Jump to content

யாழில்... தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் சீனாவிற்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயினை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1240178

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகப்படியான விலையேற்றம் குடும்பத்தை தொடர்ந்து கொண்டு நடத்த முடியாமை இயலாமை போன்றவை இப்படியான முடிவுகளை எடுக்க சொல்லும் .

உதவிகள் சென்றடைவது அவசியம் இப்படியான காலகட்டம்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சனைக்குள்ளயும் குடிக்கிறதுக்கு காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பிள்ளைகளா இவருக்கு? கடைசி பிள்ளைக்கு எத்தனை வயது? குடிதான் எல்லாவற்றிற்கும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதிகப்படியான விலையேற்றம் குடும்பத்தை தொடர்ந்து கொண்டு நடத்த முடியாமை இயலாமை போன்றவை இப்படியான முடிவுகளை எடுக்க சொல்லும் .

உதவிகள் சென்றடைவது அவசியம் இப்படியான காலகட்டம்களில் .

முந்த நாள் சாராய தவறணை திறந்த நேரம் கூட்டத்தை பார்த்த நீங்களா எப்படி பணம் புரள்கிறது என

3 minutes ago, colomban said:

10 பிள்ளைகளா இவருக்கு? கடைசி பிள்ளைக்கு எத்தனை வயது? குடிதான் எல்லாவற்றிற்கும் காரணம்.

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என்று சந்தோசப்படலாம்.

24 minutes ago, Eppothum Thamizhan said:

இவ்வளவு பிரச்சனைக்குள்ளயும் குடிக்கிறதுக்கு காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு.

கடன் மற்றும் வீட்டில உள்ள பொருட்களை சண்டையிட்டு தூக்கிக்கொண்டு போய் விற்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என்று சந்தோசப்படலாம்.

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என சந்தோசப்படமுடியாது ஏனெனில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கைதான கஷ்டத்தில் உள்ளது

உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? 

அது போகட்டும் அது நடந்து முடிந்த விடயம் ஆனால் இவர்கள் பிள்ளைகளை பெற்றுவிட்டு ஒருவர் இறந்துவிட்டார் .. தாயின் நிலை என்னவாகும் என தெரியாது .. பிள்ளைகளின் கதி? இதில் சந்தோசப்பட எதுவும் இல்லை.. 

பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஏழைதான் கணக்கு பார்க்காமல் பிள்ளையாவது பெற்றுக்கொள்கிறார்கள் என சந்தோசப்படமுடியாது ஏனெனில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கைதான கஷ்டத்தில் உள்ளது

உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? 

அது போகட்டும் அது நடந்து முடிந்த விடயம் ஆனால் இவர்கள் பிள்ளைகளை பெற்றுவிட்டு ஒருவர் இறந்துவிட்டார் .. தாயின் நிலை என்னவாகும் என தெரியாது .. பிள்ளைகளின் கதி? இதில் சந்தோசப்பட எதுவும் இல்லை.. 

பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா?

அதை நினைத்து செல்லவில்லை இனம் அழிகிறது சனத்தொகை குறைவாக இருக்கிறது என்று செல்பவர்கள் இரண்டு, மூன்றுக்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை.

குடிகார அப்பனால் நிம்மதியாக வாழ முடியாமல் அவஸ்தைப்பட்டு இருக்கலாம் இனியும் பிள்ளைகள் நிம்மதியாக வாழலாம் இப்படி குடிகாரனாக வாழ்ந்தவரால் குடும்பத்தை சிறப்பாக பார்த்திருக்க முடியாத காரியம் அந்த வீட்டுக்கார அம்மாவே  குடும்ப தலைவராக வாழ்ந்து இருக்கலாம். 

இதைப்போலவே பல குடும்பங்கள் வாழ்கிறது முதல் பிள்ளை ஆண் என்றால் அவரே தந்தையை போல உழைத்து வாழ வைக்கிற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

பிள்ளைகள் பெற்றால் மட்டும் போதாது ஆனால் ஏழையின் சந்தோசம் என்னவோ அந்த இரவே மற்ற நேரம் ஓடி ஓடி பணத்தை தேடி உழைப்பது. 

