Jump to content

அம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு

September 16, 2021
spacer.png

மயில்களின் வருகையினால் வெற்றுக்காணிகள் வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம்  குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில்   வெளாண்மை செய்கை  அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில்   காலை முதல் மாலை வரை  மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மக்களினால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள் வயல் வெளிகளில் உள்ள  விசஜந்துக்களான பாம்புகள் பூராண்கள் தேள்கள் நண்டுகள் விசப்பூச்சிகளின் தொல்லை மயில்கூட்டங்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதுடன் விசஜந்துக்களின் நடமாட்டங்களும்  மயில்களின் விகாரமான சத்தங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குறிப்பாக நல்லபாம்பு உள்ளிட்ட விதைப்பு காலங்களில் விசஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் இப்பகுதிக்கு எண்ணிக்கையற்ற மயில் கூட்டங்கள் வருகை தந்து விசஜந்துக்களை கட்டுப்படுத்தி வேட்டையாடி வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மயில் கூட்டங்களின் வருகையினால் அம்பாறை மாவட்டத்தின்  பெரிய நீலாவணை, ஒலுவில் ,அட்டாளைச்சேனை ,மத்தியமுகாம் ,நாவிதன்வெளி, சவளக்கடை,சம்மாந்துறை  பகுதிகளில் விசஜந்துக்களின் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


https://globaltamilnews.net/2021/166061

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வீட்டைச்சுற்றி  மயில்கள் ஒவ்வொருநாளும் வந்து செல்கின்றன. வேட்டையாடுதல் கட்டுப்படுத்தியதால் மயில்கள் இனம் பெருகி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களது வீட்டைச்சுற்றி  மயில்கள் ஒவ்வொருநாளும் வந்து செல்கின்றன. வேட்டையாடுதல் கட்டுப்படுத்தியதால் மயில்கள் இனம் பெருகி உள்ளது.

நல்லதொரு செயல், நல்லவர்களை பறவைகள் இலகுவில் அறிந்துகொள்ளும்👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நல்லதொரு செயல், நல்லவர்களை பறவைகள் இலகுவில் அறிந்துகொள்ளும்👌

 

No description available.

No description available.

No description available.

எனது வீடு சுற்றி வெறும் வளவுகள் வீடுகள் என்றபடியால் இவை வரும் தீன் பொறுக்கி தின்ன உடையாயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

No description available.

எனது வீடு சுற்றி வெறும் வளவுகள் வீடுகள் என்றபடியால் இவை வரும் தீன் பொறுக்கி தின்ன உடையாயர்

மயிலை கண்டால் பாம்புகள் வராதாம்.....வந்தாலும் படம் எடுக்காதாம்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மயிலை கண்டால் பாம்புகள் வராதாம்.....வந்தாலும் படம் எடுக்காதாம்..:cool:

படம் எடுத்தாலும்… பேஸ் புக்கிலை, போடாதாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மயிலை கண்டால் பாம்புகள் வராதாம்.....வந்தாலும் படம் எடுக்காதாம்..:cool:

ஏந்த வகை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களை நாசம் செய்யப் போகின்றது…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் டபிள் மீனிங்கில கதைகினமோ? அல்லது என்ர கெட்ட புத்தியோ🤔🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களை நாசம் செய்யப் போகின்றது…….

இவை வயலுக்குள் செல்வதில்லை சும்மா வீட்டு கூரைகள் சிறிய வெட்ட வளவுகள்.,நாணல் காடுகளில் நிற்பவை காடு சார்ந்த பகுதிகளிலுள்ள உள்ள வயல்களில் மயில் நெல்லை குடித்த சம்பவங்களும் உண்டு.

7 hours ago, குமாரசாமி said:

மயிலை கண்டால் பாம்புகள் வராதாம்.....வந்தாலும் படம் எடுக்காதாம்..:cool:

இரையாகி விடுவதால் பயம் பாம்புகளுக்கு 😊😊 மயிலின் குரலுக்க பாம்பு பம்மி பதுங்கியிருந்த சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எல்லாரும் டபிள் மீனிங்கில கதைகினமோ? அல்லது என்ர கெட்ட புத்தியோ🤔🤣.

இரண்டாவது தான் சரியான விடை 😎

Tamil comedians vadivelu Reactions

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

இரண்டாவது தான் சரியான விடை 😎

Tamil comedians vadivelu Reactions

பாம்பின் கால் பாம்பறியும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயில்களின் பெருக்கம்.. அவற்றின் இரைகளின் சனத்தொகையில் வீழ்ச்சியை காண்பிக்கும். இரைகளின் அளவு குறைந்தால்.. இந்த மயில்கள் மீண்டும் இடம்பெயர வேண்டி ஏற்படும். இது இயற்கையின் வட்டம். செயற்கையாக மனிதர்களின் தாக்கம் தடுக்கப்பட்டதால்.. கொரோனா கால ஊரங்கு உட்பட.. இயற்கையின் பல வட்டங்கள் மீள் சுழற்சி காண ஆரம்பித்துள்ளன.  இதில் மயில்களை வேட்டையாடுதல் வீழ்ச்சியின் பங்களிப்பும் அடங்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.