Jump to content

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நல்லாட்சி(மைத்திரி அன்ட் கோ) காலத்திலும் மக்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பும் மனநிலையில் இருந்தார்களா ராசன்?

இல்லை 

ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்களுடைய மனநிலை வேறு தற்போது மாற்றம் தெரிகின்றது ஆனால் சிங்கள மக்களை நம்பவும் முடியாது 

31 minutes ago, satan said:

என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  

நேரா என்பெயரை சொல்லலாம் எனக்கு முகத்துக்கு நேரா சொல்வதை பிடிக்கும் இது என்னவோ முதுகில குத்துறமாதிரி இருக்கு சார்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனக்கான அரசியல் தலைமையில், எந்தச்சூழ்நிலையில் யார் இருக்கவேண்டும் என சரியாகவே சிந்தித்துச் செயல்பட்டு அதை நிறைவேற்றிக்கொள்ளும். 

மேற்குலக ஆதரவுடனான மேன்போக்குடனான அதேவேளை தமிழர்களது விடையத்தை இழுத்தடித்துக் காலதாமதப்படுத்தும் ரணில் குழு வேண்டுமா.

இல்லையேல் மறுபடியும் முதலிருந்து என ஆரம்பித்து பின்பு முழுமையான இனவாதம் பேசி தமிழருக்கு ஒன்றும் இல்லை எனக்கூறும் மகிந்த தரப்பு வேண்டுமா என்பதை அவர்கள் சரியாகவே முடிவெடுப்பர். 

கடந்த நல்லாட்சி அரசு தீர்வுத்திட்டத்தை வரைவு செய்வதிலேயே தனது காலத்தை இழுத்தடித்தது 
இதில் விசேசமாக சுமந்திரன் வகையறா "ஏக்க ராஜ்ய" எனும் சொல்லுக்கு ஏகப்பட்ட வரைவிலக்கணம் கொடுத்து தனது பங்குக்கு அந்தப் பாராளுமன்றப் பதிவிக்காலத்தை சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்ததாக நிறைவுசெய்துவிட்டார்.

பின்பு தீர்வுத்திட்டம் தீட்டப்பட்ட கடதாசிகள் அம்பாந்தோட்டைக் கடலில் கடாசி எறியப்பட்டுவிட்டது. 

சிங்களம் இனிமேல் ரணிலைக் கொண்டுவரும் அவர் இன்னிமொரு "ஸ்குயர் பேப்பர்" கட்டைக் கமக்கட்டுக்குள் தூக்கிக்கொண்டு தீர்வுத்திட்டம் தயாரிப்பார்.

அதே வேளை அனைத்துச் சிங்களப்பேரினவாதிகளது (ரணில் உட்பட்) நிலையான நிகழ்சி நிரலுக்கு ஏதுவாக, தமிழரது இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் கைங்கரியம் வடக்குக்கிழக்கில் தங்குதடையின்றித் தொடரும் இன்னுமொரு பத்துவருடம் போதும் எல்லாம் நடந்து முடிய.

அதன்பின்பு தமிழ் இனமா! அவர்களுக்கான பிரச்சனையா! அப்படி என்றால்" அப்படி எதுவும் இல்லையே!

அதுதானே சுமந்திரன் முதலில் சொல்லிப்போட்டாரே

கொழும்பில் சிங்கள மக்களுடன் ஒன்றாக எனது இளம் வயதைக் கழித்ததையிட்டுப் பெருமைப்படுகிறேன் என.

அதேபோல் வடக்குக்கிழக்கில் சிங்களமக்களுடன் நாம் வாழ்வதில் பெருமைப்படுகிறோம் எனச்சொல்லி அடங்குங்கள் என்பார்கள்.

"தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 07:02, பெருமாள் said:

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி ஆட்சியின்போது  சாட்சாத் இதே ரணில் விக்கிரமசிங்கதான் ஐரோப்பாவில் நின்றபடி புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றொரு அறைகூவல் விடுத்தார்.

சிங்களவர்கள் செய்வதெல்லாம் வெறும் கோமாளி அரசியல் என்பது மறுபடியும் நிரூபணமாகிறது.

On 18/9/2021 at 13:04, தனிக்காட்டு ராஜா said:

சிலர் அகதி கோரிக்கை (ஐரோப்பிய நாடு) சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்ண யாரை கேட்டாலும் இனி இங்கு இருந்து என்ன செய்வது என வெறுப்பாகவே பேசுகின்றனர்.

