Jump to content

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.

இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருக்கிறது.

ஆஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

"ஆக்கஸின் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, "கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்" ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

"இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது" என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டனின் எச்எம்எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது.. இதில் அமெரிக்க ராணுவத்தினரும் உபகரணங்களும் இருந்தன.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்ன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

China's Xi Jinping

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இது சைபர்ஸ்பேஸ் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் முன்னணியில் இருக்கிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசியம் எதுவுமில்லை - ஜோனாதன் பீல், பாதுகாப்பு செய்தியாளர்

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஒரே நேரத்தில் பங்கேற்று கூட்டுத் திட்டம் குறித்து அறிவித்திருப்பது, இந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. பிரிட்டன் அரசும் இதையே கூறுகிறது.

ஆனால் இந்த உடன்பாடு இரு முக்கிய நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். முதலாவது நட்பு நாடான பிரான்ஸ். நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்த நாடு ஆஸ்திரேலியாவுடன் டீசலில் இயங்கும் நீர்மூழ்கியை கட்டுவது தொடர்பாக உடன்பாடு செய்திருந்தது. இப்போது இந்த உடன்பாடு முறிக்கப்படுகிறது.

இரண்டாவது நாடு சீனா. இந்த உடன்பாடு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பிரிட்டன் அதிகாரிகள் கூறி வந்தாலும், இன்னொரு புறம், இந்தப் பிராந்தியத்தில் செழிப்பு, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதும், சட்டத்தின் அடிப்படையிலான அமைதி நிலையை ஆதரிப்பதும் இந்த உடன்பாட்டின் நோக்கம் என்றும் பிரிட்டன் அரசு கூறுகிறது.

அதனால் இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் ராணுவச் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து பிரிட்டன், அணெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கவலைகளைப் பகிர்ந்து கொள்வது ஒன்றும் ரகசியம் அல்ல.

https://www.bbc.com/tamil/global-58579853

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ்: சீனாவுக்கு அமெரிக்கா நீர்மூழ்கிகள் மூலம் வைக்கும் 'செக்' - கொந்தளிக்கும் இரு நாடுகள்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய, சீனாவுக்கு எதிரான ஒரு கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வகுத்திருக்கின்றன.

இது சீனாவுக்கு எதிரானது அல்ல என்று அந்த நாடுகள் கூறினாலும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறுகின்றனர்.

இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்று சீனா விமர்சித்துள்ளது.

இந்தக் கூட்டுத் திட்டத்தின் பெயர் ஆக்கஸ் (AUKUS) ஆஸ்திரேலியா(AUS), பிரிட்டன் (UK) அமெரிக்கா (US) ஆகிய பெயர்களின் சுருக்கம்.

அணுசக்தி நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கி அதன் மூலலாக ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலை நிறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் புதிய கூட்டு உருவாகியிருக்கும் காலமும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களில் மூன்று நாடுகளும் இணைந்து புதிய உடன்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த உடன்பாட்டில் கூறப்பட்டது என்ன?

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.

"ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டுள்ளது. எனவே பிராந்தியச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தம். உலகில் 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவை அணு ஆயுதங்கள் அற்ற மிகவும் சக்திவாய்ந்த தடுப்பு ஆயுதம்" என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் ஷூபிரிட்ஜ்.

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.

இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும்.

ஆயினும் ஆஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

சீனாவின் எதிர்வினை என்ன?

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

"பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும்" என்று சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியான் கூறியுள்ளார்.

"இது காலாவதியான பனிப்போர் மனநிலை" என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த மூன்று நாடுகள் தங்களது சொந்த நலன்களையே கெடுத்துக் கொள்ளப் போகின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீனாவின அரசு ஊடகமும் இதுபோன்ற ஒரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது. "ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது" என்று "குளோபல் டைம்ஸ்" செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது.

மூன்று நாடுகள் கூட்டின் முக்கியத்துவம் என்ன?

கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தனது நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளப் போகிறது. இதற்கு முன் பிரிட்டனுக்கு மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மிக உடன்பாடு இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீர்மூழ்கி

இந்த உடன்பாட்டின் மூலம் அணுசக்தி நீர்மூழ்கியைப் பெறும் ஏழாவது நாடு என்ற பெயர் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்க இருக்கிறது.

கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பம், சைபர் திறன்கள், உளவுத் தகவல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதும் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தெற்கு சீனக் கடலில் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. பதிலுக்கு அமெரிக்காவும் அந்தப் பிராந்தியத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவை ஒட்டி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் என்ன பிரச்னை?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா. கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவில் இருக்கும் வீகர் இஸ்லாமியர்களின் மனித உரிமை குறித்து ஆஸ்திரேலியா விமர்சனம் செய்தது. சீனாவின் சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதித்தது. கொரோனா வைரஸின் மூலம் எது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும்பிளவு ஏற்பட்டது.

பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.

ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென் கூறியுள்ளார்.

"முதுகில் குத்தி விட்டார்கள்"

கசப்பான உறவைக் கொண்டிருக்கும் சீனா மாத்திரமல்ல, நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸும் ஆக்கஸ் உடன்பாடு குறித்து கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்காக நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உடன்பாட்டை பிரான்ஸ் செய்து கொண்டிருந்தது. இப்போது கையெழுத்தாகி இருக்கும் புதிய உடன்பாட்டால் பிரான்ஸின் உடன்பாடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

"இது முதுகில் குத்தும் செயல்" என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் கூறியுள்ளார்.

"நாங்கள் நம்பிக்கை கொண்ட உறவை ஆஸ்திரேலியாவுடன் வைத்திருந்தோம். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது"

https://www.bbc.com/tamil/global-58592765

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தனது எதிப்பை வெளிக்காட்ட  அமெரிக்க அவுஸ்திரேலிய தூதர்களை திருப்பி அழைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்த் திரேலியாவிக்கிடையிலான நெருக்கம் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஜரோப்பிய வெள்ளைத்தோல் நாடுகள் உடன் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.. ஏனெனில் மொழியாலும் வரலாற்றாலும் இவர்கள் ஒன்றே.. ஆனால் மற்ற மூன்றாம் உலகநாடுகள் என்று வரும்போது இந்த வெள்ளைத்தோல் நாடுகள் எல்லாம் ஒன்றாகி விடுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னதான் வெள்ளைத்தோலாக இருந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்த் திரேலியாவிக்கிடையிலான நெருக்கம் பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற ஜரோப்பிய வெள்ளைத்தோல் நாடுகள் உடன் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்..

எங்கடை செல்லம் கனடாவும் அவையின்ரை கூட்டு எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எங்கடை செல்லம் கனடாவும் அவையின்ரை கூட்டு எல்லோ?

கனடா ஒரு நாடா..? நான் அமெரிகாவின் ஒரு மாநிலம் எண்டெல்லோ நினைச்சுகொண்டிருக்கிறன்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கனடா ஒரு நாடா..? நான் அமெரிகாவின் ஒரு மாநிலம் எண்டெல்லோ நினைச்சுகொண்டிருக்கிறன்..😁

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

 

இப்ப மட்டும்  என்னவாம்???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அமெரிக்கா எல்லா இடமும் கடிச்சு முடிஞ்சு கடைசியில கடிக்கப் போறது கனடாவத்தானே... 😆

இதாலை கனடா வாழ் சிலோன் டமில்ஸ்சுக்கு பாதிப்பு ஒண்டும் இல்லையே? 😁

Kakkakuyil-Cochin-Haneefa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 22:50, ஏராளன் said:

சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா

ஏன் ஜேர்மனி இறங்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதாலை கனடா வாழ் சிலோன் டமில்ஸ்சுக்கு பாதிப்பு ஒண்டும் இல்லையே? 😁

Kakkakuyil-Cochin-Haneefa

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும்..😆

நாங்க யார்,  யாழ்ப்பாணீஸெல்லோ.....🤪

6 hours ago, விசுகு said:

 

இப்ப மட்டும்  என்னவாம்???🤣

என்னம் கடிக்கேல்ல..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலோ சக்சன்/ செல்டிக் (கெல்டிக்) வழிவந்த எல்லாரும் சேந்து பிரான்சுக்கு ஆப்படிச்சு போட்டாங்கள்🤣.

ஆனால் இதில நியூசிலாந்து வேறு நிலை எடுக்க்குமாப் போல படுகிறது. 

16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் ஜேர்மனி இறங்கவில்லை?

ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்துக்கரணம் அடிச்சாலும் எங்களுக்கு காசு தரும் நாட்டை ஒன்றும் செய்ய முடியாது.

