Jump to content

‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

September 16, 2021
0
 
மிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்சிகளைப்போல இல்லாமல், தி.மு.க-வானது கொள்கை வழிப்பட்ட அரசியலை முன்வைப்பதாகவும், திராவிடம் − சமூக நீதிதான் தி.மு.க-வின் கொள்கை என்பதாகவும் பேசப்படுகிறது. தனியார்மயம் − தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு அனைத்தையும் வாரிக் கொடுக்கும் மோடியின் ‘‘குஜராத் மாடலுக்கு’’ எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் − என அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாக ‘‘திராவிட மாடல்’’ இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
‘‘தமிழகத்தில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் தி.மு.க−வின் ‘திராவிட மாடல்’… ‘‘தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு − ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
படிக்க :
 தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
 நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலைக் குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் (சாதாரணப் பேருந்துகளில்) இலவச பயணம், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவக் காப்பீட்டு அட்டை மூலம் இலவசமாக கொரோனா சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் − என ஐந்து திட்டங்களை முதல் கோப்பிலேயே கையெழுத்திட்டுச் செயல்படுத்தியுள்ளது, தி.மு.க. அரசு.
இத்துடன் மு.க.ஸ்டாலினைத் தலைவராகக் கொண்டு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு ஒன்றையும் தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது. இதன் துணைத் தலைவராக, பா.ஜ.க விமர்சகராகவும் பொதுவில் திராவிட இயக்க ஆதரவாளரகவும் அறியப்பட்ட பேராசிரியர் ஜெரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
puja-sep-2.jpg மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், முனைவர் நர்த்தகி நடராஜ் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
முக்கியமாக இந்தக் குழுவில், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், பேராசிரியர்கள் ராம.சீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.தீனபந்து, எம்.எல்.ஏ.வாகிய டி.ஆர்.பி. ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன் போன்ற சமூக அக்கறை கொண்ட அறிவாளிப் பிரிவினர் இடம் பெற்றிருப்பதால், தி.மு.க அரசு முற்போக்கு பாதையில் நடைபோடுவதாக நகர்ப்புற படிப்பாளிகள் பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் பொருளாதார நிபுணர்களான ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாரயணன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியான ஜீன் ட்ரெஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தி.மு.க அரசின் இந்த நடவடிக்கையை, ‘‘தி எக்கானமிஸ்ட்’’ என்ற பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கையானது, ‘‘உலகப் புகழ் பெற்ற ஐந்து சூப்பர் ஸ்டார் பொருளாதார அறிஞர்களைத் தமது ஆலோசகர்களாக நியமித்ததன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்’’ என்றும், ‘‘திராவிடன் ஸ்டாலின்’’ என்றும் பாராட்டியுள்ளது.
முக்கியமாக, மோடி அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பழிவாங்கப்பட்ட ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், கார்ப்பரேட்டுகள் நலனைவிட மக்கள் நலனை முன்னிறுத்தும் பொருளாதார அறிஞர்கள் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக தி.மு.க அரசு முன்வைத்த இடைக்கால நிதிநிலை அறிக்கையை (ஆறு மாதங்களுக்கானவை) ‘‘திராவிட மாடல் வளர்ச்சி’’, ‘‘பொற்கால ஆட்சி’’ என்று திராவிட இயக்கப் பத்திரிகைகள் புகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறெல்லாம் போற்றிப் புகழப்படும் தி.மு.க அரசின் கொள்கைகளும் திட்டங்களும் உண்மையில் பொற்கால ஆட்சிக்குள் நம்மை கொண்டு செல்லுமா என்பதே நாம் கவனிக்க வேண்டிய விசயம்.
ஸ்டாலினின் பொருளாதார ஆலோசகர்களான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றவர்கள், உண்மையில் புதிய தாராளவாதத்தின் தேர்ந்த அறிஞர்களாவர். இவர்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்கள். ஏகாதிபத்தியச் சேவையில் சிறந்து விளங்கியதால்தான் இவர்கள் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களால் மெச்சிப் புகழப்படுகிறார்கள்.
puja-sep-1.jpg முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நோபல் பரிவு பெற்ற அமெரிக்கப்பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயணன், ராஞ்சி பல்கலைக் கழக பேராசிரியாரான ஜீன் ட்ரெஸ்.