போரில்லாத ஒரு சூழ்நிலையில் அகதி கோரிக்கை எல்லாம் இனிமேல் எடுபடாது, போர் காலங்களிலேயே வகை தொகையின்றி இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பபட்டனர், அதிர்ஷ்டவசமாக அகதி அந்தஸ்து பெற்றவர்கள் தப்பி பிழைத்தனர்.

அப்பவே அப்படியென்றால் இப்போ சொல்லவும் வேண்டுமா? 

ஓரிரு வருடங்களிற்குள் திருப்பி அனுப்பி விட்டான் என்றால் ஏஜென்சிகளின் பேச்சை நம்பி இருக்கும் காசு பணத்தையும் இழக்கவே அது வழி பண்ணும்.

மத்திய கிழக்குக்கு போகிறவர்கள்  நிரந்தரமாக தங்கிவிட முடியுமா என்ன?

அங்கு கட்டி போன காசை உழைத்து ஒரு LED , UHD ரிவி , பெரிய சங்கிலியுடன் நாடு திரும்பவே அவர்கள் சம்பாத்தியம் இடம் கொடுக்கும்.

சிங்களவர்களுடன் தமிழினம் சமரச அரசியலும் சண்டிதன அரசியலும் பண்ணி பார்த்து இரண்டிலுமே தோத்து போச்சு,

இந்த இரண்டு தோல்விகளுக்கும் பின்னால் சிங்களவர்களுக்கு தமிழர்களில் ஒருபகுதி வழங்கிய  50%ஆதரவுக்கு பெரும் பங்குண்டு

On 20/9/2021 at 03:28, colomban said:

என்னுடைய பல சிங்கள நண்பர்கள் ஒருகாலத்தில் கடும் இனவாதிகளக இருந்தவர்கள் இப்பொழுது எப்படா நாட்டை விட்டு ஒடலாம் என்று இருக்கின்ரார்கள்.

 

கொழும்பான் சொன்னது 100% உண்மை.

வெறுமனே புலி பயங்கரவாதம் என்று சொல்லி சொல்லியே எமது தலைமைகளால்  நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று சிங்களவர்களே உணர்ந்துவிட்டார்கள்.

நான் நேரடியாக அறிந்த சிங்களவர்களே வெளிப்படையாக பேசுகிறார்கள். பிரபாகரன் ஒரு நேர்மையான ஒழுக்கமானவர் என்று வேறு பேச தொடங்கிவிட்டார்கள்.

இப்போ எல்லாம் புலிகள் அழிந்தது தமிழர்களைவிட சிங்கள அரசியலுக்குத்தான்  பாரிய இழப்பு. எதை வைத்து அவர்கள் இனத்தை சூடேற்றி ஏமாத்தி பாராளுமன்றம் செல்வது என்று ஏங்கி தவிக்கிறார்கள்.

இனவாதத்தால் எதுவும் ஆகபோவதில்லை என்று நாலு காசு சம்பாதிக்கிறதுக்காக நாட்டைவிட்டு ஓடபோகும் சிங்கள இளைஞர்கள் உணரும் காலம் வந்துவிட்டது, ஆனாலும் அவர்கள் ஒருகாலம் நாடு திரும்பும்போது, அதே தமிழருக்கெதிரான சிங்கள இனவாதம் அப்படியே இலங்கையில் இருக்கும்.

ஏனென்றால் இனவாதம் என்பது உங்களின் சுவாசம், அது என்னதான் இலங்கை என்பது அழகிய குளிர்ச்சியான எம் தாய்நாடு என்று நீங்கள் சொல்லிக்கொண்டாலும், உங்கள் தலைமைகளின் அரசியல் அதை எப்போதும் சுடுகாடாகவே வெப்பமாக வைத்திருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?

நீங்க நம்பினாலும் நம்பபாட்டியும் எனது கருத்தும்  நேர்மையானது இதனால என்னை பலருக்கு பிடிக்காது சாரே😊 இதை சிரித்துக்கொண்டே சொல்வேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாமா....  நீங்கள் அப்போ அதை சொன்னாலும், இப்போ இதை சொன்னாலும், எப்போ எதை சொன்னாலும் சிரித்துக்கொண்டே சொன்னீர்கள், சொல்கிறீர்கள், சொல்வீர்கள். சொல்லும் விடயங்கள் முன்னுக்கு பின் முரணாய் இருந்தாலும் சிரிக்கிறீர்கள். நீங்கள் ஒரு ஞானி சார்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.