Jump to content

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? நிலாந்தன்!

September 19, 2021

spacer.png

 

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ? என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை. அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை. ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச் சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர். இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் கடந்தவாரம் அரசாங்கம் 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சில நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அப்பொருட்ட்களுக்குள் உள்ளாடைகளும் அடங்கும். அதன்படி பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பும் வணிகர்கள் கொள்வனவு விலைக்கு நிகரான தொகையை வங்கியில் வைப்பிலிட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் இறக்குமதி சக்தி குறைந்து விட்டது என்றும், அதற்கு காரணம் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்தமைதான் என்றும் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியது இப்பொழுதுதான் என்பதல்ல. வைரஸ் தொற்றுக்கு முன்னரே நாட்டின் சுற்றுலாத்துறை மோசமாகமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து நாடு உல்லாசப் பயணிகளை கவரும் தன்மையை பெருமளவுக்கு இழந்துவிட்டது. வைரஸ் வந்து நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தரும் துறைகளான ஆடை உற்பத்தித்துறை, சுற்றுலாத்துறை, புலம் பெயர்ந்து உழைக்கும் இலங்கையர்களின் உழைப்பு மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறைகள் போன்றவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வெளிநாட்டு செலவாணி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. அதனால் அரசாங்கம் பல பொருட்களில் இறக்குமதியை நிறுத்தியது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வசதி படைத்தவர்கள் ஓடும் வாகனங்கள் முதற்கொண்டு கீழ் மத்தியதர வர்க்கத்தினரின் மோட்டார்சைக்கிள்கள் உள்ளடங்கலாக வாகனத் இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. அதைப்போலவே மஞ்சள்,உரம் உட்பட பல்வேறு பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 623 பொருட்களில் இறக்குமதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் மறைமுகமாக இறக்குமதியை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக அது சிறிய நடுத்தர ஏற்றுமதியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடியது. அதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிர்வகிப்பதற்கு ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்தது. அத்தியாவசியப் பொருட்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய ஒரு நிலைமை தோன்றியபோதே இலங்கை தீவு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்று வெளிநாட்டு ஊடகங்கள் கருதும் ஒரு நிலைமை தோன்றியது.

இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அவசரகால சட்ட விதிகளின்கீழ் கொண்டுவந்த பின்னர் போலீசார் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெரிய மற்றும் சிறிய பண்டகசாலைகளின் மீது திடீரென்று பாய்ந்தனர் .இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி,மா,சீனி போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு உணர்வு நாடு முழுதும் உருவாக்கப்பட்டது.

எனினும் உள்ளூர் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் சீனிக்கும் மாமாவுக்கும் பால்மாவுக்கும் இப்போதும் தட்டுப்பாடு உண்டு. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் சீனி,பால்மா இருக்கும் இடங்கள் காலியாக இருக்கின்றன. பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் விலை பொறிக்கப்பட்ட சீனிப் பொதிகளை காண முடியவில்லை. மிகச்சில பல்பொருள் அங்காடிகளில் சீனி சொரியலாக விற்கப்படுகிறது. பால்மா பக்கட்டுக்ககளை குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில பல்பொருள் அங்காடிகள் ரகசியமாக கொடுக்கின்றன. அந்தப் பெட்டிகளை ஒரு பேப்பர் பைக்குள் வைத்து ரகசியமாக கொடுக்கும் அளவுக்குத்தான் நாட்டில் பால்மா கிடைக்கிறது. அதாவது அத்தியாவசிய பொருட்களுக்கு ஆணையாளராக ஒரு மேஜர் ஜெனரலை நியமித்த பின்னரும் பொருட்களின் விலை இறங்கவில்லை என்று பொருள்.

