Jump to content

மன்னாரில்... அந்தோனியார் சிலையை அகற்றி, பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில்... அந்தோனியார் சிலையை அகற்றி, பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை.

மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதியில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு, அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல்,  சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

அதன்பின்னர்,  குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றிய பொலிஸார், மடு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மடு – பரப்புக்கடந்தான் வீதியில், மடு தேவாலயத்தில் இருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த பிள்ளையார் சிலையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமாகியுள்ளதுடன்,  அதேதினத்தில் குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் குறித்த பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்ததாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த பகுதி காட்டுப்பகுதி என்பதனால், மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் அனைவரும், பிள்ளையார் சிலையை வணங்கி விட்டு செல்வது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை  தற்போது  பிள்ளையார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1239200

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோணியாரையும், பிள்ளையாரையும் தூக்கிப்போட்டு ஒரு புத்தரை வச்சால் எல்லாரும் கப்சிப் எண்டு இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அந்தோணியாரையும், பிள்ளையாரையும் தூக்கிப்போட்டு ஒரு புத்தரை வச்சால் எல்லாரும் கப்சிப் எண்டு இருப்பினம்.

அப்படியென்றாலும் புத்தருக்கு முன்னால் பிள்ளையார் இருந்தாலும் இருப்பார்.....அந்தோனியார் அக்கம் பக்கத்திலும் வர மாட்டார்.....இப்படியான அடாவடிகளை அந்தோனியாரும் விரும்ப மாட்டார்.....!  😁

Link to comment
Share on other sites

3 minutes ago, suvy said:

அப்படியென்றாலும் புத்தருக்கு முன்னால் பிள்ளையார் இருந்தாலும் இருப்பார்.....அந்தோனியார் அக்கம் பக்கத்திலும் வர மாட்டார்.....இப்படியான அடாவடிகளை அந்தோனியாரும் விரும்ப மாட்டார்.....!  😁

பிள்ளையார் சிலை மட்டும் சிதைக்கப்பட்டு இருந்தால் இது கிறித்தவ மக்களின் வேலையாக இருக்குமோ என்ற ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்தோனியார் சிலையை அங்கு வைத்துத் தங்களை முழுமையாக வெளிக் காட்டிக்கொள்ள கிறித்தவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதன்பின்னால் பெரும் அரசியல் சூழ்ச்சிகள் நிச்சயம் உண்டு. 🧐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ....இப்ப நாட்டில மதங்களை முன்னிறுத்தி அரசியல்தான் நடந்து கொண்டிருக்குது........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதா சொரூபத்தையும் உடைக்கிறான்கள், பிள்ளையார் சிலையையும் உடைக்கிறான்கள், புத்தர் சிலையையும் உடைக்கிறான்கள். இப்போ பிள்ளையாரையும், அந்தோனியாரையும் கொழுவிவிட்டு கூத்துப்பாக்கிற வேலை. லொறி ஓட்டுற சிலரை வைச்சு தங்கட வேலையை தொடங்கி இருக்கினம். தமிழரை பிரித்தாழுவதுபோல், தமிழரின் சாமிகளோடும் விளையாட ஆரம்பித்திருக்கினம். இது எங்கை போய் முடியப்போகுதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை! பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை!

