Jump to content

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் - அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நல்லாட்சி(மைத்திரி அன்ட் கோ) காலத்திலும் மக்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பும் மனநிலையில் இருந்தார்களா ராசன்?

இல்லை 

ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்களுடைய மனநிலை வேறு தற்போது மாற்றம் தெரிகின்றது ஆனால் சிங்கள மக்களை நம்பவும் முடியாது 

31 minutes ago, satan said:

என்னமோ சாமியார் சிலர் எண்ணத்திலும் மாற்றந்தெரியுது இப்போ. முன்பெல்லாம் நாங்கள் சொல்லும்போது; வாருங்கள், பாருங்கள், தீர விசாரித்து கதையுங்கள்  என்று சவால் விடுபவர்கள், இப்போ ஓடலாமா என்று யோசிக்கிறார்கள்.  

நேரா என்பெயரை சொல்லலாம் எனக்கு முகத்துக்கு நேரா சொல்வதை பிடிக்கும் இது என்னவோ முதுகில குத்துறமாதிரி இருக்கு சார்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனக்கான அரசியல் தலைமையில், எந்தச்சூழ்நிலையில் யார் இருக்கவேண்டும் என சரியாகவே சிந்தித்துச் செயல்பட்டு அதை நிறைவேற்றிக்கொள்ளும். 

மேற்குலக ஆதரவுடனான மேன்போக்குடனான அதேவேளை தமிழர்களது விடையத்தை இழுத்தடித்துக் காலதாமதப்படுத்தும் ரணில் குழு வேண்டுமா.

இல்லையேல் மறுபடியும் முதலிருந்து என ஆரம்பித்து பின்பு முழுமையான இனவாதம் பேசி தமிழருக்கு ஒன்றும் இல்லை எனக்கூறும் மகிந்த தரப்பு வேண்டுமா என்பதை அவர்கள் சரியாகவே முடிவெடுப்பர். 

கடந்த நல்லாட்சி அரசு தீர்வுத்திட்டத்தை வரைவு செய்வதிலேயே தனது காலத்தை இழுத்தடித்தது 
இதில் விசேசமாக சுமந்திரன் வகையறா "ஏக்க ராஜ்ய" எனும் சொல்லுக்கு ஏகப்பட்ட வரைவிலக்கணம் கொடுத்து தனது பங்குக்கு அந்தப் பாராளுமன்றப் பதிவிக்காலத்தை சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்ததாக நிறைவுசெய்துவிட்டார்.

பின்பு தீர்வுத்திட்டம் தீட்டப்பட்ட கடதாசிகள் அம்பாந்தோட்டைக் கடலில் கடாசி எறியப்பட்டுவிட்டது. 

சிங்களம் இனிமேல் ரணிலைக் கொண்டுவரும் அவர் இன்னிமொரு "ஸ்குயர் பேப்பர்" கட்டைக் கமக்கட்டுக்குள் தூக்கிக்கொண்டு தீர்வுத்திட்டம் தயாரிப்பார்.

அதே வேளை அனைத்துச் சிங்களப்பேரினவாதிகளது (ரணில் உட்பட்) நிலையான நிகழ்சி நிரலுக்கு ஏதுவாக, தமிழரது இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் கைங்கரியம் வடக்குக்கிழக்கில் தங்குதடையின்றித் தொடரும் இன்னுமொரு பத்துவருடம் போதும் எல்லாம் நடந்து முடிய.

அதன்பின்பு தமிழ் இனமா! அவர்களுக்கான பிரச்சனையா! அப்படி என்றால்" அப்படி எதுவும் இல்லையே!

அதுதானே சுமந்திரன் முதலில் சொல்லிப்போட்டாரே

கொழும்பில் சிங்கள மக்களுடன் ஒன்றாக எனது இளம் வயதைக் கழித்ததையிட்டுப் பெருமைப்படுகிறேன் என.

அதேபோல் வடக்குக்கிழக்கில் சிங்களமக்களுடன் நாம் வாழ்வதில் பெருமைப்படுகிறோம் எனச்சொல்லி அடங்குங்கள் என்பார்கள்.

"தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2021 at 07:02, பெருமாள் said:

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி ஆட்சியின்போது  சாட்சாத் இதே ரணில் விக்கிரமசிங்கதான் ஐரோப்பாவில் நின்றபடி புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்றொரு அறைகூவல் விடுத்தார்.

சிங்களவர்கள் செய்வதெல்லாம் வெறும் கோமாளி அரசியல் என்பது மறுபடியும் நிரூபணமாகிறது.