2014−ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது, நிர்மலா சீதாராமன் முன்னிறுத்தப்பட்டு நிதியமைச்சராக்கப்பட்ட அதேபாணியில்தான், இன்று பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனும் தேர்தல் நேரத்தில் முன்னிறுத்தப்பட்டு திடீரென நிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர், லேமன் பிரதர்ஸ், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் − சார்ட்டட் வங்கி ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார் என்று கூறி ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆம்! இந்த நிறுவனங்கள் அனைத்தும் உலக அளவில் ஆதிக்கத்தில் இருக்கின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்து நற்சான்றிதழ் வாங்கிய இவர்தான், மக்களுக்கு சேவை செய்வதற்கு திட்டமிட்டுக் கொடுப்பார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
இன்று தி.மு.க-வில் முன்னணியில் இருக்கும் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்ற பல தலைவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்களான கார்ப்பரேட் முதலாளிகளாக இருக்கின்றனர். இவர்களது வாரிசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கல்வியைப் பயின்று வளர்ந்தவர்கள். இந்த இரண்டாம் தலைமுறையினர் இன்று தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால்தான் தி.மு.க-வின் அணுகுமுறை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்தியைப் போலவே அமைந்துள்ளதை யாவரும் உணர முடியும்.
தி.மு.க அரசின் கார்ப்பரேட் பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சியானது, நிர்வாகத்தில் செய்துள்ள ஒரு விசயத்தை மட்டும் இங்கே கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகள், துறைத் தலைவர்கள் மாற்றப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இறையன்பு, உதயசந்திரன் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்ததை மட்டும்தான் பலரும் கவனித்துள்ளனர். அதேவேளையில், கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்று உயர் பதவிகளுக்கு வரும் முறையை தி.மு.க அரசு முற்றிலுமாகக் கைவிட்டு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் நியமித்துள்ளது.
தி.மு.க அரசின் இந்த அணுகுமுறைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. மக்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு செல்வதன் அவசியத்தை அவை வலியுறுத்தியுள்ளன. தி.மு.க அரசின் இந்த அணுகுமுறையால் அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறை மேலும் அதிகரிக்கும் என்றும், மக்கள் பிரச்சினைகள், நடைமுறை அறிவு போன்றவை புறக்கணிக்கப்படுவதால் குழப்பங்கள் விளையும் என்றும் தெரிவித்துள்ளன.
000
பா.ஜ.க தலைமையிலான பாசிச மோடி அரசின் பகிரங்கமான கார்ப்பரேட் சேவைகளுக்கும், ‘‘மனித முகம் கொண்ட புதிய தாராளவாதம்’’ என்று பேசும் காங்கிரசு, அனைவரையும் உள்ளடக்கிய ‘‘திராவிட மாடல்’’ வளர்ச்சி என்று பேசும் தி.மு.க போன்ற கட்சிகளுக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒன்று மட்டும்தான். மக்கள் நலத் திட்டங்கள் என்பதை முற்றாகவே உதறிவிட்டு அப்பட்டமான கார்ப்பரேட் கொள்ளையை அமல்படுத்துவதுதான் puja-sep-5-400x223.jpgமோடி அரசின் கொள்கை என்றால், சோளப்பொரிகளைப் போல பெயரளவிலான சில மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்டு, அதன்மூலம் தோற்றுவிக்கப்படும் கவர்ச்சிக்குப்பின் முடிந்த அளவு கார்ப்பரேட் கொள்ளையை மக்களின் எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்த முயலுவதுதான் காங்கிரசு − தி.மு.க உள்ளிட்ட எதிர்த்தரப்பு அரசுகளின் கொள்கையாகும்.
