Jump to content

யாழில்... தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஐயா கோசான், எனது நண்பர் ஒருவர் 6 பிள்ளைகளுடன்  5 அறைகள் கொண்ட சொந்த வீட்டில்… 

எல்லோரும் சோசலில் உள்ளதாக எண்ண வேண்டாம்.

மேலும் இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட  நபர் 10 பிள்ளைகளையும் வெறியில் / மனைவியின் சம்மதமின்றி பெற்றிருப்பார் என்று எழுதும் அளவிற்கு இங்கு பலருக்கு அவரை தெரிந்துள்ளது.  😝

 

வணக்கம் மீரா,

எல்லாரும் சோசல் காசில் உள்ளார்கள் என நான் சொல்லவில்லை. உங்கள் நண்பர் 5 அறை வீடு வைத்திருக்கும் அளவு வசதி உடையவர் என்றால் அவர் ஆறு பிள்ளைகள் பெறுவது அவர் இஸ்டம்.

நான் சொன்னது வருமானம் தனக்கே போதாத போது 10 பிள்ளைகள் பெறுவோரை பற்றி.

யாரும் இவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லைத்தான், ஆனால் மனைவியை எண்ணை ஊற்றி கொழுத்துவது சரியென பட்ட மனிதருக்கு, மனைவியின் அனுமதி இல்லாமல் அவரை அணுகுவது அவ்வளவு பெரிய தார்மீக தடையாக இருந்திருக்கும் என்பதை உய்துணர்வது கடினம் அல்ல.

யாராவது இலங்கையில் குடும்ப நல வைத்தியரிடம் கதைத்து பாருங்கள். “உனக்கே சாப்பிட வழியில்லை, புருசனும் குடிகாரன், இப்ப 5 வது தேவையா”? என்ற கேள்விக்கு அநேகமான ஏழை தாய்மாரின் பதில் “அவரிக்கு இல்லை எண்டு சொல்ல முடியாது” என்பதே. 

தமிழ் இன பரம்பலை கூட்ட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் அதை உங்களை போல், உங்கள் நண்பரை போல் பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். பிளேண்டிக்கு வழியில்லாதவர்கள், மனைவியை அடித்து காசு பறித்து கொண்டு சாராயம் குடிப்பவர்களிடம் இதை எதிர்பார்க்க கூடாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

வணக்கம் மீரா,

எல்லாரும் சோசல் காசில் உள்ளார்கள் என நான் சொல்லவில்லை. உங்கள் நண்பர் 5 அறை வீடு வைத்திருக்கும் அளவு வசதி உடையவர் என்றால் அவர் ஆறு பிள்ளைகள் பெறுவது அவர் இஸ்டம்.

நான் சொன்னது வருமானம் தனக்கே போதாத போது 10 பிள்ளைகள் பெறுவோரை பற்றி.

யாரும் இவர்களின் படுக்கை அறையை எட்டி பார்க்கவில்லைத்தான், ஆனால் மனைவியை எண்ணை ஊற்றி கொழுத்துவது சரியென பட்ட மனிதருக்கு, மனைவியின் அனுமதி இல்லாமல் அவரை அணுகுவது அவ்வளவு பெரிய தார்மீக தடையாக இருந்திருக்கும் என்பதை உய்துணர்வது கடினம் அல்ல.

யாராவது இலங்கையில் குடும்ப நல வைத்தியரிடம் கதைத்து பாருங்கள். “உனக்கே சாப்பிட வழியில்லை, புருசனும் குடிகாரன், இப்ப 5 வது தேவையா”? என்ற கேள்விக்கு அநேகமான ஏழை தாய்மாரின் பதில் “அவரிக்கு இல்லை எண்டு சொல்ல முடியாது” என்பதே. 

தமிழ் இன பரம்பலை கூட்ட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே. ஆனால் அதை உங்களை போல், உங்கள் நண்பரை போல் பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். பிளேண்டிக்கு வழியில்லாதவர்கள், மனைவியை அடித்து காசு பறித்து கொண்டு சாராயம் குடிப்பவர்களிடம் இதை எதிர்பார்க்க கூடாது.

 

வணக்கம் கோசான், 

நீங்கள் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

 

மேலும் இன்றைய காலச் சக்கரத்தில் அகப்பட்டு அல்லல் படும் மனிதர் பிள்ளைப்பெறும் போதும் அதே மனநிலையில் இருந்திருப்பார் என்ற உங்களின் வாதம் சரியனதல்ல.