கடனால் தற்கொலை செய்தவர்கள் அதிகமுள்ளது ஆனால் பிள்ளைகள் பெற்றால் அவர்களை படிப்பித்து பெரிய உத்தியோகம் பெற வைத்த தாய்மார்களும் உண்டுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பிள்ளைகள் பெற்று தள்ளியதுடன் குடியும் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உதாரணத்திற்கு இந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டால் 10 பிள்ளைகளில் எத்தனை பிள்ளைகள் விருப்பத்துடன் பிறந்திருக்கும்? 

நான் இதே போல் ஒரு லூசுத்தனமான கருத்தை யாழ்களத்தில் இது வரைக்கும் வாசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

10 பிள்ளைகள் பெற்று தள்ளியதுடன் குடியும் வேறு.

இதே போல் தானே முஸ்லீம் சமுதாயமும் செய்கின்றது? இதே கேள்வியை ஏன் முஸ்லீம்களை பார்த்து கேட்க மாட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இதே போல் தானே முஸ்லீம் சமுதாயமும் செய்கின்றது? இதே கேள்வியை ஏன் முஸ்லீம்களை பார்த்து கேட்க மாட்டீர்கள்?

முஸ்லிம் மதம் சொன்னதிற்காக பூமிக்கே தீங்கு விளைவித்து பயமுறுத்தும் அவர்களது இந்த செயலை யாழ்களத்திலேயே கண்டித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் சிலர் எங்கள் இனம் அழிகிறது சனத்தொகை குறைகிறது என்பதோடு சரி.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது வேறுவிடயம். 

இன்னொன்று சுதந்திரம், சுகாதார சமூக பொருளாதார வசதிகள் உள்ள மேற்கத்தைய நாட்டிலேயே எங்களவர்கள் 3 அல்லது 4 பிள்ளைகளுக்கு மேல் பெறுவதில்லை..அரசும் உதவி தொகை(daycare allowances) கொடுத்துமே 4ற்கு மேல் போகாது.. இந்த நால்வரும் கூட  2 அல்லது 3 மேல் பெறமாட்டார்கள்.. இது யதார்த்தம், ஆனால் அதைப்பற்றி கதைக்கமாட்டார்கள்.. 

ஆனால் ஊரில் வறுமையில் வாடுவதுடன் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளை பெற்றும், குடிகார கணவனால் பலாத்காரப்படுத்தபட்டும்,கலைக்கவும் முடியாமல் பெற்று வளர்க்கவும் முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களின் நிலையை பார்த்து அவர்கள் நடைமுறையில் சாத்தியமானவற்றை சிந்தித்து இருக்கலாம் எனக் கூறினால் மட்டும்தான் எங்கள் சனத்தொகை குறைகிறது.. இனம் அழிகிறது..

ஓரளவிற்கு பொதுவான/ஸ்திரமான நிலையிலிருந்து பார்த்திருந்தால் - ஒழுங்கான வருமானமும் இல்லை, குடிகார கணவனுடன் வாழும் ஒரு பெண் மனநிலையில் இருந்து பார்த்திருந்தால்- நான் கூறுவது விளங்கும். வருமானமும் இல்லை, குடிக்கு அடிமையான கணவன்.. பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்ப்பது எப்படி என கட்டாயம் யோசித்திருப்பார்கள்.

ஆனால் குடிகார கணவனுக்கு இதெல்லாம் தலையில் ஏறியிருந்தால் இந்தளவு நிலையும் வந்திருக்காது.. இப்பொழுது தாயினதும் நீங்கள் கூறுவது போல மூத்த ஆண்பிள்ளையிலும் தான் பொறுப்பு வந்துவிழுந்துள்ளது.. 

