Jump to content

1985: இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

1985: இலங்கையில் இந்தியா

 

Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது.

2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. 

டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Sep 12ம் திகதியை சிரிலங்காவின் அதியுத்தம ஜனாதிபதி JR ஜெயவர்தன பொது விடுமுறை நாளாக அறிவித்தது வெற்றிக் கொண்டாட்ங்களிற்கு மகுடம் சேர்த்தது.

ஜூலை 13, 1985ல் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை ஆகிய கோட்பாடுகளடங்கிய திம்பு பிரகடனத்தை தமிழ் இயக்கங்கள் ஒற்றுமையாக வெளியிட, இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் இந்திய அணுசரணையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முறிகிறது.  

அதே காலப்பகுதியில் லண்டனில் நடந்த ICCயின் கூட்டத்தில், 1987 உலக கிரிக்கட் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்ற வாக்களிப்பில், இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கிறது.

இலங்கை அளித்த ஆதரவிற்கு பிரதியுபகாரமாக, இந்திய கிரிக்கட் அணியின் முதலாவது இலங்கை விஜயம் 1985 ஓகஸ்ட் இறுதியில் ஆரம்பமாகும் என்று BCCI வாக்குறுதியளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயத்தை பகீஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. 

முதலில் விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்த இந்தியா, இலங்கையின் இராஜதந்திர அழுத்தங்களிற்கு அடிபணிந்து, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்துகிறது. 

இலங்கை விஜயம் நடைபெறாது என்று நம்பி இங்கிலாந்தில் county cricket விளையாட போன அமரநாத், வெங்சக்கார், சாஸ்திரி போன்ற இந்திய வீரர்கள் அவரச அவசரமாக நாடு திரும்புமாறு பணிக்கப்படுகிறார்கள். 

சென்னையில் நடைபெறவேண்டிய பயிற்சி பாசறை, தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால் பம்பாய்க்கு மாற்றப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் கிர்மானி நீக்கப்பட்டு சதானந் விஷ்வநாத் அணியில் இடம்பிடிக்கிறார். கிர்மானியோடு Madan Lalற்கும் Roger Binnyக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இரு தமிழர்களிற்கும் இடம் கிடைக்கிறது, ஶ்ரீகாந்த் மற்றும் சிவராமகிருஷ்ணன். 

1983 ஜூனில் லண்டனில் வென்ற உலக கோப்பை, 1985 மார்ச்சில் மெல்பேர்ணில் வென்ற Benson & Hedges கோப்பை, 1985 ஏப்ரலில் ஷார்ஜாவில் வென்ற Rothmans கோப்பை என்று வெற்றி மமதையிலும், சரியாக திட்டமிடாமலும், முறையான தயார்படுத்தலில்லாமலும் இலங்கை மண்ணில் கால் பதித்த இந்திய கிரிக்கெட் அணியை எதிர்பார்த்து, பலமான தயார்படுத்தலுடனும் அதியுச்ச உத்வேகத்துடனும் இலங்கை கிரிக்கட் அணி காத்திருந்திருந்தது.

அன்றைய இலங்கையின் முன்னணி அம்பயர்களான, பொன்னுத்துரையும் KT ஃபிரான்ஸிஸும் தாங்கள் அரங்கேற்றப்போகும் வரலாற்று நிகழ்வை அறியாமல், வெள்ளவத்தை அலெக்ஸாண்ரா ரோட் கச்சான் கடையில் வாங்கிய உறைப்பு கடலையை கொரித்துக் கொண்டு வெள்ளவத்தை கடற்கரையை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். 

------------------------------------------------------------------------------------------------------

ஓகஸ்ட் 25, 1985 அன்று SSC மைதானத்தில் முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெறுகிறது. கொக்காவில் தொலைக்காட்சி டவர் அடிக்க முற்பட்ட காலமாகையால், யாழ்ப்பாணத்திலும் ரூபவாஹினியூடாக ஆர்வத்துடன் போட்டியை மக்கள் பார்க்கிறார்கள்.  

யாழ் குடாநாட்டில் ஆமிக்காரன்கள், கோட்டை, காரைநகர், பலாலி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நாவற்குழி முகாம்களிற்குள் முடக்கப்பட்டிருந்த காலமது.

ஷியா மார்ஷெட்டியும் ஹெலியும் ஷெல்லும் சனத்தை பதம்பார்க்க, ஆனையிறவில் ஆமிக்காரன், போறவாற சனத்தை ஏற்றி இறக்கி, துலைத்தெடுத்து அலுப்பு கொடுத்துக்கொண்டிருந்த காலம். 

