Jump to content

நிரந்தரமாக மறையும் சூரியன்: மனித இனம் தழைக்க எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரமாக மறையும் சூரியன்: மனித இனம் தழைக்க எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் என்ன?

  • ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க்
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்
7 மணி நேரங்களுக்கு முன்னர்
சூரியன் அழிவது போன்ற மாதிரிப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சூரியன் அழிவது போன்ற மாதிரிப் படம்

மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால், சூரியனின் இறப்பு முதல் பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்தாக வேண்டும்.

மிக மிகத் தொலைவில் உள்ள வருங்காலத்தைப் பற்றி நமக்கு உண்மையில் ஏதாவது தெரியுமா? அடுத்த மாதம் மழை பெய்யுமா என்பது பற்றி உறுதியாக நமக்குக் கணிக்கத் தெரியாத காரணத்தால், பல கோடி ஆண்டுகளுக்கு அப்பால் என்ன நடக்கும் என்பது பற்றி பேசுவது சாத்தியமில்லாததாகத் தோன்றலாம்.

ஆனால், எல்லாமே வானிலை போலக் குழப்பமானதாக இல்லை. மிகத் தொலைவான கால கட்டத்தைக்கூட கணிப்பது சாத்தியமாகிறது. குறிப்பாக வானியல் மற்றும் அண்டம் பற்றிய கணிப்புகளில் இது சாத்தியம்.

ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் சென்னையில் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமா என்று இப்போதே கூறிவிட முடியும். ஏனெனில் சந்திரன், சூரியன் மற்றும் பூமி ஆகியவை நிலையான, கணிக்கக்கூடிய சுற்றுப்பாதையில் நகர்கின்றன. இப்போது ஈர்ப்பு விதிகள் பற்றியும் நமக்கு நன்றாகத் தெரியும்.

இந்த அணுகுமுறையை "இயற்பியல் எஸ்கடாலஜி" என்று கூறலாம். இந்தப் பிரபஞ்சம் எந்தக் காலகட்டத்தில் எப்படியிருக்கும் என்று விவரிப்பதற்காக வானியல் இயற்பியலாளரான மார்ட்டின் ரீஸ் பயன்படுத்திய சொல் இது.

இறையியலில் இருந்து தனக்கான தொடக்கப்புள்ளியை ரீஸ் எடுத்துக் கொண்டார். அதில் "எஸ்கடாலஜி" என்பது உலகத்தின் அழிவு போன்று இறுதியான அம்சங்களைப் பற்றி ஆய்வு செய்வதாகும்.

இந்த தலைப்பில் உள்ள அற்புதமான ஆய்வு, ஃப்ரீமேன் டைசன் 1979-ஆம் ஆண்டு வெளியிட்ட " திறந்த பிரபஞ்சங்களின் வாழ்க்கை" பற்றிய ஆய்வுக் கட்டுரையாகும். இது சூரியனின் இறப்பு முதல் விண்மீன் திரள்களிலிருந்து நட்சத்திரங்கள் தப்பிச் செல்வது வரை எதிர்காலத்தில் வாழ்க்கையை அச்சுறுத்தும் பேரழிவுகளை கோடிட்டுக் காட்டியது.

தொலைதூர எதிர்காலத்தில் மனிதகுலம் இருந்தால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் என்ன? அவர்கள் எப்படி அதில் இருந்து தப்புவார்கள் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அச்சுறுத்தல்கள் வரும் என்று மட்டும் உறுதியாக நம்பலாம்.

அச்சுறுத்தல் 1: பனியுகங்களும், பரிணாம வளர்ச்சியும்

பரிணாம வளர்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பரிணாம வளர்ச்சி

ஒரு பாலூட்டி இனத்தின் வழக்கமான ஆயுட்காலம் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் ஆகும். அணுசக்தி யுத்தம் முதல் உயிரியல் பொறியியல் தொற்றுநோய் வரை, மனிதகுலம் உடனடியாக குறைக்க வேண்டிய பிற அபாயங்களை இருக்கின்றன. இப்போது நடக்கும் இயற்கைப் பேரிடர்கள் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்தைவிட மிகச் சிறியதுதான்.

மனித குலத்துக்கு தற்போதிருக்கும் ஆபத்துகளைச் சரி செய்துவிட்டால், சமாளிக்க வேண்டிய சிக்கல்கள் அடுத்தடுத்து வரும்.

முதலாவது பனியுகம். அடுத்த சில பல்லாயிரம் ஆண்டுகளில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பனியிடைக் காலம் முடிந்து போகும். அதாவது இரு பனியுகங்களுக்கு இடையேயான காலம் முடிந்துவிடும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் நமது முன்னோர்கள் பல பனி யுகங்களில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். இதில் ஒரேயொரு மாறுபாடு என்னவென்றால், அவர்கள் நாடோடி வேட்டைக்காரர்களாக இருந்தார்கள். நம்மைப்போல உலகளாவிய நாகரிகமாக இருக்கவில்லை.