அந்த மூத்த பிள்ளையின் வயதினைப்பொறுத்து அந்தப்பிள்ளை எதிர்நோக்கப்போகும் கஷ்டங்களின் சுமையும் வலியும்.. இதுவே மூத்தபிள்ளை பெண்ணாக பிறந்திருந்தால்? இவர்களைப்போல பல குடும்பங்கள் வாழ்கிறது, இல்லையென்பதை மறுக்கவில்லை.. அதற்காக அவர்களது வாழ்க்கையும் இப்படி வறுமையுடன் போகவேண்டும் என விரும்பவும் இல்லை.

தந்தை குடிகாரன் பிறகு கொஞ்ச நாட்களில் மகன்/மகள் சிறுவயதில் திருமணம், சிலசமயங்களில் சட்டரீதியான திருமணங்களும் இல்லை.  வாழ்வாதாரத்திற்கு தினக்கூலி என்ன வருகிறதோ அது, பின் உடம்பு அலுப்பு தீர குடி, பின் பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கை படிப்பு? வேலை?  திரும்பவும் அதே வாழ்க்கைவட்டம். பின் தங்கிய கிராமங்களில் நிகழும் கதைகள் .. சில வருடங்களுக்கு முன் ஏழாலையில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்(சிறு வயது திருமணம், கசிப்பு கஞ்சா பாவனை, சுகாதார பழக்கவழக்கங்கள்) அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி செய்திகள் வந்ததை கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.. எனது நண்பர்கள் சிலர் field officers ஆக இந்த மாதிரியான இடங்களில் பணியாற்றி உள்ளார்கள்..

சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த வறுமைக்கோட்டுக்கும் சாதியாலும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை பாருங்கள்.. எத்தனை வீதம் முன்னேறியுள்ளார்கள்? அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. அதிலும் இந்த COVID பாதிப்பினால் வருமானமும் இன்றி படிப்பையும் கைவிட்ட பிள்ளைகள் எத்தனை! உதவி கோரி வந்திருக்கும் தகவல்களைப்பார்த்தால் தெரியும்.. அவர்களது வாழ்க்கைதரம் இன்னமும் பின்னோக்கி போயுள்ளது..
வருமானமில்லை, கடன் தொல்லை, குடும்ப சுமை அதனால் தற்கொலை. 
இந்த செய்தியில் உள்ள குடும்பமும் இதற்குள் அடங்கும்.. வருமானத்திற்கு ஏற்பவே பிள்ளைகளை பெறவேண்டும் என்பதில்லை ஆனால் சிந்தித்து நடந்திருக்கலாம்.. 

அதனால்தான் பிள்ளை மட்டும் பெற்றால் போதாது அவர்களை பாதுகாப்பாகவும் அவர்களுக்கான சாதராண அடிப்படை வசதிகளான (உணவு, உடை உறையுள் மற்றும் கல்வி) கொடுக்கவேண்டும் இல்லாவிடில் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் சமூகத்தின் பாராட்டுக்காகவும் பிள்ளைகளை பெற்றுவிட்டு, அவர்களை விற்பதால் அல்லது கொல்வதால், அவரகளது உரிமைகளை மறுப்பதாலும் குற்றமே செய்கிறார்கள்.. 

நான் அவுஸ்ரேலிய வருமுன் வறுமையாலும் குடிகார கணவனாலும் துன்புறுத்தப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்ப தலைவன் காணாமல் ஆக்கபட்ட பெண்கள் வரை, அவர்கள் உடல்உளவள தாக்கங்கள் அவர்களது பிரச்சனைகள் வரை கருத்துகளை கேட்டும் அவர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளது.. இன்னமும் அவர்களது வாழ்க்கையில் அதிகளவு மாற்றங்கள் இல்லை.. சமூகத்தின் எண்ணங்களிலும் மாற்றமில்லை.. 