அண்மையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு பதில் கூறிய அஜித் கப்ரால் வணிகர்கள் பொருட்களை பதுக்கிய படியால்தான் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் பொருட்களின் விலை அதிகரித்தது என்றும் விளக்கம் கூறுகிறார். இவர் ராஜாங்க அமைச்சராக இருந்து இப்பொழுது மதியவங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ளார். ஆனால் வணிகர்கள் ஏன் பொருட்களை பதுக்குகிறார்கள்? ஏனென்றால் பொருட்களின் இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அதிக லாபத்தை பெறும் நோக்கத்தோடுதான். இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையும் திடீர் பாய்ச்சல்களின் மூலம் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்தால் சதோச மூலம் வினியோகிக்கப்படுதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களை அரசாங்கம் அதைப் பதுக்கிய வர்தகர்களிடமே சந்தை விலைப்படி கொள்வனவு செய்வதாகவும் அதை பதுக்கிய முதலாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தியாவசிய பொருட்களும் உட்பட பல பொருட்களுக்கு நாட்டில் நெருக்கடி உண்டு. அரசாங்கம் அந்த நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தனமாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. ஆனால் அவை எதிர்பார்த்த விளைவுகளை இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் தரவில்லை. அதுமட்டுமல்ல அரசாங்கம் வேறு ஒரு உத்தியையும் கையாள்கின்றது. சில பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால் வரக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்காக அல்லது பொதுசனங்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காக அரசாங்கம் உள்ளூர் உற்பத்தி,சுற்றுச்சூழலை பாதுகாப்பது,மண்வளத்தை பாதுகாப்பது போன்ற கவர்ச்சியான பசுமை கோஷங்களை முன்வைக்கின்றது. இப்பசுமைக் கோஷங்கள் உன்னதமான அரசியல் பொருளாதார இலட்சியங்கள்தான். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபின் அதிலும் குறிப்பாக ஒரு பெருந்தொற்றுச்சூழலில் அவற்றை திடீரென்று அமல்படுத்த முடியாது. அவை போன்ற உன்னதமான இலட்சியங்களை அடைவதற்கு நீண்டகால திட்டங்கள் வேண்டும். நீண்டகால அணுகுமுறைகள் வேண்டும்.

மாறாக இறக்குமதியை திடீரென்று நிறுத்திவிட்டு, இடைக்கிடை சமூக முடக்கங்களை அறிவித்துக் கொண்டு,மக்களை உள்ளூர் உற்பத்திக்கு திரும்புமாறு கேட்பது பொருத்தமானதா? இது ஒரு பெரும்தொற்றுக் காலம். உலகம் முழுவதும் ஒரு அசாதாரணச் சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட ஓர் அசாதாரணச்சூழலில் இதுபோன்ற பரிசோதனைகளையும் நீண்டகால நோக்கிலான திட்டங்களையும் எப்படி முன்னெடுப்பது? உதாரணமாக மஞ்சளின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது. அதனால் பெருந்தொகை பணத்தை அரசாங்கம் சேமித்தது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மஞ்சளை உள்ளூரில் உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை ஊக்குவித்தது. ஆனால் அதன்மூலம் நாட்டின் மஞ்சள் தேவையில் அரை வாசியைத்தான் ஈடுசெய்ய முடிந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மஞ்சள் கஞ்சாவை போல மாறிவிட்டது. அது இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகிறது. கடத்திவரப்படும் கஞ்சாவைக் கைப்பற்றும் அரசாங்கம் அதை முன்பு எரித்தது. ஆனால் இப்பொழுது சதொசவில் சந்தை விலைக்கு விற்கிறது.