On 18/9/2021 at 13:04, தனிக்காட்டு ராஜா said:

சிலர் அகதி கோரிக்கை (ஐரோப்பிய நாடு) சிலர் வேலைக்காக, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்ண யாரை கேட்டாலும் இனி இங்கு இருந்து என்ன செய்வது என வெறுப்பாகவே பேசுகின்றனர்.

போரில்லாத ஒரு சூழ்நிலையில் அகதி கோரிக்கை எல்லாம் இனிமேல் எடுபடாது, போர் காலங்களிலேயே வகை தொகையின்றி இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பபட்டனர், அதிர்ஷ்டவசமாக அகதி அந்தஸ்து பெற்றவர்கள் தப்பி பிழைத்தனர்.

அப்பவே அப்படியென்றால் இப்போ சொல்லவும் வேண்டுமா? 

ஓரிரு வருடங்களிற்குள் திருப்பி அனுப்பி விட்டான் என்றால் ஏஜென்சிகளின் பேச்சை நம்பி இருக்கும் காசு பணத்தையும் இழக்கவே அது வழி பண்ணும்.

மத்திய கிழக்குக்கு போகிறவர்கள்  நிரந்தரமாக தங்கிவிட முடியுமா என்ன?

அங்கு கட்டி போன காசை உழைத்து ஒரு LED , UHD ரிவி , பெரிய சங்கிலியுடன் நாடு திரும்பவே அவர்கள் சம்பாத்தியம் இடம் கொடுக்கும்.

சிங்களவர்களுடன் தமிழினம் சமரச அரசியலும் சண்டிதன அரசியலும் பண்ணி பார்த்து இரண்டிலுமே தோத்து போச்சு,

இந்த இரண்டு தோல்விகளுக்கும் பின்னால் சிங்களவர்களுக்கு தமிழர்களில் ஒருபகுதி வழங்கிய  50%ஆதரவுக்கு பெரும் பங்குண்டு

On 20/9/2021 at 03:28, colomban said:

என்னுடைய பல சிங்கள நண்பர்கள் ஒருகாலத்தில் கடும் இனவாதிகளக இருந்தவர்கள் இப்பொழுது எப்படா நாட்டை விட்டு ஒடலாம் என்று இருக்கின்ரார்கள்.

 

கொழும்பான் சொன்னது 100% உண்மை.

வெறுமனே புலி பயங்கரவாதம் என்று சொல்லி சொல்லியே எமது தலைமைகளால்  நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று சிங்களவர்களே உணர்ந்துவிட்டார்கள்.

நான் நேரடியாக அறிந்த சிங்களவர்களே வெளிப்படையாக பேசுகிறார்கள். பிரபாகரன் ஒரு நேர்மையான ஒழுக்கமானவர் என்று வேறு பேச தொடங்கிவிட்டார்கள்.

இப்போ எல்லாம் புலிகள் அழிந்தது தமிழர்களைவிட சிங்கள அரசியலுக்குத்தான்  பாரிய இழப்பு. எதை வைத்து அவர்கள் இனத்தை சூடேற்றி ஏமாத்தி பாராளுமன்றம் செல்வது என்று ஏங்கி தவிக்கிறார்கள்.

இனவாதத்தால் எதுவும் ஆகபோவதில்லை என்று நாலு காசு சம்பாதிக்கிறதுக்காக நாட்டைவிட்டு ஓடபோகும் சிங்கள இளைஞர்கள் உணரும் காலம் வந்துவிட்டது, ஆனாலும் அவர்கள் ஒருகாலம் நாடு திரும்பும்போது, அதே தமிழருக்கெதிரான சிங்கள இனவாதம் அப்படியே இலங்கையில் இருக்கும்.

ஏனென்றால் இனவாதம் என்பது உங்களின் சுவாசம், அது என்னதான் இலங்கை என்பது அழகிய குளிர்ச்சியான எம் தாய்நாடு என்று நீங்கள் சொல்லிக்கொண்டாலும், உங்கள் தலைமைகளின் அரசியல் அதை எப்போதும் சுடுகாடாகவே வெப்பமாக வைத்திருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?

நீங்க நம்பினாலும் நம்பபாட்டியும் எனது கருத்தும்  நேர்மையானது இதனால என்னை பலருக்கு பிடிக்காது சாரே😊 இதை சிரித்துக்கொண்டே சொல்வேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாமா....  நீங்கள் அப்போ அதை சொன்னாலும், இப்போ இதை சொன்னாலும், எப்போ எதை சொன்னாலும் சிரித்துக்கொண்டே சொன்னீர்கள், சொல்கிறீர்கள், சொல்வீர்கள். சொல்லும் விடயங்கள் முன்னுக்கு பின் முரணாய் இருந்தாலும் சிரிக்கிறீர்கள். நீங்கள் ஒரு ஞானி சார்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.