Jump to content

கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு!

உலக ரீதியில் பஞ்சம், பட்டினி, போசணைக் குறைபாடுகள் உயிர்கொல்லிகளாக ஒரு இருபது ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. இன்றும் சில பிரதேசங்களில் இவை பிரச்சினைகளாக இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இன்னொரு ஆரோக்கியப் பிரச்சினை மிகைப் போசணையால் விளையும் அதிகரித்த உடற்பருமனாதல். உலகின் 180 இற்கு மேற்பட்ட நாடுகளுள் அனேகமானவற்றில் இன்று மரணத்தின் முதன்மைக் காரணங்களாக இருப்பவை: இதய நோய், உயர் குருதி அமுக்கம், நீரிழிவு ஆகிய மூன்றும் தான்!. இந்த மூன்று நோய்களோடும் நேரடியான தொடர்பு அதிகரித்க உடற்பருமனுக்கு இருக்கிறது. எனவே உடல் மெலியவும் அதனோடு சேர்ந்த ஆரோக்கியத்தைப் பேணவும் காலத்திற்குக் காலம் புதிய உணவு முறைகள் பலரால் கண்டறியப் பட்டு பிரபலமாக்கப் படுகின்றன. இவ்வாறு பிரபலம் பெறும் எல்லா உணவு முறைகளும் பயன் தருவதில்லை -ஏனெனில் பல உடல் மெலிய வைக்கும் உணவு முறைகளுக்கு உறுதியான உயிரியல்/மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லை!  

பேலியோ உணவு முறையென்பது அடிப்படையில் குகை வாழ் ஆதி மனிதனின் உணவு முறை. எங்களுடைய வரலாற்றில் ஏறத்தாழ 12,000 ஆண்டுகள் முன்பு வரை எம் மூதாதையர் ஒரு இடத்தில் தங்கியிருந்து, தோட்டம் செய்யவோ, கால்நடைகள் வளர்க்கவோ ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு எம் மூதாதையர் தங்கிப் பயிர் செய்து வாழ ஆரம்பித்த காலம் கற்காலத்தின் இறுதிக் கட்டத்தின் நியொலிதிக் காலத்தோடு பொருந்தி வருகிறது. பேலியோ உணவின் அடிப்படை, இந்த கடந்த 12,000 சொச்ச ஆண்டுகளில் எங்கள் உடலை இயக்கும் ஜீன்கள் இந்த நியோலிதிக் கால உணவு முறைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை, இதனால் தான் நாம் கொழுப்பை விலக்கினாலும் எமக்கு உடற்பருமன் சார்ந்த நோய்கள் குறையாமல் இருக்கின்றன என்பதாகும். எனவே பேலியோ உணவு முறை, எங்கள் மூதாதையர் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பிட்டதாகக் கருதிய , சிவப்பு இறைச்சியையும்,  கடலை வகைகளையும் உள்ளடக்கப் பரிந்துரைக்கிறது. அதே வேளை, அந்த 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்திருக்காது என்று கருதிய பாலுணவுகள், தீட்டிய மாப்பொருட்கள், மாச்சத்துள்ள தாவரங்களையும் கிழங்குகளையும் ,தானியங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகிறது.  இந்தப் பரிந்துரைகளுள், தாவர நார்கள், கடலை என்பன நல்ல விடயங்கள். தீட்டிய மாப்பொருட்களைத் தவிர்ப்பதும் ஆரோக்கியமானது. ஆனால், சிவப்பிறைச்சியில் பிரச்சினையுண்டு. பாலுணவு தவிர்த்தல் , டி ஆகிய முக்கியமான விற்றமின்களின் குறைபாட்டை ஏற்படுத்தும். இவையெல்லாம் உயிரியல் ரீதியில் ஆதாரமுள்ள தகவல்கள் - ஆனால் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது, முன்னோர் சாப்பிட்ட பேலியோ உணவு என்பதே இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்பதை மட்டும் தான்!

தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒரு சிறு தொகையினர் எங்கள் முன்னோர் தங்கிப் பயிர் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே காட்டுத் தானியங்களையும் , தீட்டிய தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். இந்தச் சிறுபான்மை எடுகோளை நிறுவ அவர்கள் தேர்ந்து கொண்ட முறை தான் கறிச்சட்டி ஆய்வு! சாதாரணமாக ஒரு தொல்லியல் ஆய்வில் முன்னோர்கள் வேட்டையாடிய, உணவாகக் கொண்ட விலங்குகளின் எலும்புகள் மிக இலகுவாகக் கண்டு பிடிக்கப் படக் கூடியவையாக இருக்கும் - இதன் காரணம் எலும்புகள் உக்கி முற்றிலும் அழிவது அசாத்தியம். ஆனால், தானியங்கள், தாவரங்களின் பகுதிகள் மிக இலகுவாக சூழலில் அழிந்து கலந்து மறைந்து விடும். இதனால் தான் இது வரை ஆராயப் பட்ட எல்லா முன்னோர் வாழ்விடங்களிலும் மிருக எலும்புகள் தாராளமாகக் கிடைத்தன (எனவே முன்னோர் பிரதானமாக இறைச்சியுண்டதாக முடிவும் செய்யப் பட்டது!). இது வரை புறக்கணிக்கப் பட்ட தானிய எச்சங்கள் தற்போது புதிய தொழில் நுட்பங்கள் மூலம் கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், மனிதப் பற்கள் என்பவற்றிலிருந்து அடையாளம் காணப்படும் போது தான் பேலியோ உணவென்பது இறைச்சி மட்டுமல்ல என்பதற்கு சான்று கிடைக்கிறது.    

தொல்லியல் அகழ்வுகளில் கறிச்சட்டிகளையும், அடிப்பிடித்த கரிச்சட்டிகளையும் தேடுவதற்கு முன்னர், இந்த ஆய்வு ஆரம்பித்தது கோபெக்லி ரெபா (Gobekli Tepe) எனப்படும் 11,600 ஆண்டுகள் பழமையான ஒரு அகழ்வாய்வு மையத்தில். துருக்கி- சிரிய எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தொல்லியல் எச்சங்கள், ஒரு புராதன வழிபாட்டிடமென நம்பப் படுகிறது. கட்டிட எச்சங்களுக்கப்பால் காணப்பட்ட பாரிய கல்லுருளைகள் தானியங்களை அரைக்கவும் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப் பட்ட உரல்கள் என்ற தகவல், அந்தக் கற்களில் ஒட்டியிருந்த தானிய எச்சங்களை ஆராய்ந்த பின்னரே தெரிய வந்தது. ஓரிடத்தில் தரித்து வாழ ஆரம்பித்த முதல் நூற்றாண்டுகளிலேயே தானியங்களை அரைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது புதிய கண்டு பிடிப்பு. ஆனால், இவ்வாறு மாச்சத்து நிறைந்த பொருட்களை, கிழங்குகளை சாதாரண உணவாக எடுக்கும் பழக்கம் 120,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முன்னோரிடமிருந்திருப்பதாக தென்னாபிரிக்காவில் காணப்படும் அகழ்வாய்வு மையங்களில் கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன. இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

பேலியோ உணவு முறையை முன்னிறுத்துவோரின் முக்கியமான வாதங்களில் ஒன்று: நவீன மனிதனின் உடல், மாச்சத்து நிறைந்த உணவுகளை சமிபாடடையச் செய்யவும், கிரகிக்கவும் கடந்த 12,000 ஆண்டுகளில் இசைவாக்கம் அடையவில்லை என்பதாகும்! 120,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாச்சத்து நிறைந்த உணவுகளை முன்னோர் எடுத்து வந்திருக்கின்றனர் என்பது இந்த வாதத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. இந்த பேலியொ உணவு முறையின் வாதத்தை மறுக்கும் நேரடியான இன்னுமொரு தகவல், எங்கள் ஜீன்களை ஆராய்கிற போது கிடைக்கிறது. எங்கள் உடலில் இருக்கும் ஜீன்கள் பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளாகக் காணப்படுகின்றன. மாச்சத்தை சமிக்கச் செய்யும் நொதியங்களைப் பொறுத்த வரையில், நவீன மனிதனில் சுமார் இருபது வரையான ஜீன் பிரதிகள் அந்த நொதியங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், மனித இனத்தின் மூதாதையரான குரங்குகளிலோ இரண்டே இரண்டு ஜீன் பிரதிகள் தான் மாச்சத்தைச் செமிக்கச் செய்யும் நொதியங்களை உற்பத்தி செய்கின்றன. எனவே, மாப்பொருட்களைக் கையாளும் இசைவாக்கத்தை மனித இனம் கூர்ப்பின் வழியே விருத்தி செய்து வந்திருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறது.  