இப்போது அரசாங்கம் 623பொருட்களுக்கு இறக்குமதிக்கான நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இதனால் மேற்படி பொருட்களும் இனிமேல் கஞ்சாபோல கடத்தப்படலாம் என்று தெரிகிறது. சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு தகவலின்படி இந்தியாவில் இருந்து மஞ்சளுடன் சேர்த்து வீட்டுத் தேவைக்கான மின்னியல் சாதனங்களும் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் நிதி முகாமைத்துவம் போன்றவை கள்ளச்சந்தையைத்தான் ஊக்குவிக்கின்றனவா? அதேபோல அரைச்சமூக முடக்கமும் நாட்டில் பதுக்கலையும் கொரோனா சந்தைகளையும்தான் உற்பத்தி செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி முகாமைத்துவம் மட்டும் அல்ல ராணுவ மயமாக்கல் கொள்கையும் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்று சில பெரிய வணிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக சுங்கப் பகுதிக்கும் துறைமுக அதிகார சபைக்கும் ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக்குறிப்பாக துறைமுக அதிகாரசபைக்கு அவ்வாறு நியமிக்கப்பட்ட படைஅதிகாரி விவகாரங்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணமாக இலங்கையின் கொழும்பு துறைமுகம் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தை விடவும் பெரியது. எனவே தூத்துக்குடிக்கு வரும் பெரிய கப்பல்கள் இடைத்தங்கல் நிலையமாக கொழும்பைப் பயன்படுத்துகின்றன. ஆனால் புதிய நிர்வாகத்தின்கீழ் இவ்வாறு வரும் கப்பல்களின் தொகை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக கப்பல் கொம்பனிகள் துபாய் நோக்கி செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் அவற்றை காலிசெய்து புதிய ஏற்றுமதி பொருட்களை அவற்றின் நிரப்புவது தாமதமாகிறது என்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறாக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள்,நிதி முகாமைத்துவம்,ராணுவ மயமாக்கல் போன்றவற்றால் மொத்த பொருளாதாரமும் நெருக்கடிக்குள் சிக்கிவிட்டது என்று பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தது. அவர் நிதியமைச்சராக வந்ததிலிருந்து கிழமைக்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இவை எவற்றாலும் சரிந்துவிழும் பொருளாதாரத்தை இன்றுவரையிலும் நிமிர்த்த முடியவில்லை. ஏன் ?

நாட்டின் பொருளாதாரம் சரிந்து விழுந்தமைக்கு தனிய பெருந் தொற்றுநோய் மட்டும் காரணமல்ல. அல்லது அதற்கு முன் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு மட்டும் காரணமல்ல.காரணம் அதைவிட ஆழமானது. தென்னாசியாவின் திறந்த சந்தைப் பொருளாதாரத்துக்கு முதலில் திறக்கப்பட்ட நாடு இலங்கைத்தீவுதான். ஆனால் இலங்கைத் தீவுக்கு பின் அவ்வாறு திறக்கப்பட்ட பல நாடுகள் எங்கேயோ போய்விட்டன. இந்தோனேஷியா வியட்நாம் பங்களாதேஷ் போன்றவை இலங்கையை விடவும் முன்னேறிவிடடன. ஆனால் சிறிய இலங்கைத்தீவு எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த போதிலும் முன்னேற முடியவில்லை. காரணம் மிகவும் எளிமையானது. பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப இலங்கைத்தீவில் தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத்தீவின் பொருளாதாரம் சரிந்துவிழக் காரணம்.

எல்லாவிதமான வளங்களையும் கொண்டிருந்த அழகிய சிறியதீவை பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்ப சிங்களத் தலைவர்களால் முடியவில்லை.அதன் விளைவாக பொருளாதாரம் சீரழியத் தொடங்கியது. யுத்தம் இலங்கைத்தீவின் முதலீட்டு கவர்ச்சியை இல்லாமல் செய்துவிட்டது. அப்படிப்பார்த்தால் 2009ஆம் ஆண்டுக்குப்பின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் முடியவில்லை.ஏன்?

ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற அரசாங்கத்தால் முடியவில்லை.அது மட்டுமல்ல ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்ப வெற்றியாக மாற்றி அந்த அடித்தளத்தின் மீது ஒரு கட்சியையும் கட்டி எழுப்பி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் யுத்த வெற்றிக்கு தலைமை தாங்குகிறார்கள். யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தவறியதால்தான் அதாவது இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடிக்க தவறியதால்தான் கடந்த12 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியவில்லை. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் நாட்டின் முதலீட்டு கவர்ச்சி அதிகரிக்காது. இதுதான் அடிப்படைப் பிரச்சினை.

பசிலை மட்டுமல்ல வேறு யாரைக் கொண்டு வந்தாலும் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனைதான் உண்டு. யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவது. பல்லினத் தன்மை மிக்க ஓரழகிய சிறிய தீவை கட்டியெழுப்புவது. ஆனால் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டு அந்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியுமா?

