Jump to content

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021இல், உலகளாவிய தமிழ் மன்றம் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அரசாங்கம் வர்த்தமானியாக  வெளியிட்ட நிலையில், ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தாங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும் அண்மையில்கூட, பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  இலங்கையின் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க, தாங்கள் யாருடனும் பேசத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பேச விரும்பும் உள்நாட்டு வழிமுறைகளைப் பொறுத்தவரை, நீதித்துறை அல்லாத செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1240564

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா அல்லது இவர்களும் கோத்தாவின் பினாமிகளா? 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

நரியை நம்பிச்சென்ற நண்டுகளின் கதையை நாங்கள் அரிவரியிலேயே படித்துள்ளோம்.

95125505_108612347503557_7313599401165848576_n.jpg?_nc_cat=109&ccb=1-5&_nc_sid=6e5ad9&_nc_ohc=arzG0rbyNJEAX-ySXYq&_nc_ht=scontent-muc2-1.xx&oh=92dc7293e8d5760839850f4c8ca119ab&oe=61724D28

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் கட்சி தாவி பல காலம்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

சுரேன் கட்சி தாவி பல காலம்…

அவசரமாக விடும் போதே  தெரிந்தது தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பேச்சு வார்த்தை நடத்தும் குறுப்பை எந்த குழுவில் சேர்ப்பார்கள்.🙄🙄

Link to comment
Share on other sites

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

நா.க.அரசாங்கத்தை விட வெளிநாடுகளில் முகவரி அற்ற அறிவிப்புகள் விடாத வேறெந்த அமைப்புகள் உள்ளன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் , உலக தமிழர் பேரவை கேள்வி?

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டுள்ளதை வரவேற்றுள்ள உலகதமிழர் பேரவை ஜனாதிபதியின் மனமாற்றத்திற்கு காரணம் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் இலங்கையில் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வேண்டுகோள்களை விடுக்கும்போது அவை தாமதிக்கப்படுகின்றன வலுவற்ற காரணங்களை தெரிவித்து நிராகரிக்கப்படுகின்றன எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
gtf-1.jpg
ஆறுமாதத்திற்கு முன்னர் – மார்ச்மாதத்தில்-உலக தமிழர் பேரவை போன்ற அமைப்புகளையும் என்னையும் வேறு பலரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்தும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்த நிலையி;ல் ஏன் தற்போது மனமாற்றம் எனவும் உலக தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
தனது வாக்காளர்களின் நிலைப்பாடுகளிற்கு மாறாக பாரிய நிலைப்பாட்டு மாற்றத்தை அறிவித்துள்ள ஜனாதிபதி தனது நடவடிக்கைகளை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டிய நிலையேற்படும் அதுவே அவர் இந்த விடயத்தில் எதிர்கொள்ளப்போகும் முதல்சவால் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மிகவும் சமீபத்தில் கூட வடக்குகிழக்கிற்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கான மருத்துவ உபகரணங்களை நாங்கள் வழங்கியிருந்தோம் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரையும் மற்றும் அமைப்புகளையும் அரசாங்கம் தடை செய்துள்ளதால் அதற்கு வருடாந்த இழப்பு 300மில்லியன் டொலர்கள் என எமது கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி எங்களை இரண்டு தடவை லண்டனிலும் ஜேர்மனியிலும் சந்தித்தார்.
எங்கள் மக்களின் துயரங்கள் குறித்து – இலங்கை மக்களின் துயரங்கள் குறித்து நாங்கள் எவருடனும் பேச தயாராக உள்ளோம் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Gotabaya-Rajapaksa-2-768x384-1-300x150.j
ஜனாதிபதி எங்களுடன் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறையின் உள்நாட்டு பொறிமுறை குறித்து பேச விரும்புகின்றார்- நீதி மற்றும் நீதிசாரத நடைமுறைகளும் பொறிமுறைகளும் உள்ளன என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/138862

Link to comment
Share on other sites

2 minutes ago, Eppothum Thamizhan said:

இணையவன் இதை clipboard இல் copy பண்ணி வைத்திருக்கிறார்போல இருக்கு? வேறு எங்கோ பார்த்த ஞாபகம்??

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

8 minutes ago, கிருபன் said:
நீதிசார செயற்பாடுகள் மற்றும் உள்ளக பொறிமுறை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ஆனால் நீதிதுறை பொறிமுறையை பொறுத்தவரை என்ன செய்யவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவை தீர்மானம் தெளிவாக தெரிவித்துள்ளது என உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, இணையவன் said:

விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து 11 வருடங்களைக் கடந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அறிவிப்பு நல்லதொரு முயற்சி அல்லவா ?