உங்களுக்குதான் ஊர் நிலவரம் என்னைப்பற்றி அதிகம் தெரியும் ஆனாலும் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.. அந்தப்பிள்ளைகளை நினைத்து மட்டும் மனம் வருந்துகிறேன்.. பிள்ளைகளின் உலகம் வண்ணத்துப்பூச்சியை போன்றது.. அவ்வளவுதான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்.சோமசுந்தரம் ரவிச்சந்திரம் போன்றவர்களாலோ அவர்களை போன்றோரை ஆதரித்து ஏற்றிவிடுபவர்களாலோ சமுதாயத்தில் மாற்றம் ஏற்படபோவது இல்லை. தலிபான்கள் சமுதாயம் தான் உருவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஐரோப்பாவில் 6 பிள்ளைகளுடன் வாழும் தமிழ் குடும்பங்களையும் பார்த்தாச்சு, 12 பிள்ளைகளுடன் வாழும் வெள்ளைக்காரர்கள் தொடக்கம் ஆபிரிக்கர்கள் வரையும் பார்த்தாச்சு…

மேலும் ஒரு குடும்பத்திற்கு நடந்த விடயங்களோ அல்லது உணர்வுகளோ மற்ற குடும்பங்களுக்கும் இருக்கும் என்பது பிழையான வாதம்.

பிள்ளை உள்ளவனும் குடிக்கிறான் பிள்ளை இல்லாதவனும் குடிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த ஜேர்மனியில் பிறப்பு வீதம் நன்றாக குறைந்து விட்டது. குறைந்து விட்டது என்பதை விட குறைந்து கொண்டே போகின்றது. எனக்கு தெரிந்த ஜேர்மன் நண்பர்கள் சிலர் குழந்தையே வேண்டாம் என சொல்கிறார்கள். பலர் ஒன்று அல்லது இரண்டு அதற்கு மேல் வேண்டாம் என்கிறார்கள். காரணம் பிள்ளை வளர்ப்பு செலவீனம் அதிகம் என்கிறார்கள். ஊர்ப்பாசையில் சொல்வதானால் பிள்ளை பெத்து வளர்க்கிறது கட்டுப்படியாகாதாம். இவ்வளவிற்கும் பிள்ளை பெற்றவர்களுக்கு பல வழிகளில் ஊக்குவிப்பு பணம் கொடுத்தும் கட்டுப்படியாகவில்லையாம்.
இந்த  போக்குதான் அரசை கொஞ்சம் மிரள வைத்துள்ளது.பஞ்சமோ பட்னியோ ஒரு நாடு இயங்குவதற்கு மக்கள் தொகை அவசியம்.இதெல்லாம் ஒரு சுழற்சி முறை என நினைக்கின்றேன். ஜேர்மனி பார்த்தும் பாராமலும் வெளிநாட்டு மக்களை உள்வாங்குவதற்கும் இதுவும் ஒரு காரணம் என பேசிக்கொள்கின்றார்கள்.
 

இந்தியாவும் சீனாவும் உலகளவில் சனத்தொகை கூடிய நாடுகள். அதில் இந்தியா இரண்டாம் இடம். ஏக போகத்திற்கு வறுமையும் அதிகம். ஆனால் இந்தியாவின் வலிமை மக்கள் தொகையிலும் தங்கியே உள்ளது.

உலகில் ஒவ்வொரு மனிதனும் தன் வருவாய்க்கு ஏற்ப வாழ வேண்டும் என நினைத்தால் ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது.

 உலகிலேயே சனத்தொகை கூடிய நாட்டில் இரண்டு பிள்ளைகள் மட்டும் என சட்டம் வைத்திருந்த சீனா அந்த சட்டத்தை நீக்கியுள்ளது.... இதிலிருந்து என்ன தெரிகின்றது லேடீஸ் அன்ட் ஜென்ரில் மன்????????😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும், 6 பிள்ளைகளுக்கும் பெனிபிட். காலாட்டி கொண்டு இருக்கலாம் அல்லது கையில காசுக்கு வேலை செய்து வட்டிக்கு விடலாம்.

ஊரில் இதுவா நிலமை?