அதன் பிறகு, பல்வேறு புவியியல் யுகங்களுக்கு இடையேயான காலநிலை மாறுபாடுகளையும் நாம் சந்திக்க நேரிடும். கடந்த காலங்களில் பூமி குளிர்ச்சியாக மட்டுமல்ல, வெப்பமாகவும் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஈவோசீன் காலத்தில் பூமி இப்போது இருப்பதைவிட 10 டிகிரி அதிக வெப்பமாக இருந்திருக்கிறது.

அப்போது ஆர்க்டிக் பகுதியில் பனை மரங்கள் வளர்ந்திருக்கின்றன, முதலைகள் வாழ்ந்திருக்கின்றன. மற்றும் பூமத்திய ரேகை பகுதிகள் மக்கள் வாழ முடியாத அளவு சூடாக இருந்திருக்கின்றன.

கடந்த காலங்களில் கூட பூமி பனிப் பந்து போல இருந்த காலங்களும் உண்டு. அந்தக் காலகட்டங்களில் பூமி முழுவதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. சூப்பர் வோல்கனிசம் எனப்படும் தீவிர எரிமலை வெடிப்புகள், விண்கல் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் ஆகியவற்றின் ஆபத்து உள்ளது. இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கையான அழிவுக்கு வழிவகுக்கிறது..

கடைசியாக ஹோமோ சேபியன்ஸ் என்றொரு இனமே வேறொரு இனமாக மாறிவிடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. நாம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறோம். இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டிருக்கிறோம். உதாரணத்துக்கு நவீன உயிரித் தொழில்நுட்பம் நமது மரபணுக்களை வேண்டுமென்ற மாற்ற அனுமதிக்கிறது. இப்படியே போனால் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மனித இனம் வேறு இனமாக மாறிவிடும். இதைத் தடுக்கும் ஒரே வழியே நமது மரபணுக் குறியீடுகளை நாம் சேமித்து வைப்பது ஒன்றுதான்.

இப்படியாகத் தப்பித்து "நாம்" ஒரு நூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் வாழ்ந்தால், பேரழிவுகளை ஒட்டுமொத்த பூமி அளவுக்குக் கையாளும் திறன் பெற்றிருப்போம். ஆனால் முரண்பாடு என்னவென்றால், நாம் நமது சக பாலூட்டி இனங்களை விட நீண்ட காலம் தழைத்திருக்க வேண்டுமெனில், இருப்பதிலிருந்து மிகவும் மாறுபட்டு இருந்தாக வேண்டும்.

அச்சுறுத்தல் 2: உயிர்க்கோளத்தின் ஆயுள் முடிந்து போகும்

பிரகாசமான சூரியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரகாசமான சூரியன்

சுமார் ஒரு பில்லியன் ஆண்டுகளில் சூரியனின் பிரகாசமும் வெப்பமும் படிப்படியாக அதிகரித்து பூமியின் உயிர்க்கோளத்தை முற்றாக அழித்துவிடும்.

சூரியனின் வெப்பத்தால் பாறைகளில் வேதிவினைகள் ஏற்பட்டு காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சப்படும். இதனால் தாவரங்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். கூடுதலாக பசுமை இல்ல விளைவு ஏற்பட்டு, பூமி அதிகமாகச் சூடாகும். பெருங்கடல்கள் ஆவியாகும்.

மிகப் பிரமாண்டமான பொறியியல் கட்டுமானங்கள் மூலம் நம்மால் உயிர்க்கோளத்தைக் காப்பாற்ற முடியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிழலை ஏற்படுத்தும் வகையிலான கட்டுமானங்களை உருவாக்க வேண்டும்.

இல்லாவிட்டால், பூமியை விட்டு விண்வெளிக்கு இடம்பெயரலாம். இப்போதே தன்னிறைவான விண்வெளி வாழ்விடங்கள் சாத்தியமென தோன்றுகின்றன. ஒருவேளை இப்போது இது கடினமாகத் தோன்றினாலும் இன்னும் நூறு கோடி ஆண்டுகளில் நாம் இன்னும் பல மடங்கு திறன் பெற்றிருப்போம்.

அச்சுறுத்தல் 3: சூரியன் நிரந்தரமாக "மறைந்து" போகும்

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் பிரகாசம் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கும். மையத்தில் குவிந்திருக்கும் ஹீலியம் சூரியனை வேகமாகச் சூடாக்கும். பின்னர் சிவப்பு அரக்கன் எனப்படும் நிலைக்கு சூரியன் மாறிவிடும். அது சூரியமண்டலத்தின் முடிவைக் குறிக்கிறது. அப்போது பூமி சூரியனால் விழுங்கப்படும். சூரியனும் வெள்ளைக் குள்ளர் என்ற இறந்த நிலைக்குச் சென்றுவிடும்.

இந்தச் சூழ்நிலையிலும் மனித குலம் தப்பிப்பிழைத்திருக்க வேண்டுமானால், சூரிய மண்டலத்தைவிட்டே வெளியேறியிருக்க வேண்டும். இதற்கு அதி வேகமான விண்கலன்கள் நம்மிடம் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே விண்வெளிகளில் வாழிடங்களை அமைத்தவர்கள் அப்படியே வேறு நட்சத்திரங்களை நோக்கி நகரத் தொடங்குவார்கள்.

