Jump to content

தமிழ் அரசியல் கைதிகளை... சந்தித்து பேசுகின்றார் நாமல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

தமிழ் அரசியல் கைதிகளை... சந்தித்து பேசுகின்றார் நாமல்?

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசித்து குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சரொருவர், கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது பாதுகாவலர்கள் மற்றும் துப்பாக்கியுடன் உள்நுழைந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், சிறைச்சாலைக்குள் உள்நுழைந்த சந்தர்ப்பத்தில் குறித்த இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரில் 2 பேரை வெளியே அழைத்து முழந்தாளிடச் செய்து, தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த நேற்று விலயிருந்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தாம் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பின்மை தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு நாமல் ராஜபக்ஷவுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2021/1239559

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இனி இந்த அமைச்சு பொறுப்பு வழங்கப்படும்...

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

              அரசியல் கைதிகள் எவருமில்லை பிரதமர்

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (10) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

உதயன் 16.09.2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Paanch said:

குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிறைகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து அதைத்தான் சொல்லிவருகிறார்கள். அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை, இருப்பதெல்லாம் பயங்கரவாதிகள் என்கிறார்கள். வி. முரளிதரன் சொன்னார்;  போராளிகள் எல்லாம் விடுவிக்கபட்டு விட்டார்கள், இருப்பவர்கள் சின்ன குற்றம் இளைத்தவர்கள்,  தான் கோத்தாவுடன் பேசி  அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அவர் சொல்லியே ஆண்டொன்று கழிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கவனிப்பேன்: அ‘புர கைதிகளிடம் நாமல் உறுதி

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவொன்றை இட்டுள்ளார்.

என்னைச் சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளின் பேரில், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில்   அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த    அனுராதபுரம் சிறைக்கு இன்று சென்றேன். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்களின் மறுவாழ்வுக்கு உட்டுபத்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அவர்களின் பிரச்சினைகளை நான் கவனிப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

image_3f29d10e4a.jpg


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரச்சனை எங்கையோ இறுகுது போல கிடக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எறியில பல மாங்காய்கள் விழுத்தப்போகிறார் என்று மட்டும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது எனது அவா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.