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

மனைவியை, தன்னை குடிவெறியில் எரிக்கும் வெறிக்குட்டி 10 பிள்ளைகளை மனைவியின் முழு சம்மததுடன் பெற்றிருக்குமா என்பது நியாயமான கேள்விதான்.

Martial rape என்பதே இல்லை என்பது போல் கதைக்க கூடாது.

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும், 6 பிள்ளைகளுக்கும் பெனிபிட். காலாட்டி கொண்டு இருக்கலாம் அல்லது கையில காசுக்கு வேலை செய்து வட்டிக்கு விடலாம்.

ஊரில் இதுவா நிலமை?

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

மனைவியை, தன்னை குடிவெறியில் எரிக்கும் வெறிக்குட்டி 10 பிள்ளைகளை மனைவியின் முழு சம்மததுடன் பெற்றிருக்குமா என்பது நியாயமான கேள்விதான்.

Martial rape என்பதே இல்லை என்பது போல் கதைக்க கூடாது.

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

 

 

ஊரில் வெறிக்குட்டிகள் மட்டும் தான் 10 பிள்ளைகள் பெற்றெடுக்கின்றார்களா? ஒருகாலத்தில் எமது ஊர்களில் ஒரு குடும்பத்தில் சாராசரி பிள்ளைப்பிறப்புகள் எட்டு அல்லது பத்து வரைக்கும் இருந்திருக்கும். அது சார்ந்தவர்கள் கோடீஸ்வரர்கள் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.


உங்களால் தான் 10 பிள்ளை பெற முடியவில்லை. சுதேச்சையாக 10 பிள்ளை பெறுபவர்களையாவது ஏளனம் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு விடுங்கள். மேலைத்தேய நாடுகளில் ஒரு பிள்ளைக்கு ஒரு அறை சட்டம். ஊரில் எல்லோருக்குமே ஒரு வீடு சந்தோசம். பல இடங்களில் சமையலறை கூட படுக்கை அறைதான். யாருமே அலட்டிக்கொள்ளவில்லை.

இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படித்து விட்டு மற்றவர்களுக்கு ஆயிரம் அறிவுரை கூறுகின்றார்கள்.

நிறுத்துக.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஊரில் வெறிக்குட்டிகள் மட்டும் தான் 10 பிள்ளைகள் பெற்றெடுக்கின்றார்களா? ஒருகாலத்தில் எமது ஊர்களில் ஒரு குடும்பத்தில் சாராசரி பிள்ளைப்பிறப்புகள் எட்டு அல்லது பத்து வரைக்கும் இருந்திருக்கும். அது சார்ந்தவர்கள் கோடீஸ்வரர்கள் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.


உங்களால் தான் 10 பிள்ளை பெற முடியவில்லை. சுதேச்சையாக 10 பிள்ளை பெறுபவர்களையாவது ஏளனம் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு விடுங்கள். மேலைத்தேய நாடுகளில் ஒரு பிள்ளைக்கு ஒரு அறை சட்டம். ஊரில் எல்லோருக்குமே ஒரு வீடு சந்தோசம். பல இடங்களில் சமையலறை கூட படுக்கை அறைதான். யாருமே அலட்டிக்கொள்ளவில்லை.

இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படித்து விட்டு மற்றவர்களுக்கு ஆயிரம் அறிவுரை கூறுகின்றார்கள்.

நிறுத்துக.. 😎

🤣அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு நான் பேசுவதில்லை என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

🤣அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு நான் பேசுவதில்லை என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்🤣.

 

 கோஷான்! அந்த மனப்பான்மை ஒருநாளும் கூடாது. 


அம்மா அப்பாவோடை எல்லாம் நாங்கள் சண்டை பிடிக்கேல்லையோ? ஆகையால் நல்லதோ கெட்டதோ கருத்துக்கள் அவசியம்.


