Jump to content

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம்

  • குடாய் நூர் நாசர்
  • பிபிசி இஸ்லாமாபாத்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பராதர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முல்லா அப்துல் கனீ பராதர் (நடுவில்)

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

அப்துல் கனீ பராதர் கடந்த சில நாள்களாக பொதுவெளிக்கு வராத நிலையில், தாலிபன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தாலிபன்கள் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர்.

தலிபான்கள் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த நாட்டை "இஸ்லாமிய எமிரேட்" என்று அறிவித்தனர். அவர்களின் புதிய இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

முற்றிலும் ஆண்கள் மட்டுமே இருக்கும் அமைச்சரவையில் தாலிபன்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. அவர்களில் கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்கப் படைகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தியவர்களும் அடங்குவார்கள்.

பராதரும் ஹக்கானி குழுவைச் சேர்ந்த அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீல் உர்-ரஹ்மானும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது அவர்களது ஆதரவாளர்கள் அருகே இருந்ததாகவும் தலிபானைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பாஷ்தோவிடம் தெரிவித்தார்.

கத்தாரில் இருக்கும் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரும், அவர்களுடன் தொடர்புடைய ஒருவரும் இப்படியொரு வாக்குவாதம் கடந்த வார இறுதியில் நடந்ததாக உறுதி செய்துள்ளனர்.

புதிய அரசில் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் பராதருக்கு, இடைக்கால அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டதே வாக்குவாதத்துக்குக் காரணம் என்று தாலிபன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பெற்ற வெற்றிக்கு யார் காரணம் என்பதில் தொடங்கி பிளவுகள் விரிவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தன்னைப் போன்று ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பராதர் விரும்புகிறார். ஆனால் தாலிபன்களின் மூத்த தலைவர்களால் இயக்கப்படும் ஹக்கானி குழுவினர் இதை ஏற்கவில்லை. சண்டைகள் மூலமாகவே வெற்றி சாத்தியமானது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய முதல் தாலிபன் தலைவர் பராதர். முன்னதாக அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான உடன்பாட்டில் தாலிபன்கள் சார்பாக அவரே கையெழுத்திட்டார்.

ஹக்கானி குழு கொடூரமான சண்டைகளுக்குப் பெயர் பெற்றது. சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் மற்றும் அவர்களின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களை இவர்களே நடத்தினார்கள். ஹக்கானி இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா வைத்திருக்கிறது.

AFP

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

பராதர்

ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி புதிய அரசில் உள்துறை அமைச்சராக உள்ளார்.

தாலிபன்களின் முகங்களில் ஒருவரான பரதமர் கடந்த வார இறுதியில் இருந்து பொதுவெளிக்கு வராதது முதலே அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் எழுதப்பட்டது.

ஆனால், அவர் காபூல் நகரில் இருந்து வெளியேறி காந்தஹார் நகருக்குச் சென்றுவிட்டதாக தாலிபன் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக பராதர் பேசுவது போன்ற ஒலிப்பதிவில், தாம் பயணத்தில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

"இந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும், நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்," என்று அவர் அந்த ஒலிப்பதிவில் கூறினார்.

தாலிபன்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தக் குரல் பதிவை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.

தங்களுக்கு இடையே எந்த வாக்குவாதமும் இல்லை என்று தாலிபன்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் பராதரைப் பற்றிய அவர்கள் கூறும் தகவல்கள் முரண்பட்டதாக இருக்கிறது. தாலிபன்களின் உச்ச தலைவரைப் பார்ப்பதற்காக காந்தஹார் நகருக்கு பராதர் சென்றிருப்பதாக தாலிபன்களின் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் அவரே, பிபிசி பாஷ்தோவுடன் பேசும்போது, "அவர் சோர்வாக இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது" என்று கூறினார்.

மோதல் தொடர்பாக தாலிபன்கள் கூறும் கருத்துகளை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தேகிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 2015-ஆம் ஆண்டு தங்களது நிறுவனரான முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும், அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.

பராதர் காபூலுக்குத் திரும்பி, வாக்குவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று கேமராக்கள் முன் தோன்றிக் கூறுவார் என வேறுசிலர் கூறுகின்றனர்.

