Jump to content

யார் இந்த லொஹான் ? பின்னணி தொடர்பில் ஒரு தேடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
tamilnews1%2B%25287%2529.jpg

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ,அநுராதபுர சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி  கைத்துப்பாக்கியுடன்  சென்று இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் எனவும் , அன்றைய தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மதுபோதையில் நண்பர்களுடன் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அவரின் நண்பர்களுக்கு தூக்கு மேடையை சுற்றிக்காட்டியதாகவும் , அப்போது அவர் கையில் கைத்துப்பாக்கி  இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. 
 
கூட சென்ற அழகு ராணி. www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25285%2529.jpg

அன்றைய தினம் அவரது நண்பர்கள் கூட்டத்தில் திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா டி.சில்வாவும் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவர் வெற்றி பெற்றதாக மேடையில் அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டு ஒரு சில நிமிடங்களில் இவரின் கிரீடம் பறிக்கப்பட்டு சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறாக அன்றைய தினம் நண்பர்களுடன் மதுபோதையில்  சிறைச்சாலைகளுக்குள் கைத்துப்பாக்கியுடன் சென்று அட்டகாசம் புரிந்தமை தொடர்பில் பல தரப்பினரும் கடுமையான  கண்டனங்களை  தெரிவித்து வருவதுடன் , அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரி வருகின்றனர்.   www.tamilnews1.com 
 
பதவியை இராஜினாமா
 
tamilnews1%2B%25281%2529.png

அந்நிலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் தற்போது தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். 
 
புகழ்பூத்த அரசியல் குடும்பத்தின் நெருங்கிய உறவினர். 
 
tamilnews1%2B%252810%2529.jpg

காலம் சென்ற முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் மருமகன் தான் லொஹான் ரத்வத்தே , www.tamilnews1.com 
 
tamilnews1%2B%252812%2529.jpg

அதனால் அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மச்சான் ஆவார். www.tamilnews1.com 
 
தந்தை ரத்வத்தே 
 
tamilnews1%2B%25282%2529.jpg

லொஹானின் தந்தையார் தான் ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த. இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சி காலமான  1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25283%2529.jpg

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமான போது, விடுதலைப்புலிகளுக்கெதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவரது தலைமையின் கீழ் பிரதான பங்கை வகித்து இராணுவ நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன. www.tamilnews1.com 
 
1995 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத இறுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது, இவர் முக்கிய பங்கை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
5656.jpg

லொஹானின் தந்தை வழி  தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக இருந்தவர்கள்.(அவரின் தாத்தா , தந்தை)
 
tamilnews1%2B%25281%2529.jpg

இவரின் தாத்தா ஹரிஸ் லெக்கே ரத்வத்தே  தலதா மாளிகையின்  தியவதன நிலமேயாகவும், 1947 - 1952ஆம் ஆண்டு கால பகுதியில், ஐக்கிய தேசிய கட்சியின் மாவன்னல  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 
 
தியவதன நிலமேwww.tamilnews1.com 
 
56564.jpg

தியவதன நிலமே என்பது ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான பரிபாலன பொறுப்புக்கு உரியவர். .www.tamilnews1.com 

தலதா மாளிகைக்கு காணிக்கையாக அரசர் காலத்தில் வழங்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சொத்துக்களை பரிபாலிக்கும் பொறுப்பு தியவதன நிலமேயின் கடமைகளில் ஒன்றாகும்.
 
தியவதன நிலமே தெரிவானது தேர்தல் மூலம் இடம்பெறுவதுடன் தேர்தலின்போது 150 விஹாரைகளின் விஹாராதிபதிகள் மற்றும் தேரர்கள், 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் உட்பட 301 பேர் வாக்களிப்பார்கள். www.tamilnews1.com 
 
தியவதன நிலமேயாக தெரிவு செய்யப்படுபவர், 10 வருடங்களுக்கு பதவியிலிருக்க முடியும்.www.tamilnews1.com 
 
 லொஹான் ரத்வத்தே
tamilnews1%2B%25287%2529.jpg

அவ்வாறான ஒரு பதவி வகித்த பௌத்த பாரம்பரிய கண்டிய சிங்கள சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை சேர்ந்தவரே லொஹான் ரத்வத்தே. 
 