 

https://globaltamilnews.net/2021/166212

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

இலங்கையின் ஆட்சிபீடத்தில் கடும்போக்கு மகிந்த கோஷ்டி பதவிக்கு வந்தால் தான் தமிழருக்கு நல்லது என்று இங்கு அதிகம் நம்பியவர்கள் அவ்வாறு கருத்திட்டவர்கள்  தீவிர தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாதிகள் தான்.  பிரச்சனை படிப்படியாகவேனும் தீர்ந்து அங்கு வாழும் எம் மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று நினைக்கும் எவரும் ஶ்ரீலங்காவின் ஆட்சி பீடத்தில் கடும் போக்கு இனவாதிகள்  அமரவேண்டும் என்று என்றுமே கூறவில்லை. அவ்வாறு விரும்பவும் மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

இலங்கையின் ஆட்சிபீடத்தில் கடும்போக்கு மகிந்த கோஷ்டி பதவிக்கு வந்தால் தான் தமிழருக்கு நல்லது என்று இங்கு அதிகம் நம்பியவர்கள் அவ்வாறு கருத்திட்டவர்கள்  தீவிர தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாதிகள் தான்.  பிரச்சனை படிப்படியாகவேனும் தீர்ந்து அங்கு வாழும் எம் மக்கள் மகிழ்வாக வாழவேண்டும் என்று நினைக்கும் எவரும் ஶ்ரீலங்காவின் ஆட்சி பீடத்தில் கடும் போக்கு இனவாதிகள்  அமரவேண்டும் என்று என்றுமே கூறவில்லை. அவ்வாறு விரும்பவும் மாட்டார்கள். 

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

உங்கள் கருத்தை… வாசித்து சிரிப்பு வந்து விட்டது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2021 at 09:53, Eppothum Thamizhan said:

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

தொப்பி அளவாக இருந்தால் போட்டுக் கொள்ளவதில் தவறு இல்லையே..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2021 at 10:53, Eppothum Thamizhan said:

 மேலே எழுதியது கோத்தாவுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுத்து பாருங்கோ என்று உடுக்கடித்தவர்களுக்கானதே!! உங்களுக்கானதல்ல!

On 20/9/2021 at 12:30, தமிழ் சிறி said:

உங்கள் கருத்தை… வாசித்து சிரிப்பு வந்து விட்டது. 🤣

சிறித்தம்பி உங்களுக்கு சிரிப்பு மட்டும் தான் வந்தது. நான் அடிவாங்கினவர் நிலையிலையும் நிண்டு யோசிச்சு பாத்தன். கொதி எண்ணைக்கை  தண்ணி ஊத்தின பீலிங் வந்து போச்சுது..😁

வாழ்த்துக்கள் எப்போதும் தமிழன்.👍

 

Link to comment
Share on other sites

On 19/9/2021 at 23:55, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

ஐம்பது வருசத்துக்கு முதல் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டு சொன்னவையள் இப்பவும் உயிரோடை கொழும்பிலைதான் இருக்கினம்.

கற்பகத்தார்! இப்ப மறதி குணத்துக்கும் மருந்து விக்கிது.....வாங்கி அனுப்பட்டே? :cool:

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

ஐம்பது வருசத்துக்கு முதல் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டு சொன்னவையள் இப்பவும் உயிரோடை கொழும்பிலைதான் இருக்கினம்.

கற்பகத்தார்! இப்ப மறதி குணத்துக்கும் மருந்து விக்கிது.....வாங்கி அனுப்பட்டே? :cool:

50 வருடத்துக்கு முதல் …. பொறுத்தோம்

5 hours ago, கற்பகதரு said:

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

30 வருடத்துக்கு …. வருந்தினோம்

On 19/9/2021 at 23:55, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் வருவினம், இப்பத்தான் 12 வருடம் முடிஞ்சிருக்கு இன்னும் ஒரு 18 வருஷம் குடுத்துப்பாருங்கோ நாட்டை சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாத்திக்காட்டுவீனம் எண்டு!! 

