Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2021 at 05:32, Kadancha said:
1 hour ago, vasee said:

 

நான் ஈரேட் மூலமாக செய்வதால் கிரிப்டோ நினைத்தும் பார்க்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2021 at 10:32, Kadancha said:

கிரிபோட்ட இல் ஆவல் உள்ளவர்கள், ஈடுபட்டு இருப்பவர்கள் இதை கட்டாயம் வாசிக்கவும்.

முதலில் இது ஒன்றும் நிதி அறிவுரை அல்ல. கிரிப்டோ ஐ பற்றிய அறிவு மாத்திரமே.

முன்பு இணைத்த (XRP) வழக்கை  ஒருவரும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது.

அந்த வழக்கின் முக்கியத்துவம், XRP சாதகமான முடிவு (பல முடிவுகள் இருக்கின்றன), கிரிப்டோ இன் முரட்டுக் காளை (bull மார்க்கெட்) தனமான விலை எகிறுதல் நடக்க மிக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

XRP க்கு பாதகமான முடிவு என்றால், க்ரிப்டோ சாதுவாக நகரக் கூடிய அல்லது குறையக் (dip) கூடிய  வாய்ப்புகள் அதிகம்.

காரணம், SEC (US இன் நிதி ஒழுங்குமுறையை நிரவகிக்கும் அரச அலகு) பாவிக்கும் முறைப்பாட்டு மொழியும்  (ஏறத்தாழ terms of reference உம்). இது முதல் இணைத்த வீடியோ இல் இருக்கிறது. அந்த மொழியை பாவித்தது எந்த கிரிப்டோ ஐயும் வழக்குக்கு இழுக்கலாம். 

காரணம், இந்த வழக்கு முழு கிரிப்டோ ஐயும் பாதிக்கிறது.

December 6 முக்கியமான நாள், இங்கு UK இல் expert witness என்று சொல்லப்படும் செயன்முறையை ஒத்த நிகழ்வு இந்த வழக்கில் நடக்க இருக்கிறது.
 

நான் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்தே வருகிறேன் - இன்னும் ஒரு 3 மாதம் குறைந்தது இழுபடும் போல தெரிகிறது. 

Howey test எனும் கிரிப்டோவிற்கு முந்திய வழக்கின் அடிப்படையில் XRP கரன்சியா, security யா என்பதே வழக்கின் அடிப்படை தர்க்கம்.

செட்டில்மெண்டில் அல்லது தீர்ப்பில் XRPக்கு சாதகமானால் - XRP விலை எகிறும், அதே சமயம் கிடைக்கும் legal clarity யால் ஒட்டுமொத்த கிரிப்டோ உலகுக்கும் இது ஒரு பூஸ்டாக அமையும்.

மறுவளமானால் XRP தரை தட்டும். ஆனால் அவர்கள் இப்போ அமெரிக்காவுக்கு வெளியே இருந்து செயல்படுவதை பற்றி (plan B) சீரியசாக யோசிக்கிறார்கள்.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நிதி அறிவுரை அல்ல.

அவதானம் மாத்திரம்.

இப்போதைய கிரிப்டோ சரிவில் (US இன் infrastructure bill இல் க்ரிப்டோ  reporting ஐ உள்ளடக்கியாதல் வந்த வினை ), பெரும்பாலும் முதன்மை க்ரிப்டோகள் அடிபட்டன.

ஆனல், meta, NFT மற்றும் defi கிரிப்டோகள் ஒன்றில் பொதுவாக அடிபடவில்லை அல்லது ஏறி உள்ளன  உ.ம். meta, sandbox, enj போன்றவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் கிரிப்டோகரன்சி மசோதா: தனியார் மின் பணத்தின் எதிர்காலம் என்ன?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் 26 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு மசோதாவாக கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் செயல்முறையை வடிவமைப்பதும், நாட்டில் உள்ள எல்லா டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்வதும்தான் இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான நோக்கம் என மக்களவையின் பணிப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பாக பல கேள்விகள் உள்ளன. ஏனெனில் நிறைய பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். அரசு எல்லா கிரிப்டோகரன்சிகளையும் அரசு தடை செய்தால் முதலீடு செய்தவர்களின் கதி என்னவாகும்?

கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா பற்றிய தகவல் செவ்வாய்கிழமை வெளியானவுடன் கிரிப்டோ சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எல்லா முக்கிய கிரிப்டோகரன்சிகளும் சுமார் 15 சதவீதம் அல்லது அதற்கு மேல் சரிவைக் கண்டுள்ளன.

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பிட்காயின்' 17 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'எத்திரியம்' 15 சதவீதத்திற்கு அதிகமாகவும், 'டெதர்' 18 சதவீதத்திற்கு மேலாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன.

"கடந்த வருடமே இதனைத் தடை செய்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது. இதையடுத்து பல கோடி இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை தற்போது வந்திருக்கும் இந்திய அரசின் அறிவிப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதனை ஒழுங்குபடுத்த முடியாது என ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். நிதிக்குழுவின் தலைவர் இதனை ஒழுங்குபடுத்துவோம், தடைசெய்ய மாட்டோம் என்று சொல்லிவந்தார். ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்படும் மசோதா தனியார் கிரிப்டோகரென்சிகளைத் தடைசெய்யும் என கருதப்படுகிறது. மேலும் அரசே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் வழிமுறைகளை ஆராயப்போவதாகவும் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே கிரிப்டோ மூலம் வந்த வருவாய்க்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுவருவதாக சொல்கிறார்கள். அரசு அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கும் இந்த வரி விதிப்பு தொடருமென்றால், அது வெற்றிபெறாது" என்கிறார் துவக்கத்திலிருந்தே தனியார் கிரிப்டோ கரன்சிகளை விமர்சித்துவரும் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப் படுத்துவது மிக மிக அவசியம். உண்மையில் இதை மிகக் காலதாமதாக செய்கிறார்கள் என்பதுதான் கவலையே என்கிறார் பங்குச் சந்தை வல்லுநரான நாகப்பன்.

"இப்போது வரவிருக்கும் மசோதாவைப் பொறுத்தவரை தனியார் கரன்சிகளைத் தடை செய்யப்போவதாகத் தெரியவில்லை. ஒழுங்குபடுத்தும் என்றே கருதுகிறேன். இதனை ஒழுங்குபடுத்த வேண்டுமென பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இப்படி ஒழுங்குபடுத்தவில்லையென்றால் அது ஈமு கோழி வர்த்தகம் மாதிரி ஆகிவிடும்" என்கிறார் நாகப்பன்.

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அரசு தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதித்தால் என்னவெல்லாம் நடக்கும்? "வங்கிகளைப் பயன்படுத்தி ஒரு சாதாரண முதலீட்டாளர் இனி தனியார் கிரிப்டோவை வாங்க முடியாது. கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து வாங்கலாம். பெரும் முதலைகள் வெளிநாடுகளில் இருந்து செய்வார்கள். விபிஎன் மூலமாக கிரிப்டோ எக்சேஞ்சை தொடர்பு கொண்டாலும் உங்கள் வங்கி மூலம் பணத்தை செலுத்த முடியாது. ஆகவே விபிஎன் பயன்படுத்தினாலும் வாங்க முடியாது. வெளிநாட்டிற்கு பணத்தைக் கடத்தி தனியார் கிரிப்டோவை வாங்கலாம். ஆனால், அதை எல்லோராலும் செய்ய முடியாது.

இப்போதுவரை இதில் பணம் முதலீடு செய்தவர்கள் அந்தப் பணத்தை வெளியில் எடுக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கொடுப்பார்கள் என கருதுகிறேன். ஆனால், சந்தை இதற்கெல்லாம் காத்திருக்காது. நேற்று இரவு இந்திய அரசின் அறிவிப்பு வந்தவுடனேயே பிட் காயின், ஈதர் போன்றவற்றின் விலை 15-17 சதவீதம் வரை விழுந்துவிட்டது. ஆகவே, சட்டம் இயற்றப்படும்வரை நிச்சயம் பணத்தை அதிலிருந்து வெளியில் எடுக்க முடியும். எவ்வளவு பணம் கிடைக்கிறதோ, அது அவரவர் சாமர்த்தியம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

