர்மாறாக நம்பி இருந்தேன் தமிழ்நாடு தான் ஓரளவு வசதியானது  இந்திய மற்ற மானிலங்கள் மோசமானவை .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இதில் உண்மையில்லாமல்  இல்லை

திடீர்  பாய்ச்சலும் ஒரு  காரணம்

எப்படித்தான்  இருந்தாலும் தலைமுறை தலைமுறையாகவும்

பூர்வீகமாகவும் வாழும்  இந்த மண்ணின் மைந்தர்களுடனான பரீட்சைகளில்

ஒரு சில வருடங்களுக்கு  முன்னர் வந்த  எம்மவர் எதிர்  நீச்சல்  போட்டு மேலே வருவதென்பது கடினம்  தான்.

அதேநேரம் அரசியலும்  பணமும்  அதனூடன ஒடுக்குமுறைகளையும் 

எமது  அடுத்த  தலைமுறை தாண்ட வேண்டித்தான் உள்ளது

சட்டத்தால்  பாதுகாக்கப்படுவதாலும்

உலக அளவில் ஒப்பிடும்போது இத் தாக்கங்கள் சிறிது குறைவாக  இருந்தாலும் கூட.

அதனால் தான்  எமது அடுத்த  தலைமுறை இது  போன்ற துறைகளை  தமது பிள்ளைகளுக்கு முன்  மொழிவது மிக  மிக அரிதாகிவிடும்???

மருத்துவம் மட்டும் இல்லை அண்ணை. Investment banking போன்ற துறைகளிலும் அதிக எதிர்பார்ப்புகளோடு போய், அதை ஈடு செய்ய உழைத்து முடியாமல் தற்கொலையில் முடியும் கதைகள் உலகம் எங்கும் உண்டு.

வாழ்க்கையில் மிக பெரும் கொடை என்ன என்றால் எமக்கு பிடித்த துறை எமக்கு இயலுமான துறையாகவும் அமைவது.

சிலருக்கு இது தானாக அமைந்து விடும். சிலர் trial and error மூலம் கண்டு பிடிக்க வேண்டும். 

இரண்டாம் வகையினர் தமக்கான துறையை கண்டு பிடிக்கும் வரை தோல்விகளை தாங்கும் பக்குவம் உள்ளவர்களாக அவர்களை பெற்றாரும், கல்வியும், அமைபுக்களும் வளர்தெடுக்க தவறுகிறன.

கல்வியை, தொழிலை status symbol ஆக கருதி பெருமை பேசும் பெற்றார் பிள்ளைகளையும் அதே மனநிலையில் வைத்திருக்கும் போது - அந்த status இழக்கபடுவதோடு வாழ்கையே முடிகிறது என்ற கருத்துருவாக்கம் ஏற்படுகிறது.

ஒரு சோதனையை/படிப்பை இறுக்கி படி, பாஸ் பண்ணு - பண்ணினால் உன் வாழ்க்கை சிறக்கும், இது உன் வாழ்வில் ஒரு முக்கிய தருணம் என்று உசுப்பேத்தி விடும் அதே நேரம்,

இந்த செய்திக்கு நேர் எதிராக,  இது வெறும் சோதனைதான் - வாழ்க்கை இவை எல்லாவற்றையும் விட எவ்வளவோ பெரியது எத்தனையோ வாய்ப்புக்கள் நிறைந்தது என்பதையும் ஒரு சேர சொல்ல வேண்டும்.

இப்படி செய்ய கூடிய பாதுகாவலர் அமையும் பிள்ளைகள் இப்படியாவது குறைவு என நான் நம்புகிறேன்.

ஆனால் நீட் தற்கொலைகள் இதில் இருந்தும் வேறுபடுகிறன. இந்த தற்கொலைகள் “என்னால் முடியவில்லை” என நிகழவில்லை. இந்த பிள்ளைகள் எல்லாம் மாநில பரீட்சையில் நல்ல புள்ளிகள் எடுத்தோர்.

”காசு இல்லை என்ற ஒரே காரணத்தால், திறமை இருந்தும் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லையே” என்ற விரக்தியில் நடக்கிறன.

இந்த மரணங்களை நீட்டை நிறுத்துவதன் மூலம் இலகுவாக நிறுத்த முடியும். நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும்

உண்மை ஆனால் உங்கள் கேள்விக்கான பதிலையும் நீங்களே கொடுத்து விட்டீர்கள் 👇

8 hours ago, நிழலி said:

படிப்பறிவின்மையும் மிக அதிகம்

எனது அனுபவத்தில் தமிழ் நாட்டை போல் வறியவர்கள், தாழ்தப்பட்டோர் கல்வியில் முன்னேறிய இன்னொரு மாநிலத்தை நான் காணவில்லை. 