மிகவும் நல்லதொருமுயற்சி ...
கோத்தாவின் கண்டீஷன் : பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டி வரும், எப்படியும் ஒருவருடத்திற்கு ஒன்று என்று  மினிமம் 10 வருஷம் இழுத்தாலும் போதும், அதற்க்கு முதல் உங்களால் 
எவ்வளவு முடியுமோ அவ்வளவு இலங்கையில் முதலீடு செய்யவேண்டும், பேச்சுவார்த்தையெல்லாம் நாங்கள் வெளிநாட்டில் தான் நடத்துவோம், எங்கடை பரிவாரங்களோடு வாறது முதல் திங்குறது ப்ரேசிடன்ஸியல் சூட்டில் தங்குறது மீண்டும் திரும்பி போவது வரை உங்களோட செலவு, உங்களுடைய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க பேச்சின் சுற்றுக்களும் அதிகரிக்கும் ,விஜயன் கள்ளத்தோணியில் வந்து இறங்கினதில் இருந்து நிறைய விஷயம் பேசவேண்டி இருக்கு
(இப்பிடித்தான் வலையை நாங்க விரிப்போம் , வெளிநாடுகளில் நிறைய கொழுத்த ஆடுகள் எங்க தலையை விடலாம் என்று திரியுது, கொண்டுவந்து தலையை விடட்டும் ஒரே அடியாக போட்டு பிரியாணி பண்ணிவிடவேண்டியதுதான்  வந்தவரைக்கும் இலாபம்)    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தே. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை என்று அழைப்பு விடுத்தார், பின் தட்டிக்கழித்தார். புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தார், இப்போ பேச்சுக்கழைக்கிறார். இதிலிருந்து தெரியேல்லை..... எல்லாம் புலம் பெயர்ந்தவர்களால்  தனக்கு ஒரு பிரச்சனையுமில்லாமல், பேரப்பிள்ளையையும் பார்த்துவிட்டு  சுகமாக  கட்டுநாயக்காவை வந்தடைவதற்கு பிளான் பண்ணியே போயிருப்பார் போல. அண்ணன்காரன் லண்டனில் இருந்து ஒழித்து ஓடிவந்த அனுபவம் தெரியுந்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக கையாளப்படணும்

புலத்தில்  சிங்களம்  பலமாக  கால்  பதித்து  விட்டுத்தான்  இக்கோரிக்கையை  விடுக்கின்றான்😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி போகவும் முடியாது.

நம்பாமல் போகாமலிருக்கவும் முடியாது.

அனுப்ப நம்பிக்கயான ஆக்களும் இல்லை.

22 minutes ago, விசுகு said:

கவனமாக கையாளப்படணும்

புலத்தில்  சிங்களம்  பலமாக  கால்  பதித்து  விட்டுத்தான்  இக்கோரிக்கையை  விடுக்கின்றான்😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரம்பேசும் சக்தியை இழந்துவிட்ட தமிழினம் இனிமேல் இலங்கை தீவில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளர்களாவது தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள் என்று நம்பினால் அவர்கள் முதலில் பேச்சு நடத்த வேண்டியது ஆட்சியாளர்களுடன் அல்ல  பிக்குகளுடன்தான்.

எந்த ஆட்சியாளர்கள் என்ன தீர்வு தர முயன்றாலும் பெளத்த பிக்குகளின் அனுமதியின்றி ஒருபோதும் அதை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்தவும் விடமாட்டார்கள்.

அடுத்து நேர்த்தியான ஒரு தலைமைத்துவத்தை கொண்டிராத புலம்பெயர் அமைப்புக்கள் பல இருக்கும் சூழலில் ஒரு அமைப்புடன் பேச்சு நடத்தினால், தமக்கு  முக்கியத்துவம் தரவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்து போட்டி போட்டுக்கொண்டு மற்றைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதை சீர் குலைப்பார்கள்.

மொத்தத்தில் சிங்களவனிடமும் தமிழனிடமும் சரியான தலைமைத்துவம் இல்லை, நல்லது நடந்தால் மகிழ்ச்சியே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நம்பி போகவும் முடியாது.

நம்பாமல் போகாமலிருக்கவும் முடியாது.

அனுப்ப நம்பிக்கயான ஆக்களும் இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு  முன்பே இதற்கான ஆயுத்தங்களை  சிங்களம் செய்யத்தொடங்கி விட்டது

தோல்வியால் நாம் துவண்டுவிட

தோல்வி  எம்மை கூறுபோட

தோல்வியால் எம்மவர் எதிரியிடம் பிடிபட

தோல்வி எம்மை பலவீனமாக்க.........

