Jump to content

ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அதிகாலை நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றார்.

இந்த நிலையில், நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில், செப்டம்பர் 21ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1239971

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலிருக்கும் அந்த உறவை தேடுகிறேன் ....கோத்தா இனி மேல் அமெரிக்காவுக்கே வர முடியாது எல்லா அலுவலும் பார்த்துட்டோம் என்று சொல்லி திரிந்தார் ....கடைசியில் அவரைத் தான் காணேல்ல ...கோத்தா ஜ நாவில் உரையாற்ற போறார்....ஆர்ப்பாட்டம் ஒன்றும் இல்லையோ 😉 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக்காரரை விட  அமெரிக்காவுக்கு கூடக் கொடுத்துவிட்டார் கோத்தா அப்ப பேசலாம் ...ஏன் அடிக்கலாம்..

3 hours ago, ரதி said:

கனடாவிலிருக்கும் அந்த உறவை தேடுகிறேன் ....கோத்தா இனி மேல் அமெரிக்காவுக்கே வர முடியாது எல்லா அலுவலும் பார்த்துட்டோம் என்று சொல்லி திரிந்தார் ....கடைசியில் அவரைத் தான் காணேல்ல ...கோத்தா ஜ நாவில் உரையாற்ற போறார்....ஆர்ப்பாட்டம் ஒன்றும் இல்லையோ 😉 
 

கனடாக்காரரை விட  அமெரிக்காவுக்கு கூடக் கொடுத்துவிட்டார் கோத்தா அப்ப பேசலாம் ...ஏன் அடிக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

.கோத்தா இனி மேல் அமெரிக்காவுக்கே வர முடியாது எல்லா அலுவலும் பார்த்துட்டோம் என்று சொல்லி திரிந்தார்

கோத்தா அமெரிக்க விருந்தினர் அல்ல.

ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் இடம் ஒரு பொது இடம். அமெரிக்காவுக்கும் இதுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. அமெரிக்காவினால் தேடப்படுபவர்களும்,அமெரிக்க விரோதிகளும் ஐநாவிற்கு வந்து செல்ல அனுமதியுண்டு.

 

 

கொண்ணர் எப்படியோ தங்கையும் அப்படியே. 

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

 

 

ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவைச் சென்றடைந்தார்

 

 

 

ஜனாதிபதி கோட்டா... தனது தாய் நாட்டை சென்றடைந்தார், என தலையங்கம் வந்து இருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎09‎-‎2021 at 23:33, குமாரசாமி said:

கோத்தா அமெரிக்க விருந்தினர் அல்ல.

ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் இடம் ஒரு பொது இடம். அமெரிக்காவுக்கும் இதுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. அமெரிக்காவினால் தேடப்படுபவர்களும்,அமெரிக்க விரோதிகளும் ஐநாவிற்கு வந்து செல்ல அனுமதியுண்டு.

 

 

கொண்ணர் எப்படியோ தங்கையும் அப்படியே. 

அப்படியா அண்ணே!  திரு பாலசிங்கம் அவர்களை  உயிரோடு இருக்கும் போது அங்கு அனுப்பி இருக்கலாமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அப்படியா அண்ணே!  திரு பாலசிங்கம் அவர்களை  உயிரோடு இருக்கும் போது அங்கு அனுப்பி இருக்கலாமே 

உங்களுக்கு உடம்பு முழுக்க மூளை....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎09‎-‎2021 at 22:42, குமாரசாமி said:

உங்களுக்கு உடம்பு முழுக்க மூளை....🤣

உங்கட மூளை தான் எனக்கும் இருக்கும் 😁

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.