இதுவரை கொரோனா பரவ காரணமாக இருந்த நாட்டுக்கு கண்டன அறிக்கை கூட இவர்களால் முடியவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆங்கிலோ சக்சன்/ செல்டிக் (கெல்டிக்) வழிவந்த எல்லாரும் சேந்து பிரான்சுக்கு ஆப்படிச்சு போட்டாங்கள்🤣.

ஆனால் இதில நியூசிலாந்து வேறு நிலை எடுக்க்குமாப் போல படுகிறது. 

ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

ஆங்கிலோ சக்சன் அதாவது ஆங்கிலேயர்கள் ஜேர்மனியில்  ஆங்கிலோ சக்சன் என்ற இடத்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்களே. அதனால் அவர்கள் பேசிய மொழி ஆங்கிலமாகியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஆங்கிலோ சக்சன் அதாவது ஆங்கிலேயர்கள் ஜேர்மனியில்  ஆங்கிலோ சக்சன் என்ற இடத்தில் இருந்து இங்கிலாந்துக்கு குடியேறியவர்களே. அதனால் அவர்கள் பேசிய மொழி ஆங்கிலமாகியது. 

இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 

450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது.

இவர்களின் தோற்றத்துக்கு முன்பே பிரித்தானியாவில் பூர்வீக மக்கள் (கெல்டிக்) இருந்தாலும். ரோம ராஜ்யம் கூட அமைந்திருந்தாலும், பின்நாளில், பிரித்தானியாவில் (இங்கிலாந்தில்) ஸ்கெண்டிநேவிய வைக்கிங், பிரான்சிய நோர்மென் ஆதிக்கங்கள் இருந்தாலும் - ஆங்கில அடையாளத்தின் அடிநாதமாக இருப்பது - இந்த ஆங்கிலோ-சக்சன் அடையாளமே.

ஆனால் அயர்லாந்து, ஸ்கொட்லாந்தில் இப்போதும் (புரொட்டஸ்தாந்து குடியேறிகளின் வாரிசுகள் நீங்கலாக) கெல்டிக் வழிவந்தோரே.

ஆகவேதான் அமெரிக்கா, கனடா, அவுஸ், நியூசியை ஆங்கிலோ சக்சன், கெல்டிக் வழிவந்தோர் என்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை. சக்சனி என்ற ஜேர்மன் பகுதியில் இருந்து பிரித்தானிய தீவுக்கு வந்தவர்கள், மற்றும் மத்திய ஐரோப்பியாவில் இருந்து வந்த வேறு பல ஜேர்மானிய குழுக்கள், இங்கே இருந்த பூர்வீக குடிகள் - இருவரின் கலப்பாலும் பிரித்தானியாவில் உருவாகிய குழுவே ஆங்கிலோ-சக்சன். 

450ம் ஆண்டில் ஜேர்மானிய குடிகளின் வரவும், உள்ளூர் கலப்பும், ஆங்கிலோ-சக்சன் குழுவின் உருவாக்கமும் ஆரம்பிக்கிறது. இவர்களின் எழுச்சியின் பின்னே ஆங்கிலம், இங்கிலாந்து என்ற கருத்துருவாக்கம் நிகழ்கிறது.

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்பவர்களின் பெயர்களை பார்த்தால் ஜேர்மன் பெயர்களாகவே தெரியும்.
Eric Schmidt
Mark Zuckerberg
Steven Spielberg
Hermann Rumsfeld
Donald Rumsfeld

இதில் இன்னொரு டிவிஸ்டும் இருக்கிறது.

இந்த ஷிமிட். இங்கிலாந்தில் anglicised ஆகி ஸ்மித் என இருக்கும்.
ஜேர்மன் ஷிமிட், ஆங்கில ஸ்மித் இரெண்டும் புரோட்டோ ஜேர்மானிக்கின் ஸ்மிபாஸ் இல் இருந்து வருகிறதாம். 

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஜேர்மன் பெயர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் ஐரோப்பியர் போய் இறங்கிய பின், ஜேர்மனியில் இருந்து மத சுதந்திரம் வேண்டி அமெரிக்கா போனவர்களின் வாரிசுகளின் பெயர்கள். இவை இன்னும் அப்படியே ஜேர்மன் உசாரிப்பு, ஸ்பெலிங்கில் இருக்கும். 

