Jump to content

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.

இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருக்கிறது.

ஆஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

"ஆக்கஸின் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, "கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்" ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

"இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது" என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டனின் எச்எம்எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது.. இதில் அமெரிக்க ராணுவத்தினரும் உபகரணங்களும் இருந்தன.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்ன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

China's Xi Jinping

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது சைபர்ஸ்பேஸ் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் முன்னணியில் இருக்கிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசியம் எதுவுமில்லை - ஜோனாதன் பீல், பாதுகாப்பு செய்தியாளர்

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஒரே நேரத்தில் பங்கேற்று கூட்டுத் திட்டம் குறித்து அறிவித்திருப்பது, இந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பிரிட்டன் அரசும் இதையே கூறுகிறது.

ஆனால் இந்த உடன்பாடு இரு முக்கிய நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவது நட்பு நாடான பிரான்ஸ். நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த நாடு ஆஸ்திரேலியாவுடன் டீசலில் இயங்கும் நீர்மூழ்கியை கட்டுவது தொடர்பாக உடன்பாடு செய்திருந்தது. இப்போது இந்த உடன்பாடு முறிக்கப்படுகிறது.

இரண்டாவது நாடு சீனா. இந்த உடன்பாடு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறி வந்தாலும், இன்னொரு புறம், இந்தப் பிராந்தியத்தில் செழிப்பு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதும், சட்டத்தின் அடிப்படையிலான அமைதி நிலையை ஆதரிப்பதும் இந்த உடன்பாட்டின் நோக்கம் என்றும் பிரிட்டன் அரசு கூறுகிறது.

அதனால் இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் ராணுவச் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து பிரிட்டன், அணெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கவலைகளைப் பகிர்ந்து கொள்வது ஒன்றும் ரகசியம் அல்ல.

https://www.bbc.com/tamil/global-58579853

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ்: சீனாவுக்கு அமெரிக்கா நீர்மூழ்கிகள் மூலம் வைக்கும் 'செக்' - கொந்தளிக்கும் இரு நாடுகள்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய, சீனாவுக்கு எதிரான ஒரு கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வகுத்திருக்கின்றன.

இது சீனாவுக்கு எதிரானது அல்ல என்று அந்த நாடுகள் கூறினாலும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறுகின்றனர்.

இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்று சீனா விமர்சித்துள்ளது.

இந்தக் கூட்டுத் திட்டத்தின் பெயர் ஆக்கஸ் (AUKUS) ஆஸ்திரேலியா(AUS), பிரிட்டன் (UK) அமெரிக்கா (US) ஆகிய பெயர்களின் சுருக்கம்.

அணுசக்தி நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கி அதன் மூலலாக ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலை நிறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் புதிய கூட்டு உருவாகியிருக்கும் காலமும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களில் மூன்று நாடுகளும் இணைந்து புதிய உடன்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த உடன்பாட்டில் கூறப்பட்டது என்ன?

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.

"ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டுள்ளது. எனவே பிராந்தியச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தம். உலகில் 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவை அணு ஆயுதங்கள் அற்ற மிகவும் சக்திவாய்ந்த தடுப்பு ஆயுதம்" என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் ஷூபிரிட்ஜ்.

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.

இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும்.

ஆயினும் ஆஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

சீனாவின் எதிர்வினை என்ன?

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

"பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும்" என்று சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியான் கூறியுள்ளார்.

"இது காலாவதியான பனிப்போர் மனநிலை" என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த மூன்று நாடுகள் தங்களது சொந்த நலன்களையே கெடுத்துக் கொள்ளப் போகின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீனாவின அரசு ஊடகமும் இதுபோன்ற ஒரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது. "ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது" என்று "குளோபல் டைம்ஸ்" செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது.

மூன்று நாடுகள் கூட்டின் முக்கியத்துவம் என்ன?

கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தனது நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளப் போகிறது. இதற்கு முன் பிரிட்டனுக்கு மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மிக உடன்பாடு இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீர்மூழ்கி

இந்த உடன்பாட்டின் மூலம் அணுசக்தி நீர்மூழ்கியைப் பெறும் ஏழாவது நாடு என்ற பெயர் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்க இருக்கிறது.

கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பம், சைபர் திறன்கள், உளவுத் தகவல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதும் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தெற்கு சீனக் கடலில் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. பதிலுக்கு அமெரிக்காவும் அந்தப் பிராந்தியத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவை ஒட்டி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் என்ன பிரச்னை?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா. கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவில் இருக்கும் வீகர் இஸ்லாமியர்களின் மனித உரிமை குறித்து ஆஸ்திரேலியா விமர்சனம் செய்தது. சீனாவின் சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதித்தது. கொரோனா வைரஸின் மூலம் எது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும்பிளவு ஏற்பட்டது.

பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.

ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென் கூறியுள்ளார்.

