Jump to content

Tamil Crypto முக்கிய செயட்திட்டம் : தமிழ் தகவல் பரவலாக்கம்


Recommended Posts

தகவல் பரவலாக்கம் என்றால் என்ன ?
(What is data decentralization?)

மின் மயப்படுத்தப்பட்ட தகவல்களை தனி நபரின் கணினியிலோ அல்லது அமைப்புகளின் கணினியிலோ வைக்காமல், தமிழ் மொழி ஆர்வலர் அனைவரும் ஒரு பிரதியை பதிவேற்றி வைக்கக்கூடிய தொழினுட்பம் மூலமாக தகல் சேமிப்பை பரவலாக்குதல்.

spacer.png

உதாரணத்துக்கு, ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதோடு, அதில் இருந்த எத்தனையோ லட்சம் அரிய தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இது எமது இனத்திற்கு ஏற்பட்ட மீள முடியாத பேரிழப்பாகும்.

இதை எவ்வாறு தடுத்திருக்கலாம்?

அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாத்து வைத்ததே இதற்கு முதல் காரணம், மின்னணு மயப்படுத்தி வேறிடத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருந்தால் ஓரளவு பாதுகாத்து இருக்கலாம்.

சரி இப்பொழுது தான் மின் நூல்கள் மற்றும் மின் மயப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றனவே, ஆம் இருக்கின்றன! ஆனால், இப்பொழுதும் தகவல் எல்லாம் ஒரு அமைப்பின் வழங்கல் கணினியிலோ அல்லது தனிநபர்களின் கணினியிலோதான் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. பதிவேற்றப்பட்ட வழங்கல் கணினி (Server) தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தாலோ அல்லது பதிவேற்றப்பட்ட தகவல்கள் திட்டமிட்டு அழிக்கப் பட்டாலோ அல்லது மூலப்பிரதி மாற்றப்பட்டு போகவோ வாய்ப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் தகவல் மையப்படுத்தப்படுவதே (ஒரே இடத்தில் குவிக்கப்படுவதே).

இன்னும் நாம் தமிழ் ஓலைச்சுவடி திருட்டு என்று தினமும் கேள்வி பட்டு கொண்டு தான் இருக்கின்றோம். இதை தடுக்க என்னவழி? ஒரே வழி தகவல் பரவலாக்கம்.

கல்லேடு/பேரேடு தொழில்நுட்பம் மூலமாக நாம் தகவலை பரவலாக்கி (தமிழ் மின் ஆவணங்கள், இந்த செயல்திட்டத்தில் பங்குபெரும் உறுப்பினர்களின் கணினியில் பதிவேற்றப்பட்டு பாதுகாக்கப்படும்) இந்த இழப்புகளை தவிர்க்கலாம். எமது Tamil Crypto செயல்திட்டம் இதை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது.

ஒரு மொழிக்காக ஏன் இவ்வளவு சிரமப்பாடு?

மொழியின் நீட்சியே இனத்தின் நீட்சியாகும். ஒரு மொழி அழிவடையும் போது இனம் அதன் அடையாளத்தை இழக்கின்றது. மற்றைய மொழிகள் போலல்லா. எமது அன்னைத்தமிழ் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தீ, கடல் , எதிரிகள் துரோகிகள் அழித்தது போக இன்னும் மிச்சம் இருக்கும் எமது இனத்தின் சொத்துக்களை கணினிமயப்படுத்தி, தகவலை பரவலாக்கி அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே எமது நோக்கம்.

மொழி வாழ்ந்தால் தான் இனம் வாழும்.

நமது மொழிக் கடன்

நமது மொழி காலம் காலமாக தனது தனித்தன்மையாலும் பலரது தியாகத்தாலும் தன்னை தானே புதுப்பித்துக்கொண்டு டிஜிட்டல் உலகிலும் முன்னணி மொழியாக வலம் வருகின்றது. இந்த தன்னிகரில்லாத தமிழ் மொழி வளர்சிக்கு நாம் என்ன செய்து இருக்கின்றோம் என்ற கேள்வி எல்லா தமிழர்களிடத்திலும் வர வேண்டும், இதுவே எமது மொழியை அடுத்த தலைமுறைக்கு வீரியத்துடன் எடுத்து செல்ல உதவும். டிஜிட்டல் தளத்தில், கட்டச்சங்கிலி தொழில்நுட்பத்தின் ஊடாக இதை நாங்கள் ஒவ்வொருவரும் சாதிக்க முடியும். இதற்க்காகத்தான் Tamil Token இயங்குதளம் உருவாக்கப்பட்டது.

 

இந்த செயல்திட்டத்தில் நீங்கள் எப்படி பங்குபெறுவது.

நீங்கள் TamilToken.org இல் கணக்கு திறந்து செயல்திட்டங்களை பார்வையிடலாம் மற்றும் பங்குபெறலாம்.

Tamil Crypto Token எப்படி வாங்குவது.

https://stellarterm.com அல்லது https://interstellar.exchange போன்ற மெய் நிகர் நாணய சந்தைகளில் (Crypto Exchanges) வாங்கலாம்.

Tamil Token வாங்கும் முறை

Interstellar exchange => https://stellarterm.com

Stellarterm exchange => Stellarterm

தனியார் விற்பனை நேரத்த்தில் வாங்கும் பொது ஆரம்பகால ஆதரவாளர்கள் என்றவகையில், உங்களுக்கு இனாமாக மேலதிக தமிழ் மெய் நிகர் நாணயங்கள் (Tamil Token) கிடைக்கும்.

செயல்திட்ட நிர்வாகம் (Governance)

Tamil Token வைத்திருப்பவர்கள், வாக்கு செலுத்தும் தகுதி பெறுவார்கள். ஒரு செயல்திட்டம் ஆரம்பிக்கும் பொது நீங்கள் Tamil token மூலமாக ஆதரவு செலுத்தலாம் மற்றும் நீங்கள் குறைந்தது 10 TAMIL token வைத்திருந்தால் நீங்கள் சமூக செயல்திட்டங்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவீர்கள்.

ஆக்கப்பூர்வமான கருத்துக்களை உள்வாங்கல்

வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகக்கருத்துக்களை உள்வாங்குதல் என்பன இந்த Tamil Token செயல்திட்டத்தை விரிவுப்படுத்த உதவும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யாவரும், தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த பின்னூட்டங்கள்/பதிவுகள் சமூக வாக்கெடுப்புக்கு விடப்பட்டு. 80% மான Tamil Token சமூக வாக்குகள் சேர்ந்தபின் நடைமுறைப்படுத்தப்படும்.


தந்தி (Telegram Channel) => https://t.me/tamiltoken

Twitter => https://twitter.me/tamiltoken


Download Whitepaper

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.