ரிசர்வ் வங்கி வெளியிடவிருப்பதாக சொல்லும் கரன்சிகளுக்கு இதே அளவு ஈர்ப்பு இருக்குமெனச் சொல்ல முடியாது. மற்ற கிரிப்டோகரன்சிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்களிடம் கரன்சிகள் இருப்பதாகச் சொல்கின்றன. அதனால், அவற்றின் விலை ஏறுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிடும்போது அப்படியிருக்காது. அதனால், அதன் மீது பெரிய கவர்ச்சி இருக்காது. ஆகவே, அரசின் டிஜிட்டல் கரன்சியின் விலை உயர வாய்ப்பு குறைவு. இதனால் மக்கள் எந்த அளவுக்கு இதில் முதலீடு செய்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீ நிவாசன்.

கிரிப்டோ கரன்சி

பட மூலாதாரம்,GEOFFROY VAN DER HASSELT

"நாம் ஒரு கடையில் வழக்கமாக பொருளை வாங்குகிறோம். மீதமுள்ள காசுக்கு சில சமயம் அவர்கள் டோக்கன்களைக் கொடுப்பார்கள். திரும்பவும் அங்கே செல்லும்போது அந்த டோக்கனைக் கொடுத்து பொருளை வாங்கலாம். அந்த டோக்கன் அங்கு மட்டும்தான் செல்லும். அதுபோலத்தான் கிரிப்டோ. ஆனால், அதுபோல டோக்கனை வைத்திருப்பவர்கள் அதன் மதிப்பு அதிகம் என தொடர்ந்து அதில் வார்த்தகம் செய்கிறார்கள். திடீரென அந்தக் கடை மூடப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் ஒழுங்குமுறை தேவை என்கிறோம்" என்கிறார் நாகப்பன்.

இனி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "அமெரிக்காவில் புதிதாக கன்ட்ரோலர் ஆஃப் கரன்சி என ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி கிரிப்டோ மீது கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு நாடாக தடைசெய்தால், பிரதானமான தனியார் கிரிப்டோ கரன்சியைத் தவிர மற்றவை அழிந்துபோகும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

https://www.bbc.com/tamil/india-59401102

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இனி தனியார் கிரிப்டோ கரன்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "அமெரிக்காவில் புதிதாக கன்ட்ரோலர் ஆஃப் கரன்சி என ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி கிரிப்டோ மீது கவனம் செலுத்துவார்கள். ஒவ்வொரு நாடாக தடைசெய்தால், பிரதானமான தனியார் கிரிப்டோ கரன்சியைத் தவிர மற்றவை அழிந்துபோகும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

எனது கணீப்பீடு.

கிந்தியாவில், இது சாத்தியமாகலாம். அனால், வளர்ந்த நாடுகளில் இது நடபது கடினம்.

கிரிப்டோவை தடை செய்யும் அல்லது முயற்சிக்கும்  அரசியல் கட்சிகள், முன்னின்று செய்யும் அரசியல் வாதிகள், சமகால வரலாற்றில் இருந்து துடைத்து எறியப்படும்.

அதை பார்த்து விட்டு, மற்ற அரசியல் கட்சிகள், அரசியல் வாதிகள் கிரிப்ட்டோவுக்கு, தங்களாவே வழிசெய்து கொடுப்பார்கள்.

கிரிப்டோவில், இளம் சந்ததியின் பணம், உழைப்பு நினைத்து பசாற்க முடியாத வகையில் ஈடுபட்டு உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை மேற்குறிக்கப்பட்ட இரண்டு வலயங்களில் (Level 1 , Level 2) விலை வீழ்ச்சி தடுக்கபட்டால் வாங்குவதாகத்திட்டமிட்டுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2021 at 10:25, ஈழப்பிரியன் said:

நான் ஈரேட் மூலமாக செய்வதால் கிரிப்டோ நினைத்தும் பார்க்க முடியவில்லை.