என்  போன்றவர்கள் பல முறை  பல  இடங்களில் அழுதும் புரிந்து  கொள்ளாமல்

இருந்த  அமைப்புக்களையெல்லாம் பலவீனமாக்கி..........

மறுகரையில்  சிங்களத்துக்கு ஒரு  கல்லில் பல மாங்காய்கள்.....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பின் அறிக்கை (தினக்குரலில் தெளிவான தமிழில் இருப்பதன் படி) அடிபணிந்து பேசப் போவதாகச் சொல்லவில்லை. இருக்கும் சவால்களையும், குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி விட்டு, யாருடனும் நாம் பேசத் தயார் என்கிறது. 

இதை விலைபோனவர்/கட்சி மாறியவர் அறிக்கை என்று குறிப்பிடுவோர்  யாரிடம் உலகத்தின் எந்தப் பிரதேசத்திலிருக்கும் தமிழர் பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டுச் சொன்னால் சிறப்பாக இந்த திரியைக் கொன்டு செல்லலாம்! 

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

ready, set, GO! 😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த அமைப்பின் அறிக்கை (தினக்குரலில் தெளிவான தமிழில் இருப்பதன் படி) அடிபணிந்து பேசப் போவதாகச் சொல்லவில்லை. இருக்கும் சவால்களையும், குறைபாடுகளையும் சுட்டிக் காட்டி விட்டு, யாருடனும் நாம் பேசத் தயார் என்கிறது. 

இதை விலைபோனவர்/கட்சி மாறியவர் அறிக்கை என்று குறிப்பிடுவோர்  யாரிடம் உலகத்தின் எந்தப் பிரதேசத்திலிருக்கும் தமிழர் பேச வேண்டுமென்றும் குறிப்பிட்டுச் சொன்னால் சிறப்பாக இந்த திரியைக் கொன்டு செல்லலாம்! 

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

ready, set, GO! 😎 

சரி பேசுவோம் சகோ.

எல்லாம் பலவீனமாக இருக்கு என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் யார் உங்கள் தெரிவு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சுரேன் சுரேந்திரன் ரூட் ரவியருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதையும், இமானுவல் அடிகளாரது சரணாகதிக்குக்காரணம் என்ன என்பதையும் விளக்கவும், அண்மையில் யாழ் களத்தில் ஒரு உறவு இவர்களது தகிடுத்தித்தங்களையிட்டு ஒரு ஆக்கத்தை இணைத்திருந்தார். அதை யாராவது முடிந்தால் மூழவும் இணைக்கவும் அது இனியொரு இணையத்தளத்தில் வந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரி பேசுவோம் சகோ.

எல்லாம் பலவீனமாக இருக்கு என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் யார் உங்கள் தெரிவு??

என்னுடைய தெரிவுகள் இவை: 

கேள்வி 1 , பதில்: தாயகத்தில் இருக்கிற தமிழ் பிரதிநிதிகள் தான் பேச்சில் அடக்க வேண்டிய விடயங்களைத் தீர்மானிக்க வேண்டும். மண் ஆக்கிரமிப்புக் குறைப்பு, நீதி விசாரணை, இனப்படுகொலை விசாரணை, நிரந்தரத் தீர்வுக்கான அரசியலமைப்பு மாற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - இப்படியான laundry list விடயங்களுள் எவற்றுக்கு முதன்மை கொடுப்பது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், இவையெல்லாமே எமக்குக் கிடைக்காது! ஏதாவது கிடைக்கலாம் - ஆனால் எங்கள் bottom line என்ன என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் முதலில். 

(எப்படித் தீர்மானிப்பது? கட்சிகள் சேர்ந்து ஒரு consortium இனை அமையுங்கள். ஈகோ பிரச்சினை, baggage உடைய ஆட்களான சுமந்திரன், விக்கியர், கஜன் போன்றோர் இந்தக் குழுவில் இணைய வேண்டியதில்லை! ஒவ்வொரு கட்சியிலும் தகுதியுடைய, ஒரு middle ground இற்கு வரும் வகையில் உறவைப் பேணக் கூடிய ஒருவரை நியமித்து, பூட்டிய அறையினுள் இருந்து பட்டியலைத் தீர்மானியுங்கள்! பிறகு கட்சிகளின் தலைவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்)

கேள்வி 2, பதில்: இலங்கை அரசு. 


தமிழர் பலம் குறைவு தான், ஆனால் நாம் பலம் பெறும் காலம் வரும் வரை  காத்திருப்பது அலை ஓயும் வரை கடலைத் தவிர்ப்பது போலாகும்! கிடைத்திருக்கும் வாய்ப்பு சிங்களவருக்கு உருவாகியிருக்கும் பொருளாதார பலவீனம் - அதை மட்டுமே இப்போது பாவிக்கலாம்!