மன்­னார் மடு பகு­தி­யில், சுமார் 40 வரு­டங்­க­ளா­கக் காணப்­பட்ட பிள்­ளை­யார் சிலை, ஒரே இர­வில் சிதைக்­கப்­பட்டு, அச்த இடத்­தில் அந்­தோ­னி­யார் சிலை வைக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், அந்­தோ­னி­யார் சிலை நேற்று அகற்­றப்­பட்­டது. அந்த இடத்­தில் மீள­வும் பிள்­ளை­யார் சிலையை வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மடு – பரப்­புக்­க­டந்­தான் வீதி­யில் மடு தேவா­ல­யத்­தி­லி­ருந்து 4 கிலோ­மீற்­றர் தூரத்­தில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யார் சிலையே சிதைக்­கப்­பட்­டது.
அந்­தப்­ பிரதேசம் காட்­டுப்­ப­குதி என்­ப­தால் அந்­தப்­ப­கு­தி­யால் செல்­ப­வர்­கள் மத­வே­று­பா­டின்றி பிள்­ளை­யாரை வணங்­கி­விட்­டுச் செல்­வர் என்று பகுதி மக்­கள் கூறு­கின்­ற­னர்.
இந்­த­நி­லை­யில், அந்­தப் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யா­ருக்கு 4 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் சிறிய கோவில் ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு, முதற்­கட்­ட­மாக மூலஸ்­தா­னம் அமைக்­கப்­பட்டு பிள்­ளை­யார் எழுந்­த­ரு­ளி­யி­ருந்­தார்.
இந்­த­நி­லை­யில் அந்­தப் பிள்­ளை­யார் சிலையை விச­மி­கள் நேற்­று­முன்­தி­னம் அகற்­றி­விட்டு அந்­தோ­னி­யார் சிலையை வைத்­துள்­ள­னர்.

இந்­த­வி­ட­யத்தை அங்கு வாழும் இந்­து­மக்­கள் மற்­றும் இந்­துக் குருமார்கள் மன்­னார் மாவட்­டச் செ­ய­ல­ருக்கு முறை­யிட்­ட­னர்.
மன்­னார் மாவட்­டச் செ­ய­லர் ஏ.ஸ்ரான்லி டி .மெல், மடு பொலி­ஸார் மற்­றும் மடு பிர­தேச செய­லா­ளர் ஆகி­யோர் குறித்த பகு­திக்கு நேற்­று நேரில்சென்று பார்­வை­யிட்­ட­னர். அத்­து­டன் புதி­தாக வைக்­கப்­பட்ட அந்­தோ­னி­யார் சிலை அகற்­றப்­பட்டு மடு பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.
அந்த இடத்­தில் மீண்­டும் பிள்­ளை­யார் சிலையை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சிலை

அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை! பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலம் தொடக்கம் 2009 வரைக்கும் தமிழ் பகுதிகளிலை மதம் சம்பந்தமாய் எல்லாம் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கிறித்துவர்களுக்கும் சைவர்களுக்குமிடையே மிகப்பெரிய கலவரத்தை உண்டுபண்ண மிகப்பெரிய சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் பின்ணணியில் இந்தியா.  தலைமையிடம் வவுனியா. எம்மவர்களின் முன்னாள் ஆயுதக் குழுக்களும்அதற்கு உடந்தை. பக்கவாத்தியம் முசிலிம்கள். 

எதிர்வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும். அடுத்துவரும் சில ஆண்டுகள் (மிச்சம் மீதியிருக்கும்) தமிழருக்கு மிகவும் வாழ்வா சாவா என்கின்ற காலமாக அமையும்.  மீண்டும் அழிவுகளுக்கு நாம் ஆயத்தமாக வேண்டிய நேரமாகிவிட்டது. 

அதனைத் தொடர்ந்து நடக்கப்போவது .......😔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அந்தோணியாரையும், பிள்ளையாரையும் தூக்கிப்போட்டு ஒரு புத்தரை வச்சால் எல்லாரும் கப்சிப் எண்டு இருப்பினம்.

இதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் நம்மவர்களை மதம் , கோவில் என்ற ரீதியில்  அடக்கலாம் இல்லையென்றால் நாளை பிள்ளையார் சிலையை உடைத்து கிறிஸ்த்தவர்கள்  மீது பழி போடுவார்கள் கிறிஸ்த்தவர்கள் சிலையை உடைத்து சைவ மக்கள் மீது பழி போடுவார்கள் உடைவது சிலையென தெரியாமல் இவர்களும் சில்லறைத்தனமாக சண்டை போடுவார்கள் மக்களின் மனதை உடைத்து 
நாளை சிலை வைத்தால் பிரச்சினை தீர்ந்து விட போகிறது ஆனாலும் ஏழ்மையை பயன்படுத்தி மத வியாபாரம் அமோகமாக நடக்கிறது அது மறுக்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உடைவது சிலையென தெரியாமல் இவர்களும் சில்லறைத்தனமாக சண்டை போடுவார்கள் மக்களின் மனதை உடைத்து 

நூற்றில் ஒரு வார்த்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாகவே மன்னார் பகுதியில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மோதல் புகைந்துகொண்டேயிருக்கிறது.