எனது கணக்கு -0.36 விலகலையும்(Spread) கட்டணம் அறவிடுகிறது., அலகு ஒன்றிற்கு வாங்கினால் -0.16, விற்றால் 0.06 9( Swap) வழங்குகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

Entry 222.34

Stop 219.99

Take Profit 229.47

தன்னிச்சையான அவசரகால வெளியேற்றத்தின்(Stopped out) மூலம் நட்டத்துடன் மூடப்பட்டது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடையான மன்சல் கோட்டினை (Short)விலை கடக்க தவறினால் அந்த பகுதியில் விற்கத்திட்டமிட்டுள்ளேன்.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி அறிவுரை அல்ல. நேரமும் இல்லை விளக்க.

shiba inu கிரிப்டோ , இப்பொது ஊன்றி விட்டது, அனால் வளர்ச்சிக்கு பாரிய இடம் உள்ளது.  க்ரிப்டோ இன் 10,  11, 12 வது நிலைகளில் மாறிக் கொண்டு இருக்கிறது.

ஷீபா இனு வைத்து இருப்பவர்கள், 1 மில்லியன் ஐ கடந்து விட்டது. 

மில்லியன் அர் ஆக வருவதத்திற்கு எத்தனிக்கும் முயசிற்கு, ஓர் உண்மையான எத்தனிக்கும் வாய்ப்பை, மிக குறைந்த விலையில் வளங்குகிறது SHIBA INU இப்போதைய விலையில்.

எதிர் காலத்துக்கு, ஒன்றுமே உத்தரவாதம் இல்லை.

அனால், 1 மில்லியன் SHIBA INU இப்போதைய விலையில்,  £ 30 - 40. 

வெறி தெரிவுகளும் உள்ளது, அனால் 10 / 11 / 12 இல், 1 மில்லியன் வாடிக்கையாளர், Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, எனும் தகமையுடன் இருக்கும் வேறு கிரிப்டோவை காண முடியாது.

எதிர் கொள்ளும்  நிதி அபாயத்திற்கு, பெறுபேறு முடிவிலி ஆக இருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது SHIBA INU இப்பொது. வந்தால் மலை, போனால்  £ 30 - 40.

இன்று (as of posting), இந்த மாதத்தில்  மூன்றாம் முறை BITCOIN விழ (இப்போதைய நிலையில் 8% + ஆல்) , ஷீபா இனு வின் வீழ்ச்சி 3 - 5 %. 

பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.  


இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விற்றல் நடவடிக்கையை திட்டமிட்டவாறு நேற்று இரவு வேலையினை முடித்துவிட்டு வந்து எடுத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த குறுங்கால வர்த்தக நடவடிக்கைகள் 43% ஆனவையே இலாபம் ஈட்டுவதாக வர்த்தககுறிப்புகள் கூறுகின்றன, அதாவது 10 இல் ஏறதாழ 6 தடவை எனது முடிவுகள் தவறானவை, சாதாரணமாக ஒரு நாணய சுழற்சியில் ஏறத்தாழ 10 இற்கு 5 தடவை சரியான முடிவுகளை எதிர்வுகூறலாம் (10 தடவையில் இந்த விகிதம் வராது 100 அல்லது 1000 முறை சுழற்றும் போது ஏறத்தாழ 50% வரும்).
ஆகவே எனது வர்த்தக நடவடிக்கையானது எழுந்தமானமாக நிகழும் நிகழ்தகவை விட மிகவும் குறைவானதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LTC trade 2 நட்டத்துடன் தன்ன்னிச்சையான அவசர வெளியெற்றம் ஏற்ப்பட்டுள்ளது(Stopped out).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 13:02, Kadancha said:

இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.

https://zycrypto.com/shiba-inu-propels-into-trillion-dollar-metaverse-with-blockchain-gaming-introduction/

 

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2021 at 00:02, Kadancha said:

நிதி அறிவுரை அல்ல. நேரமும் இல்லை விளக்க.

shiba inu கிரிப்டோ , இப்பொது ஊன்றி விட்டது, அனால் வளர்ச்சிக்கு பாரிய இடம் உள்ளது.  க்ரிப்டோ இன் 10,  11, 12 வது நிலைகளில் மாறிக் கொண்டு இருக்கிறது.

ஷீபா இனு வைத்து இருப்பவர்கள், 1 மில்லியன் ஐ கடந்து விட்டது. 

மில்லியன் அர் ஆக வருவதத்திற்கு எத்தனிக்கும் முயசிற்கு, ஓர் உண்மையான எத்தனிக்கும் வாய்ப்பை, மிக குறைந்த விலையில் வளங்குகிறது SHIBA INU இப்போதைய விலையில்.

