Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்


Recommended Posts

7 minutes ago, suvy said:

ஒரு நல்ல அனுபவம் பெறுவதற்கு 610 ஈரோ ரொம்ப அதிகமில்லை.......இனி சந்தையின் எதிர்காலத்தை ஆய்வு செய்ய முயற்சிக்கவும்.......அதற்கு 390 ஈரோ நஷ்டமானாலும் பரவாயில்லை...... பெஸ்ட் ஒவ் லக்......!  👍

நன்றி சுவி அண்ணா. குறைந்த முதலீடாக இருந்ததால் அதி கூடிய றிஸ்க் எடுத்தேன். 

பங்குச் சந்தை அதிஸ்டச் சீட்டு வாங்குவது போல் அல்ல என்பதை இதனுள் நுளைந்தவுடனேயே புரிந்து கொள்ளலாம். புதிதாகப் பங்குச் சந்தையில் இணைபவர்களில் 10 இல் 2 பேர் மட்டுமே நின்றுபிடிப்பதாகக் கூறினார்கள். அந்த 2 பேரில் நானும் இருக்கக் கூடாதா என்றுதான் நினைத்தேன்.

இருந்தாலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன் ஆறுதலாக மீண்டும் புதிய முதலீட்டுடன் இறங்க உத்தேசித்துள்ளேன்.🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 614
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இணையவன் said:

இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். 

ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். 

உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣

நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.

Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது, Entry, stop loss, exit போன்றவற்றை இடுவதற்கு இலகுவானது.

stop loss இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்தானதுதான், மற்றது position size முக்கியம்.

முதலீட்டு வர்த்தகத்திலீடுபடுவர்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை பொதுவாக ஆனால் இவற்றை கவனத்தில் கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.

எனது live account நடவடிக்கை இணைப்பினை இணைத்துள்ளேன், அதனைப்பார்த்தாலே தெரியும் நானும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளரே, எனது அனுபவத்தில் forex  இனை விட பங்கு சந்தை இலகுவானது.

எந்த ஒரு தவறான விம்பத்தினையும் பிரதிபலித்துவிட கூடாது என்பதற்காகவே எனது உண்மையான கணக்கினை இணைத்துள்ளேன்.

முதலீட்டாளர்கள் asset allocation கவனம் செலுத்தினாலே போதும் என குறிப்பிடுகிறார்கள்.

இந்த இரண்டு புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதலீட்டு ஆலோசனைகள் உள்ள புத்தகங்கள்.

technical analysis இணையத்தில் பரவலாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

26 minutes ago, vasee said:

stop loss இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்தானதுதான், மற்றது position size முக்கியம்.

முதலீட்டு வர்த்தகத்திலீடுபடுவர்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை பொதுவாக ஆனால் இவற்றை கவனத்தில் கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.

எனது live account நடவடிக்கை இணைப்பினை இணைத்துள்ளேன், அதனைப்பார்த்தாலே தெரியும் நானும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளரே, எனது அனுபவத்தில் forex  இனை விட பங்கு சந்தை இலகுவானது.

 

நன்றி வசீ.

ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂

forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

நன்றி வசீ.

ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂

forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

Stop loss இனை குறைக்க முடியாவிட்டாலும் Position size கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்,

Risk of Ruin என்பது உங்களது trading system உங்களது trading account இனில் உள்ள காசு முழுவதும் இழக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா என தெரிவிக்கும் அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான trade பின்னர் உங்களது கணக்கின் எதிர்கால நிலுவையினை தெரிவிக்கும்.

இந்த திரியில் முன்னர் ஒரு தளத்தின் இணைப்பினை இணைத்திருந்தேன், அத்தளத்திற்கு சென்று MS EXCEL தரவிறக்கிக்கொள்ளலாம்.

எனது AUDNZD trade இல் 1 break even மற்றது stop loss. பல்லடியம் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பித்த போது விலை எகிறும் என Fundamental analysis இல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது, கடந்த 3 மாதகாலமாக விலை இறங்குகிறது, 1900 விலையில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளேன் ( தற்போது 2000 இல் உள்ளது 1900 தொழில்னுட்ப ரீதியாக வலுவானநிலையில் உள்ளபடியால்).