இந்து கிறிஸ்தவம் என்று காலம்காலமாக பெயருக்கு வெவ்வேறு மதங்களா இருந்தாலும் இனம்,மதம்,பொதுவான விசயங்கள் என்று வரும்போது மதம்பற்றி நாங்கள் சிந்தித்ததேயில்லை.

அதனால்தான் ஆயுதபோராட்ட காலத்துக்கு முன்னர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்பவரை தந்தை செல்வாவாக ஏற்றிருந்தது தமிழினம். 

ஆயுதபோராட்ட காலங்களில் புலிகளின் முதல் தாக்குதல்தளபதி தொடக்கம் புகழ்பூத்த மன்னார் தளபதி விக்டர்  புலிகளின் முதல் பெண் தளபதி சோதியா உட்பட பலநூறு கிறிஸ்தவர்கள் எம்மின போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.

ராணுவ ஆக்கிரமிப்பின்போது மிக நெருக்கடியான சூழ்நிலைகளிலெல்லாம் மக்களுக்கான உதவி, கைது செய்யப்பட்டோர் மீட்பு , வெளிநாடுகளுக்கு எம் மண்ணின் நிலமை பற்றி கடிதம் என்று முன்னின்று மக்களுக்காக பாடுபட்டவர்களில் பலர் கிறிஸ்தவ குருமார்களே, அதில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் இன்றுவரை எங்கே என்றுகூட தெரியாது. ஓரிருவர் பல குழிகளில் இருந்து எலும்புகூடாக மீட்கப்பட்டதாகவும் நினைவில் உண்டு.

எமது மண் எமது விடுதலை என்று வந்தபோதெல்லாம் அங்கே இனம்தான் இருந்தது மதம் இருக்கவில்லை, இப்போது மெதுமெதுவாக மதமோதல் துளிர்விடுகிறது, மன்னாரில் பல வழிகளினாலும் ஆக்கிரமிப்பை நிகழ்த்தும் முஸ்லீம்களை தட்டி கேட்காமல் ஒன்றாயிருந்த நமக்குள் முரண்பாடுகள் தோன்றுதென்றால் மூன்றாம் நபர் ஒருவரின் தூண்டுதல் என்பது வெளிபடையாகவே தெரிகிறது.

கறையான் அரித்த காகிதம்போல் ஒட்டுமொத்தமாய் ஓட்டையாய் போய்விட்ட ஈழ தமிழினம் இனி இதையும் எதிர் கொள்ளதான் வேண்டுமென்றால் எவரால் என்ன செய்ய முடியும்?

இதுதான் விதியென்று தமிழர் நிலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குள் மோதி சிங்களவர்களிடம் ஒப்படையுங்கள். வேறு எதுவும் பேசவோ சொல்லவோ தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முரண்பாட்டின் முடிவில்.. இரண்டும் இல்லாமல்.. புத்தர் எழுந்தருளுவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்,  மன்னாரில் உள்ள எண்ணெய் வளத்தை  வைத்து இலங்கை பட்ட கடனை தீர்க்கப்போகிறோம்  என்று தென்னிலங்கை ஒரு அறிக்கை விட்டதே! அபகரிப்பின் எதிர்ப்பை சமாளிக்க, பிரித்தாடி வெற்றிபெறும் யுக்தியாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மற்ற மதத்தவர்களை சாத்தான், அது இது என்று கொண்டு திரியும் அல்லோல கல்லோயாக்களுக்கும் 
மறவன் புலவுக்கும் சுமனே விட்டது போல காணுமிடமெலாம் கன்னத்தை பொத்தி விட்டால் 
தானாகவே இவையெல்லாம் காணாமல் போகும்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.