அச்சுறுத்தல் 4: நட்சத்திரங்களின் அழிவு

நட்சத்திரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நட்சத்திரங்கள்

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களின் பெருக்கம் ஏற்கெனவே உச்சத்தில் இருக்கிறது. அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில் பிரகாசமான நட்சத்திரங்கள் எரிந்துவிடும். அதன் பிறகு குறைந்த பிரகாசம் கொண்ட சிவப்புக் குள்ள நட்சத்திரங்கள் மட்டுமே பிரபஞ்சத்தில் இருக்கும். அவை பல லட்சம் கோடி ஆண்டுகள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். ஆனால் உயிர் வாழ்வதற்கு அந்த ஒளி போதாது. வேறு வகையான ஆற்றல் ஆதாரங்களைத் தேட வேண்டியிருக்கும்.

இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஹைட்ரஜன் துகள்களை இணைத்து அதன் மூலம் ஆற்றலை உருவாக்க முடியும். ஆனால் இதற்கெல்லாம் மிகப் பிரமாண்டமான பொறியியல் அறிவு தேவைப்படும்.

இல்லையென்றால் குறைந்த வெப்பம் கொண்ட சூழலில் வாழ உயிர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இவற்றையெல்லாம் கடந்து மனிதகுலம் தப்பிப்பிழைத்தது என்றால், அதுவே பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இருக்கும்.

அச்சுறுத்தல் 5: விண்மீன் திரள்களின் முடிவு

விண்மீன் திரள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விண்மீன் திரள்

சீரற்ற முறையில் நட்சத்திரங்கள் இயங்கும் போது விண்மீன் திரள்கள் படிப்படியாக அழிந்து போகின்றன. அந்த நேரத்தில் விண்மீன்கள் அந்தந்த விண்மீன் திரள்களில் இருந்து வெளியே தப்பிச் சென்றுவிடும். அதனால் விண்மீன் திரள் சுருங்கி இறுதியில் மைய கருந்துளையில் விழுந்துவிடும். இதற்கு 100 மில்லியன் டிரில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்.

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், நட்சத்திரங்கள் சீரான வேகத்தில் நகர்வதை உறுசி செய்ய வேண்டும். இயற்பியல் ரீதியாக இது சாத்தியம்தான். அமெரிக்கா அனுப்பிய வாயேஜர் விண்கலன்கள் ஈர்ப்பு விசையைக் கொண்டு எப்படி முடுக்கப்படுகின்றனவோ அதைப் போல இதையும் செய்ய முடியும். ஆனால் அதற்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தைச் சுற்றிலும் மிகப் பிரமாண்டமான கட்டுமானங்கள் தேவைப்படும். அதாவது தப்பிச் செல்ல முயலும் நட்சத்திரங்களையே அவற்றின் பாதைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு கட்டுமானங்கள் தேவைப்படும்.

அச்சுறுத்தல் 6: பருப்பொருளின் அழிவு

நமது பருப்பொருள்கள் அனைத்தும் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களால் ஆன அணுக்களால் கட்டப்பட்டுள்ளன. புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் பொதுவாக நிலையானவை என்று கூறப்படுகின்றன. நியூட்ரான்கள், புரோட்டான்களால் நிலைப்படுத்தப்படுகின்றன. தனியாக இருந்தால் அவை சில நிமிடங்களில் சிதைந்துவிடும்.

பல இயற்பியல் கோட்பாடுகள் புரோட்டான்கள் உண்மையிலேயே நிலையானவை அல்ல, அவை மிக நீண்ட காலத்தில் சிதைந்துவிடும் என்று கணித்துள்ளன. இதுவரை புரோட்டானின் சிதைவு கண்டறியப்படவில்லை. அது நடப்பதற்கு டிரில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என சோதனைகளில் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அப்படி நடக்கும்போது பொருள் என்ற ஒன்றே இருக்காது. நட்சத்திரங்களும் கோள்களும் கதிர்வீச்சுகளைக் கொண்ட எலெக்ட்ரான்களாகவும் பாசிட்ரான்களாகவும் மாறும். வாழத் தகுந்த எதுவும் இருக்காது. வெற்றுப் பிரபஞ்சமும் கறுந்துளைகளும் கதிர்வீச்சுகளும் மட்டுமே எஞ்சியிருக்கும்.

சரி, அந்த நிலை வரை, அதாவது டிரில்லியன் கணக்கான ஆண்டுகள் வரை மனித குலம் நீடித்திருக்குமா?

ஐசக் அசிமோவின் கடைசிக் கேள்வி என்ற சிறுகதையில் உள்ள கணினி கூறுவது போல "ஓர் அர்த்தமுள்ள பதிலைக் கூற போதுமான தரவுகள் இல்லை"

https://www.bbc.com/tamil/science-58540887

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.