சில நேரங்களில் உலக பொருளாதார சூழ்நிலையான Macro economics (Fundamental analysis) இற்கும் சந்தை நடவடிக்கையும் நேரெதிராக இருக்கிறது, இதனால்தான் தொழில்னுட்ப ரீதியான (Technical)சந்தை அணுகுமுறை சாதகமாகவுள்ளது.

சமீபகாலமாக Fundamental analysis இற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனூடே தொழில்னுட்ப ரீதியாக சந்தையினை அணுகுகிறேன், அத்னாலேயே AUNZD bullish market view இல் தொடர்ச்சியாக  இழப்பு ஏற்பட்ட போதும் தொடர்ந்தும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறேன்.

Trend following என்ற அடிப்படையில் AUDNZD இனை அணுகுகிறேன், இது தவறான முடிவாக இருக்கலாம்.

இந்த வகை உத்தியினை ரிச்சர்ட் டென்னிஸ் பாவித்திருந்தார், இஅவர்து வர்த்தக நடவடிக்கையில் 95% இழப்பினையும் வெறும் 5% மட்டுமே இலாபத்தினையும் வழங்கும் என கூறுவார்கள், அவரது அந்த 5% இலாப  நடவடிக்கை 95% இழப்பினை ஈடு செய்வதுடன் மேலதிகமாக அவருக்கு இலாபத்தினையும் ஈட்டி கொடுத்திருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2022 at 21:55, இணையவன் said:

நேற்று Nasdaq 5 வீதத்தை இழந்தது. இது கோவிட் வீழ்ச்சிக்குப் பின்னரான பாரிய சரிவாகும். தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட விலையேற்றம் முடிவுக்கு வருவதாகக் கூறுகிறார்கள். அமேசன் 7 வீதத்துக்கு மேல் சரிந்தது.

தங்கம் வெள்ளி போன்றவை மிகக் குறைவான விலையில் உள்ளன. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இவற்றில் முதலிடுவது உறுதியானதாக இருக்கும்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி குறைவதால் Bit coin உம் சேர்ந்தே இறங்குகிறது.

உலக பொருளாதாரம் தனது இறங்கு முகத்தினை ஆரம்பித்துள்ளதா (Bear Market)? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவா (Market Correct)?

தற்காலிக பின்னடைவு என்றால் முதலீட்டிற்கு வாய்ப்பான நேரம் ஆனால் சந்தை சரிவு நிலையினை அடைந்தால் அது எவ்வளவு தூரம் செல்லும் என தெரியாது.

DOW theory இன் படி சந்தை ஆகக்கூடுதலான விலையிலிருந்து 20% விலை வீழ்ச்சி அடைந்தால் சந்தை இறங்குமுகம் என குறிப்பிடுகிறது, அத்துடன் தற்காலிக பின்னடைவு எனில் அதிக பட்சம் 3 மாதங்கள் வரை நீழும் எனககூறுகிறது, ஏற்கனவே 3 மாதங்களுக்கு மேலாக விலைகள் சரிவடைந்து செல்லுகிறது.

அத்துடன் நஸ்டாக் குறியீடு 20% மேலாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் S&P 500, DIJ இன்னும் 20% அளவு கோலை எட்டவில்லை.

கடந்த மாதம் 10 வருட பண முறியும் 2 வருட பண முறியும் வட்டி வீதன் 2.40, 2.42 எட்டியது Market recession  முன்னோடி அறிகுறி எனக்கூறப்படுகிறது, இவ்வாறு கடந்த 9 Market recession ஐயும் சரியாக எதிர்வு கூறியுள்ளது.

ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எவ்வளவு தூரம் விலை சரிவடயும் என்பதுதான் முக்கிய விடயமாகவுள்ளது( 2019 இல் விலை 27% சரிவடைந்தது ஒரு வருடத்திற்குள்ளாகவே விலை மீண்டும் உயர்ந்து விட்டது).