ஆகவே நீங்கள் சொன்ன உதாரணங்கள் போல் பெயர்கள் அப்படியே ஜேர்மனில் இருப்பது போலவே இருக்கும். 

3 minutes ago, Kapithan said:

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

நீங்கள் சொல்லுவது முதல் பெயரை (மார்க்).  

கு. சா அண்ணை சொல்வது குடும்பபெயரை (ஷிமிட்).

கிறிஸ்தவ உலகமெங்கும் முதல்பெயர்கள் பிபிலிய பெயர்களே.

கிறிஸ்தவருக்கு மட்டும அல்ல, யூதருக்கும், முஸ்லீம்களுக்கும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 ஜேர்மனி, கனடா இரெண்டிடமும் அணு நீர்மூழ்கி இல்லை.

பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்......

காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Hermann,_Missouri
 

👆🏼அமெரிக்காவில் ஒரு குட்டி ஜேர்மனி. பெயர்கூட ஹேர்மன் ரைன்லாண்ட்.

5 minutes ago, குமாரசாமி said:

பலருக்கு ஜேர்மனி பெரிய வளமான நாடாக தெரியலாம். ஆனால் இவர்களுக்கு பல விடயங்களில் தன்னிச்சையாக செயல்பட அங்கீகாரம் இன்னும் இல்லை. குறிப்பாக அணு சம்பந்தமான விடயங்களில்......

காரணம்..........இவர்களில் பல சந்ததிகள் மாறினாலும் போர்க்குற்றம் பெரிதாக இன்றும் இவர்களை வாட்டி வதைக்கின்றது.

ஓம் இன்னும் ஆமி என்று வைத்திருக்கா ஏலாது? சிவில் பாதுகாப்பு படை என்ற பெயர்தான்? அதிலும் பல கட்டுப்பாடுகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

இவை Dutch பெயர்கள் அல்ல, யூதப் பெயர்கள்.....🤪

(கிளைமோற கொழுவியாச்சு.....anytime வெடிக்கலாம் 🥴)

நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஜேர்மனி இன்று ஒரு யூத நாடாக இருக்க வேண்டும்.

தங்கள் இனம் மாறாமலிருக்க குடும்ப பெயரை சந்ததி முழுக்க காவித்திரிவார்கள். தமிழிழனத்தில் அதை அழித்தே விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமெரிக்காவில் ஒரு குட்டி ஜேர்மனி. பெயர்கூட ஹேர்மன் ரைன்லாண்ட்.

ஜேர்மனியில் இருந்து இடம் பெயர்ந்த ஆர்மிஸ் எனும் இனம் இன்னமும் பழைய வாழ்க்கை மின்சாரம் தொலைபேசி மோட்டார் வாகனங்கள் என்று எதுவுமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

பெனிசிலவேனியாவில் அவர்களின் இடங்களை சுற்றி பார்த்தேன்.

கூடுதலானவர்கள் விவசாயம் மற்றும் மரவேலை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியா, அமெரிக்கா உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்கின்றன – பிரான்ஸ் குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த ஒப்பந்த விடயத்தில் இரட்டை தன்மை, அவமதிப்பு மற்றும் விடயத்தினை மீறி செயற்படுதல் என்பன இடம்பெற்றுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவுகஸ் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் கைச்சாத்திட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்தாக்கியுள்ளது.

பிரித்தானியாவை உள்ளிடக்கிய குறித்த அவுகஸ் ஒப்பந்தமானது சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள தூதுவரை மீள அழைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1240016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனியில் இருந்து இடம் பெயர்ந்த ஆர்மிஸ் எனும் இனம் இன்னமும் பழைய வாழ்க்கை மின்சாரம் தொலைபேசி மோட்டார் வாகனங்கள் என்று எதுவுமே இல்லாமல் வாழ்கிறார்கள்.

பெனிசிலவேனியாவில் அவர்களின் இடங்களை சுற்றி பார்த்தேன்.

கூடுதலானவர்கள் விவசாயம் மற்றும் மரவேலை செய்கிறார்கள்.

இவர்களை பற்றி ஒரு விபரண படம் பார்துள்ளேன். இப்போதும் குதிரைகளை பயன்படுத்துகிறார்கள். 

நேரில் போய் பார்க்க கிடைத்த நீங்கள் லக்கி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.