இவர் 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி கண்டியில் பௌத்த பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். தனது கல்வியினை கண்டியில் உள்ள Trinity கல்லூரியில் கற்றார். www.tamilnews1.com 
 
கண்டி உடதலவின்ன படுகொலை www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25289%2529.JPG

கண்டி உடதலவின்ன பிரதேசத்தில் கடந்த 2001.12.05 அன்று  தேர்தல் தினத்தில் வாக்கு பெட்டிகளை எடுத்து சென்ற பேருந்தின் பின்னால் வானில் சென்று கொண்டிருந்த முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். www.tamilnews1.com 
 
தாக்குதலாளிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்து வேறு பாதை ஊடாக வானில் சென்ற போது அவர்களின் வாகனம் மறிக்கப்பட்டு  வாகனத்தினுள் இருந்த ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 10 ஆதரவாளர்களையும் கொலை செய்த பின்னர் வாகனத்திற்கு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. www.tamilnews1.com 
 
தந்தையும் மகன்களும் கைது www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25284%2529.jpg

இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களாக அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும், அவரது புதல்வர்களான லொகான் ரத்வத்த, சாணுக ரத்வத்த ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் நிரபராதிகள் என 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேல் நீதிமன்றினால்  தீர்ப்பளிக்கப்பட்டு மூவரும் விடுவிக்கப்பட்டனர். www.tamilnews1.com 
 
அதேவேளை குறித்த வழக்கில் இராணுவத்தை சேர்ந்த ரஞ்சித் விஜேரத்ன, சுனில் டீ சில்வா, கமல் விஜயரட்ன, அனுரகுமார, புத்திதிசாநாயக்க ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டனர். www.tamilnews1.com 
 
 80 குற்றச்சாட்டுக்கள்

2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதிக்குள் பொது தேர்தல் சமயத்தின்போது உடதலவின்ன பகுதியில் 10 முஸ்லிம் இளைஞர்களை மிலோச்சத்தனமாக சுட்டுக் கொன்றமை, ஐந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தியதன் மூலம் இவர்களை படுகொலை செய்ய முயன்றமை, 250 1655 என்ற இலக்கமுடைய வாகனத்தில் பயணம் செய்தவர்களை படுகொலை செய்வது தொடர்பில் சட்டவிரோதமாக கூடி ஆராய்ந்தமை, அரசியல் எதிரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவிடாமல் தடுத்தமை, வாக்காளர் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியமை, வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப் பெட்டியை பலவந்தமாக கொள்ளையிட்டமை உட்பட மொத்த 80 குற்றச்சாட்டுகள் இவ்வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.www.tamilnews1.com 

ரத்வத்தைக்கு எதிரான 31 குற்றச்சாட்டுக்கள்www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25286%2529.jpg

இந்த வழக்கில்  அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக 31 குற்றச்சாட்டுக்களும் அவரது புதல்வர்கள் இருவருக்கும் எதிராக 32 குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன.www.tamilnews1.com 

இந்த வழக்கு விசாரணையை அடுத்து 706 பக்கம் கொண்ட தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது இரு மகன்மார்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். www.tamilnews1.com 
 
குற்றவாளிகளாக காணப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தலா ஒவ்வொருவருக்கும் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.www.tamilnews1.com 

இந்த வழக்கில் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவும் மகன்மாரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியெத்தவும் விசாரணைகளின் போது ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபரின் சார்பில் அன்றைய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார்.www.tamilnews1.com 
 
அந்நிலையில்   இந்த தண்டனைக்கு எதிராக ஐந்து இராணுவ வீரர்களும் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். www.tamilnews1.com 
 
4.jpg

இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, இராணுவ வீரர்கள் ஐவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நிரபராதிகள் என தீர்ப்பளித்து 24ஆம் திகதி ஜூலை மாதம் 2009ஆம் ஆண்டு   விடுதலை செய்துள்ளது.www.tamilnews1.com 
 
tamilnews1%2B%252811%2529.jpg

அதேவேளை கடந்த 2016ஆம் ஆண்டு லொஹானின் சகோதரரான சானுக ரத்வத்தே 4.2 பில்லியன் அரச நிதி மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
இவ்வாறான பின்னணிகளை கொண்ட லொஹான் 2010ஆம் ஆண்டு முதல் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வருகின்றார். www.tamilnews1.com 
 
tamilnews1%2B%25288%2529.jpg

அந்நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்தே கடந்த டிசம்பர் மாதம் 02ஆம் திகதி  சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். www.tamilnews1.com 
 
தற்போது அவர் தனது சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு பொறுப்பை  இராஜினாமா செய்துள்ளார். www.tamilnews1.com 
 
இணையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லோகனும், தமையனும் தான் குமார் பொன்னம்பலம் கொலைக்கு திட்டம் தீட்டியவர்கள் என்று சண்டே லீடரில் வாசித்த நினைவு.