இரஸ்சிய உக்கிரேனிய போர் உலக பொருளாதாரத்தினை வெகுவாகப்பாதிக்கின்றது, எமது நிறுவனத்தில் பங்குனி மாத ஆரம்பத்தில் (யுத்த ஆரம்ப காலத்தில்) கூடிய கூட்டத்தில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் வருகை யுத்தத்தினால் பாதிப்புறும் ஆனால் 3 மாத இருப்பு இருப்பதனால் சமாளித்துவிடலாம் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அனைத்து மூலப்பொருளும் இக்கட்டான அளவுநிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா, இந்த போரை முடிவுக்கு கொண்டுவராமல் மக்களையும் உலக பொருளாதாரத்தினை அழிக்கிறார்கள் (இரஸ்சியாவினை மட்டும் குறைகூறவில்லை மேற்கு நாட்டினையும் சேர்த்துதான் சொல்கிறேன்)

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.barchart.com/etfs-funds/quotes/GLD/put-call-ratios

எதிர்வரும் ஆண்டு ஆரம்பம் வரை தங்கத்தின் market sentiment பாதகமாகவுள்ளது போல உள்ளது (உறுதியாக சொல்ல முடியாதுள்ளது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் விலை அதிகரிக்கலாம் அல்லது விலை சரியலாம் என கருதுகிறேன், வ்ரும் வாரத்திற்கான Trade analysis.

எதிர்வரும் காலத்தில் எனது வர்த்தக நடவடிக்கைகளுக்கான  Trade analysis இனை வார இறுதியில் யூருயூப்பில் தரவேற்ற முயற்சிக்கிறேன்.

இனி யாழின் மூலமாக உங்களது நெறிப்படுத்தலை பெறமுடியாதலால், எனது வர்த்தக நடவடிக்கையின் சாதக பாதகங்களை நீங்கள் குறித்த ஒளிப்பதிவின் கீழ் முடிந்தால் இணைக்கவும்.

வார இறுதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தலா 12 மணித்தியாலங்கள் வேலை செய்வதால் சில வார இறுதியில் பதிவிட முடியாத நிலை ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க விலை தொடர்பான மிகவும் சுவாரசியமான ஒளிப்பதிவு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2022 at 07:36, vasee said:

Stop loss இனை குறைக்க முடியாவிட்டாலும் Position size கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்,

Risk of Ruin என்பது உங்களது trading system உங்களது trading account இனில் உள்ள காசு முழுவதும் இழக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா என தெரிவிக்கும் அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான trade பின்னர் உங்களது கணக்கின் எதிர்கால நிலுவையினை தெரிவிக்கும்.

இந்த திரியில் முன்னர் ஒரு தளத்தின் இணைப்பினை இணைத்திருந்தேன், அத்தளத்திற்கு சென்று MS EXCEL தரவிறக்கிக்கொள்ளலாம்.

எனது AUDNZD trade இல் 1 break even மற்றது stop loss. பல்லடியம் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பித்த போது விலை எகிறும் என Fundamental analysis இல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது, கடந்த 3 மாதகாலமாக விலை இறங்குகிறது, 1900 விலையில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளேன் ( தற்போது 2000 இல் உள்ளது 1900 தொழில்னுட்ப ரீதியாக வலுவானநிலையில் உள்ளபடியால்).

சில நேரங்களில் உலக பொருளாதார சூழ்நிலையான Macro economics (Fundamental analysis) இற்கும் சந்தை நடவடிக்கையும் நேரெதிராக இருக்கிறது, இதனால்தான் தொழில்னுட்ப ரீதியான (Technical)சந்தை அணுகுமுறை சாதகமாகவுள்ளது.

சமீபகாலமாக Fundamental analysis இற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனூடே தொழில்னுட்ப ரீதியாக சந்தையினை அணுகுகிறேன், அத்னாலேயே AUNZD bullish market view இல் தொடர்ச்சியாக  இழப்பு ஏற்பட்ட போதும் தொடர்ந்தும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறேன்.

Trend following என்ற அடிப்படையில் AUDNZD இனை அணுகுகிறேன், இது தவறான முடிவாக இருக்கலாம்.

