Jump to content

ஜனாதிபதியுடன்... தொடர்பு கொள்ளத் தயார் – புலம்பெயர்ந்த தமிழர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அதைத்தான் நானும் கேக்கிறன்.இலங்கையில் இதற்கென  தமிழ் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் எல்லோ?

இவரு அந்த இமனுவெல் பாதிரி போல இலங்கைக்கு போய் பொச்சுக் கொட்டுறதிற்கு பிளான் போடுறார்..

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Quote

முதல் கேள்வி: யாருடன் தமிழர்கள் பேச வேண்டும்?

தமிழர்கள் சார்பாக சுமந்திரன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார், வீணாக புலம் பெயர் தமிழர்கள் இதற்குள் மண்டையை ஓட்டி குழப்பாமல் அவரை முதலில் ஒரு முடிவுகாண விடுங்கள், குறைந்தபட்சம் நம்பத்தகுந்த, ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு வருவிழைவு இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டால் மட்டுமே இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் புலம் பெயர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறதா இல்லை இருக்கும் பஞ்சத்தில் எவனையாவது  கூப்பிட்டுவைத்து ஏமாற்றி  அறுத்தாவது சாப்பிடுவோம் என்ற கபட நோக்கத்துடன் அழைக்கிறதா என்பதை தர்க்கரீதியாகவேனும்  முடிவுசெய்யலாம் (வர்த்தமானியில் தடை செய்து விட்டு இப்போ பேச்சுக்கு வாங்கோ என்று கூப்பிடும் போதே அலர்ட் ஆகிடுங்கோ, இந்த நிமிடம் வரை இலங்கையில் நீங்கள் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் கைது செய்யப்படக்கூடியளவில் தான் நிலைமை உள்ளது ), அதை விட்டு கோத்தா குழைந்ததை பார்த்து உருகி ஊத்துப்பட்டு விழுந்தடித்துகொண்டு  போய் கதிரையில் உட்ட்கார்ந்துவிட்டு பிறகு  சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று பாட்டு பாடும் நிலைமையை ஏற்படுத்திக்கொள்ளாதீங்கோ  
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு துரோகி உருவாகிறார்.😄

ஏற்கனவே கறுப்பு பட்டியலில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களை நோக்கிய கோத்தாவின் அழைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

புலம்பெயர் தமிழர்களை நோக்கி சிறிலங்கா அதிபர் கோத்தா விடுத்திருந்த அழைப்பு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது கருத்தினை தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதாவது

 

யூத இனப்படுகொலையினைப் புரிந்த ஹிட்லர் ஆட்சியில் இருக்க முடிந்திருந்தால், புலம்பெயர் யூதர்களுடன் பேச ஹிட்லர் அழைப்பது போன்றே, புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கான சிறிலங்கா அதிபர் கோத்தாவின் அழைப்பு உள்ளது.

Rudrakumaran2-300x200.jpg
 

இனப்படுகொலையினை புரிந்த அரசுடன் முக்கிய விடயமான தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக உரையாடல் நடத்துவது கடினமான ஒன்றாகும்.

எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானதொரு முன்னவசிமாகும். இலங்கைத்தீவில் அமைதியை கொண்டுவருவதில் கோத்தாவுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், முதற்படியாக, ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையர் அல் {ஹசைன் அவர்கள், 2015ல் பரிந்துரைத்திருந்த ‘ரோம் உடன்படிக்கையில்’ கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும். மேலும் கைச்சித்திட்டு பின்னோக்கி காலத்தையும் உள்வாங்கியதாக வேண்டும். இறுதிப்போரில் நடந்த இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர் கைதிகள், அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ‘பொது மன்னிப்பு’ என்ற ‘விசர்’ கதைகளை குப்பையில் போடுங்கள். யாரை யார் மன்னிப்பது ?

gota-un-300x169.jpg

தமிழர் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமயமாக்கல் நீக்கம் (விலக்கி) செய்யப்பட வேண்டும். மேலும், காணாமல்போனோவர்களுக்கான அலுவலகத்தை ஒரு நடுநிலையான, நம்பகமான நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் நியமிக்கும் நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர் உறவுகள் பங்கெடுக்கின்ற வகையிலான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அந்நிய முதலீடுகளை தீர்மானிக்கின்ற அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

இறுதியாக, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரு. டேவிட் கேமரூன் அவர்கள், ஸ்கொட்லாந்து விவகாரத்தில் பொது வாக்கெடுப்புக்கான உறுதியான கால அட்டவணையை அமைத்து போல், தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாமே முடிவு செய்கின்ற வகையில் பொதுவாக்கெடுப்புக்கான நடவடிக்கையினை தமிழர் அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். இப்பொதுவாக்கெடுப்பில் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழம் உள்ளடங்க பல்வேறு அரசியல் தீர்வுகள் உள்ளடங்கலாக இருக்க வேண்டும்.

