Jump to content

யாழில்.... திருகுவலையால், கணவனை... அடித்துக் கொன்ற மனைவி !


Recommended Posts

1 hour ago, வாலி said:

அது திருகுவலை இல்லை துருவுபலகை.

தமிழை அரைகுறை செய்தியாளர் மற்றும் இணையத்தளங்களில் இருந்து ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் எங்கட பக்கத்தில் திருவலை பலகை என அழைப்போம். துருவுபலகை  மருவி திருவலை பலகை ஆகியிருக்க கூடும்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலையும் இஞ்சையும் திருவலை எண்டுதான் சொல்லி பழக்கம்.....வாழ்க்கைப்பட்டு போன இடத்திலையும் திருவலைதான்...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, zuma said:

யாழ்ப்பாணத்தில் எங்கட பக்கத்தில் திருவலை பலகை என அழைப்போம். துருவுபலகை  மருவி திருவலை பலகை ஆகியிருக்க கூடும்.

நாங்களும் திருவலை எண்டு சொல்றனாங்கள். ஆனால் செய்தி என்று எழுதுதும் போது மரூஉ சொற்கள் தவிர்க்கப்படல் வேண்டும். 

இப்பிடி சில சொற்கள் உண்டு: கருவப்பிலை, செந்துருக்கம், வாத்தி, பருத்துறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த செய்தியை வாசித்தபின்.. எங்கட ஊட்ல இது👆 ரெண்டும் இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தாலும்.. வீட்டுக்கு பின்னாடி தோட்டத்துல இது👇அதிகமாக இருப்பதால்… யோசனையாக இருக்கின்றது..🙆‍♂️

spacer.png

ஓணாண்டியாரே... இது, திருகுவலையை விட... மோசமான கல்லாக இருக்கே.
உருட்டி விட்டால்... "போஸ்ட் மாட்டத்துக்கு" கூட, பாடி  கிடைக்காதே.  🤣

15 hours ago, Nathamuni said:

அச்சுவேலி, மயிலங்காட்டுப்பக்கம், தலை வைச்சே படுக்கப்படாது....🤨

நாதம்ஸ்... அச்சுவேலி மயிலங்காட்டிலை, 
நல்ல ஒரு வாழைத் தோட்டம் செய்யக் கூடிய காணி 
மலிவாக வந்திருக்குது, வாங்குறீங்களா?   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல், நேரடியாக சென்று விசாரணைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கொண்டார்.

நேற்று இரவு, மனைவியால் திருவலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

இதேவேளை கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் அவ்வாறு செய்தமையினால், ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரிடம் அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

https://athavannews.com/2021/1240096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நெடுக்கர் சொன்ன சமூக நல ஆய்வுகள்,சமூக நல திட்டங்கள்,சமூக நல கல்விகள் என புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு ஒழுங்காக சொல்லி கொடுக்கின்றார்கள். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சமூக நலன் பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள்.பெறு பேறுகளை அரசுக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அதை அரசுகளும்  முடிந்தவரை செவிமடுத்து முன்னெடுத்து செல்கின்றது.

இங்கு ஜேர்மனியில் கோரோனா காலங்களில் பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் வைரஸ் சம்பந்தப்பட்ட  பல்கலைகழக ஆராய்சியாளர்களின் அறிக்கைகளை வைத்தே பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

நிற்க...

பல இடங்களில் உலக நடப்புகளை மட்டுமே இங்கு பகிர்கின்றோம். அதை சொல்ல முனையும் போது.......இல்லை நீ வா.....வந்து செய்து காட்டு என்ற மனப்பான்மையே பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.புத்தக படிப்பை விட அனுபவம் மேலானது.போலி வாழ்க்கையை விட சொந்த மண் வாழ்க்கை அமைதியானது.

தப்பியோடி .....தப்பியோடிய இடத்தில் சந்ததிகளை வளர்த்து விட்டோம். அந்த அனுபவத்தில் சொல்கின்றோம்.
சொந்த நாடு. சொந்த மண். சொந்த மொழி. சொர்க்கம்

இலங்கைக்கும் வெளிநாட்டின் ஆராய்ச்சிகளுக்கும் தூரம் அங்கு அரசு செவிமடுக்கும் இஞ்ச அரசு செவி மூடிவிட்டு வேலையை பார்க்கும்
அதுமட்டும் இல்லாமல் அறிவுரை சொன்னா யார் கேட்கிறாங்க?? அறிவுரை எல்லோராலும் சொல்ல முடியும் ஆனால் இங்க கடைபிடிக்க எவரும் இல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில என்ன நடக்குது.. மகன் தந்தையின் கண்ணை நோண்டி எடுக்கிறான்.. மனைவி கணவனை திருகுவலையால் அடிச்சு கொல்லுறாங்க.. கணவன் சந்தேகம் மனைவி தற்கொலை..  கள்ளன் என்று சொன்னதால்.. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.. யாழ் மருத்துவக் கல்லூரி மாணவி.. படிப்புச் சுமையால் தற்கொலை..????!