இந்த வகை உத்தியினை ரிச்சர்ட் டென்னிஸ் பாவித்திருந்தார், இஅவர்து வர்த்தக நடவடிக்கையில் 95% இழப்பினையும் வெறும் 5% மட்டுமே இலாபத்தினையும் வழங்கும் என கூறுவார்கள், அவரது அந்த 5% இலாப  நடவடிக்கை 95% இழப்பினை ஈடு செய்வதுடன் மேலதிகமாக அவருக்கு இலாபத்தினையும் ஈட்டி கொடுத்திருக்கிறது.

சந்தை நடவடிக்கை ஏறுமுகமாகவோ அல்லது இறங்கு முகமாகவோ அன்றி, பக்கவாட்டாக நிகழ்கிறது அதனால் மேற்கூறிய உத்தி அதிக பலனழிக்கவில்லை. அதனால் மே 24 இல் இருந்து Market making எனும் உத்தியினை கடைப்பிடித்துள்ளேன்.

https://www.myfxbook.com/members/GreedFTrader/live-acc/9531745

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுரோ நாணயம் தொடர்பாக யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) (மாதவரைபடத்தில்) கடந்த 4 மாதத்திற்கு முன் யூரோ ஜென் 126 இலிருந்து உயர்ந்து செல்கிறது, அதன் எல்லை 174 ஆகவுள்ளது.

இன்று வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது, இந்த நிலையில் கடந்த  பங்குனி மாதத்தித்திலிருந்த பணவீக்கம் 1.9% இலிருந்து 8% இற்கு அதிகரித்துள்ளது (இரஸ்சிய - உக்கிரேன் யுத்த  உபயம்).

முதலீட்டாளர்கள் மத்தியில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் யூரோ நாணய இணைகள் வாங்குவது பரவலாகக்காணப்படுகிறது.

பணவீக்க விகிதம் 5.1% உள்ள அவுஸ்ரேலியா இந்த வாரம் எதிர்பார்ப்பான 0.25 புள்ளி அதிகரிப்புக்கு பதிலாக 0.50% அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறான நிலையில் யுரோ நாணயம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இணைய செய்திகளில் 0.50% -0.75% புள்ளிகள் வரை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சந்தை, யுரோ நாணய இணைகள் விலை அதிகரிப்பின்  மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை இனங்காட்டுகிறது.

இதுவரை காலமும் Anchored inflation expectations என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்திக்கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி முதற் தடவையாக De-Anchored inflation expectations என பேச ஆரம்பித்துள்ளது.

வட்டி விகிதம் உயர்த்துவதற்கு சாத்தியமுண்டா இல்லையா?

Edited by vasee
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

யுரோ நாணயம் தொடர்பாக யாழ்கள அங்கத்தவர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

தொழில்னுட்ப ரீதியாக (Technical analysis) (மாதவரைபடத்தில்) கடந்த 4 மாதத்திற்கு முன் யூரோ ஜென் 126 இலிருந்து உயர்ந்து செல்கிறது, அதன் எல்லை 174 ஆகவுள்ளது.

இன்று வட்டி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது, இந்த நிலையில் கடந்த  பங்குனி மாதத்தித்திலிருந்த பணவீக்கம் 1.9% இலிருந்து 8% இற்கு அதிகரித்துள்ளது (இரஸ்சிய - உக்கிரேன் யுத்த  உபயம்).

முதலீட்டாளர்கள் மத்தியில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் யூரோ நாணய இணைகள் வாங்குவது பரவலாகக்காணப்படுகிறது.

பணவீக்க விகிதம் 5.1% உள்ள அவுஸ்ரேலியா இந்த வாரம் எதிர்பார்ப்பான 0.25 புள்ளி அதிகரிப்புக்கு பதிலாக 0.50% அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறான நிலையில் யுரோ நாணயம் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இணைய செய்திகளில் 0.50% -0.75% புள்ளிகள் வரை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சந்தை, யுரோ நாணய இணைகள் விலை அதிகரிப்பின்  மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை இனங்காட்டுகிறது.

