Jump to content

காதலில் விழுவது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் விழுவது.

kadhalilvizhuvathu.jpg

[நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.]

நியூயார்க்
நவம்பர் 10,1958

ன்புள்ள தோம்:

உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள்.

image-resizer-300x225.jpg

John steinback with his son

முதலில் நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அது ஒருவருக்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று. அதேநேரத்தில் யாரேனும் அதைச் சிறிய அல்லது எளிதான விஷயம் என்று உன்னிடம் வந்தால் அவர்களை அண்ட விடாதே.

இரண்டாவது – காதலில் பல வகை உண்டு. அதில் ஒன்று தற்பெருமைக்காக அன்பைப் பயன்படுத்தும், சுயநலமான, இரக்கமற்ற, இறுக்கிப்பிடிக்கும், ஆணவத்திமிர் கொண்டது. இது அசிங்கமானது மற்றும் பிரச்சனைகளைத் தரக்கூடியது.

இன்னொன்று உன்னிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வரும். அதனுள் கருணை, மரியாதை மற்றும் பழக்க வழக்கங்கள் உடன் இருக்கும்.
சமூக மரியாதை மட்டுமல்லாமல் மற்றொரு நபரை தனித்துவமான மற்றும் மதிப்புமிக்கதாக அங்கீகரிக்க வைக்கும். முதல் ஒன்று உன்னை நோயாளியாகவும்,எளிமையாகவும், பலவீனமாகவும் மாற்றும். ஆனால் இரண்டாவது வகை உன் வலிமையை வெளிக்கொண்டு வரும் மேலும் உனக்கே தெரியாமல் உன்னுள் இருக்கும் தைரியம், நற்குணம் மற்றும் நல்லறிவு போன்றவற்றையும் வெளியே கொண்டுவரும்.

இதை நீ பப்பி லவ்! இல்லை என்கிறாய். நிச்சயம், இது பப்பி லவ்! அல்ல.

நீ எப்படி உன்னுள் உணர்கிறாய் என்று என்னிடம் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். மற்ற யாரையும் விட உனக்கு மட்டும் அதைப்பற்றி அதிகம் தெரியும். நீ என்னிடம் கேட்கும் உதவி இதை நீ எப்படிக் கொண்டுபோகப் போகிறாய் என்பது தான். நான் நிச்சயம் அதைப்பற்றி உனக்குச் சொல்வேன்.

ஒரு விஷயத்திற்கு உள்ளே இருக்கும் மகிமைக்கு நன்றியுடன் உயர்வாக என்றும் இரு.

காதலின் குறிக்கோள் என்பது மிகச்சிறந்தது மற்றும் மிகவும் அழகானது. அதனால் அதனளவுக்கு வாழப் பழகிவிட வேண்டும்.

நீ ஒருவரை நேசிக்கிறாய் எனில் அவரிடம் அதைச் சொல்வது ஒன்றும் தீங்கானது இல்லை. சிலர் கூச்சப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் சொல்வதிலும் இந்த கூச்சம் வருகிறது என்பதையும் நீ கருத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு நீ உணர்வதை அறிய அல்லது உணர ஒரு வழி இருக்கிறது ஆனால் அதை அவர்கள் எப்போதும் நம்மிடமே கேட்கவே விரும்புகிறார்கள்.

சில நேரங்களில் இது நடக்கும், நீ உணரும் விஷயங்கள் ஒரு காரணத்திற்காகவோ அல்லது இன்னொரு காரணத்திற்காகவோ திரும்பக் கிடைப்பதில்லை என்பது, ஆனால் இது உன் உணர்வைக் குறைந்த மதிப்புடையதாகவும் மற்றும் நல்லதாக என்றும் மாற்றி விடாது.

கடைசியாக, உன் காதல் உணர்வுகள் புரிகிறது ஏனெனில் அது என்னிடமும் இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் தற்போது அது உன்னிடமும் இருக்கிறது.

நாங்கள் சூசனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவள் மிகுந்த மகிழ்ச்சியாக வரவேற்கப்படுவாள். எலைன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாள். ஏனென்றால் இவையனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். அவளும் இதற்குப் பெருமைப்படுவாள். அவளுக்கும் காதலைப் பற்றி அதிகம் தெரியும் அதனால் இந்த விஷயத்தில் என்னை விட அவள் உனக்கு அதிகம் உதவுவாள்.

மேலும் இழப்பதைப் பற்றி என்றும் கவலைப்படாதே. அது சரியாக இருந்தால், அது இயல்பாகவே நடக்கும்.

முக்கியமான விஷயம் அவசரப்படக்கூடாது.

நல்லது எதுவும் நம்மை விட்டு அவ்வளவு எளிதில் விலகாது.

காதலுடன்
ஃபா

தமிழில் : க.விக்னேஸ்வரன்

 

https://kanali.in/காதலில்-விழுவது/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.