முடியாது என நினைத்தால் எதுவுமே முடியாதது தான். இதுதான் எனது வாதம்😎

விரும்பினால் தொடருங்கள். நல்ல விடயங்களை விவாதிக்க வேண்டும்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும்

மகா குருவே
லண்டனில் 12 பிள்ளைகள் பெறுகிறார்களாமே அவர்களுக்கு எத்தனை  படுகை அறை வீடு கட்டி கொடுக்கிறார்கள்

44 minutes ago, goshan_che said:

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

 

 உளுத்து போன உபதேசம்.எக்கேடும் கெடட்டும் என்பது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

ஈழத்தில் போர்மேகம் சூழ்வதற்கு முன் எந்தவொரு அமைப்பும் ஈழத்தமிழர்களை தூக்கி விடவில்லை. அந்த அவசியமும் வரவில்லை....வர விடவுமில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 கோஷான்! அந்த மனப்பான்மை ஒருநாளும் கூடாது. 


அம்மா அப்பாவோடை எல்லாம் நாங்கள் சண்டை பிடிக்கேல்லையோ? ஆகையால் நல்லதோ கெட்டதோ கருத்துக்கள் அவசியம்.


முடியாது என நினைத்தால் எதுவுமே முடியாதது தான். இதுதான் எனது வாதம்😎

விரும்பினால் தொடருங்கள். நல்ல விடயங்களை விவாதிக்க வேண்டும்.👍🏽

இல்லை அண்ணை. இது தனிநபர் உரிமை சம்பந்தபட்டதால் அதிகம் கதைப்பதும் சரியில்லை என பட்டது. அதுதான் அப்படி எழுதினேன்.

எனது நிலைப்பாடு இதுதான்.

வெளிநாடுகளில் ஏன் பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு தனி அறைகள் குறித்து சட்டம் உள்ளது? காரணமாய்தானே?

ஒரு காலத்தில் கற்குகைக்குள் இருந்தோம் என்பதனால் இப்போ அது சரி என்பதில்லைதானே?

என்னை பொறுத்தவரை ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருகிறோம் என்றால் அதை அந்த காலத்தின், அந்த நாட்டின் குறைந்த பட்ச வசதிகளோடாவது வாழ வைக்க முடியும் என்றால் மட்டுமே அதை நாம் செய்ய வேண்டும்.

இன்றைய பாதுகாப்பு பொறிமுறைகள் நிறைந்த உலகில், இரவில் இது ஒன்றுதான் ஏழைக்கு பொழுதுபோக்கு என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்?

நானும் ஒரு தலைமுறைக்கு முன் 10 சகோதரர் வழி குடும்பத்தில் இருந்துதான் வருகிறேன். எனக்கும் சகோதர்கள் கூடத்தான். ஆனால் அந்த வசதி அவர்களுக்கு அப்போ இருந்தது.

ஆனால் அன்றாடம்காய்சிகளாக இருப்பவர்கள் பத்து பிள்ளைகள் பெறுவதிலும் பார்க்க வலுவுக்கு ஏற்ற வகையில் பெறலாம் என்பது என் அபிப்பிராயம்.

இப்படியான குடும்பத்தில் பிறந்து மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் கீழே போனவர்களும் இந்த குடும்பங்களில் அதிகமாகவே இருப்பார்கள்.

பின்னாளில் மேலே வந்தவர்கள் கூட மிகவும் ஒரு ஏக்கமான, பசியே வழமையான சிறு பராயத்தையே வாழ்ந்துள்ளதை அவர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.

ஆனால் சீனா போல் இதை கட்டுபடுத்த வேண்டும் என்பதும் என் நிலைப்பாடு இல்லை (சீனாவே தளர்த்தியது வேறு).

இது தனிமனித உரிமைதான் - ஆனால் தனக்கே அடுத்த வேளை உணவு இல்லாத சமயம் இன்னும் 10 பசியுள்ள வயிறுகளை உருவாக்குவது என்னை பொறுத்தமட்டில் உச்ச பட்ச சுயநலம். 