இதுவரை காலமும் Anchored inflation expectations என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்திக்கொண்டிருந்த ஐரோப்பிய மத்திய வங்கி முதற் தடவையாக De-Anchored inflation expectations என பேச ஆரம்பித்துள்ளது.

வட்டி விகிதம் உயர்த்துவதற்கு சாத்தியமுண்டா இல்லையா?

இந்த கருத்து பதிந்த போது யூரோ வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்றதன் அடிப்படையில் முதற்தடவையாக 10% கணக்கினை உபயோகித்து EURJPY Short செய்திருந்தேன், வாங்காமல் ஏன் விற்றேன் என்றால் கடந்த வாரம் முழுவதுமாக விலை அதிகரித்த வண்ணமே இருந்தமையால் Market makers விலை உயர்வதற்கு முன்னர் விலையினை கீழிறக்கி stop loss hunt 

செய்வார்கள் என்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொண்டு அனைத்தும் பலனளிக்கவில்லை, ஆனால் நேற்று இரவிலிருந்து பெரிய தொகையில் வைத்திருந்த trade இனை 5 மணித்தியாலத்திற்கு முன்னராக மூடிவிட்டேன் (தொடர்ச்சியாகக்கண்காணிக்க முடியாமையால்), ஆனால் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் விலை இறங்கியுள்ளது, ஒரு சிறிய தொகுதி வாங்கியுள்ளேன் விலையேறும் எனும் அடிப்படையில் சில நிமிடங்கள் உள்ளது அறிவிப்பு வெளியாவதற்கு.

வட்டி விகித அறிவிப்பு சாதகமாக வந்தால் விலை உயரும் போது உயர்வில் மந்தநிலை காணப்பட்டால் தற்போதய trade விற்று விட்டு எதிர் trade  செய்யவுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தவில்லை 0.0% வட்டி விகிதம் (எதிர்பார்க்காத முடிவு), வாங்கி வைத்திருந்த யூரோ ஜென்னை குறைந்த இலாபத்தில் விற்று விட்டு, புதிதாக யூரோ ஜென்னை விற்றுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தவில்லை 0.0% வட்டி விகிதம் (எதிர்பார்க்காத முடிவு), வாங்கி வைத்திருந்த யூரோ ஜென்னை குறைந்த இலாபத்தில் விற்று விட்டு, புதிதாக யூரோ ஜென்னை விற்றுள்ளேன்.

gold குறைகிறது. அதனால் us data  கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு.


அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது.

இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening.

நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக.

terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை.

ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது  என்ற ஓர் கருதும் இருக்கிறது.

terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

gold குறைகிறது. அதனால் us data  கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு.


அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது.

இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening.

நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக.

terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை.

ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது  என்ற ஓர் கருதும் இருக்கிறது.

terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . 

EURJPY trade  மூடிவிட்டேன், தொடர்ந்தும் விற்பதற்கு ஏற்ப  விலை ஏற்றத்தினை எதிர்பார்த்துள்ளேன், ஆனால் ஜுலை மாதமளவில் 0.25, செப்டெம்பரில் 0.5 அதனை தொடர்ந்து வருட இறுதியில் 0.25 வட்டி வீதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிரது, அதற்கு முன்னர் விலை சடுதியாக இறங்கலாம் என எதிர்பார்க்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

15 hours ago, Kadancha said:

gold குறைகிறது. அதனால் us data  கூடும் போல தெரிகிறது . இவை சந்தை எதிர்பார்ப்பு.


அனால், fed balance sheet ஐ இருக்க தொடங்கிவிட்டது.

இந்த கிழமையில் இருந்து, 50 billion முதலில் quantitative tightening.

நேரம் இல்லை, வேறு தனிப்பட்ட அலுவல் காரணமாக.

terra luna பற்றியும் ஓர் பதிவு செய்ய வேண்டும் என்று எழுதியபோது அழிந்து விட்டது. மீண்டும் எழுத நேரம் இல்லை.