இதுவரை பொதுவெளிக்கு வராத தாலிபன்களின் அதிதலைவரான ஹெபதுல்லா அகுந்த்ஸதா தொடர்பாகவும் பல ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் தாலிபன்களின் அரசியல், படை மற்றும் மத விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.

https://www.bbc.com/tamil/global-58567169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

அட ..இது நம்ம ஆட்கள்தான்..

ஆப்கானிலும்…. ஒட்டுக்குழுக்கள் மாதிரியும், தமிழரசு கட்சி மாதிரியும் ஆட்கள் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது - இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன?

  • மஜித் நுஸ்ரத்
  • ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் நிபுணர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தலைநகர் காபூலுக்குள் முதலாவதாக நுழைந்தவர்கள் ஹக்கானி குழுவைச் சேர்ந்த ஆயுத போராளிகளே. தற்போது நாட்டின் பாதுகாப்பு அவர்கள்வசமே உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தீவிரமாக மேற்கொண்ட வன்முறை செயல்பாடுகளின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த நாட்டை தாலிபன் கைப்பற்றியது. அந்த நாட்டில் ஆட்சி அதிகாரம், அதிகார பகிர்வுக்காக நடக்கும் உள்மோதல் மற்றும் தீவிரம் அடையும் பொருளாதார நெருக்கடியைப் பாரக்கும்போது, தாலிபனின் தேன் நிலவுக் காலம் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.

தற்போது கந்தஹாரில் உள்ள தாலிபன் தலைமை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக தாலிபனின் ஓர் அங்கமான ஹக்கானி குழு உள்ளது. வலுவுடன் விளங்கும் அந்த குழுவை வெளிநாட்டு போராளிகளும் ஆதரிக்கிறார்கள். காபூல் உட்பட கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாதி பகுதியை ஹக்கானி குழுவும் அதன் ஆதரவு போராளிகளுமே கிட்டத்தட்ட கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

தாலிபன் தலைவர் முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதாவை வெகு நாட்களாகக் காணவில்லை. இது குழுவின் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தாலிபன் மீதான உள்நாட்டு மோதலுக்கு வழிவகுக்கும் ஆபத்தாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த சவால்களின் காரணமாக, இந்த நேரத்தில் அமைப்பின் ஒற்றுமையை பராமரிக்கவே தாலிபன் முன்னுரிமை தருவதாகத் தோன்றுகிறது, இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைய வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தப்படும் கவலைகளை தாலிபன் நிராகரித்துள்ளது.

தற்போது தாலிபன் அறிவித்துள்ள இடைக்கால அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் பழையவர்கள். மேலும் பஷ்தூன் அல்லாத சமூகத்தினருக்கு பெரிய பொறுப்பு ஏதும் தரப்படவில்லை.

தென்கிழக்கில் நிலவும் வேறுபாடுகள்

தாலிபன் தலைவர்கள்

ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றியதன் மூலம் தாலிபனுக்கு நிறைய ஆதாயம் கிடைத்துள்ளது. அது பிரிக்கப்பட்ட விதத்தில்தான் மோதல் தொடர்கிறது. ஆனால், மிக ஆழமாக பார்த்தால் அந்த மோதலுக்குள் பாரம்பரிய இனவெறிக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான மோதல் மறைந்திருப்பதை பார்க்கலாம். கிழக்குப் பகுதியில் வாழும் பஷ்தூன்கள் மிகவும் வலிமை பெற்றுள்ளனர். அவர்கள் தென் பகுதி பழங்குடிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 40% மக்கள் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பஷ்தூன்கள் துர்ரானி மற்றும் கில்சாய் என இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளனர். எண்ணிக்கையில் துர்ரானி பஷ்தூன்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், 1747ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான காலகட்டங்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆப்கானிஸ்தானனில் ஆளுகை செலுத்தியிருக்கின்றனர்.

இதேவேளை கில்சாய் பஷ்தூன்கள், பெரும்பாலான காலத்துக்கு அதிகாரத்தில் இருந்து விலகியே இருந்தனர். பழங்குடிகளாக வாழும் அவர்கள்வசம் போதுமான சொத்துகள் கிடையாது.