1990−களில் தனியார் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது முதல் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கொள்கை − கோட்பாடு என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டன. தங்களது பிழைப்புக்கு எந்த இடையூறும் வராமல் கமிஷனடிப்பதும் கல்லா கட்டுவதும்தான் எல்லா ஓட்டுக் கட்சிகளுடைய ஒரே கொள்கையாக மாறிப்போயுள்ளது.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றிக் கொடுப்பதையெல்லாம் அரசு தன் பணியாக மேற்கொள்ளக் கூடாது; அனைத்தையும் சந்தைக்கு திறந்துவிட்டுவிட்டு, பொதுத்துறைகளைத் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, வெறும் நிர்வாக வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்; போலீசு − இராணுவம் − அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு சட்டம் − ஒழுங்கைப் பராமரிப்பது மட்டுமே அரசினுடைய வேலையாக இருக்க வேண்டும் − என்று ஆணையிடுகின்றன, உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும். இதைத்தான் ‘‘குறைந்த அரசு – நிறைந்த நிர்வாகம்’’ என்று புதிய தாராளவாதிகள் சிலாகித்துப் பேசுகின்றனர்.
காங்கிரசோ, பா.ஜ.க.வோ – அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்தக் கட்சியாக இருந்தாலும் இந்த பாதையில்தான் அவர்கள் செல்கிறார்கள்; இந்தப் பாதையில் மட்டுமே அவர்களால் செல்ல முடியும் என்பதுதான் விதி. ஆகவே இதிலிருந்து தி.மு.க-வை விலக்கிவைத்துவிட்டுச் சிந்திப்பதே வேடிக்கையான ஒன்றாகும்.
ஆவின் பாலை விலைக் குறைப்பு, பெட்ரோல் − டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் மக்கள் நலத் திட்டங்களைப் போலத் தோன்றலாம். ஆனால், கொள்கை − கோட்பாடு அற்றுப்போன ஓட்டுக் கட்சிகளுக்கு மக்களின் ஓட்டுக்களை கவர்ந்து ஆட்சியதிகாரத்தை பிடிக்க இதுபோன்ற கவர்ச்சி − இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியிருப்பது ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் ’புரட்சி’த் தலைவி அம்மா விலையில்லா ஆடு−மாடு வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி − கிரைண்டர் வழங்கும் திட்டம், விலையில்லாத நூறு யூனிட் மின்சாரத் திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படவில்லையா? ஏன், 2014−ல் ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு கூட கழிவறை கட்ட மானியம், முத்ரா கடன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 போன்ற திட்டங்களைக் கொண்டுவரவில்லையா? – இவையெல்லாம் எந்தளவுக்கு நடைமுறையில் மக்களுக்கு பலனளித்தன என்பது வேறு விவகாரம்.
இவைகளெல்லாம் ஓட்டு அறுவடைக்காக கொடுக்கப்படும் ‘‘கவர்ச்சிவாத’’ அறிவிப்புகளே. அனைவருக்கும் தரமான கல்வி, அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தரமான மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இக்கவர்ச்சித் திட்டங்கள் எந்த வகையிலும் ஈடேற்றவில்லை என்பதுதான் வரலாறு.
கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைப் புகுத்திவிட்டு, தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ள இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவற்றையும் அமல்படுத்துகின்றன, இந்த ஓட்டுக் கட்சிகள். இவையெல்லாம், உழைக்கும் மக்களைக் கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் வஞ்சகத் திட்டங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்?
இவ்வாறு, தமிழகத்தில் சில கவர்ச்சிவாத சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதைக் காட்டியும், பா.ஜ.க-வும் காங்கிரசும் ஆட்சி செய்த பின்தங்கிய வட மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தும், இது திராவிட இயக்கங்களின் சாதனை என்று சிலர் மெச்சிப் புகழ்கின்றனர். குஜராத்தைப் பாருங்கள், உ.பி-யைப் பாருங்கள், தமிழகமும் கேரளமும் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும் என்று சிலர் கூறுகின்றனர்.
puja-sep-3-731x1024.jpg பிரபல முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களையும் நிபுணர்களையும் தனது ஆலோசகர்களாகக் கொண்டு கார்ப்பரேட் சேவை செய்ய கிளம்பி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் ‘தி எக்னாமிஸ்ட்’ பத்திரிகை.
இவ்வாறு ஒப்பீடு செய்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகை தாழ்வு மனப்பான்மையே. இவர்கள் யாரும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் இன்றைய வாழ்க்கைத் தரத்தை ஒப்பிட்டுப் பேசுவதற்குத் தயாராக இல்லை.