20 வருடம் கூட பொறுக்க முடியவில்லையே ? அண்ணை, அங்க பொறுமைக்கு மருந்து விக்குதோ எண்டு கள்ளுக்கடைப் பக்கம் கேட்டு சொல்லுங்கோ, கன பேருக்கு தேவையா இருக்கு. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எண்டு முப்பது வருஷம் பாட்டு பாடினவை பற்றி நாங்கள் இப்ப கதைக்கிறதில்லையோ? ஓ… ஆக்களை காணாததாலை கதைக்காமல் விட்டிட்டம் போல….

அவர்கள் அதற்காகவே  30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே.

2 hours ago, கற்பகதரு said:

20 வருடம் கூட பொறுக்க முடியவில்லையே ? அண்ணை, அங்க பொறுமைக்கு மருந்து விக்குதோ எண்டு கள்ளுக்கடைப் பக்கம் கேட்டு சொல்லுங்கோ, கன பேருக்கு தேவையா இருக்கு. 😃

12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அவர்கள் அதற்காகவே  30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே.

12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான். 

நாங்க ஒருத்தரை மட்டும் தான் கும்பிடுவம். அதுக்கே நேரம் காணாமல் கிடக்கு. நீங்க வேற?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாடைத்தலைப்பை ஊர்க்கதையாக்கிடானுகள்🤭

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

அவர்கள் அதற்காகவே  30 வருடம் போராடி அதற்காகவே தம் இன்னுயிரையும் கொடுத்தார்கள். உங்களைப்போல் ஆயுதங்களை கோண்டாவிலில் அவர்கள் காலடியில் போட்டு உயிர்பிச்சைக்கேட்டு மதவாச்சிவரை ஓடோடென்று ஓடி ரயில்பிடித்து வெளிநாடுவந்து பச்சோந்திவேலை பார்க்கவில்லை. அல்லது உங்கள் அடிவருடிகள் சம், சும் போல் இந்தா அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்று அடித்துவிட்டுக்கொண்டிருக்கவில்லையே.

12உம் 18உம் 30 வருடங்கள் என்றுகூட தெரியாத உங்களுக்கெல்லாம் கனடா வந்து வாழ வழிவகுத்த அவர்களை நீங்கள் தினமும் போற்றி கும்பிடவேணும். உங்க இருக்கவிட்ட கனடாகாரணையும்தான். 

எந்த கனடாக்காரருக்கு இந்த அர்ச்சனை? தலைவர் கோண்டாவில்லில் ஆயுதங்களை போட்டுவிட்டு இந்தியரிடம் சரணடைய சம்மதித்தது உண்மைதான், தாயிடம் தான் கனடாவுக்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னதும் கடைசி நாட்களில் செய்திகளாக வந்த தெரிந்த சங்கதி. அதற்காக அந்த இல்லாத மனுசனை இந்த வாங்கு வாங்கலாமா? கனடாவில் உள்ள சகோதரி கவலைப்படுவா என்று கூட நினைக்கவில்லையே? போர் முடிந்து 12 வருடங்கள். அதற்கு முதல் நம்புங்கள் தமிழஈழம் பாட்டுப்பாடிய 18 வருடங்களா, இல்லையே? அது 30 வருடங்கள் பாடின பாட்டாச்சே?

1 hour ago, விசுகு said:

நாங்க ஒருத்தரை மட்டும் தான் கும்பிடுவம். அதுக்கே நேரம் காணாமல் கிடக்கு. நீங்க வேற?

30 வருஷம் கும்பிட்டு முடியாமல் இன்னமும் கும்பிடுகிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

50 வருடத்துக்கு முதல் …. பொறுத்தோம்

பொறுத்தது மட்டுமல்லாமல்   பொங்கியெழு தமிழா எண்டு இளைஞர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி தனிநாட்டு ஆசையை உருவாக்கி விட்டதுமில்லாமல் தாங்கள் தங்கள் குடும்பமென கொழும்பு பின்கதவு சுகபோக வாழ்க்கையை அனுபவித்தது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உள்ளாடைத்தலைப்பை ஊர்க்கதையாக்கிடானுகள்🤭

செத்தவீட்டுக்கு போய் செத்தவனைப் பத்தியா கதைக்கிறானுவள்? 😎

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

பொறுத்தது மட்டுமல்லாமல்   பொங்கியெழு தமிழா எண்டு இளைஞர்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி தனிநாட்டு ஆசையை உருவாக்கி விட்டதுமில்லாமல் தாங்கள் தங்கள் குடும்பமென கொழும்பு பின்கதவு சுகபோக வாழ்க்கையை அனுபவித்தது யார்?