ஆனால், டெர்ரா luna, 4 billion usd பெறுமானத்தை வைத்து இருந்து இருந்தால் இது நடந்து இருக்கா முடியாது  என்ற ஓர் கருதும் இருக்கிறது.

terra லுனாவில் நடந்தது , ஏறத்தாழ, george soros இன் pound speculation ஆல், 1992 பிரித்தானியா erm இல் வெளியேறியது போல . 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறுகிய trade முறையில் தங்க முதலீட்டில் சற்று இலாபம் கிடைத்தது. தங்கத்தில் நீண்டகால முதலீட்டுக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

6 hours ago, இணையவன் said:

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறுகிய trade முறையில் தங்க முதலீட்டில் சற்று இலாபம் கிடைத்தது. தங்கத்தில் நீண்டகால முதலீட்டுக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். 

இன்று காலையில் தங்கம் மேலும் கீழே இறங்கியது. என்ன கரணமோ பின்னேரம் திடீரென உயர ஆரம்பித்தது. 15 - 20 நிமிட இடைவெளிகளில் 5 தடவை trade செய்து ஒன்றரை மணிநேரத்தில் எனது கையிருப்பை 160 இலி இருந்து 190 ஆக உயர்த்திக் கொண்டேன். 🙂

ProShares UltraPro பற்றி யாருக்காவது தெரியுமா ? இவற்றுக்கும் Forex ற்குமான சமன்பாடுகளை அறிந்து கொண்டால் சுவாரிசியமானதாகத் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2022 at 05:10, இணையவன் said:

இன்று காலையில் தங்கம் மேலும் கீழே இறங்கியது. என்ன கரணமோ பின்னேரம் திடீரென உயர ஆரம்பித்தது. 15 - 20 நிமிட இடைவெளிகளில் 5 தடவை trade செய்து ஒன்றரை மணிநேரத்தில் எனது கையிருப்பை 160 இலி இருந்து 190 ஆக உயர்த்திக் கொண்டேன். 🙂

 

அமெரிக்க பணவீக்க அறிவிப்பு வெளியாகியிருந்தது, கடந்த மாத பணவீக்க அளவிலிருந்து 0.1% பணவீக்கம் அதிகரித்துள்ளது (1.88% ?) அதனால் தங்கத்தின் விலை 2.01% அதிகரித்துள்ளது.

இது பணவீக்கத்தின் அதிகரிப்பினை விட சிறிய அதிகரிப்பு காணப்படுகிறது.

நான் முன்பு கூறியது போல தங்கம் முக்கிய விலை புள்ளியிலிருந்து கீழிறங்கவில்லை, இது தங்கத்தின் பலத்தினை காட்டுகிறதாக உணர்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

இது வரை காலமும் தங்கத்தினை விற்பதில் மட்டும் ஆர்வம் காட்டியிருந்தேன் (Short), ஏனெனில் அதன் Trend  அப்படி (ஏற்கனவே எனது கணக்கின் லிங் இணைத்துள்ளேன்).

ஆனால் கடைசி தங்க Trade இல் தங்கத்தினை வாங்கியிருந்தேன் ( பணவீக்க அறிவிப்பிற்கு முன்னதாக).

தங்கம் விலை இறங்கலாம் எனும் எனது அபிபிராயத்திலிருந்து விலை ஏறலாம எனும் அபிப்பிராயத்திற்கு வந்துள்ளேன்.

இன்று கிழக்காசிய சந்தையின் நிலவரத்தினை (Low liquidity) பயன்படுத்தி தங்கத்தின் விலையினை சடுதியாக சரிக்க முற்பட்டால் (Stop hunt), தங்கத்தினை அதிகளவில் வாங்கலாம் என கருதுகிறேன் (தவறான அணுகுமுறையாக இருக்கலாம்).

On 11/6/2022 at 05:10, இணையவன் said:

 ProShares UltraPro பற்றி யாருக்காவது தெரியுமா ? இவற்றுக்கும் Forex ற்குமான சமன்பாடுகளை அறிந்து கொண்டால் சுவாரிசியமானதாகத் தெரிகிறது. 

