Jump to content

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் - உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் - உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANITHI STALIN

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப் புலனாய்வுக்கு தனி மையம், மெரினா கடற்கரையில் உயிர் காப்புப் பிரிவு ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு கூடிய இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், ``சென்னையில் மாநில இணையதள குற்றப் புலனாய்வு மையம் அமைக்கப்படும். இதன்மூலம், இணைய வழியில் நடைபெறும் குற்றங்களை புலனாய்வு செய்யும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்களைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்," என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ``மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதைத் தடுக்கும் வகையில் மெரினா கடற்கரை உயிர் காப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்படும். இதற்காக கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் இணைந்து செயல்பட ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், சென்னை தெற்கு மற்றும் வடக்குப் பிரிவுகளில் தீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு ஒன்றும் 8 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும்," என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சிறுவர், சிறுமியர் மன்றம்

இதுதவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்கள் குறறச் செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு 38.25 லட்சம் செலவில் சிறுவர், சிறுமியர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு அவர்களை நல்வழிப்படுத்தி உரிய கல்வி அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், காவல்துறையின் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவுக்காக 4 கோடியே 25 லட்சம் செலவில் 100 பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

நகைக்கடன் தள்ளுபடி

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மேலும், சட்டமன்றத்தின் விதி எண் 110ன்கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்துக்கு 5 சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இதன்மூலம் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார். இதனமூலம் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவில் நிலங்களை ஆக்ரமித்தால் கைது

தொடர்ந்து, கோவில் நிலங்களை ஆக்ரமிப்பு செய்தால் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்த முன்வடிவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கல் செய்தார். இதில், கோவில் நிலங்களை ஆக்ரமிப்பு செய்வது என்பது கடுமையான குற்றமாகவும் இதில் கைது செய்யப்படுகிறவர்களால் பிணையில் வர முடியாது எனவும் ஆக்ரமிப்பு செயல்களில் இறங்குகிறவர்களை கைது செய்ய முடியும் என சட்டத் திருத்த முன்வடிவில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சிமன்றக் குழுவில் உதயநிதி

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதன் அலுவல்சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-58544650

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.