தனிநாட்டு ஆசை  என்பது வெறும் சுயநல அரசியல்வாதிகளின் உசுபேற்றலில் தூண்டப்பட்ட, வெறுமனே  உணர்ச்சி வசப்பட்ட இளைஞகளால் தொடங்கப்பட்டது என்ற உங்கள் கருத்தில் ஓரளவு  நியாயம் உண்டு.   அதனால் தான் இன்று அதனை ஒரு பத்திரிகை வெளியிட்ட உள்ளாடை செய்தியில் பேச வேண்டிய நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தனிநாட்டு ஆசை  என்பது வெறும் சுயநல அரசியல்வாதிகளின் உசுபேற்றலில் தூண்டப்பட்ட, வெறுமனே  உணர்ச்சி வசப்பட்ட இளைஞகளால் தொடங்கப்பட்டது என்ற உங்கள் கருத்தில் ஓரளவு  நியாயம் உண்டு.   அதனால் தான் இன்று அதனை ஒரு பத்திரிகை வெளியிட்ட உள்ளாடை செய்தியில் பேச வேண்டிய நிலை.

தனி திரி திறப்பமா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎09‎-‎2021 at 10:25, கற்பகதரு said:

எந்த கனடாக்காரருக்கு இந்த அர்ச்சனை? தலைவர் கோண்டாவில்லில் ஆயுதங்களை போட்டுவிட்டு இந்தியரிடம் சரணடைய சம்மதித்தது உண்மைதான், தாயிடம் தான் கனடாவுக்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னதும் கடைசி நாட்களில் செய்திகளாக வந்த தெரிந்த சங்கதி. அதற்காக அந்த இல்லாத மனுசனை இந்த வாங்கு வாங்கலாமா? கனடாவில் உள்ள சகோதரி கவலைப்படுவா என்று கூட நினைக்கவில்லையே? போர் முடிந்து 12 வருடங்கள். அதற்கு முதல் நம்புங்கள் தமிழஈழம் பாட்டுப்பாடிய 18 வருடங்களா, இல்லையே? அது 30 வருடங்கள் பாடின பாட்டாச்சே?

30 வருஷம் கும்பிட்டு முடியாமல் இன்னமும் கும்பிடுகிறீர்களா? 

இது உண்மையா ?....உண்மையாயின் , அப்பவே சரணடைய இருந்தவரை உசுப்பேத்தி மு. வாய்க்கால் வரை கொண்டு வந்து அனாதையாய் இறக்க விட்டு இருக்கிறார்கள் ...அப்பவே சரணடைந்து இருந்தால் அவரோடு சேர்த்து எவ்வளவு உயிர்கள் தப்பி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இது உண்மையா ?....உண்மையாயின் , அப்பவே சரணடைய இருந்தவரை உசுப்பேத்தி மு. வாய்க்கால் வரை கொண்டு வந்து அனாதையாய் இறக்க விட்டு இருக்கிறார்கள் ...அப்பவே சரணடைந்து இருந்தால் அவரோடு சேர்த்து எவ்வளவு உயிர்கள் தப்பி இருக்கும் 

யூட்டின் புழுகலை நம்புகிறீர்களா…?

தலைவரின் தாயார் எப்போது கனடாவில் இருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/9/2021 at 10:25, கற்பகதரு said:

எந்த கனடாக்காரருக்கு இந்த அர்ச்சனை? தலைவர் கோண்டாவில்லில் ஆயுதங்களை போட்டுவிட்டு இந்தியரிடம் சரணடைய சம்மதித்தது உண்மைதான், தாயிடம் தான் கனடாவுக்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னதும் கடைசி நாட்களில் செய்திகளாக வந்த தெரிந்த சங்கதி

அள்ளி விடுங்க சார் காசா பணமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அள்ளி விடுங்க சார் காசா பணமா

இது  தான் நம்ம கூட்டம்?