தகவலுக்கு நன்றி,

 

Link to comment
Share on other sites

இன்று மிக மோசமான நிலை. பொதுவாக எதுவுமே சாதகமாக இல்லை . நேற்று அடைந்த இலாபத்தைவிட அதிகம் இழந்துள்ளேன். Bitcoin 12 வீதம் சரிந்து 23000 டொலர்களை அண்மிக்கின்றது. 

ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை  (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன. 

Link to comment
Share on other sites

இன்று 3 வீதம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலிட இது சரியான தருணமாக இருக்கலாம். நாளை காலை பார்த்துவிட்டு மீதமுள்ள கைய்யிருப்பை ஒன்றாக்கி முதலிடலாம் என்று எண்ணியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

இன்று மிக மோசமான நிலை. பொதுவாக எதுவுமே சாதகமாக இல்லை . நேற்று அடைந்த இலாபத்தைவிட அதிகம் இழந்துள்ளேன். Bitcoin 12 வீதம் சரிந்து 23000 டொலர்களை அண்மிக்கின்றது. 

ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை  (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன. 

பொருளாதார அடிப்படை கட்டமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (Macro economic)

1. பணவீக்கம்
2. பொருளாதார மந்த நிலை
3. சந்தையில் திரவ நிலை குறைதல் (Liquidity) 

Global liquidity index 85% இலிருந்து 40% சரிந்துள்ளது, இது முதலீடு, வங்கித்துறை மற்றும் சாதாரண மக்களின் செலவீடுகளில் (House hold expense) தாக்கம் செலுத்தும்.

அனைத்து முதலீட்டு சந்தைகளிலும் திரவத்தன்மை குரைவினால் முதலீடுகள் வற்றி போயுள்ள நிலமையே பங்கு சந்தை, கிரிப்டோ என்பவற்றின் சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

சாதாரண மக்கள் கடனட்டை, வீட்டுக்கடன் என பெருமளவிலான கடனதிகரிப்பு மேலதிக சுமையினை பொருளாதாரத்தில் ஏற்படுத்துகிறது.

அவர்கள் ஊதிய உயர்வு அதிகரிப்பு இன்மை அத்துடன், பணவீக்கம் அதனால் ஏற்படப்போகும் வட்டி விகித உயர்வு பொருளாதார சரிவிற்கு வழிசமைக்கும்.

அத்துடன் வங்கிகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் பட்சத்தில் 50% வரை சந்தை சரிவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதில் அரசியல் வேண்டாம் என்பதால அதற்கான காரணங்களை கூறவில்லை.

வரும் புதனன்று  வட்டி விகித அதிகரிப்பு 0.50% ஏற்படலாம் என எதிவு கூறப்பட்ட அதே வேளை 0.75% இனை முதலீட்டாளர்கள் எதிபார்க்கிறார்கள், அவ்வாறு நிகழ்ந்தால்  நடைமுறையில் தங்கம் விலை கடுமையாக பாதிக்கும்.

ஆனால் கடந்த காலங்களில் அப்படியே நேரடியாக தங்க விலை சரிவினை ஏற்படுத்த வில்லை.

அத்துடன் தங்க விலை வீழ்ச்சி அடையும் எனும்பட்சத்தில் எதிர் வரும் புதன் கிழமைக்கு முன்பாக தங்க விலையில் அதிகரிப்பு காணப்படலாம் (Distribution).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, இணையவன் said:

இன்று 3 வீதம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலிட இது சரியான தருணமாக இருக்கலாம். நாளை காலை பார்த்துவிட்டு மீதமுள்ள கைய்யிருப்பை ஒன்றாக்கி முதலிடலாம் என்று எண்ணியுள்ளேன்.

தங்கம் 1800 வலயத்தினை விட்டு கீழிறங்கு பட்சத்தில் முன்பு கூறியது போல 1300 இல் தங்கத்தினை வாங்குவதற்கான வாய்ப்புகள் (Technical analysis) அதிகமாகவுள்ளது.