Link to comment
Share on other sites

தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

என்னுடைய தெரிவுகள் இவை: 

கேள்வி 1 , பதில்: தாயகத்தில் இருக்கிற தமிழ் பிரதிநிதிகள் தான் பேச்சில் அடக்க வேண்டிய விடயங்களைத் தீர்மானிக்க வேண்டும். மண் ஆக்கிரமிப்புக் குறைப்பு, நீதி விசாரணை, இனப்படுகொலை விசாரணை, நிரந்தரத் தீர்வுக்கான அரசியலமைப்பு மாற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - இப்படியான laundry list விடயங்களுள் எவற்றுக்கு முதன்மை கொடுப்பது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், இவையெல்லாமே எமக்குக் கிடைக்காது! ஏதாவது கிடைக்கலாம் - ஆனால் எங்கள் bottom line என்ன என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் முதலில். 

(எப்படித் தீர்மானிப்பது? கட்சிகள் சேர்ந்து ஒரு consortium இனை அமையுங்கள். ஈகோ பிரச்சினை, baggage உடைய ஆட்களான சுமந்திரன், விக்கியர், கஜன் போன்றோர் இந்தக் குழுவில் இணைய வேண்டியதில்லை! ஒவ்வொரு கட்சியிலும் தகுதியுடைய, ஒரு middle ground இற்கு வரும் வகையில் உறவைப் பேணக் கூடிய ஒருவரை நியமித்து, பூட்டிய அறையினுள் இருந்து பட்டியலைத் தீர்மானியுங்கள்! பிறகு கட்சிகளின் தலைவர்களை வழிக்குக் கொண்டு வாருங்கள்)

கேள்வி 2, பதில்: இலங்கை அரசு. 


தமிழர் பலம் குறைவு தான், ஆனால் நாம் பலம் பெறும் காலம் வரும் வரை  காத்திருப்பது அலை ஓயும் வரை கடலைத் தவிர்ப்பது போலாகும்! கிடைத்திருக்கும் வாய்ப்பு சிங்களவருக்கு உருவாகியிருக்கும் பொருளாதார பலவீனம் - அதை மட்டுமே இப்போது பாவிக்கலாம்!

 

 

1- நான் பலகாலமாக இதைத்தான் எழுதி  வருகின்றேன். முன்னர் போராடினேன் என்பது  கூட இனிவேண்டாம். மக்களுக்கிடையிலிருந்து தகுதியானவர்கள் அவர்களோடு இன்றும்  நிற்பவர்கள் தமக்கு ஏதாவது  செய்வார்கள்  என  தாயக  மக்கள்  நம்புபவர்கள் முன் கொண்டு  வரப்படவேண்டும்.

2- புலம் பெயர்  தேசத்து  பொருளாதாரமும் அறிவியலுமே இன்று சிங்களவனுக்குள்ள ஒரே  தெரிவு

அதை முதலில் தாயகத்தமிழர் உணரணும்  பயன்படுத்தணும்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

அமைச்சர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். அதை முயன்று பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்.

இங்கே அந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சுரேன் என்பவர் எப்படி என்று தெரியாது. இதிலும் துரோகி முத்திரை குத்த முயல்பவர்கள் அதற்கு ஈடாக வேறென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

 

ஒரு துரோகி உருவாகிறார்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nunavilan said:

தாயகத்தில் உள்ள மக்களுக்கு அவர்களின் பிரதிநிதிகளுடன்  பேசாமல் புலம்பெயர் தமிழர்களுடன் ஏன் கோத்தா  பேச நினைக்கிறார். அதுவும்  இவ்வளவு காலம் கடந்து.?

அதைத்தான் நானும் கேக்கிறன்.இலங்கையில் இதற்கென  தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

பேச்சு வார்த்தையில் எற்படும் உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும்போது..அதற்கு எதிராக செயலாற்றம் எவரும் எந்தவித கருணையும்  பாகுபாடின்றி  சுட்டுக்கொல்லப்படுவர் என்று உறுதி தருபவருடன்

5 hours ago, Justin said:

இரண்டாவது கேள்வி: உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் பேச வேண்டும்?

இந்தியா விரும்பினால் மட்டும் தமிழ்ஈழம் கிடைக்கும்  என்று நம்பும் தமிழருடன். அதேநேரம் இந்தியா விரும்பமையால் தான் புலிகள் தமிழ்ஈழம் பெறவில்லை என்பதையும் உறுதியடன் நம்பவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.