Jump to content

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
நியூசிலாந்து

பட மூலாதாரம்,REUTERS

நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.

பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன.

ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிட்டதட்ட 10 நாட்கள் பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து அணி தற்போது திடீரென போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தொடரை ரத்து செய்துள்ளது.

அடுத்த மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதால் அந்நாட்டு அரசு மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

"பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இது பெரிய அடியாகத்தான் இருக்கும். அவர்கள் நன்றாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இருப்பினும் எங்கள் வீரர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். இதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி என நாங்கள் நம்புகிறோம்," என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத் தலைவர் டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாட வந்தது. ராவல்பிண்டியில் ஒருநாள் தொடரும், லாகூரில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பேருந்து தாக்க்கப்பட்ட பிறகு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் பாகிஸ்தான் அணி முதன்முதலில் தங்கள் நாட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடியது.

பாகிஸ்தானில் அச்சுறுத்தல்கள் காரணமாக சர்வதேச அணிகள் போட்டிகளை நடத்துவதில் இருந்து பின்வாங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்டில் வெகுசில பார்வையாளர்களுக்கு மத்தியில் விளையாடி வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

`பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்த சமரசமும் இல்லை`

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெனை தொடர்பு கொண்டு நியூசிலாந்து அணிக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்திருந்தார்.

"இன்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், தங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளதுள்ளதாகவும் போட்டி தொடரை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்" என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் அரசு நியூசிலாந்து அணி வருகையை ஒட்டி எந்தவித சமரசமும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு இந்த உறுதியை நாங்கள் கொடுத்தோம்.

பிரதமர் இம்ரான் கான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டாவிடம், உலகிலேயே சிறந்த உளவு அமைப்பு தங்களிடம் இருப்பதாகவும், கிரிக்கெட் அணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்."

"நியூசிலாந்து அணிக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு தங்கியிருந்த சமயம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தியுடன் இருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டிகளை தொடர்ந்து நடத்த விரும்புகிறது. பாகிஸ்தான் மற்றும் உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதுகுறித்து ஏமாற்றம் அடைவர்" என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sport-58598829

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.