ஹக்கானி குழுவின் தலைவரான கில்சாய் ஒரு பஷ்தூன். அவரது குழுவினர் தாலிபனின் அங்கம். ஆனால், தாலிபனுக்குள் இருக்கும் ஹக்கானி குழு செயல்திறன், நிதி சுயாதீனம் போன்றவற்றில் தங்களுக்கே உரிய வழியில் தனித்து செயல்படுகிறது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் பஷ்தூன் அல்லாத தாலிபனுக்கும் வெளிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கும் நெருக்கமானதாக ஹக்கானி குழு அறியப்படுகிறது.

இது தவிர, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடனும் அந்த குழு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. இதே போல, சித்தாந்த ரீதியாக அல் காய்தா, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோராசன் கிளையுடனும் ஹக்கானி குழு நெருக்கமான உறவைப் பாராட்டி வருகிறது.

முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் அவரைத் தவிர அதிபர்களாக இருந்த மூன்று இடதுசாரி தலைவர்களும் பஷ்தூனின் கில்சாய் பிரிவைச் சேர்ந்தவர்கள். சில ஆப்கானியர்கள் ஹக்கானி குழுவசம் ஆப்கானிஸ்தான் செல்ல அஷ்ரஃப் கனியே அனுமதித்து இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறார்கள்.

தலைமை தேர்வை நிறுத்தி வைத்த தென் பகுதி தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,TALIBAN

 
படக்குறிப்பு,

முல்லா மொஹம்மத் ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக தலிபானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரும்பாலான மூத்த தாலிபன் தலைமைப் பதவிகளை தெற்கில் உள்ள கந்தஹார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பஷ்தூன்களே வகிக்கிறார்கள். தாலிபனின் எமிருக்கு துணையாக சிராஜுதின் ஹக்கானி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2015இல் முல்லா ஒமரின் மரண அறிவிப்பு வெளிவந்த பிறகு, அடுத்த தலைமை குறித்து தென் பகுதியில் இருந்த தாலிபன்கள் மோதிக் கொண்டனர். ஆனால் ஒமருக்குப் பிறகு தலைவரான முல்லா அக்தர் மன்சூர், சிராஜுதீன் ஹக்கானியை தனது மூன்று துணைத் தளபதிகளில் ஒருவராக வைத்துக் கொண்டார். இந்த சிராஜுதின் ஹக்கானி கிழக்கு ஆப்கானிஸ்தானின் கிரேட்டர் பக்தியா பகுதியைச் சேர்ந்தவர்.

மறுபுறம், தாலிபன் அதி உயர் தலைவரான முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதா, பிரதமர் முல்லா மொஹம்மத் ஹசன் அகுந்த் மற்றும் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் துர்ரானி ஆகியோர் பஷ்தூன்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹெப்துல்லாவுக்கு முன்பாக தாலிபன் தலைவராக இருந்த முல்லா மன்சூர் அக்தர், ஒரு துர்ரானி ஆவார்.

தாலிபன் நிறுவனர் முல்லா ஒமர் கில்சாய் பஷ்தூன் வழி வந்தவர் என்றாலும், அவரை தென் பகுதி பஷ்தூன்களுக்கான இணைப்பாகவே தாலிபன்கள் பார்த்தனர். முல்லா ஒமர், கந்தராஹில் பிறந்த பஷ்தூன்களுடன் கலந்து வாழ்ந்தவர். அவரது மகன் முல்லா யாகூப் தாலிபன் அரசாங்கத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருக்கிறார். அவர் தாலிபன் தென் பகுதி தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவராக அறியப்படுகிறார்.

புதிய தாலிபன் அரசாங்கத்தில் மூத்த தலைவர்கள் இருக்கலாம். ஆனால், தெற்கிலிருக்கும் இரண்டு முக்கிய தாலிபன் தளபதிகளான முல்லா கய்யூம் ஜாகிர், முல்லா இப்ராஹிம் சாதர் ஆகியோர் அரசாங்கத்தில் சேர்க்கப்படவில்லை.