 

30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மகா குருவே
லண்டனில் 12 பிள்ளைகள் பெறுகிறார்களாமே அவர்களுக்கு எத்தனை  படுகை அறை வீடு கட்டி கொடுக்கிறார்கள்

https://www.nspcc.org.uk/keeping-children-safe/in-the-home/sharing-a-bedroom/

https://england.shelter.org.uk/housing_advice/repairs/check_if_your_home_is_overcrowded_by_law

ஆறு ஆண், ஆறு பெண் என்றால் குறைந்தது 7 பெட் ரூம் வீடு இருக்கவேண்டும் அல்லது கவுன்சில் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 

என்னிடம் 12 பிள்ளைகள் இல்லை என்பதால் உறுதியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

 

என்னை பொறுத்தவரை ஒரு உயிரை இந்த உலகிற்கு கொண்டு வருகிறோம் என்றால் அதை அந்த காலத்தின், அந்த நாட்டின் குறைந்த பட்ச வசதிகளோடாவது வாழ வைக்க முடியும் என்றால் மட்டுமே அதை நாம் செய்ய வேண்டும்.

இன்றைய பாதுகாப்பு பொறிமுறைகள் நிறைந்த உலகில், இரவில் இது ஒன்றுதான் ஏழைக்கு பொழுதுபோக்கு என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்?

நானும் ஒரு தலைமுறைக்கு முன் 10 சகோதரர் வழி குடும்பத்தில் இருந்துதான் வருகிறேன். எனக்கும் சகோதர்கள் கூடத்தான். ஆனால் அந்த வசதி அவர்களுக்கு அப்போ இருந்தது.

ஆனால் அன்றாடம்காய்சிகளாக இருப்பவர்கள் பத்து பிள்ளைகள் பெறுவதிலும் பார்க்க வலுவுக்கு ஏற்ற வகையில் பெறலாம் என்பது என் அபிப்பிராயம்.

இப்படியான குடும்பத்தில் பிறந்து மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால் கீழே போனவர்களும் இந்த குடும்பங்களில் அதிகமாகவே இருப்பார்கள்.

பின்னாளில் மேலே வந்தவர்கள் கூட மிகவும் ஒரு ஏக்கமான, பசியே வழமையான சிறு பராயத்தையே வாழ்ந்துள்ளதை அவர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.

.

அருமையான கருத்து கோஷான் என் வாழ்க்கையாயை அப்படியே பிரதிபலிகின்ற‌ரது

Just now, colomban said:

அருமையான கருத்து கோஷான் என் வாழ்க்கையாயை அப்படியே பிரதிபலிகின்ற‌ரது

 

இளமையில் வறுமை என்பது கொடிது கொடிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். 

யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும், 6 பிள்ளைகளுக்கும் பெனிபிட். காலாட்டி கொண்டு இருக்கலாம் அல்லது கையில காசுக்கு வேலை செய்து வட்டிக்கு விடலாம்.

ஊரில் இதுவா நிலமை?

முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு?

மனைவியை, தன்னை குடிவெறியில் எரிக்கும் வெறிக்குட்டி 10 பிள்ளைகளை மனைவியின் முழு சம்மததுடன் பெற்றிருக்குமா என்பது நியாயமான கேள்விதான்.

Martial rape என்பதே இல்லை என்பது போல் கதைக்க கூடாது.

தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5?

வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? 

ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.

 

 

ஐயா கோசான், எனது நண்பர் ஒருவர் 6 பிள்ளைகளுடன்  5 அறைகள் கொண்ட சொந்த வீட்டில்… 

எல்லோரும் சோசலில் உள்ளதாக எண்ண வேண்டாம்.

மேலும் இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட  நபர் 10 பிள்ளைகளையும் வெறியில் / மனைவியின் சம்மதமின்றி பெற்றிருப்பார் என்று எழுதும் அளவிற்கு இங்கு பலருக்கு அவரை தெரிந்துள்ளது.  😝

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தினுள் ஓர் செய்தியை அடிப்படையாக வைத்து உள் நுழைவது தவறு. அந்த அழகிய குடும்பம் இன்று நிலவும் சூழலால் கூட பாதிக்கப்பட்டருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.