உங்களுக்கு தெரிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியன் புரொபெசனல்சை அவதானித்து பாருங்கள் - வேற்று மாநிலத்தவர் சாதியால், அதிகாரத்தால் அல்லது பணத்தால் ஏலெவே உயர்ந்த குடும்பங்களில் இருந்தே அநேகம் வருவர் - மலையாளிகள் கூட. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் பலர் - அந்த குடும்பத்தின் முதலாவது தலைமுறை பட்டதாரியாக இருப்பார்கள்.

ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாட்டில் social mobility அதிகம். ஆகவே நீட்டினால் பாதிக்கபடுபவர்களும் அதிகம்.  

18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே..

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.]

இந்தியாவின் பிற மானிலங்களில்  நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் ஏன் வரவேற்கிறார்கள் இந்த கேள்விக்கான விடை இப்போ தான் கிடைத்தது.தமிழ்நாட்டை தவிர இந்திய இதர மானிலங்களில் உள்ளோர் வசதி படைத்தவர்கள். தமிழ்நாட்டில் தான் ஏழைகள்,ஏழைகளின் பிள்ளைகள் வர்க்கம் சாதி வெறியுள்ளது.
நான் முன்பு எதிர்மாறாக நம்பி இருந்தேன் தமிழ்நாடு தான் ஓரளவு வசதியானது  இந்திய மற்ற மானிலங்கள் மோசமானவை .

 

 

தமிழ் நாட்டில்தான் நீட்டால் பாதிக்கப்படும் அளவுக்கு வறியவர்களும், தாழ்த்தபட்டோரும் முன்னேறியுள்ளார்கள்.

ஏனைய மாநிலங்களில் நீட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் நிலை படுமோசம்.

4 hours ago, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

13 பிராந்திய மொழிகளில் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

ஆனால் நீட் தற்கொலைகள் இதில் இருந்தும் வேறுபடுகிறன. இந்த தற்கொலைகள் “என்னால் முடியவில்லை” என நிகழவில்லை. இந்த பிள்ளைகள் எல்லாம் மாநில பரீட்சையில் நல்ல புள்ளிகள் எடுத்தோர்.

”காசு இல்லை என்ற ஒரே காரணத்தால், திறமை இருந்தும் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லையே” என்ற விரக்தியில் நடக்கிறன.

இந்த மரணங்களை நீட்டை நிறுத்துவதன் மூலம் இலகுவாக நிறுத்த முடியும். நிறுத்த வேண்டும்.

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,
ஏழைகளுக்கு மருத்துவம் படிக்கும் ஆசை இருக்கக் கூடாது என்று வந்த இந்த நீட்டை
அவர்களே முறியடிக்கலாம் .
மனதில் துணிவு வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,
ஏழைகளுக்கு மருத்துவம் படிக்கும் ஆசை இருக்கக் கூடாது என்று வந்த இந்த நீட்டை
அவர்களே முறியடிக்கலாம் .
மனதில் துணிவு வேண்டும் .

இங்கே தான் நீட் பரீட்சையின் தவறான விடைக்கு மறைப்புள்ளி வழங்கும் முறையின் சூட்சுமம் புரியப் பட வேண்டும். இந்த மறைப்புள்ளி வழங்கும் முறை சில மருத்துவக் கல்லூரிப் பாடப் பரீட்சைகளிலும் உள்ள நடைமுறை! 

இது உண்மையில், பதற்றமில்லாமல், ஒரு வரையறுக்கப் பட்ட நேரத்தினுள் விவேகமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பரீட்சிக்கும் ஒரு நடைமுறை தான். எனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற perfectionist மனப் பான்மையிலிருந்து கொண்டு மறைப்புள்ளிப் பரீட்சைகளில் வெல்வது கடினம். நன்றாகத் தெரிந்தவற்றுக்கு விடையளித்து, தெரியாததை rule out மூலம் இரு விடைகள் அளித்து அல்லது முற்றாக விடையளிக்காமலே கடந்து செல்லும் போது மறைப்புள்ளிகள் "0" ஆக மாறும்! 

என்னைப் பொறுத்த வரையில் பாரிய கோச்சிங் இல்லாமலே மாணவர்கள் இதை வெல்ல வழியிருக்கிறது என்று நினைக்கிறேன்!  பரீட்சைக் கட்டணம் பற்றித் தெரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,

சரியாகச் சொன்னீர்கள்.
தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை அரசியலாக்கி பேசும் பேச்சுகளை கேட்டு கேட்டு தான் இவர்கள் பரிட்சையில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் தோன்றி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பிற மாகாணங்களின் ஏழை மாணவர்கள் நீட் தேர்வை வெற்றிகரமாக கையாளுவது போன்று இவர்களும் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வின் முதல் பிரச்சனையே CBSE பாடத்திட்டம்தான். இதுவும் தமிழ்நாட்டு பிளஸ் one, பிளஸ் two விற்கான பாடத்திட்டங்களும்  வித்தியாசமானவை. அதனால்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழைமாணவர்கள் இந்த தேர்வை எழுத அச்சப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.. கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் உருக்கம்.!