தனியார் பள்ளிகளில் நடக்கும் படுகொலைகளும், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் தலைமை மருத்துவமனை வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், டெங்கு நோய் மரணங்களைத் திட்டமிட்டு அரசே மறைத்ததும், தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் கொத்துக் கொத்தாக இறந்துபோனதும் போன்ற பல அவலங்கள், ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுகள் என்று கருத முடியுமா? வாழ வழியற்றுப்போய், பிழைப்புக்காக நாடோடியாக அலைந்து, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா அரிசி வழங்க வேண்டியிருப்பதும், அம்மா உணவகங்களும் தமிழக அவலநிலையின் சாட்சியங்கள். இவையெல்லாம் கழகங்களின் ‘பொற்கால’ ஆட்சிகளது விளைவுகள்.
‘‘நீங்கள் தி.மு.க-விடம் சோசலிசத்தை எதிர்ப்பார்க்காதீர்கள்’’ என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர். எனில், அனைத்து மக்களுக்குமான அரசு, பொற்கால ஆட்சி, திராவிட ஆட்சி என்று தி.மு.க-வும் அதனை ஆதரிப்பவர்களும் பேசுவது எதற்காக?
‘‘இன்று நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க தலைமையிலான காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் மக்களின் முதல் எதிரி; இந்த எதிரியை வீழ்த்த சாத்தியமான அனைத்து சக்திகள், கட்சிகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்; தமிழகத்தில் தி.மு.க-தான் பெரிய கட்சி; இது ஓரளவிற்கு பா.ஜ.க-வை எதிர்க்கிறது; ஆகையால், தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்” − என்று பேசியவர்கள் பலரும், இன்று தி.மு.க-வின் யோக்கியதையைக் குறித்து பேச முன்வருவதில்லை.
எல்லா ஓட்டுக் கட்சிகளைப்போல தி.மு.க-வும் இலஞ்ச − ஊழல் முறைகேடுகளுக்கு உட்பட்டதுதான்; குடும்ப அரசியல், சாதி அரசியல், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, கவர்ச்சி அரசியல், பிழைப்புவாதம், கார்ப்பரேட் சேவை − என அனைத்தும் தி.மு.க-விடம் மலிந்து கிடக்கின்றன. டாஸ்மாக் விவகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்திலும் தி.மு.க சந்தர்ப்பவாதமாகவும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகவும்தான் செயல்படுகிறது.
கார்ப்பரேட் பாணியிலான நேர்த்தியான சமூக உணர்திறன், புதிய முலாம் பூசப்படும் அதே பழைய கவர்ச்சிவாதம் (சமூக நீதி, நலத்திட்டங்கள்), ஊடக செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் முன்னால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது, பொதுச்சொத்தைக் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுப்பது, வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் சுரண்டலையும் கொள்ளையையும் நியாயப்படுத்துவது, தனது கட்சிக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் முறையான சலுகைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவற்கான ஏற்பாடு செய்வது என்பதுதான் தி.மு.க-வின் ‘பொற்கால’ ஆட்சி 2.0.
பாசிசத்தை எதிர்க்கும் விசயத்தில், தி.மு.க-வுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதும் கூட்டணி அமைப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியிலோ, கூட்டணியிலோ அங்கம் வகிக்கும் கட்சியை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை என்பதை தி.மு.க ஆட்சியை வலிந்து ஆதரிப்பவர்கள்தான் விளக்க வேண்டும்.
படிக்க :
 திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
 ‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான அனைத்து கட்சிகளுடன் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வதென்பது அவசியத் தேவையாகும். அதேவேளையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சமரசமாகச் செல்லும் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் ஜனநாயக பூர்வமான ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கான முன்தேவையாகும்.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதங்கள், ஊழல்கள், முறைகேடுகள், அராஜக செயல்பாடுகளைத் தனது அடித்தளமாக அமைத்துக் கொண்டுதான் பாசிசம் அரங்கேறுகிறது என்பது அரிச்சுவடியாகும். இந்த உண்மையை மறந்துவிட்டு, தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது தி.மு.க-விற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.
https://www.vinavu.com/2021/09/16/dravidian-model-corporate-service-compromise-saffron-fascism/
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.