ஆமியில் ஒரு போதுமே இராத தேப்பன் ரத்வத்தை, ஆமி யூனிபோமில அலம்பறை பண்ணியதும் நடந்த கூத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஆமியில் ஒரு போதுமே இராத தேப்பன் ரத்வத்தை, ஆமி யூனிபோமில அலம்பறை பண்ணியதும் நடந்த கூத்து.

அனுருத்த ரத்வத்த இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் (volunteer force) லெப்டினெண்ட் கேணல் தரத்தில் இருந்தார்.

முதலாம் ஜேவிபி கிளர்சியில் சிறீமாவோவை பாதுகாத்ததில் இவரும் (அப்போதைய) கேப்டன் டென்சில் கொபேகடுவமும் முக்கிய பாத்திரம் வகித்தனர்.

லெண்டினெண்ட் கேணலாக ஓய்வு பெற்ற இவர் - பிரதி பாதுகாப்பு அமைச்சராக ரிவிரெச மூலம் யாழை பிடித்தமையால் சந்திரிக்கா அவரை ஜெனரல் தரத்துக்கு தரமுயர்தினார்.

அதன் பின்னர் ஜெனரல் தர சீருடையோடு சுத்திகொண்டிருந்தார்.

ரத்வத்தையின் படையணி விபரம் கீழே.

https://alt.army.lk/slavf/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

 

அவரே தான்

வவுனியாவில் புலிகளின்  கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கெலியில் தவறுதலாக  இறங்கி

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

ஓம் அவர்தான். ரிவி ரெசவுக்காக நவீன சபுமல்குமாரயா என அழைக்கப்பட்டவர்.

ஒருமுறை இவர் போன ஹெலி கோளாறு காரணமாக புலிகள் பகுதியில் இறங்கி விட, பெரும் பிரயத்தனத்துடன் தப்பி வந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொகான் ஒரு பெரிய விபசார வலையமைப்பை வைத்திருக்கின்றார். இலங்கையின் முன்னாள் மாடல்  அழகி மிசைல் என்னும் பெண் இவரின் மூலம் பெற்ற வாடிக்கையாளருக்கு இவர் தலையீடு இல்லாமல் தொடர்ந்தும் சேவைசெய்ததை கண்டுபிடித்து அந்த பெண் மீது அசிட் வீசி அழகை குலையச் செய்தவர். இவர் இலங்கை அழகிகளை வெளிநாட்டுக் கணவான்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடுசெய்யும் புரோக்கர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

அப்படியா? நான் நினைத்தேன் ஒரு கிராமவாசியை கடத்தி வைத்து ஓடி ஒளிந்து வந்தார் என?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அப்படியா? நான் நினைத்தேன் ஒரு கிராமவாசியை கடத்தி வைத்து ஓடி ஒளிந்து வந்தார் என?

 

கைது  செய்ய மேலிடத்து அனுமதி  புலிகளுக்கு கிடைக்கவில்லை  என்று  தான்  அந்தநேரம் தெரியவந்தது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

 

அவரே தான்

வவுனியாவில் புலிகளின்  கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கெலியில் தவறுதலாக  இறங்கி

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

 

16 minutes ago, goshan_che said:

ஓம் அவர்தான். ரிவி ரெசவுக்காக நவீன சபுமல்குமாரயா என அழைக்கப்பட்டவர்.

ஒருமுறை இவர் போன ஹெலி கோளாறு காரணமாக புலிகள் பகுதியில் இறங்கி விட, பெரும் பிரயத்தனத்துடன் தப்பி வந்தார்கள். 