வவுனியாவிற்கு வடக்கே இலங்கை அரசு விதித்திருந்த பொருளாதாரத்தடை அமுலிலிருந்த காலகட்டம். "எங்களிற்கு வலி தந்த சிங்கள தேசத்திற்கு கிரிக்கெட் ஆடுகளத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும்" என்ற எண்ணமே யாழ்ப்பாணத்தில் பரவலாக உணரப்பட்டது.

முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணிக்கு அமால் சில்வாவும் ரவி ரட்ணாயக்காவும் ஒரு நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்கள். மொஹிந்தர் அமரநாத், ரவி சாஸ்திரி, ஷேதன் ஷர்மா இணைந்து விக்கெட்டுக்களை சாய்க்க, இலங்கை 82/3ல் தத்தளித்தது. 

ரோய் டயஸும் (80) அர்ஜுண ரணதுங்கவும் (64) இணைந்து நாலாவது விக்கெட்டுக்கிற்கு 110 ஓட்டங்களை சேர்த்து, இலங்கையை ஒரு பலமான நிலைக்கு இட்டுச்சென்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர் முடிவில் இலங்கை அணி 241/8 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மா 3/50 கைப்பெற்றினார்.

ஒஸ்ரேலியாவில் கலக்கிய இந்தியாவின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தும் ரவி சாஸ்திரியும் களமிறங்க, யாழ்ப்பாணம் உற்சாகமாகியது. வழமைக்கு மாறாக ஶ்ரீகாந்த் நிதானமாக ஆட, சாஸ்திரி வழமை போல் பசைஞ்சு நொட்டி நொட்டி ஆடினார். இந்திய அணி 69 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ரொஜர் விஜயசூரியவின் பந்துவீச்சில் ஶ்ரீகாந்த் (29) ஆட்டமிழக்கிறார். 

அடுத்தது அஸாருதீன், போன வருஷம் இந்திய அணியில் நுழைந்து, தானாடிய முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்திற்கெதிராக சதங்கள் அடித்த அஸார்தீன் (8), இந்திய அணி 81 ஓட்டங்கள் எடுத்த வேளை ஆட்டமிழக்க, சிரிலங்கா அணியின் கை மேலோங்குகிறது.

டுலீப் வெங்சக்கார் மடமடவென ரன்களை குவிக்க இந்திய அணியின் run chase வேகம் பிடிக்கிறது. அணியின் எண்ணிக்கை 135ல் சாஸ்திரி ஆட்டமிழக்க, Batஜ சுழற்றிக்கொண்டு கபில்தேவ் களமிறங்குகிறார். "இனித் தான் விளாயாட்டு இருக்கு" முன் கதிரையிலிருந்த பழசு, சாரத்தை அட்ஜஸ்ட் பண்ணி விட்டு சாய்ந்து உட்காருது. 

வெங்சக்காரும் கபிலும் அடித்து ஆட, அணியின் ஓட்ட எண்ணிக்கை 185ஜ சொற்ப நேரத்தில் தொடுகிறது. அந்த இடத்தில் கபில் (24) ருமேஷ் ரட்னாயக்கவின் பந்தில் பலியாக, பசையல் மன்னன் கவாஸ்கர் களமிறங்கினார்.

196ல் கவாஸ்கர் (0) ரன் அவுட்டாக களமிறங்கிய இந்தியாவின் உலக கோப்பை நாயகன் மொஹிந்தர் அமரநாத்தும் (2), அணியின் எண்ணிக்கை 200ல் ஆட்டமிழக்க, இந்திய அணியில் டென்ஷன் எட்டிப்பார்க்க தொடங்கியது. 

“நாசமா போவார், தோக்க போறாங்கள், உதுக்குத் தான் வடக்கத்தியாரை நம்பக் கூடாது என்றுறது" பக்கத்து வீட்டு அன்டி உணர்ச்சிவசப்பட்டார்.

200/6ல், சேடம் இழுக்கத் தொடங்கியிருந்த இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மாவாலும் (8) உயிர் கொடுக்க முடியவில்லை. டுலிப் வெங்சக்கார் மட்டும் மற்றப் பக்கத்தில் நம்பிக்கையின் உருவமாய் ஆடிக்கொண்டிருந்தார். 

அம்பாந்தோட்டை அப்புஹாமி திருப்பதி வெங்கட்டிற்கு நேர்த்தி வைக்க, RJ ரட்னாயக்கா வீசிய பந்தை, DB வெங்சக்கார் (89) ஓங்கி அடிக்க, JR ரட்னாயக்க ஓடிப்போய் catch பிடிக்க, 234/8. 