எதிர் காலத்துக்கு, ஒன்றுமே உத்தரவாதம் இல்லை.

அனால், 1 மில்லியன் SHIBA INU இப்போதைய விலையில்,  £ 30 - 40. 

வெறி தெரிவுகளும் உள்ளது, அனால் 10 / 11 / 12 இல், 1 மில்லியன் வாடிக்கையாளர், Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, எனும் தகமையுடன் இருக்கும் வேறு கிரிப்டோவை காண முடியாது.

எதிர் கொள்ளும்  நிதி அபாயத்திற்கு, பெறுபேறு முடிவிலி ஆக இருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது SHIBA INU இப்பொது. வந்தால் மலை, போனால்  £ 30 - 40.

இன்று (as of posting), இந்த மாதத்தில்  மூன்றாம் முறை BITCOIN விழ (இப்போதைய நிலையில் 8% + ஆல்) , ஷீபா இனு வின் வீழ்ச்சி 3 - 5 %. 

பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.  


இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

தற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.
 

நீங்கள் கூறுவது போல கிரிப்டோ நாணயங்களின் விலைகளுக்கும் பிட் கொயினின் விலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என உணருகிறேன், ஆனால் இந்த கிரிப்டோ தொடர்பான எனது அறிவு இங்கு  யாழில் உள்ளவர்களின் அறிவுடன் ஒப்பிடும் போது எனது அறிவு பூச்சியமாகும்.

பிட் கொயினின் தற்போதய நிலவரம் மேலே குறிக்கப்பட்ட இரு வரைபடத்தில் ஒன்று முதலாவது நாள் (Daily)கால அளவையும் இரண்டாவது வார (Weekly) கால் அள்வையும் கொண்டது.

இதில் நிலநிற இரு சமாந்தர கோடுகள் கொண்டு இந்த பிட் கொயினின் ஏறுமுகத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக இதனை (Up trend channel) என அழைப்பார்கள்.

இயல்பாக இப்படியான நிலையில் விலை கீழிருக்கும் நீல சமாந்தர கோட்டை அண்மிக்கும் போது சில்லறை வர்த்தகர்கள் வாங்குவார்கள் (Support).

ஆனால் வார வரைபடத்தில் பார்த்தால் விலை Resistance and double top என்ற நிலையைக்காட்டுகிறது.

இது உணமையானால், விலை முக்கிய வலயமான 50000 விட்டு கீழிறங்கினால், அடுத்து 40000 முக்கிய வலயமாகவும் பின்னர் 30000 முக்கிய வலயமாகும்.

ஆனால் தற்போதுள்ள நிலையில் இரண்டு வகையான சில்லறை வர்த்தகர்கள் உள்ளார்கள்

1. பயந்த சுபாவம் கொண்ட வர்த்தகர்கள்

2.பேராசை கொண்ட வர்த்தகர்கள்

முதலாமவர் சந்தையை விட்டு வெளியேறுவார் இரண்டாவது வகை நபர்கள் இந்த தற்போதய விலையில் அதிகமாக (மலிவான விலையில்) வாங்குவர்.

விலை ஒரு கட்டத்திற்கு கீழ் இறங்கும் போது பதற்றத்தை உருவாக்கி விரைவான வெளியேற்றத்தை தூண்டலாம் அதனால் விலை சடுதியாக குறையும் அப்போது வெளியேறும்போது அது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

கீழே பிட் கொயினின் Market sentiment ஆனது விலை வீழ்ச்சியடையலாம் (அவ்வாறு நிகழாமலும் போகலாம்) என கூறுகிறது.(Short Interest)

 

BITCOIN - CHICAGO MERCANTILE EXCHANGE                                Code-133741
FUTURES ONLY POSITIONS AS OF 11/16/21                         |
--------------------------------------------------------------| NONREPORTABLE
      NON-COMMERCIAL      |   COMMERCIAL    |      TOTAL      |   POSITIONS
--------------------------|-----------------|-----------------|-----------------
  LONG  | SHORT  |SPREADS |  LONG  | SHORT  |  LONG  | SHORT  |  LONG  | SHORT
--------------------------------------------------------------------------------
(5 Bitcoins)                                         OPEN INTEREST:       13,648
COMMITMENTS
   8,649   10,127    2,313      678      321   11,640   12,761    2,008      887

