Jump to content

பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் மறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் மறைவு!

September 19, 2021

8 4 பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் மறைவு!
 


 

 

ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்குச் சென்றபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும் அவர் அணி இசை செய்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் அவர் விளங்கியுள்ளார்.
 

https://www.ilakku.org/death-of-famous-tabloid-artist-sada-velmaran/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" மதிப்பளிப்பு - தமிழீழ விடுதலைப் புலிகள்.

10.10.2021

spacer.png

கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு

"நாட்டுப்பற்றாளர்" மதிப்பளிப்பு

கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்éத்த தபேலா வாத்தியக் கலைஞரான சதாசிவம் வேல்மாறன் அவர்கள் 18.09.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களையும் கலைஞர்களையும்; துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

'திலீபன் அழைப்பது சாவையா", 'ஓ.. மரணித்த வீரனே", 'மாவீரர் யாரோ என்றால்"  'மாவீரர் புகழ் பாடுவோம்" உள்ளிட்ட பல தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்குத் தபேலா வாத்திய அணிசெய் கலைஞனாகத் தடம்பதித்து, 1990 ஆம் ஆண்டிலிருந்து கலைபண்பாட்டுக்கழகத்தில் தன்னை ஒருவராக இணைத்து , தெருவெளி நாடகங்களிலும் கலைநிகழ்வுகளிலும் இசைவாத்தியக் கலைஞராகத் தன் கலைப்பணியை ஆரம்பித்தவராவார். 

ஆர்மோனியம் ,கடம் ,கெஞ்சிரா ,தபேலா ,மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைக்கக்கூடிய இவர் ,ஈழத்தின் மிகச் சிறந்த வில்லிசை , நாடகக் குழுவினருக்கும் இசைவாத்தியக் கலைஞராகப் பணியாற்றியதோடு , தமிழீழ இசைக்குழுவில் தபேலா வாத்தியக் கலைஞராக இணைத்துக்கொண்ட காலத்தில் இருந்து விடுதலைப்பாடல்களுக்கு தன் கலைத்திறனால் மெருகூட்டி உணர்வூட்டியவராவார்.

 2003 ஆம் ஆண்டு தமிழீழ இசைக்குழு ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டபோது அக்குழுவில் இவரும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்க நிகழ்வுகளை அணிசெய்த சதா வேல்மாறன், வளர்ந்துவரும் இளங்கலைஞர்களைத் தட்டிக்கொடுத்து வளர்க்கும் பண்புடையவர். இவரது இசை ஆளுமையும் நற்பண்புகளும் வழிகாட்டல்களும்  பல நூறு  கலைஞர்களைத் தமிழீழத் தேசத்திற்குத் தந்துள்ளது. இவரது இசைப்பணிக்காகப் பல தடவைகள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களிடம் பாராட்டினைப் பெற்றவராவார்.

 

தமிழீழ விடுதலை எழுச்சிப் பாடல்களுக்குத் தபேலா வாத்திய இசையூடாக உணர்வேற்றிய கலைஞரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குத் தனது இசைப்பயணத்தினூடாக வலுச்சேர்த்த சதாசிவம் வேல்மாறன் அவர்களின் தேசியப்பணிக்காக "நாட்டுப்பற்றாளர்" என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். இவருடைய கலைத்திறனால் இனிமைபெற்ற பாடல்கள் காலப்பெருவெளியில் கரையாது நிலைபெறும்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

https://www.thaarakam.com/news/302cc466-bd73-4494-8add-da6842b201d4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தின் சிறந்த ஒரு கலைஞனை இழந்துவிட்டோம். ஆழ்ந்த இரங்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.