Jump to content

கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎09‎-‎2021 at 23:20, alvayan said:

இதனை நீங்கள் சொல்லமுடியாது..

வேற யார் எல்லோருக்கும் துரோகி பட்டம் கொடுக்க பழக்கின உங்கள் தலமை வந்து சொல்லோணுமாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

வேற யார் எல்லோருக்கும் துரோகி பட்டம் கொடுக்க பழக்கின உங்கள் தலமை வந்து சொல்லோணுமாக்கும்

உங்கடை கதையயைப்பார்த்து சந்தி சிரிக்குது...ஊரறிந்த விடையத்திற்கு உரியவர் நீங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் -ஐநா சர்வதேச சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்- ஹம்சி குணரட்ணம்

Digital News Team 2021-07-28T08:20:47
இலங்கையின் உள்நாட்டு மோதல் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் ஐநா சர்வதேச சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹம்சி குணரட்ணம் தெரிவித்துள்ளார்
தமிழ்சிங்கள பத்திரிகையாளர்களுடான டிஜிட்டல் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.
kamzi-guna-300x100.jpg
உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் சி;ங்கள பத்திரிகையாளர்களுடன் டிஜிட்டல் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தேன்.
நோர்வே நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டமையே இதற்கு காரணம் .
நான் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டமை பலருக்கு பெரும் விடயம் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இதேவேளை நான் குரல்கொடுக்கின்ற – நான் எதற்காக நாடாளுமன்றம் சென்றேனோ அந்த விடயங்கள் குறித் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபடவேண்டியது முக்கியமானது நான் கருதுகின்றேன்.
இன்றைய சந்திப்பில் நான் தெரிவித்த முக்கியமான விடயங்கள் ஓஸ்லோ நோர்வே மற்றும் உலகம் ஆகியன இரண்டு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை காரணமாகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன்.- அதிகரித்துவரும் சமத்துவமி;ன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியனவே அந்த இரண்டு விடயங்கள் ஒஸ்லோவின் பிரதிமேயராக எனக்கு ஆறு வருடங்கள் கிடைத்த அனுபவத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பசுமை மாற்றம், அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்கொள்வதை நோக்கி நாங்கள் செயற்பட்டோம்.
முக்கியமாக அதிகளவு மக்களை எப்படி தொழில்வாழ்க்கைக்குள் ஈர்ப்பது என்பது குறித்து கவனம் செலுத்தினோம்,ஏனென்றால் நோர்வேயை வளமான செல்வந்த நாடாக மாற்றுவது எண்ணெயில்லை,தொழில்புரிந்து வரி செலுத்தும் மக்களே நோர்வேயை செல்வந்தநாடாக மாற்றுகின்றனர்,எங்கள் சமூகநலன்புரி அரசு வலுவானது சமூக பொருளாதார பாலியல் சமத்துவத்திற்குள் நாங்கள் செயற்படுகின்றோம்.

உங்களில் பலருக்கு இலங்கையுடனான எனது உறவு குறித்து கேள்விகள் இருக்கலாம்.
நான் இலங்கையில் பிறந்ததால் நான் இலங்கையுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் தொடர்பை கொண்டிருப்பேன்.
நான் இலங்கையில் பிறந்தேன் 13 வருடங்கள் தமிழ் பாடசாலைக்கு சென்றேன்,தமிழ் எனது தாய்மொழி. இலங்கை மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு வேண்டும் என்பது குறித்த அனுதாபமும் பச்சாதாபமும் எனக்கு உள்ளது.
இலங்கை என வரும்போது முதலில் சர்வதேச சமூகத்திடமிருந்து சில விடயங்களை நாங்கள் செய்யலாம்.அதேவேளை இலங்கை மக்கள் இணைந்து தங்களிற்காக செயற்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன.
முதலாவதாக யுத்தம் குறித்து விசாரணை செய்யப்படவேண்டும்.
இலங்கையின் போரில் இறுதி இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐநா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகின்றது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்கவேண்டும்.
ஏனெ;றால் ஜனநாயகத்தில் வெளிப்படை தன்மை என்பது மிகவும் முக்கியமான அம்சம்.
நல்லிணக்கத்திற்கும் இது அவசியமான விடயம்.
kamzi-guna1-300x225.jpg
இரண்டாவது யுத்தம் மோதல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தவேண்டும்.
தொழில்கட்சியின் இளைஞர் லீக்கின் உறுப்பினராக நான் இதனை முன்னெடுத்தேன்.
மூன்றாவது நோர்வேயிலிருந்து இலங்கையுடனான எங்கள் உறவை தொடரவேண்டும், பகிஸ்கரிப்பு ஒரு வழிமுறை என நான் கருதவில்லை.
எதிர்கால வெளிவிவகார அமைச்சரும் புதிய வெளிவிவகார அமைச்சரும் இது குறித்து சிறந்த திட்டமிடல்களை கொண்டிருப்பார்கள் என நான் கருதுகின்றேன்.
இறுதியாக அதிகரித்துவரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றம்ஆகியவற்றிற்கான தீர்வை காணும்போது நோர்வே ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.

 

 

 

https://thinakkural.lk/article/139705

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎09‎-‎2021 at 01:01, alvayan said:

உங்கடை கதையயைப்பார்த்து சந்தி சிரிக்குது...ஊரறிந்த விடையத்திற்கு உரியவர் நீங்கள்..

ரியலி 😆அப்படி என்ன கதைக்கினம் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.