பலம் காட்டும் ஹக்கானி குழு

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,ANADOLU AGENCY/GETTYIMAGES

 
படக்குறிப்பு,

முல்லா அப்துல் கனி பராதர் சமீபத்திய நாட்களாக காபூலிலேயே இல்லை.

ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு முல்லா பராதருக்கும் ஹக்கானி குழுவுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்துக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் கடும் மோதல் இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

அந்த தகவல்களின்படி, முல்லா பராதர் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் தேவை என்று விரும்பியதாகவும் அவர் பஞ்ஷிர் பகுதியில் தாலிபன் தாக்குதல் நடத்தியதை எதிர்த்தார் என்றும் கூறப்படுகிறது. பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி கடந்த சில தசாப்தங்களாக அமைதியாக இருந்தது. ஆனால், அங்கு தாலிபன் ஆக்கிரமித்தவுடன் மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது.

கத்தாரின் தோஹாவில் தாலிபன் தரப்பில் அமெரிக்காவுடனும் ஆப்கானிஸ்தான் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்திய குழுவை வழிநடத்தியவர் முக்கியமானவர் பராதர். ஆனால், இப்போது தாலிபன் அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு பராதரின் தகுதி குறைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் சில தகவல்கள், பராதர் காபூலை விட்டுச் சென்று விட்டதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சில நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளியில் தோன்றிய பரதர், ஒரு காகிதத்தில் எழுதி வைத்த அறிக்கையை வாசித்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான தகவலை மறுத்த அவர், தமது இருப்பிடம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

செப்டம்பர் 3ஆம் தேதி மாலை காபூலில் நடந்த துப்பாக்கிச் சூடு உண்மையில் ஹக்கானி குழுவின் பலத்தை காட்டுவதாக சில தகவல்கள் கூறுகின்றன. தென் பகுதியில் உள்ள தாலிபனுக்கு தங்களுடைய பலத்தை அவர்கள் அந்த துப்பாக்கி சூடு மூலம் காட்டியதாகவும் தெரிகிறது. குண்டுமழை போல அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதி உயர் தலைவர் எங்கே?

ஆப்கானிஸ்தான் தாலிபன்

பட மூலாதாரம்,AFGHAN ISLAMIC PRESS

 
படக்குறிப்பு,

அதி உயர் தலைவர் அகுந்த்ஸாதா எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.

தாலிபன்களின் அதி உயர் தலைவர் முல்லா அகுந்த்ஸாதா நீண்ட காலமாகவே வெளியே காணப்படவில்லை, மேலும் அவரைப் பற்றிய கேள்விகளை சாதாரண மக்கள் மட்டுமின்றி சில தாலிபான் தளபதிகளும் பலவிதமாக ஊகித்து வருகிறார்கள்.

சில தகவல்கள், முகுந்த்ஸாதா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்கின்றன. மற்ற தகவல்களோ சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார் என்றும் அங்கு அவர் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றன.

தாலிபனுக்கு உள்ளாகவே பல முரண்பாடுகள் தோன்றும் வேளையில் ஆப்கானிஸ்தானைச் சுற்று நிச்சயமற்ற நிலை உள்ளது. மக்களின் பார்வையில் படாமலேயே அகுந்த்ஸாதா உயிருடன் வாழ்வதும் எளிதான விஷயமல்ல.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியான டோலோ நியூஸ், முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதா நீண்ட காலமாக மக்கள் மத்தியில் தோன்றாமல் இருப்பது குறித்து கந்தஹாரில் உள்ள மக்களும் தாலிபன் தலைவர்களும் அச்சம் கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டது.

எனினும், அறிக்கையொன்றில் கந்தஹாரை விட்டு அகுந்த்ஸாதா விரைவில் வெளியே வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், டோலா நியூஸ், அகுந்த்ஸாதா உயிருடன் இருக்க மாட்டார் என்ற அச்சத்தை செய்தியாகவே வெளியிட்டது.