எனவே, மொத்தமாகப் பார்த்தால், கறிச்சட்டி ஆய்வுகளின் படி, பேலியோ உணவு முறை என இன்று பரிந்துரைக்கப் படும் உணவுமுறை, முன்னோரால் பின்பற்றப் பட்டதாக ஆதாரங்கள் இல்லை. முன்னோர், தாவரங்கள், மாப்பொருட்கள் நிறைந்த உணவுகள், இறைச்சி ஆகியவை கொண்ட உணவுகளையே உண்டு வந்திருக்கிறார்கள் - இந்த உணவுகளை உண்டு வந்த காலத்தில், தினசரி மைல்கணக்காக நடந்தும், ஓடியும் கலோரியை எரித்தும் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். இத்தகைய உணவு முறை முன்னோரில் இதய குருதிக் கலன் நோய்களை அதிகரித்திருக்குமா அல்லது குறைத்திருக்குமா என்பதும் தெரியாது.

 

கீழ் இணைப்பிலுள்ள கட்டுரையின் தழுவல்: 

https://www.nature.com/articles/d41586-021-01681-w 

- ஜஸ்ரின் 

சொற்பட்டியல்

நொதியம் - enzyme

அகழ்வாய்வு - excavation 

தொல்லியல் - archaeology 

Link to comment
Share on other sites

ஆக்கத்துக்கு நன்றி ஜஸ்ரின். புரிவதற்கு சற்றுக் கடினமான விடயத்தை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிகைப்படுத்தாமல் எழுதியுள்ளீர்கள். பேலியோ உணவு முறை என்பது 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் தானியங்களை உண்ணவில்லை என்பது போன்ற தவறான கோட்பாடுகளை நம்பி உருவாக்கப்பட்ட உணவு முறை என்பதை தெளிவாக கட்டுரை விளக்குகின்றது.

 

11 hours ago, Justin said:

 

கீழ் இணைப்பிலுள்ள கட்டுரையின் தழுவல்: 

https://www.nature.com/articles/d41586-021-01681-w 

- ஜஸ்ரின் 

 

இந்த நீண்ட கட்டுரை அருமை. நேரம் எடுத்து பொறுமையாக வாசிக்க வேண்டிய கட்டுரை. ஒரு த்ரில்லிங் கதையை வாசித்த மாதிரி இருந்த அறிவியல் கட்டுரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஆக்கத்துக்கு நன்றி ஜஸ்ரின். புரிவதற்கு சற்றுக் கடினமான விடயத்தை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிகைப்படுத்தாமல் எழுதியுள்ளீர்கள். பேலியோ உணவு முறை என்பது 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் தானியங்களை உண்ணவில்லை என்பது போன்ற தவறான கோட்பாடுகளை நம்பி உருவாக்கப்பட்ட உணவு முறை என்பதை தெளிவாக கட்டுரை விளக்குகின்றது.

 

இந்த நீண்ட கட்டுரை அருமை. நேரம் எடுத்து பொறுமையாக வாசிக்க வேண்டிய கட்டுரை. ஒரு த்ரில்லிங் கதையை வாசித்த மாதிரி இருந்த அறிவியல் கட்டுரை.

ஆம், நிழலி. நான் அண்மையில் வாசித்த கட்டுரைகளில் மிகவும் சிறப்பான கட்டுரை இதுவெனக் கருதுகிறேன்! 

ஊக்கத்திற்கு நன்றி, இப்பதிவுகளை முகநூல் போன்ற சமூக வலையூடகங்கள் மூலம் ஏனையோருக்கும் எடுத்துச் செல்லலாம்! எனக்கு முகநூல் கணக்கு இல்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.