கண்ணால்  கண்ட வரலாற்றை சொன்னால்  நம்பாது

கதையை

செவி  வழி பரப்புரைகளை அப்படியே  நம்பி....???

அப்படியே  தங்கள் கற்பனைகளையும் குளைத்து  தடவி....😡

4 hours ago, MEERA said:

யூட்டின் புழுகலை நம்புகிறீர்களா…?

தலைவரின் தாயார் எப்போது கனடாவில் இருந்தார்?

தலைவரின் துணைவியார்  கனடாவில  தான்  இப்பவும்  இருக்கிறார்  என்ற  கதைக்கு  இதுவரை முடிவுரை  தெரியாது  தெரியாதா???

Link to comment
Share on other sites

23 hours ago, ரதி said:

இது உண்மையா ?....உண்மையாயின் , அப்பவே சரணடைய இருந்தவரை உசுப்பேத்தி மு. வாய்க்கால் வரை கொண்டு வந்து அனாதையாய் இறக்க விட்டு இருக்கிறார்கள் ...அப்பவே சரணடைந்து இருந்தால் அவரோடு சேர்த்து எவ்வளவு உயிர்கள் தப்பி இருக்கும் 

https://archive.org/details/suthumalaiSpeech1987
https://www.dinamani.com/latest-news/2010/mar/13/பிரபாகரனின்-தாயார்-கனடா-செல்லத்-திட்டம்-155467.html

 

https://www.dailymirror.lk/2321/prabhas-mother-off-to-canada
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Daily mirror இணைப்பு 12/03/2010

தினமணி இணைப்பு 20/09/2012

அம்மையார் இறந்தது 20/02/2011

இருந்தும் இந்த இரு இணைப்பிலும் தலைவர் தனது தாயாரை கனடாவில் வந்து சந்திப்பாதாக கூறியதாக இல்லை.

மேலும் நடந்த உண்மையான விடயம் கற்பகத்தாருக்கு தெரிந்தும் தனது புழுகு வண்டிலை அவித்து விட்டிருக்கார்.

 

அது மட்டுமல்ல இந்திய அரசுடனான போரை ஆரம்பிக்கும் போது பல தளபதிகள் ( மாத்தையா உட்பட)  பயந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தலைவர் கூறியது “ உங்களுக்கு சண்டையிட பயம் என்டால் எனக்கு பின்னால நில்லுங்கோ”.

அன்று பயந்த எத்தனையோ பேர் பின்நாளில் போர்க்களத்தில் சாதனைபடைத்தது வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

Daily mirror இணைப்பு 12/03/2010

தினமணி இணைப்பு 20/09/2012

அம்மையார் இறந்தது 20/02/2011

இருந்தும் இந்த இரு இணைப்பிலும் தலைவர் தனது தாயாரை கனடாவில் வந்து சந்திப்பாதாக கூறியதாக இல்லை.

மேலும் நடந்த உண்மையான விடயம் கற்பகத்தாருக்கு தெரிந்தும் தனது புழுகு வண்டிலை அவித்து விட்டிருக்கார்.

 

அது மட்டுமல்ல இந்திய அரசுடனான போரை ஆரம்பிக்கும் போது பல தளபதிகள் ( மாத்தையா உட்பட)  பயந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் தலைவர் கூறியது “ உங்களுக்கு சண்டையிட பயம் என்டால் எனக்கு பின்னால நில்லுங்கோ”.

அன்று பயந்த எத்தனையோ பேர் பின்நாளில் போர்க்களத்தில் சாதனைபடைத்தது வரலாறு.

நான் போராடுவதாக முடிவு எடுத்திட்டன். இந்த முடிவில் விருப்பம் இல்லாதவர்கள் வீட்டுக்கு போகலாம் என்ற தலைவரின் வார்த்தைகளை கேட்டு வீட்டுக்கு வந்தவர்களில் என் தங்கையும் ஒருவர். தற்போது லண்டனில் உள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.