 

 

Link to comment
Share on other sites

On 15/9/2021 at 12:58, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.

ஆகவே நீட் தேர்வில் பாரபட்சமில்லாமல் தமிழகத்தில் தமிழ் மாணவர்களும் தமிழில் எழுதலாம்.
மற்றய மாணவர்கள் மாதிரி சொந்த மொழியை பாவிக்க தமிழில் எழுத மனம் தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தற்கொலை: வேலூர் செளந்தர்யாவின் கலைந்து போன கனவு - இதுவரை 16 மாணவர்கள் பலி

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
நீட் மரணங்கள்

நான்கு பெண் பிள்ளைகளில் முதல் மூவரும் படிக்கவில்லை, கடைசி பிள்ளையின் மருத்துவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் யாருக்காக அவர்கள் கஷ்டப்பட்டார்களோ அந்த மகள் உயிரை மாய்த்துக்கொண்டார். வேலூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் குடும்பம், அவர்கள் கண்ட கனவு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த ஞாயிறு (செப்டம்பர் 12) அன்று நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்து, தேர்வு நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தீவிரமான எதிர்ப்பலை நிலவி வரும் சூழலில் மாணவர்களின் தொடர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வியாழனன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொன்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் நான்காவது மகள் செளந்தர்யா. 17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். அன்றைய தினம் தந்தை வேலைக்கு சென்ற பிறகு, தனது தாயாரை அவர் வேலை செய்யும் பகுதிக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சௌந்தர்யா. இதையடுத்து நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோம் என்ற அச்சத்தினால் மிகுந்த மன வேதனையில் இருந்த மாணவி சௌந்தர்யா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை தினக்கூலி, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தாய்

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் தாய் ருக்மணி

இந்த சூழலில், குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை பிபிசி தமிழ் சந்தித்தது.

"எங்கள் அப்பா உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அம்மா 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இப்படி தினக்கூலி சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கடுமையான சூழலில்தான் தங்கையை பெற்றோர் படிக்க வைத்தனர்" என்று சௌந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி பகிர்ந்து கொண்டார்.

"பெற்றோருக்கு நங்கள் மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். மற்றவர்களைக் காட்டிலும் கடைசி தங்கையான சௌந்தர்யாவை செல்லமாக வளர்த்தனர். எங்கள் அக்கா பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தாள். நான் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு அடுத்து மூன்றாவது சகோதரி பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் இருவருமே தினக்கூலி தொழிலாளர்கள். எங்கள் மூவரையும் படிக்க வைக்க முடியாத காரணத்தினால் கடைசி பிள்ளையை எப்படிவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகதான் கடுமையான சூழ்நிலைக்கு இடையே படிக்க வைத்தனர்," என்றார் அவர்.

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி

"நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருப்பதால் படிப்பேன். உறுதியாக மருத்துவர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் எனது மகள். நானும் எப்படியாவது கூலி வேலைக்கு சென்றாவது நீ விரும்பியபடி மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறேன் என்று கூறினேன்," என்றபடி கண்ணீர் மல்க சௌந்தர்யாவின் தயார் ருக்மணி கூறினார்.

தாய் உடல் நிலை கருதியே மருத்துவம் படிக்க நினைத்தார்

"அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளித்து வந்தோம். குடும்ப வறுமை சூழல் காரணமாக அவ்வப்போது பணம் கொடுத்து சிகிச்சை பெறுவது கஷ்டமாக இருந்தது. இதனால் நாம் மருத்துவ படித்தால் அம்மாவுக்கு நாமே மருத்துவம் பார்க்கலாமே என்ற நோக்கத்தில்தான் சௌந்தர்யா மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை வளர்த்தாள். ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் எனது தங்கை," என்று வேதனையுடன் பேசினார் சௌந்தர்யாவின் மூத்த அக்கா கீதா.

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் மூத்த அக்கா கீதா

நீட் தேர்வு நடைபெற்ற அன்று மாலை வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கூறிய சௌந்தர்யா. ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக எழுதயிருந்தால் நீட் தேர்வு சுலபமாக இருந்திருக்குமென சகோதரிகளிடம் பகிர்ந்துள்ளார்.