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

பிரச்சனை அதுவல்ல மீரா, 10 பிள்ளை பெற்றபின்னும் குடிபோதையில் தன்னை எரிக்க முடிவு செய்யும் ஒருவர் அதற்கு முன்னர் சொக்கத்தங்கமா வீட்டை கவனித்திருப்பார் என்று எண்ண முடியுமா என்பதே!! தான் இறந்தால் அந்த 10 பிள்ளைகளின் கதியென்ன என்பதைக்கூட நினைக்கமுடியாதவாறு செய்துவிட்டது இந்த பாழாய்ப்போன குடிபோதை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

வணக்கம் கோசான், 

நீங்கள் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார்.  இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

மேலும் அவர், பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்றபோதே, அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது.

 

மேலும் இன்றைய காலச் சக்கரத்தில் அகப்பட்டு அல்லல் படும் மனிதர் பிள்ளைப்பெறும் போதும் அதே மனநிலையில் இருந்திருப்பார் என்ற உங்களின் வாதம் சரியனதல்ல.

அத்துடன் இந்த நபர் 10 பிள்ளைகளை பெறும் போதும் குடிகாரனாக இருந்திருப்பார் என்ற உங்களினதும் சக கருத்தாளர்களின் நிலை பிழையானது.

இல்லை வாசித்து விட்டுத்தான் எழுதுகிறேன்.

தன் மேல் பெற்றோலை ஊத்தியபடி அடுப்படியில் நிற்கும் மனைவியிடம் போகும் மனிதன் நிச்சயம் மனைவி மேல் நெருப்பு பிடித்தால் என்ன, வீடு எரிஞ்சால் என்ன, பிள்ளையள் கருகினால் என்ன என்ற நிலையில் இருப்பவராகவே இருக்க முடியும்.

செய்தியில் அவர் குடிவெறியில் நடந்து கொண்டதாகவே உள்ளது. அவர் நேற்றுத்தான் குடிக்க பழகினாரா இல்லையா என்பது இல்லை. தவிரவும் அவர் 10 பிள்ளைகள் பெறும் போது கோடீஸ்வரனாக இருந்து இப்போ ஏழை ஆகி விட்டார் என்றும் இல்லை.

தவிரவும் உண்மையில் இது இந்த குடும்பத்தை பற்றிய எனது கருத்து மட்டும் அல்ல. 

இந்த செய்தியின் பிண்ணனியில் - வசதி இல்லாமல் பல பிள்ளை பெறுபவர்களௌ பற்றிய என பொதுபடையான கருத்து மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை நெருப்பு அணைந்து விட்டது இங்கு தொடங்குகிறது யாராவது அந்த பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப வழி தெரிந்து   இருந்தால் PM ல் போட்டுவிடுங்க கொஞ்சமாவது அனுப்பினால்தான் இரவு நித்திரை வரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பொதுவான சமூகப்பிரச்சனை அதுவும் எங்களது சமூகத்தை பெரிதளவு பாதிக்கும் குடிப்பழக்கம், வறுமை, பிள்ளைகளின் நலன் என்ற விடயத்தைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், வளமான நாடுகளில் உள்ளவர்களையும் வறுமையில் வாடுபவர்களையும் ஒப்பிட்டும் தவறான எடுத்துக்காட்டுகளையும் கொண்டு எழுதுகிறார்கள்.. 

இதுவே கணவனின் குடிபோதையும் அடிகளையும் தாங்காத மணைவி கணவனை அடித்திருந்தாலோ இல்லை உயிருக்கு ஆபத்தை விளைவித்திருந்தாலோ இல்லை கணவனின் குடி, வறுமை காரணமாக பிள்ளைகளை வளர்க்கமுடியாமல் பிள்ளைகளை விற்று இருந்தாலோ, தத்து கொடுத்திருந்தாலோ கருத்துக்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவ்வளவுதான்.. 

நன்றி.

F26048-A3-BCB4-4170-B8-FE-10-A7-A3559-E1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் வடிவேலுவின் ஸ்ரைலில் பிளான் பண்ணி செய்ய வேண்டும்…😂😂😂

இதற்கு மேல் முடியாது… 

நன்றி வணக்கம்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த என்னை விட அதிக வயது கூடிய ஒருவருக்கு சீரான இடைளெpயில் 8 பிள்ளைகள்.ஒரு பிள்ளை மட்டும் சிறு இடைவெளி கூட.அவர் சொன்ன காரனம் தான் அப்பிரன்டிஸ் சத்திர சிகிச்சை செய்து இருந்தவராம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.