"முதுகில் குத்தி விட்டார்கள்"

கசப்பான உறவைக் கொண்டிருக்கும் சீனா மாத்திரமல்ல, நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸும் ஆக்கஸ் உடன்பாடு குறித்து கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்காக நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உடன்பாட்டை பிரான்ஸ் செய்து கொண்டிருந்தது. இப்போது கையெழுத்தாகி இருக்கும் புதிய உடன்பாட்டால் பிரான்ஸின் உடன்பாடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

"இது முதுகில் குத்தும் செயல்" என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் கூறியுள்ளார்.

"நாங்கள் நம்பிக்கை கொண்ட உறவை ஆஸ்திரேலியாவுடன் வைத்திருந்தோம். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது"

https://www.bbc.com/tamil/global-58592765

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தனது எதிப்பை வெளிக்காட்ட  அமெரிக்க அவுஸ்திரேலிய தூதர்களை திருப்பி அழைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்த் திரேலியாவிக்கிடையிலான நெருக்கம் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஜரோப்பிய வெள்ளைத்தோல் நாடுகள் உடன் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.. ஏனெனில் மொழியாலும் வரலாற்றாலும் இவர்கள் ஒன்றே.. ஆனால் மற்ற மூன்றாம் உலகநாடுகள் என்று வரும்போது இந்த வெள்ளைத்தோல் நாடுகள் எல்லாம் ஒன்றாகி விடுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்த் திரேலியாவிக்கிடையிலான நெருக்கம் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஜரோப்பிய வெள்ளைத்தோல் நாடுகள் உடன் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்..

எங்கடை செல்லம் கனடாவும் அவையின்ரை கூட்டு எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எங்கடை செல்லம் கனடாவும் அவையின்ரை கூட்டு எல்லோ?

கனடா ஒரு நாடா..? நான் அமெரிகாவின் ஒரு மாநிலம் எண்டெல்லோ நினைச்சுகொண்டிருக்கிறன்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கனடா ஒரு நாடா..? நான் அமெரிகாவின் ஒரு மாநிலம் எண்டெல்லோ நினைச்சுகொண்டிருக்கிறன்..😁

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

 

இப்ப மட்டும்  என்னவாம்???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

இதாலை கனடா வாழ் சிலோன் டமில்ஸ்சுக்கு பாதிப்பு ஒண்டும் இல்லையே? 😁

Kakkakuyil-Cochin-Haneefa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 22:50, ஏராளன் said:

சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா

ஏன் ஜேர்மனி இறங்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதாலை கனடா வாழ் சிலோன் டமில்ஸ்சுக்கு பாதிப்பு ஒண்டும் இல்லையே? 😁

Kakkakuyil-Cochin-Haneefa

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும்..😆

நாங்க யார்,  யாழ்ப்பாணீஸெல்லோ.....🤪

6 hours ago, விசுகு said:

 

இப்ப மட்டும்  என்னவாம்???🤣

என்னம் கடிக்கேல்ல..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலோ சக்சன்/ செல்டிக் (கெல்டிக்) வழிவந்த எல்லாரும் சேந்து பிரான்சுக்கு ஆப்படிச்சு போட்டாங்கள்🤣.

ஆனால் இதில நியூசிலாந்து வேறு நிலை எடுக்க்குமாப் போல படுகிறது. 

16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் ஜேர்மனி இறங்கவில்லை?

ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்துக்கரணம் அடிச்சாலும் எங்களுக்கு காசு தரும் நாட்டை ஒன்றும் செய்ய முடியாது.

இதுவரை கொரோனா பரவ காரணமாக இருந்த நாட்டுக்கு கண்டன அறிக்கை கூட இவர்களால் முடியவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆங்கிலோ சக்சன்/ செல்டிக் (கெல்டிக்) வழிவந்த எல்லாரும் சேந்து பிரான்சுக்கு ஆப்படிச்சு போட்டாங்கள்🤣.

ஆனால் இதில நியூசிலாந்து வேறு நிலை எடுக்க்குமாப் போல படுகிறது. 

ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

ஆங்கிலோ சக்சன் அதாவது ஆங்கிலேயர்கள் ஜேர்மனியில்  ஆங்கிலோ சக்சன் என்ற இடத்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்களே. அதனால் அவர்கள் பேசிய மொழி ஆங்கிலமாகியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஆங்கிலோ சக்சன் அதாவது ஆங்கிலேயர்கள் ஜேர்மனியில்  ஆங்கிலோ சக்சன் என்ற இடத்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்களே. அதனால் அவர்கள் பேசிய மொழி ஆங்கிலமாகியது. 

இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 

450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது.

இவர்களின் தோற்றத்துக்கு முன்பே பிரித்தானியாவில் பூர்வீக மக்கள் (கெல்டிக்) இருந்தாலும். ரோம ராஜ்யம் கூட அமைந்திருந்தாலும், பின்நாளில், பிரித்தானியாவில் (இங்கிலாந்தில்) ஸ்கெண்டிநேவிய வைக்கிங், பிரான்சிய நோர்மென் ஆதிக்கங்கள் இருந்தாலும் - ஆங்கில அடையாளத்தின் அடிநாதமாக இருப்பது - இந்த ஆங்கிலோ-சக்சன் அடையாளமே.