முல்லா ஒமரின் மரணத்திற்குப் பிறகு, முல்லா ஹெப்துலாவும் இறந்து விட்டால் தாலிபனுக்கு புதிய தலைமை யார் என்பது தொடர்பாக நடக்கும் மோதல்கள் வரும் நாட்களில் மேலும் வலுப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபனின் தேனிலவு முடிந்தது

तालिबान लड़ाका

பட மூலாதாரம்,AHMAD SAHEL ARMAN

மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி கடுமையாகி வருகிறது, வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்ட பிறகு தாலிபனுக்குள் நிலவும் வேறுபாடுகள் அதிகமாகியுள்ளன. இப்போது தாலிபன் ஆளுகைக்கு, சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான சவாலுடன் சேர்த்து, நாட்டு மக்களாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட ஆக்கபூர்வ நடவடிக்கையில் கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை செப்டம்பர் 7ஆம் தேதி தாலிபன் அறிவித்தது, ஆனால் இந்த ஏற்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தாலிபன் தெளிவுபடுத்தவில்லை. அதி உயர் தலைவரின் பணி, தலைமை கவுன்சிலின் அதிகாரம், உலமா பரிஷத்தின் பங்கு என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

தீவிரவாத அமைப்பான ஐஎஸ்(கே)-வுடன் தாலிபன் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் விளக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில், ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கண்காணித்து வரும் மிக்கேல் செம்பல் என்ற ஆய்வாளர், "தாலிபனை சுற்றி பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதில் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதே பிரதானமாக பிரச்னை," என்று பிபிசி பெர்ஷிய சேவையிடம் தெரிவித்தார்.

இதை எல்லாம் பார்க்கும்போது, தாலிபனின் தேன் நிலவு காலம் முடிந்து விட்டது. இனி அந்த அமைப்பு தன்முன் உள்ள மிகப்பெரிய சவால்களை சமாளிக்கத் தயாராக வேண்டும் என்று மிக்கேல் செம்பில் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-58626498

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா எப்போதே செய்திருக்க வேண்டிய வேலை இது 

பலகோடி பணம் ஆளணி, ஆயுத வளம் அனைத்தையும் வீணாக இழந்த பின்னர் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அமெரிக்கா எப்போதே செய்திருக்க வேண்டிய வேலை இது 

பலகோடி பணம் ஆளணி, ஆயுத வளம் அனைத்தையும் வீணாக இழந்த பின்னர் . 

அமெரிக்கா இப்பவும் செய்து விட்டு தான் போயிருக்கு 

அத்தனை கோடி ஆயுதங்களையும் திருப்பி எடுக்க முயற்சி செய்யவே இல்லை 

இனி தான் இருக்கு கூத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்களுக்குள் குரங்குகளின் அட்டாகாசம் பொறுக்க முடியவில்லை என்றால் பழங்களில் மிளகாய்தூளை தூவி அங்கங்கே வைத்து அருகில் சில கொட்டன்களையும் வைத்து விடுவார்களாம்.....குரங்குகளும் கண் எரிய எரிய அந்தத் தடிகளால் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுமாம்......!

அதுபோல் அமெரிக்கன் செய்ய நினைத்ததை அவர்களின் உயிரிழப்புகள் இல்லாமல் அந்த ஆயுதங்கள் திறமையாக செய்துகொண்டிருக்கு......!   👌

Monkey fight part 1 on Make a GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

பிபிசி ஐ நம்ப இயலாது.
செய்தி உண்மை எனில் குரங்கின் கையில் பூமாலை தான்.

பிபிசி சொல்வதற்கு முன் ஜேர்மன் செய்திகளில் பலமுறை வந்து விட்டது.

சவுண்டு குடுத்த சீனாவும் ரஷ்யாவும் இப்ப கப்சிப்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

அமெரிக்கா இப்பவும் செய்து விட்டு தான் போயிருக்கு 

அத்தனை கோடி ஆயுதங்களையும் திருப்பி எடுக்க முயற்சி செய்யவே இல்லை 

இனி தான் இருக்கு கூத்து.

அநேகமானவை பழையதும் பழுதடைந்தவையாகவே காணக்கூடியதாக உள்ளது. 

ஆப்கானியும் நண்டு கும்பம் தான் போல தமிழர்களைப்போலவே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.