Jump to content

சீனாவின் உரத்தில் பாரதூரமான ஆபத்து! இலங்கை பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக்கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக் கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயமான இரு பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பக்றீரியாக்கள் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதோடு , அவற்றால் ஏற்படக்கூடிய நோய்க்கு மருந்தும் கிடையாது. இவ்வாறான 95 000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவிருந்ததோடு , இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது என தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/bacteria-that-can-cause-dangerous-diseases-in-ch-1632043188?itm_source=parsely-top

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - கோத்தா கும்பல்.. பால்மா இறக்குமதிக்கு தடை... வாகன இறக்குமதிக்கு தடை.. மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கு தடை.. விவசாய சாதனங்கள் இறக்குமதிக்கு தடை.. ஆட்டோ இறக்குமதிக்கு தடை.. பிஸ்கட் இறக்குமதிக்கு தடை.. உள்ளாடை இறக்குமதிக்கு தடை.. என்று எல்லாத்துக்கும் தடை போட்டிட்டு..

இப்படி ஆபத்தான பக்ரீரியாக்கள் அடங்கிய சேதனப் பசளை என்று சீன மனிதக் கழிவை சொறீலங்காவில் கொட்ட.. 63 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

அதில.. மகிந்த - கோத்தா கும்பலுக்கு கமிசன் எவ்வளவோ..??!

சொறீலங்காவை சுத்தமாக துடைச்சு அழிச்சு சம்பாதிச்சிட்டு மகிந்த - கோத்தா கும்பல்.. அமெரிக்காவிலும்.. இத்தாலியிலும் சரணடையக் கணக்குச் சரியா இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக் கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயமான இரு பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடு என்று லங்கா வரமுடியாது நினைக்கவும் முடியாத கட்டத்துக்கு போய்  விட்டது என்பதையே உந்த உர கதை சொல்கிறது .மேலும் மேலும் வறுமைக்கு தள்ளுவதையே  பீஜிங் விரும்புது . ஹோண்டுரஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈகுவடார், குவாத்தமாலா, நிகராகுவா, பனாமா போன்ற நாடுகளின் வாழைப்பழ யுத்தம் போல் இங்கு அறிவற்ற சிங்கள இனவாத தலைவர்களினால் நாடு சிதிலமாகி வெளி தனியார் நிறுவனம்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி கொண்டு வாழைப்பழ யுத்தம் போன்று பாரிய சுரண்டல் நடக்கபோகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இப்படி ஆபத்தான பக்ரீரியாக்கள் அடங்கிய சேதனப் பசளை என்று சீன மனிதக் கழிவை சொறீலங்காவில் கொட்ட.. 63 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

அட... இது, மனிதன் போட்ட சாணி... பசளையா?
ஸ்ரீலங்காவிலை ... நிறைய இருக்கிறதை, ஏன் இறக்குமதி பண்ணினார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அட... இது, மனிதன் போட்ட சாணி... பசளையா?
ஸ்ரீலங்காவிலை ... நிறைய இருக்கிறதை, ஏன் இறக்குமதி பண்ணினார்கள். 🤣

எப்பவும் வெளிநாட்டு பொருட்களை அதிகம் பாவித்து பழகியதால் இன்று அப்பொருட்களுக்கு மக்கள் ஏங்கிய வண்ணமாக மக்கள் உள்ளனர் பசும்பால் மறந்து அங்கருக்கும், மஞ்சளை உற்பத்தி செய்யாமல் மஞ்சள் தூளுக்கும், இப்படி பல பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததன் விளைவு இது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.