விசுகு... கோசான்,  சொல்வதைப்  போலவே... நானும் வாசித்த நினைவு.
"கைக்கு எட்டியது... வாய்க்கு, எட்டவில்லையே..."   என்று பலநாள் கவலைப் பட்டேன்.  

இணையத்தில் வந்த செய்திகள் என்ற படியால்...
உண்மையில்... என்ன நடந்தது என்பது மர்மம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

 

கைது  செய்ய மேலிடத்து அனுமதி  புலிகளுக்கு கிடைக்கவில்லை  என்று  தான்  அந்தநேரம் தெரியவந்தது???

தெரியவில்லை அண்ணை. நான் இக்பால் அத்தாசின் கட்டுரையில் இப்படித்தான் வாசித்த நினைவு. 

சில நேரம் இவர்கள் தப்பியதும், அவர்கள் அனுமதி வேண்டி சுணங்கியதும் ஒரே நேரத்தில் நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

அனுருத்த ரத்வத்தைக்கு,  ஒரு கால் சிறிது ஊனம்  என்று வாசித்த நினைவு.
அவர் கைத்தடியுடன் உடன் தான்... நடப்பார்  என கேள்விப் பட்டேன். அவரா.. இவர்?

எல்லாம் ஒரு நினைவில் இருந்து தான் எழுதினேன்.

அவரை ஜெனரல் ஆக, மருமகள் சந்திரிகா எடுத்த முடிவு, நக்கலுக்கு ஆளாகி, அவரும் பதவிசாக ஜெனெரலுக்குரிய உடுப்பு போட்டுகொண்டு திரிஞ்சதும் கேலி செய்யப்பட்டிருந்தது.

அவரது காலத்தில் புலிகள் பெரும் வெற்றிகளை குவித்ததும் காரணமாக இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

எல்லாம் ஒரு நினைவில் இருந்து தான் எழுதினேன்.

அவரை ஜெனரல் ஆக, மருமகள் சந்திரிகா எடுத்த முடிவு, நக்கலுக்கு ஆளாகி, அவரும் பதவிசாக ஜெனெரலுக்குரிய உடுப்பு போட்டுகொண்டு திரிஞ்சதும் கேலி செய்யப்பட்டிருந்தது.

அவரது காலத்தில் புலிகள் பெரும் வெற்றிகளை குவித்ததும் காரணமாக இருந்திருக்கலாம். 

நாதமுனி... அந்த நேரம் அவரின்.. வாய்ப் பேச்சுகள், "கோயபல்ஸ்" தரத்தில், 
இப்போதைய... கெகலிய ரம்புக்வெல  போலிருந்தமையால்..
பலரை கடுப்பு ஏற்றியது, உண்மை. 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

லோகனும், தமையனும் தான் குமார் பொன்னம்பலம் கொலைக்கு திட்டம் தீட்டியவர்கள் என்று சண்டே லீடரில் வாசித்த நினைவு.


 

குமாரின் கொலையில் தொடர்பானவர்கள் சந்திரிக்கா அம்மையாரும் அவரது செயலாளர் பாலபட்டபெந்தியும். இவர்களின் ஏற்பாட்டில் தான் மொரட்டுவ சமன், குமாருடன் நட்பாக பழகி கொழும்பு இராமகிருஷ்ண வீதிக்கு அவரது காரிலேயே அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்தார். இந்த மொரட்டுவ சமன் ஒரு முன்னால் பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்தவர். சந்திரிக்கா அம்மையாரின் சனாதிபதி பிரிவில் உயர் பதவியில் பணியாற்றிய பத்தேகம சஞ்சீவ தீட்டிய கொலைத்திட்டத்தினை மொரட்டுவ சமன் தான் செயல்படுத்தியது.

இந்த பத்தேகம சஞ்சீவ இன்னொரு சம்பவம் ஒன்றில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மொரட்டுவ சமன், வேறோரு சம்பவம் ஒன்றில் கைதாகி ஈற்றில் இறந்து / அல்லது கொலையாகினார்.