CHANGES FROM 11/09/21 (CHANGE IN OPEN INTEREST:       -173)
    -609     -598      387      112      -22     -110     -233      -63       60

PERCENT OF OPEN INTEREST FOR EACH CATEGORY OF TRADERS
    63.4     74.2     16.9      5.0      2.4     85.3     93.5     14.7      6.5

NUMBER OF TRADERS IN EACH CATEGORY (TOTAL TRADERS:       97)
      48       38       28        3        5       63       63  

இவ்வாறு பிட் கொயின் விலை அனைத்து கிரிப்டோ நாணயங்களில் செல்வாக்கு செலுத்துமா?

பிட் கொயின் அனைத்து கிரிப்டோ நாணயங்களின் விலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்புகிறேன்

உதாரணமாக எவ்வாறு Yield Curve  ஒரு நாட்டின்  எதிர்காலத்தில் வரக்கூடிய பொருளாதார சரிவை முன்னரே அறிவிப்பது போல் (90 களில் ஜப்பான்) ஆனால் இதற்கும் விதி விலக்காக சில நாடுகள் இருக்கலாம் (இலங்கையின் Yield Curve பார்த்தால் எதிர் வரும் 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவது போலிருக்கிறது)

Yield Curve மட்டுமல்ல பங்கு சந்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நாடி பிடித்துக்காட்டும். (அமெரிக்காவின் DJIA)

அதே போல் பிட் கொயின் கிரிப்டோவின் எதிர்காலத்தையும் உணர்த்துவதாக கருதுகிறேன் (தவறான கருத்தாகவும் இருக்கலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://coinmarketcap.com/currencies/lunar/

https://www.lunardefi.com/


நிதி அறிவுரை அல்ல. ஆய்ந்து முடிவை எடுக்கவும்.  

கிரிப்டோ இல் ஆரம்பத்தில் இருக்கும் நிலையில், இறங்குவதத்திற்கு ஓர் அறிய சந்தர்ப்பம். எனவே சிறிய தொகையை இட்டு என்ன நடப்பதை அவதானித்து மேலும்  போடலாம்.

இதில் முக்கியமானது capital growth, passive income by  reflections (கிரிடப்டோ இந்த உண்மையான தொழிற்பாடு , அதுவும் defi கிரிப்டோ ஐ பங்கு என்று வழக்குக்கு இழுப்பது மிகவும் கடினம். கிரிப்டோ இன் உண்மையான முகம் இதுதான். இவ்வளவு income ஐயும், இதுவரையில் கம்பனிகளும், வங்கிகளும் எடுத்தன) . 

ஆனால் விரைவாக இருப்பது நல்லம். முழுவதும் வாசிக்கவும். இன்னமும்  3/4 பூச்சியம் இருப்பது ஏறத்தாழ 100 அல்லது 1000 மடங்கு பெரிதாவதற்கு வாய்ப்பு உள்ளது. மிகுதி   பூச்சியம், கடினம்.

ஏறத்தாழ £150 (ஏறத்தாழ stop loss) ஐ வேறு projects இல் பகுதி அல்லது முழுதாக்க இழந்து தான் இதை அறிந்தேன். 


Bitcoin குறைந்து இருக்காவிட்டால், இது இன்னும் கூடி இருக்கும்.

live டெலிகாஸ்ட் வழியாக, telegram messenger இல் CEO  & team  வைக்கும் கூட்டதில் பங்குபற்றி, கேட்டதை சொல்கிறேன்.  

Lunar defi  தீர்க்கும் பிரச்னை: Trading இல் பலவித tool கள் பாவிக்கப்படுகிறது. Lunar இன் நோக்கம் Apple எப்படி computer க்கு easy user experience தந்ததோ, அது போன்ற experience ஐ  Lunar trading க்கு வழங்கும்.