புரியல்ல.. எமது சமூகம் எங்கு நோக்கிப் பயணிக்கிறது.. இந்தச் சமூகத்தை வழிநடத்த வேண்டிய சமூக ஆர்வலர்களும்.. கல்விச் சமூகமும் என்ன செய்துக்கிட்டு இருக்குது..??!

ஏன் யாழ் வவுனியா கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.. இந்த சமூக நோய்களைப் பற்றி ஆய்வதில்லை.. அறிவுரைகளை.. செயற்திட்டங்களை வரைவதோ வகுப்பதோ இல்லை...?!

கண்டி மாவட்டம், பொல்காஹவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெட்டிகும்புர பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக தனது கணவரை மனைவி கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மெட்டிகும்புர - கெந்தேஹேன பிரதேச்தைச் சேர்ந்த 42 வயதுடை குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்த நபரின் மனைவியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொல்காஹவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamilwin.com/article/wife-killed-husband-1632126581

லங்காவில் மனைவிமார் கொலைவெறியில் திரிகினம் போல் உள்ளது .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

லங்காவில் மனைவிமார் கொலைவெறியில் திரிகினம் போல் உள்ளது .🤣

இந்த செய்திகளை எல்லாம்… இங்குள்ள மனைவிமாரின் கண்களில் படாமல் பாதுகாப்பதே   எங்கள் உயிருக்கு உத்தரவாதம். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொக்டவுணால வாற பிரச்சணைகள்....

மனிசிக்காரி ஆய்கினை தாங்கேலாம, ரயில், பஸ் இல்லாத நிலையில் இத்தாலில ஒருத்தர் 400 மைல் நடந்தே தாய், தகப்பன் வீடு போனார்.

பிரித்தானியாவில் ஒருத்தர், காருக்குள் படுத்துக் கிடந்தாராம்....

இலங்கையில, காசும் இல்லை, சாப்பாடும் இல்லை. சும்மா இருந்தாலும் பரவாயில்லை...... அடுத்த பிள்ளைக்கு அலுவல் பார்க்க முயன்றாலும்......

......பிரச்சணை தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தால் வெளியல படுக்கிறது தான் உசிதம் போல.🤤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2021 at 14:25, Nathamuni said:

அச்சுவேலி, மயிலங்காட்டுப்பக்கம், தலை வைச்சே படுக்கப்படாது....🤨

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

வைப்புசெப்புகளை எங்களுக்கு சொல்லிப் போட்டு போங்கோ.

வந்தால் சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

திருக்கை வாள் தான் திறம்...

போனமா, சாப்பிட்டமா.... அருமை, அருமை எணடு (பொய்யாவது) சொல்லிப்போட்டு ஓடிவந்திருங்கோ....ஒண்டும் தேவைப்படாது.

கூப்பிட்ட இடத்து.... அத்தாரைப் பத்தி, குறையள் வந்தால், சிரிப்பு மட்டும் தான்... வாய் திறவாதீங்கோ...

வீட்டிலையும் பிரச்சணையாப் போயிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

பொல்லுக்குடுத்து அடிவாங்கின மாதிரி ஆகப்போகுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

கவனம் வில்லுகத்தி திருவலைக்குள் சிக்கி சின்னாபின்னமாயிடும்......அவங்கள் திருவலையால சிராய்ச்சால் ஒன்பது இழையோடு போயிடும்.....நீங்கள் கத்தியை கச்சிதமாய் பாவித்தால் ஒன்பது கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டி வந்திடும்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இஞ்சையொரு அச்சுவேலி குடும்பம் இருக்குது....வாறகிழமை மத்தியான சாப்பாட்டுக்கு வேறை கூப்பிட்டிருக்கினம்.
போகவோ விடவோ எண்டு யோசிக்கிறன்.இல்லாட்டி கைகாவலாய் வில்லுக்கத்தி கொண்டு போகலாமோ எண்டும் யோசிக்கிறன்.....😎

அண்ணை... எதுக்கும் நீங்கள் சனிக்கிழமை, நவக்கிரகத்துக்கு... 
எள்ளெண்ணெய் எரிச்சுப் போட்டு, சாப்பிட போங்கோ ஒண்டும் நடக்காது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்!

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மஉள்ளிட்ட இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

 

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தேங்காய் துருவல் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று(20) முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தகாத உறவை பேணிய நபரை காப்பாற்ற கொல்லப்பட்டவரின் மனைவி மாறுபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

கொல்லப்பட்டவரின் மனைவியுடன்  தொடர்புடையவரும் கொலையுடன் தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

இதேவேளை, இரண்டாவது சந்தேக நபருக்கு 40இற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்! - Tamilnews1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடாப்பா பழி ஒரிடம் பாவம் ஓரிடம் எண்ட கதையா கிடக்கு🤣.

செத்த மனுசன் தான் அச்சுவேலி.

கொலை செய்த மனைவி மயிலங்காடு.

உந்த சுன்னாகம் கே கே எஸ் ரோட்டில மருதனாமடப்பக்கம் இருந்து போகேக்க, வலப்பக்கம் திரும்பி புத்தூர் ரோட்டில, நேர விட்டா, ஸ்டேசன் ரோட் வரும். அதையும் தாண்டி போன வாற ஊர்மனைதான் மயிலங்காடு. உதெங்க இருக்கு, அச்சுவேலி எங்க இருக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்!

அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மஉள்ளிட்ட இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

 

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் தேங்காய் துருவல் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று(20) முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் இருவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தகாத உறவை பேணிய நபரை காப்பாற்ற கொல்லப்பட்டவரின் மனைவி மாறுபட்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

கொல்லப்பட்டவரின் மனைவியுடன்  தொடர்புடையவரும் கொலையுடன் தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

இதேவேளை, இரண்டாவது சந்தேக நபருக்கு 40இற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது

பூம்புகார் கொலை - சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்! - Tamilnews1

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

but உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புருசனை கொல்ற அளவுக்கு கள்ளக் காதல் சுதி ஏத்தியிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

அதனை முதலாவது சந்தேக நபரான கொல்லப்பட்டவரின் மனைவியும் தனது வாக்குமூலத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் பின்னர் தனக்கும் இரண்டாவது சந்தேக நபருக்கும் தொடர்புள்ளமை உண்மை, ஆனால் கொலையை தான் மட்டுமே செய்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இரண்டாவது சந்தேக நபர் காலினால் தனது கணவனின் கழுத்தை பிடித்து வைத்திருந்த போது தான் தேங்காய் துருவல் கட்டையால் தாக்கியதாக ஒத்துக்கொண்டார்.

but உங்க நேர்மை பிடிச்சிருக்கு!

 

 

இது கொஞ்சம் பரவாயில்லை புலவர். 50 வருசத்துக்கு முந்தி ஒரு ஐயர் அம்மா கள்ளக்காதலுக்காக புருசன் ஐயர் பெருமானையே அரிவாளால் கழுத்தை அறுத்து கதையை முடிச்சார். கொலைக்கு உதவி செய்தவர் அவவின்ட நியூ டார்லிங்.....எல்லாம் காமம் செய்யும் வேலை. காதலுக்கு கண் இருக்கு. காமத்துக்கு கண் இல்லை.

அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இது கொஞ்சம் பரவாயில்லை புலவர். 50 வருசத்துக்கு முந்தி ஒரு ஐயர் அம்மா கள்ளக்காதலுக்காக புருசன் ஐயர் பெருமானையே அரிவாளால் கழுத்தை அறுத்து கதையை முடிச்சார். கொலைக்கு உதவி செய்தவர் அவவின்ட நியூ டார்லிங்.....எல்லாம் காமம் செய்யும் வேலை. காதலுக்கு கண் இருக்கு. காமத்துக்கு கண் இல்லை.

அந்த சம்பவத்தின் பெயர் இலங்கையில் பிரசித்தி பெற்ற "கோகிலாம்பாள் கொலை வழக்கு".....  சம்பவம் நடந்த இடம் உருத்திரபுரம் என நினைக்கின்றேன்.

ஓம். இவர்கள் உண்மையில் நெடுந்தீவு ஐயர் குடும்பம். 

நெடுந்தீவு கிளிநொச்சி தொடர்புகள் பலமானவைதானே.

நெடுந்தீவை சுற்றி பார்க்கும் போது இவர்கள் வீட்டையும் தவறாமல் காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம். இவர்கள் உண்மையில் நெடுந்தீவு ஐயர் குடும்பம். 

நெடுந்தீவு கிளிநொச்சி தொடர்புகள் பலமானவைதானே.

நெடுந்தீவை சுற்றி பார்க்கும் போது இவர்கள் வீட்டையும் தவறாமல் காட்டுவார்கள்.

இப்ப என்ன நெடுந்தீவார் சரியில்லை எண்டுறியள்? 😎

இது சும்மா  பகிடிக்காக இன்றைய சமூக/ஊடக  மனப்பான்மையை வைத்து  கேட்கப்பட்டது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இப்ப என்ன நெடுந்தீவார் சரியில்லை எண்டுறியள்? 😎

இது சும்மா  பகிடிக்காக இன்றைய சமூக/ஊடக  மனப்பான்மையை வைத்து  கேட்கப்பட்டது 🤣

🤣 அச்சுவேலி முடிஞ்சு இண்டைக்கு நெடுந்தீவோ🤣.

ஆனால் ஒரு இணைய தளம் இவர்கள் காரைநகர் என எழுதியுள்ளது. ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு - இந்த கதையை நான் முதலில் கேட்டதே நெடுந்தீவில் வைத்துத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 அச்சுவேலி முடிஞ்சு இண்டைக்கு நெடுந்தீவோ🤣.

ஆனால் ஒரு இணைய தளம் இவர்கள் காரைநகர் என எழுதியுள்ளது. ஆனால் எனக்கு நல்லா நினைவிருக்கு - இந்த கதையை நான் முதலில் கேட்டதே நெடுந்தீவில் வைத்துத்தான்.

சாணிக் கும்பிக்குள்ள புதைச்சு வைச்ச கேஸ் தானே?

நெடுந்தீவு தான்…!

படுபாவி கோகிலாம்பாள் படுகொலையைச் செய்தாளே…!

எண்டு ஒரு பாட்டும் இருந்தது…!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.