யாழ்ப்பாணம் தலையில் கைவைத்து விட்டது. 

பத்தொன்பது வயதேயான தமிழ்நாட்டு அம்பி சிவராமகிருஷ்ணன், அடுத்து வந்த 44வது ஓவரில் முதல் மூன்று பந்துகளை வீணடிக்க, டென்ஷன் ஈஸி சேயரில் சம்மணமிட்டு குந்தியது. நாலாவது பந்தை தட்டிவிட்டு சிவராமகிருஷ்ண அம்பி அங்கால ஓட, ஜந்தாவது பந்தை விஷ்வநாத் பவுண்டரிக்கு அனுப்பினார், 239/8. 

"நல்லூரானே இந்தியா எப்படியாவது வெல்லோணும், ரெண்டு தேங்காய் அடிப்பன்" அப்புஹாமிகு எதிராக கந்தசாமி அண்ணன் போராட்டத்தில் குதித்தார். 

கடைசி பந்தை விஷ்வநாத் அடித்து விட்டு ஓட, சிவராமகிருஷ்ணன் மற்றப்பக்கம் நோக்கி பறந்தார். 

கடைசி ஓவர், இந்திய அணி வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவை. டுலீப் மென்டீஸ் உட்பட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் கூடி கதைத்து அஷந்தா டீ மெல்லிடம் பந்தை கொடுக்கிறார்கள். 

அஷந்தா டீ மெல், ஒரு ஸ்டைலிஷ் bowler. முதலாவது பந்தை போட அஷந்தா ஓடி வருகிறார்... "முருகா முருகா முருகா"... கந்தசாமி அண்ணன் முணுமுணுப்பது ஊருக்கே கேட்கிறது. 

முதலாவது பந்தை விஸ்வநாத் அழகாக ஒரு cover drive அடிக்க, தலை தெறிக்க இரு ஓட்டங்களிற்கு ஓடிய அம்பி சி.ரா.கிருஷ்ணனிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, யாழ்ப்பாணத்தாருக்கோ அப்பத்தான் மூச்சு திரும்ப வந்தது, 241/8. 

இரண்டாவது பந்து outside the off stump விழ, விஸ்வநாதன் துலாவ, வந்த மூச்சு திரும்ப போனது, நல்ல காலம் batல் படவில்லை. 

மூன்றாவது பந்திற்கு மென்டீஸ் எல்லா fieldersஜயும் கிட்ட கொண்டுவர, விஸ்வநாத் மீண்டும் ஒருக்கா guard எடுத்தார். "Padல மட்டும் பட விட்டுடாதேடா, அம்பயர் அவங்கட ஆள், கள்ளப்பயல், தூக்கி குடுத்திடுவான்" கந்தசாமியர் tips கொடுத்தார். 

Leg stumpல் விழுந்த பந்தை விஷ்வநாத் glance பண்ண, சி.ரா.கி பறந்து வர, அரவிந்தா பந்தை பிடித்து ஸ்டம்ஸை நோக்கி எறிய, நாங்கள் எம்பி எழும்ப...

மூன்றே மூன்று பந்துகள் மீதமிருக்கையில், இரண்டு விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.

"நல்லூரானே ரெண்டு தேங்காயை நாலா தாறன், அடுத்த மேட்சையும் வெல்லப் பண்ணு" கந்தசாமி அண்ணன் வாக்குறுதியை நிறைவேற்றுவதை பின் தள்ளினார்.

அடுத்த மேட்ச்.. 

இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் மேட்ச் ! அன்றைக்கு மட்டும் கந்தசாமி அண்ணன் அந்த ரெண்டு தேங்காயை நல்லூரானுக்கு அடித்திருந்தால்.. ச்சா.. அடுத்த மேட்சில் அந்த துன்பியல் சம்பவம் நடந்திராது.

ஜூட் பிரகாஷ்

மெல்பேர்ண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிஸ், ஆனந்தப்பா, பொன்னுத்துரை, குரே. இவர்களில் ஓரளவு நடுநிலையானவர் பிரான்சிஸ். மிச்சம் எல்லாரும் 12 வது இலங்கை வீரர்தான்🤣.

இந்த தொடரில் சிறீகாந்த் ரொம்பவே பாதிக்கப்பட்டார். தமிழர் என்பதால் என அவரே பின்னாளில் சொன்னதாக நியாபகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.