எனவே, Bitocoin இன் ஏற்ற இறக்கம் தாக்கம் இதில் அவ்வளவு பெரிதாக இருக்காது. இதை நீங்கள்,   https://coinmarketcap.com/currencies/lunar/ chart இல் பார்க்கலாம் (bitcoin விழுந்த நாட்களில்)


ரிஸ்க் க்கும் இருக்கிறது; ஏனெனில் ஆரம்பம்.   ஆனால், சிறதாக தொடக்கி பெரிதாக வருவதற்கு ஓர் அறிய சந்தர்ப்பம். 


அகண்ட விளக்கம் தர நேரம் இல்லை. வாங்குவதற்கான விளக்கம் https://www.lunardefi.com/ இருக்கிறது. 

குறிப்பு: இதில் எனது ஈடுபாடு இருக்கிறது. எனவே நீங்கள் இதில் வாங்கினால் எனக்கு மறைமுக நன்மை இருக்கிறது.

(இதை வேறு எவராவது இன்னமும் விளக்கமாக எழுத முடியும், வேறு பதிவாக இடலாம், how to buy).

இதற்கு,  உங்களின் IT திறனில் மிகுந்த நம்பிக்கை இருக்க வேண்டும். இல்ல விட்டால் உதவியை நடவும்  

இது வாங்குவதற்கு, உங்களுக்கு  தனிப்பட்ட வாலட் (wallet) தேவை. Metamask ஐ google இல் தேடி install பண்ணவும், chrome extension  ஆக. Metamask மட்டும்தான் வேலை செய்யும்  என்று இல்லை; அனால் பொதுவான  பாவனையில் இருப்பது. 

பின் metamask இல் Binance Smart Chain இ சேர்க்கவும். எப்படி சேர்ப்பது, google இல் தேடினால் வரும். 

பின்பு, Binance  (அல்லது நீங்கள் பாவிக்கும்வேறு  கிரிப்டோ எஸ்ச்ங்கே)  இல் BNB ஐ வாங்கி, Metamsk இல் இருக்கும் Smart Chain address  க்கு, Binance இல் இருந்து withdraw பண்ணவும்.

பின், உங்கள் metamask இல் Binance Smart Chain கீழ் இருக்கும் BNB ஐ பயன்படுத்தி Lunar வாங்கலாம் 

வாங்குவதத்திற்கு உகந்த கிரிப்டோ defi  exchange: 

https://poocoin.app/swap

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு  சொல்லிய கிரிப்டோ, இன்று கூட ஏறி இருக்கிறது, அனால் bit coin அரக்கி இருக்கிறது இதை எழுதும் பொது.

 அதனால், ஈடுபடும் எண்ணம் இருந்தால் மிக விரைவாக செயலில் இறங்கவும். 

https://coinmarketcap.com/currencies/lunar/

https://www.lunardefi.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 13:02, Kadancha said:

பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.  


இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.

ஷீபா  இனு, அதன் வரலாற்று resistance ஆனா  0.000052 ஐ தகர்த்து விட்டது.

சொல்லிய பொது எவராவது கருத்தில் எடுத்து இருந்தால், நன்மை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

ஷீபா  இனு, அதன் வரலாற்று resistance ஆனா  0.000052 ஐ தகர்த்து விட்டது.

சொல்லிய பொது எவராவது கருத்தில் எடுத்து இருந்தால், நன்மை.

ETrade 

மூலமாக இதில் ஈடுபட முடியாததாதலால் கவனம் செலுத்துவதில்லை.

  ZM பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ETrade 

மூலமாக இதில் ஈடுபட முடியாததாதலால் கவனம் செலுத்துவதில்லை.

  ZM பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?கொஞ்சம் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

ZM ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

Zoom Video Communications Inc

 

42 minutes ago, ஈழப்பிரியன் said:

Also looking PYPl

Paypal Holdings Inc

வாங்குவதற்காகவா(Long) அல்லது விற்பதற்காகவா(Short)?

எனது அபிப்பிராயத்தின்படி இரண்டும் Runaway Gap  இடம்பெற்றுள்ளது, இது இந்த இரண்டு பங்குகளின் வலிமையற்றதன்மையை காட்டுகிறது, குறைந்த பட்சம் குறுகிய காலமாவது இந்த நிலை தொடரலாம், ஆனால் பேபால் முக்கிய வலயத்தில் உள்ளது (Support) விலை இந்த வலயத்திலிருந்து கீழிறங்கினால் விற்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.