"சௌந்தர்யா எந்த தேர்வு எழுதினாலும் தேர்வு முடிவடைந்த பிறகு, தான் எழுதிய விடைகள் சரியானதா என்று பார்ப்பது வழக்கம். அதேபோன்று கடந்த 14ஆம் தேதியன்று நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுப்போம் என்று வினா, விடைகளை ஆராய்ந்துள்ளார். அப்படி விடைகளை பார்த்தபோது நாம் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தாள். நம்முடைய மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் தோல்வி பயத்தால் இவ்வாறு செய்து கொண்டாள்," என்கிறார் கீதா.

பள்ளியில் சிறந்த மாணவி

நீட் மரணங்கள்

இவர்களை தொடர்ந்து வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சௌந்தர்யாவின் வகுப்பு ஆசிரியர்களை பிபிசி தமிழ் சந்தித்தது.

"சௌந்தர்யா படிப்பின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு மிகப் பெரியது. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு மருத்துவர் உருவாகிறார் என்ற எதிர்பார்ப்பு எங்கள் அனைவருக்குமே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டார். அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துவிட்டார். குறிப்பாக மாணவர்கள் அனைவருமே நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகிறார்கள். ஆனால் நம்பிக்கையோடு ஒரு முறை தவறிவிட்டால், அடுத்தமுறை முயற்சி செய்யலாம். அரசு பள்ளி மாணவர்கள் என்பதால் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது," என்று சௌந்தர்யாவின் இயற்பியல் ஆசிரியர் குமரவேல் தெரிவித்தார்.

5ஆண்டுகளில் 16 மாணவர்கள் பலி

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. மாணவர்கள் தற்கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. மேலும் தமிழ்நாட்டுக்கு நீட் வந்தபின் 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உளவியலாளர் கூறுவது என்ன?

நீட் மரணங்கள்

மாணவர்கள் தற்கொலை குறித்து உளவியலாளர் வி.சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தற்கொலையை நம்மால் 100 சதவீதம் தடுக்க முடியும். பொதுவாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் ஒரு எச்சரிக்கை அறிகுறியை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். அப்படி அவர்கள் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் சிலர் தற்கொலையை பற்றி பேசினால் தற்கொலை செய்து கொள்வர்களோ என்றும் நினைப்பதுண்டு. இந்த அச்சம் காரணமாக அதைப்பற்றி உரிய நபரிடம் பேசாமலே இருப்பார்கள். ஆனால் மிகவும் தவறான அணுகுமுறை.

சம்மந்தப்பட்ட நபர் மீது தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவர்களிடம் அதைப் பற்றி பேசவேண்டும். அவர்கள் மறுகணம் பேசும்போது அதை செவிகொடுத்து கேட்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களிடம் புத்திமதி கூறுவது, நீதிக்கதைகள் திணிப்பது போன்றவற்றால் தற்கொலையை தடுக்க முடியாது. அவர்கள் முழுவதுமாக கூறிய பிறகு பெற்றோர் சரியான முறையில் அணுகலாம். ஒருவேளை பெற்றோரால் கையாள முடியாத சூழலில் மனநல ஆலோசகரை அணுகவேண்டும்," என்று உளவியலாளர் வி.சுனில் குமார் கூறுகிறார்.

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

நீட் தேர்வு எதிரொலியாக மாணவர்கள் தொடர் தற்கொலை காரணமாக நீட் தேர்வில் மனநலம் சார்த்த ஆலோசனை பெறுவதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய அவர், "இந்த எண்ணை தொடர்பு கொண்டால் மனநல மருத்துவர்களும், மருத்துவ ஆலோசகர்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். உடல் பலம், மன பலம் கொண்டவர்களாக மாணவர்களை வளர்க்க வேண்டும். பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம்," என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் உடையோர் உளவியல் ஆலோசனைக்கு 24 மணி நேர அரசு உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ளவும்.

https://www.bbc.com/tamil/india-58610106

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களுக்கு எதிராக கொண்டுவரபட்டதாக ஒரு கருத்து உண்டு
தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கபட்டு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பழங்குடி இனத்தவர்களே.ஜெய்பீம் என்ற தமிழ்படம் பற்றிய யாழ்கள விமர்சனங்களிலும் காணலாம்.


தமிழ்நாட்டில் அப்படியான பழங்குடி இனத்தை சேர்ந்த அப்பா இல்லாத பாதிக்கபட்ட தாயுடன் வசித்து வரும் ஒரு  ஏழை மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று MBBS படிக்க போகின்றார் 👍
https://timesofindia.indiatimes.com/city/coimbatore/first-tribal-girl-to-pass-class-xii-clears-neet/articleshow/87494389.cms

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.