Link to comment
Share on other sites

17 minutes ago, நிழலி said:

குமாரின் கொலையில் தொடர்பானவர்கள் சந்திரிக்கா அம்மையாரும் அவரது செயலாளர் பாலபட்டபெந்தியும். இவர்களின் ஏற்பாட்டில் தான் மொரட்டுவ சமன், குமாருடன் நட்பாக பழகி கொழும்பு இராமகிருஷ்ண வீதிக்கு அவரது காரிலேயே அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்தார். இந்த மொரட்டுவ சமன் ஒரு முன்னால் பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்தவர். சந்திரிக்கா அம்மையாரின் சனாதிபதி பிரிவில் உயர் பதவியில் பணியாற்றிய பத்தேகம சஞ்சீவ தீட்டிய கொலைத்திட்டத்தினை மொரட்டுவ சமன் தான் செயல்படுத்தியது.

இந்த பத்தேகம சஞ்சீவ இன்னொரு சம்பவம் ஒன்றில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மொரட்டுவ சமன், வேறோரு சம்பவம் ஒன்றில் கைதாகி ஈற்றில் இறந்து / அல்லது கொலையாகினார்.

 

உங்கள் கூற்று சரியானதே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

குமாரின் கொலையில் தொடர்பானவர்கள் சந்திரிக்கா அம்மையாரும் அவரது செயலாளர் பாலபட்டபெந்தியும். இவர்களின் ஏற்பாட்டில் தான் மொரட்டுவ சமன், குமாருடன் நட்பாக பழகி கொழும்பு இராமகிருஷ்ண வீதிக்கு அவரது காரிலேயே அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்தார். இந்த மொரட்டுவ சமன் ஒரு முன்னால் பொலிஸ் கான்ஸ்டபிளாக இருந்தவர். சந்திரிக்கா அம்மையாரின் சனாதிபதி பிரிவில் உயர் பதவியில் பணியாற்றிய பத்தேகம சஞ்சீவ தீட்டிய கொலைத்திட்டத்தினை மொரட்டுவ சமன் தான் செயல்படுத்தியது.

இந்த பத்தேகம சஞ்சீவ இன்னொரு சம்பவம் ஒன்றில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மொரட்டுவ சமன், வேறோரு சம்பவம் ஒன்றில் கைதாகி ஈற்றில் இறந்து / அல்லது கொலையாகினார்.

நனறி நிழலி....

நான் நிணைவில் இருந்து தான் எழுதினேன்.

யாருக்காவது நிணைவு இருக்குதோ தெரியவில்லை.

போலிசாரின், குமார் கொலை விசாரணைக் குறிப்புகள் சண்டேலீடர் பத்திரிகையில் தொடராக வந்தது.

அதில் அவரது பலவீனமான மறுபக்கம் குறி்த்து தெரிய வந்தது.

அந்த பலவீனத்தை வைத்தே, அவர் வெளியே தனியே கார் சாரதியே இல்லாமல் வரவழைக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

அந்த குறிப்பிலேயே ரத்வத்தை மகன்கள் குறித்தும் வந்ததாக நிணைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, விசுகு said:

 

அவரே தான்

வவுனியாவில் புலிகளின்  கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கெலியில் தவறுதலாக  இறங்கி

புலிகளால் தப்பிப்போக அனுமதிக்கப்படவர்

 

10 hours ago, goshan_che said:

ஓம் அவர்தான். ரிவி ரெசவுக்காக நவீன சபுமல்குமாரயா என அழைக்கப்பட்டவர்.

ஒருமுறை இவர் போன ஹெலி கோளாறு காரணமாக புலிகள் பகுதியில் இறங்கி விட, பெரும் பிரயத்தனத்துடன் தப்பி வந்தார்கள். 

 

ஓமோம்... உண்மைதான்.

இயக்கம் ஏதோ செய்து தான் உந்த தடிகாரனை தப்ப விட்டவங்கள். ஏனெண்டு சொன்னால், சிங்களவரின்ர ஒரு ஆங்கிலக் கட்டுரையிலை சிங்கள வான்படை ஏதோ சாகசம் செய்து உவரை மீட்டுக் கொண்டு வந்தது என்டு எழுதியிருந்தவங்கள். வாசித்த போதே விளங்கியது பொய்யென்று; அவ்வளவு சோடினை.(2009 பிறகு எழுதப்பட்ட கட்டுரை. இக்பால் அத்தாசின் கட்டுரையன்று). அதுக்குப்பிறகு ஒருநாள் விடுதலைப்புலிகளில்ல வாசித்தபோது தான் அந்த கோளாறான உலங்கு வானூர்தியின்ர படத்தோட உந்த செய்தியைக் கண்டனான்.