பொதுவாக fundamental analysis அடிப்படையில் செய்யப்படும் முதலீடுகள் அவ்வளவாக எனக்கு சரிவருவதில்லை, நானும் தங்கத்தில் (American session) 1832 முக்கிய வலயத்தில் தங்கத்தினை முன்பு கூறியது போல பெருமளவில் வாங்கியிருந்தேன் (Big position size  - bad trade).

இப்போது கிழக்காசிய சந்தை விற்பனைகளுக்காக காத்திருக்கிறேன் (Liquidity), சிறிய நட்டத்துடன் வெளியேற ( இது வரை காலமும் சிறுக சிறுக Technical analysis மூலம் சேர்த்த இலாபம் அனைத்தையும் தங்க Fundamental முதலீட்டில் இழந்து விட்டேன், அத்துடன் எனது சொந்த பணத்திலும் இழப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது)

ஆனால் தங்கம் 1800 நிலையினை தக்க வைத்தால் 1920 வரை உயரலாம்.

மேலே கூறப்பட்டவை அனைத்தும் சொந்த அபிப்பிராயம் (தவறாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்)

Edited by vasee
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை  (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன. 

இவை நேர்மாறு  etf - inverse exchange traded fund.

ETF என்பது பல பங்குகள், வேறு நிதி கருவிகள் (debt, credit போன்றனவும், அடிப்படை commodities போறனவும், மற்றும் அதற்கு வேறுபட்ட அல்லது இடைப்பட்ட நிதி அமைப்பை அடிப்படையாக கொண்டு) உருவாக்கப்படுவது.

Inverse ETF என்பது, அதன் பெயருக்கு ஏற்ப, ETF இல் அடிப்படையாக இருக்குக்கும் நிதி கருவிகள் இறங்கும் போது ஏறும், நிதி கருவிகள் ஏறும் போது இறங்கும்.

அதாவது, trade இல் உள்ள shorting ஐ போல , பெரிய ரிஸ்க் எடுக்காமல், சாதாரண முதலீட்டாளர்கள் முதல் இடுவதற்கு.  

 Inverse ETF இருக்கும் பங்குகல்,சுட்டிகள் என்பதன் ஏற்ற, தாழ்வை கொண்டு,     Inverse ETF இந்த நிகர ஏற்றம், இறக்கம் இருக்கும். 
 

  • Like 1
Link to comment
Share on other sites

கடஞ்சா, வசி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

கீழுள்ள படங்கள் நேற்றும் கடந்த வெள்ளியும் எடுத்தவை. 

முதலாவதில் சிவப்பு, நீல அடையாளங்களால் சோடிகளாகக் காட்டியிருப்பவை NASDAQ மற்றும் SPX500 ஆகியவற்றுக்கு நேரானதும் எதிரானதுமானவை. NASDAQ எவ்வளவு இறங்குகிறதோ அதற்கு எதிராக SQQQ பல மடங்கு ஏறுவதைக் கவனிக்கலாம்.

Proshares-13-06.png

 

 

Proshares-10-06.png

இதில் பிரச்சனை என்னவென்றால் இவை திறக்கும் நேரம் ETF பங்குச் சந்தையின் நேரமாகும். SQQQ இனை உதாரணத்துக்கு எடுத்தால், NASDAQ இரவு முழுவதும் திறந்திருப்பதால் அதன் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து SQQQ இன் பெறுமதி தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்தாலும் update செய்யப்படுவதில்லை. ETF சந்தை திறக்கப்பட்ட சில வினாடிகளில் update செய்யப்படும். இதன்போது SQQQ இன் பெறுமதி திடீரென 5 - 10 வீதங்களுக்கு உயர்ந்துவிடும். இந்த இடத்தில்தான் பெருமளவு இலாபம் பார்க்கலாம். NASDAQ இன் தற்போதைய பெறுமதி தெரிந்திருந்தாலும் update செய்யப்படும் சில விநாடிகளுக்குள் SQQQ இனை வாங்க முடியாது. முன்னைய நாள் நிலவரத்தை வைத்துக் கணிப்பீடு செய்து முதல்நாளே பங்குச் சந்தை பூட்டப்படுமுன் இப் பங்குகளை வாங்குவதுதான் ஒரே வழி.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.