ஆனால் அயர்லாந்து, ஸ்கொட்லாந்தில் இப்போதும் (புரொட்டஸ்தாந்து குடியேறிகளின் வாரிசுகள் நீங்கலாக) கெல்டிக் வழிவந்தோரே.

ஆகவேதான் அமெரிக்கா, கனடா, அவுஸ், நியூசியை ஆங்கிலோ சக்சன், கெல்டிக் வழிவந்தோர் என்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 

450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது.

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

இதில் இன்னொரு டிவிஸ்டும் இருக்கிறது.

இந்த ஷிமிட். இங்கிலாந்தில் anglicised ஆகி ஸ்மித் என இருக்கும்.
ஜேர்மன் ஷிமிட், ஆங்கில ஸ்மித் இரெண்டும் புரோட்டோ ஜேர்மானிக்கின் ஸ்மிபாஸ் இல் இருந்து வருகிறதாம். 

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஜேர்மன் பெயர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் ஐரோப்பியர் போய் இறங்கிய பின், ஜேர்மனியில் இருந்து மத சுதந்திரம் வேண்டி அமெரிக்கா போனவர்களின் வாரிசுகளின் பெயர்கள். இவை இன்னும் அப்படியே ஜேர்மன் உசாரிப்பு, ஸ்பெலிங்கில் இருக்கும். 

ஆகவே நீங்கள் சொன்ன உதாரணங்கள் போல் பெயர்கள் அப்படியே ஜேர்மனில் இருப்பது போலவே இருக்கும். 

3 minutes ago, Kapithan said:

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

நீங்கள் சொல்லுவது முதல் பெயரை (மார்க்).  

கு. சா அண்ணை சொல்வது குடும்பபெயரை (ஷிமிட்).

கிறிஸ்தவ உலகமெங்கும் முதல்பெயர்கள் பிபிலிய பெயர்களே.

கிறிஸ்தவருக்கு மட்டும அல்ல, யூதருக்கும், முஸ்லீம்களுக்கும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்......

காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Hermann,_Missouri
 

👆🏼அமெரிக்காவில் ஒரு குட்டி ஜேர்மனி. பெயர்கூட ஹேர்மன் ரைன்லாண்ட்.

5 minutes ago, குமாரசாமி said:

பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்......

காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.

ஓம் இன்னும் ஆமி என்று வைத்திருக்கா ஏலாது? சிவில் பாதுகாப்பு படை என்ற பெயர்தான்? அதிலும் பல கட்டுப்பாடுகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஜேர்மனி இன்று ஒரு யூத நாடாக இருக்க வேண்டும்.

தங்கள் இனம் மாறாமலிருக்க குடும்ப பெயரை சந்ததி முழுக்க காவித்திரிவார்கள். தமிழிழனத்தில் அதை அழித்தே விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமெரிக்காவில் ஒரு குட்டி ஜேர்மனி. பெயர்கூட ஹேர்மன் ரைன்லாண்ட்.

ஜேர்மனியில் இருந்து இடம் பெயர்ந்த ஆர்மிஸ் எனும் இனம் இன்னமும் பழைய வாழ்க்கை மின்சாரம் தொலைபேசி மோட்டார் வாகனங்கள் என்று எதுவுமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

பெனிசிலவேனியாவில் அவர்களின் இடங்களை சுற்றி பார்த்தேன்.

கூடுதலானவர்கள் விவசாயம் மற்றும் மரவேலை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த ஒப்பந்த விடயத்தில் இரட்டை தன்மை, அவமதிப்பு மற்றும் விடயத்தினை மீறி செயற்படுதல் என்பன இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவுகஸ் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் கைச்சாத்திட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்தாக்கியுள்ளது.

பிரித்தானியாவை உள்ளிடக்கிய குறித்த அவுகஸ் ஒப்பந்தமானது சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள தூதுவரை மீள அழைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1240016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனியில் இருந்து இடம் பெயர்ந்த ஆர்மிஸ் எனும் இனம் இன்னமும் பழைய வாழ்க்கை மின்சாரம் தொலைபேசி மோட்டார் வாகனங்கள் என்று எதுவுமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

பெனிசிலவேனியாவில் அவர்களின் இடங்களை சுற்றி பார்த்தேன்.

கூடுதலானவர்கள் விவசாயம் மற்றும் மரவேலை செய்கிறார்கள்.

இவர்களை பற்றி ஒரு விபரண படம் பார்துள்ளேன். இப்போதும் குதிரைகளை பயன்படுத்துகிறார்கள். 

நேரில் போய் பார்க்க கிடைத்த நீங்கள் லக்கி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.