Jump to content

தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ``இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமான முயற்சிகள் அரங்கேற உள்ளன,'' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். உண்மையில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும் 1,577 கிராம ஊராட்சித் தலைவர், 12,255 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் முதல் கட்டமாக அக்டோபர் 6 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 9ஆம் தேதியன்று ஒன்பது மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக பழனிகுமார் தெரிவித்தார்.

நகைக்கடன் தள்ளுபடி - யாருக்கு லாபம்?

இதையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஆளும்கட்சியாக உள்ள தி.மு.க, அனைத்து இடங்களிலும் 100 சதவிகித வெற்றியை பெறும் அளவுக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 5ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களில் நிலவும் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்காமல் இருப்பது, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வராமல் இருப்பது போன்றவை மிக முக்கிமான பிரச்னைகளாக உள்ளன. கிராமப்புறங்களை மையமாக வைத்துத் தேர்தல் நடப்பதால் இவற்றை எதிர்க்கட்சியான அ.தி.மு.க பிரதானப்படுத்தி பிரசாரம் செய்யவும் வாய்ப்புள்ளதாக தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தெரிவித்தனர். இதன்பிறகே, திங்கள்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

உதயசூரியன்

பட மூலாதாரம்,PA MEDIA

தி.மு.கவின் ரகசிய அஜெண்டா

தவிர, உள்ளூரில் சர்ச்சைகளில் சிக்காத செல்வாக்கானவர்களை களமிறக்கவும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவும் தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. `இந்த ஒன்பது மாவட்டங்களில் பெறக் கூடிய வெற்றிதான், அடுத்து வரக் கூடிய மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக இருக்கும்' எனவும் தி.மு.க நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகள் நிறைந்திருப்பதால், `10.5 சதவிகித இடஒதுக்கீடு அரசாணை தங்களுக்குக் கை கொடுக்கும்' எனவும் தி.மு.கவினர் நம்புகின்றனர். அதேநேரம், ஒரே மாவட்டத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதும் தி.மு.கவுக்கு வெற்றி தேடித் தரக்கூடிய விஷயமாக உள்ளதாகவும் விவாதம் கிளம்பியுள்ளது.

இதனை சாடிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `இந்திய வரலாற்றிலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டதில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதுதொடர்பாக பேசப்படவில்லை. தேர்தலை எத்தனைக் கட்டங்களாக நடத்துவது என அன்றைக்குப் பேசப்படவே இல்லை. இதனை மறைமுக அஜெண்டாக வைத்து ரகசியமாக அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு இடத்தில் தேர்தல் முடிந்த பிறகு அடுத்த இடத்துக்கு ஆள்களைக் கூட்டி வந்து கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகரிக்கும்" என்கிறார்.

தி.மு.க, அ.தி.மு.க மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும் தி.மு.க, தனது கூட்டணிக் கட்சிகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் இடங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, 14 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாவட்டத் தலைவரையும் உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்படுத்தியுள்ளார். இந்தக் குழுவினர் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் பேசி தங்களுக்கான இடங்களைக் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களை நம்பும் அ.தி.மு.க

அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

அ.தி.மு.க தரப்பிலோ, ஒன்பது மாவட்டங்களுக்கும் நத்தம் விஸ்வநாதன், சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் ராமச்சந்திரன், ராஜலட்சுமி, உள்ளிட்டோரை கூடுதல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிராமப்புறங்களில் அதிகப்படியான வாக்குகளை அ.தி.மு.க பெற்றதால், இந்தமுறையும் பெரும்பாலான இடங்களில் வெல்ல முடியும் என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

கூடவே, உள்ளூரில் செல்வாக்கான நபர்களைக் கண்டறிந்து வேட்பாளர்களாக நிறுத்துவது, பண விநியோகம் என பல்வேறு விஷயங்களை அ.தி.மு.க தரப்பில் விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடப்பங்கீட்டை வழங்குவது தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளிவரவில்லை. குறிப்பாக, `உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணியை தொடர்வது பற்றி பா.ஜ.க தலைமை முடிவு செய்யும்' என தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளதும் கவனிக்க வைத்துள்ளது.