ஐயன்களே, உந்த விடயம் ஒரு 'விடுதலைப்புலிகள்' இதழில் உள்ளது. நான் வாசித்திருக்கிறேன்...
 முதலில் உந்த உலங்கு வானூர்தியைப் பாருங்கோ!

 

https://eelam.tv/watch/shot-down-helicopter-of-slaf_DXPF1XcoDYcRtPq.html

 

 

Link to comment
Share on other sites

ரத்வத்தை பயணம் செய்த உலங்கு வானூர்தி நெடுங்கேணி காட்டில் தான் கோளாறு காரணமாக தரையிறங்கியது.

அதை மூன்று மணி நேரத்துக்குள் சுற்றி வளைத்து, தமது கட்டுப்பாட்டுக்குள கொண்டு வரக்கூடிய அளவுக்கு புலிகளுக்கு ஆளணி வசதிகள் அன்று இருக்கவில்லை.

இதுதான் அன்றைய நிலவரம்.

அத்துடன் ரத்வத்தை காட்டினை ஒட்டிய கிராமத்தவர்கள் சிலரை பணயமாக பிடித்து இருந்தனர். 

ஆயினும் விடுதலை புலிகளிடம் இருந்த ஆளணி வசதியீன்மையும், தொடர்பாடல் சிக்கலுமே ரத்வத்தை தப்பிக்க வலுவான காரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

ரத்வத்தை பயணம் செய்த உலங்கு வானூர்தி நெடுங்கேணி காட்டில் தான் கோளாறு காரணமாக தரையிறங்கியது.

அதை மூன்று மணி நேரத்துக்குள் சுற்றி வளைத்து, தமது கட்டுப்பாட்டுக்குள கொண்டு வரக்கூடிய அளவுக்கு புலிகளுக்கு ஆளணி வசதிகள் அன்று இருக்கவில்லை.

இதுதான் அன்றைய நிலவரம்.

அத்துடன் ரத்வத்தை காட்டினை ஒட்டிய கிராமத்தவர்கள் சிலரை பணயமாக பிடித்து இருந்தனர். 

ஆயினும் விடுதலை புலிகளிடம் இருந்த ஆளணி வசதியீன்மையும், தொடர்பாடல் சிக்கலுமே ரத்வத்தை தப்பிக்க வலுவான காரணங்கள்.

இவரின் திடீரென பழுதாகிய ஹெலி இறங்கியது.. மன்னார் - வவுனியா வீதியை அண்டிய காட்டுப்பகுதியில். இவர் உதவிப் படையின் வழிநடத்தலில் கால்நடையாக வந்து.. பின்னர் தமிழ் விவசாயி ஒருவரை பயணக் கைதியாக்கி அவரின் வழிகாட்டலின் பெயரில் இராணுவத்தால் வவுனியாவுக்கு மீட்டு வரப்பட்டார்.

இவர் பயணித்த ஹெலி.. செயலிழக்கப்பட்ட நிலையில்... பின் புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.sundaytimes.lk/961208/frontm.html
 

அத்தாசின் 1996 கட்டுரை மேலே. நெடுக்ஸ் சொல்வது போல் வவுனியாவுக்கு வடமேற்கே, முன்னரங்கில் இருந்து 10 கிமி உள்ளே இறங்கியதாகத்தான் இதில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வவுனியா மன்னார் வீதியில் தான் கரையேறினார்.புலிகளுக்கு விடயம் காலம் கடந்தே போய் சேர்ந்தது.

இவர் பயணித்த உலங்கு வானூர்த்தி நெடுங்கேணி பகுதியில் புலிகளால் தாக்கப்பட்டு தப்பியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 02:40, விசுகு said:

 

கைது  செய்ய மேலிடத்து அனுமதி  புலிகளுக்கு கிடைக்கவில்லை  என்று  தான்  அந்தநேரம் தெரியவந்தது???

நான் கேள்விப்பட்டது இவர்களது ஹெலி இயந்திரக்கோளாறு காரணமாக காட்டிற்குள் தரையிறங்கியபோது பொதுமகன் ஒருவரால் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டார்கள் என்றுதான். புலிகள் அந்தவிடத்திற்கு வருமுன்னரே அவர்கள் தப்பிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.