``அ.தி.மு.கவின் உள்ளாட்சி வியூகம் என்ன?" என அக்கட்சியின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐ.எஸ்.இன்பதுரையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை, நீட் தேர்வு தொடர்பான பொய்யான வாக்குறுதி, அதனால் ஏற்பட்ட இரண்டு மரணங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்" என்கிறார்.

மூன்று சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம்

தொடர்ந்து பேசுகையில், `` தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க கணக்குப் போடுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம். இவை நகர்ப்புறங்களில் கிடைக்காத வாக்குகளாக உள்ளன. அதேநேரம், கிராமப்புறங்களில் அ.தி.மு.கவுக்கு நல்ல வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் மூன்று சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம். அந்தவகையில் பார்த்தால் இந்தத் தேர்தல் அ.தி.மு.கவுக்கு சாதகமாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.கவின் ரகசியத் திட்டம்; அதிமுகவில் கொதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், `நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம்' எனக் கூறிவிட்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தது. நடுத்தர மக்களுக்கு, தங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதனால் தி.மு.கவின் வாக்குறுதி கவர்ச்சிகரமானதாகப் பேசப்பட்டது. ஆனால், அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த துரோகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சட்டமன்றத்தில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்காக குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற ஸ்டாலின், நீட் தேர்வைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவரிடம் பேசவில்லை. பொருளாதார நெருக்கடி எனக் கூறிவிட்டு கருணாநிதிக்கு மணிமண்டம், மதுரையில் நூலகம் என அமைப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்" என்கிறார்.

100 சதவிகித வெற்றி கிடைக்கும்

`` ஆமாம், தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்தோம். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படிப் பார்த்தால் பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வாக்குறுதியை பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றினோம். அது எந்தளவுக்கு வரப்பிரசாதம் என்பது வறுமையில் வாடும் பெண்களுக்குத்தான் தெரியும். இவர்கள் கஜானாவை காலி செய்துவிட்டுப் போனார்கள்" என்கிறார், தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க எதையும் செய்யாத கோபம் மக்களிடம் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் கொரோனா தொற்றுடன் போராட வேண்டிய சூழல் அரசுக்கு இருந்தது. நிதி நிலைமை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு அதிக பயனைத் தரும். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை நோக்கிப் பயணிக்கிறோம்" என்கிறார்.

தெளிவுபடுத்திய தி.மு.க

``உள்ளாட்சித் தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?" என அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவரும் மாநில துணைத் தலைவருமான ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதன் தலைவராக எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் இருப்பார். இந்தக் குழுவினர், தங்களுக்கு சாதகமான வார்டுகளை பெறுவது தொடர்பாக பேசி முடிவு செய்வார்கள். இதில், இறுதி முடிவை கட்சித் தலைவர் அறிவிப்பார்" என்கிறார்.

``எவ்வளவு இடங்கள் என்பதில் தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதா?" என்றோம். ``அதை மாவட்டத் தலைவர்கள் பேசிக் கொள்வார்கள். தி.மு.கவும் இதனை தெளிவுபடுத்திவிட்டது. மாவட்ட அளவில் எதாவது பிரச்னை வந்தால் மாநில அளவில் விவாதிக்கப்படும். இடப்பங்கீட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் மாவட்டங்களிலேயே பேசி முடிக்கப்பட்டுவிடும்" என்கிறார்.

கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள், கரன்ஸி வெள்ளம், புதுப்புது அறிவிப்புகள் என உள்ளாட்சித் தேர்தலை அதகளப்படுத்தும் முயற்சியில் பிரதான கட்சிகள் களமிறங்கிவிட்டன. இதன் பலன் என்னவென்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

https://www.bbc.com/tamil/india-58563900

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.