 

தேவையான இந்த செயல்வழிப்பாதையை சிறிலங்கா அதிபர் நிறைவேற்றிய பிறகு, பேச்சுக்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதுவே இலங்கை தீவின் நிரந்தரமான அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மற்றும் செழிப்புக்குமான வழித்தடமாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துரைத்துள்ளது.
 

https://thinakkural.lk/article/139075

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புலி அமைப்புகள் வேறு ; புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு ; பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை - ஆளுந்தரப்பு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும்  தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை.

நாட்டை ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியில் சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபையில் கூறுகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு  ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால்  இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாய்மூல அறிக்கையில் உள்ளடக்க விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினார்,

இது குறித்து ஆளுந்தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார விவாதத்தில் உரையாற்றுகையில்,

நாட்டின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த கருத்து தொடர்பில் பல விமர்சனக்கருத்துக்கள் எழுந்துள்ளன. புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, புலம்பெயர் தமிழ் புலி அமைப்புகள் வேறு என்பதை முதலில் சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எவ்வாறு உருவாகியது.

1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட கருப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அநியாயங்கள் காரணமாக, வரலாற்றில் அழிக்கவே முடியாத அந்த சம்பவத்தினால் இந்த நாட்டில் வாழ்ந்த கற்ற தமிழ்  சமூகத்தினர், பொருளாதார ரீதியில் பலமாக இருந்தவர்கள், வியாபாரிகள் சகலருக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

f3b4b61b568e0de2f1c5e6560178c8d8_XL.jpg

தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆரம்பத்தில் இந்த நாட்டில் தமிழ் வைத்தியர்கள் அதிகளவில் இருந்தனர், பாகுபாடு இல்லாது அவர்களின் சேவை எம் அனைவருக்கும் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் முக்கியமான ஒரு தரப்பை இந்த நாட்டை விட்டு விரட்டியடித்தனர். அவர்களே சர்வதேச தளத்தில் புலம்பெயர் அமைப்புகளை உருவாக்கினர்.

இன்று ஒரு பக்கம் விடுதலைப்புலிகள் அமைப்புகள் உள்ளன, மறுபக்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் உள்ளனர். தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலும் எந்த தவறும் இல்லை. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்துவிட்டது.

தற்போது வரையிலும் 12 ஆயிரத்திற்கு அதிகமான முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்து சமூக மயப்படுத்தியுள்ளோம். இது குறித்து ஏன் எவரும் பேசுவதில்லை. சிறையில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கலாம் தவறில்லை,.

ஆனால் சர்வதேசத்திடம் செல்லும் வேளையில் நாம் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் பயணிக்க வேண்டும் . இலங்கை இராச்சியத்தில் எதிர்க்கட்சிகளும் உள்ளன. ஆகவே இதனை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும. சர்வதேச மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் ஒன்றாக செயற்பட வேண்டும்.  சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது உரையாற்றுகையில்,

அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. முன்னைய ஆட்சியில் இதே கொள்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆதரித்தவர்கள் இன்று அதனை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து ஆரோக்கியமான விடயங்களையும் முன்வைத்துள்ளார் . நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அவர் ஆதரித்துள்ளார். உள்ளக பொறிமுறையில் அவருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது.

99.jpg

நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தூதரகங்கள், ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் கலந்துரையாடி வருகின்றோம். பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து தெளிவான நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளோம். உள்ளக பொறிமுறை மூலமாக இதனை நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை 15 நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரித்துள்ளன.

சர்வதேச தரப்பில் உயரிய மட்ட பேச்சுவார்த்தைகளை இப்போதும் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு  ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம். சவால்களை வெற்றிகொள்ள சகல விதத்திலும் முயட்சிக்கின்றோம் என்றார். 
 

https://www.virakesari.lk/article/113870

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற தெமலு டயஸ்போரா என்றும், கொட்டி டயஸ்போரா என்றும் கத்தி கத்தி பதவிக்கு வந்து திரும்பவும்  அப்படியே கத்தி கத்தி அமைப்புகளை தடைசெய்து சிங்கள இனவெறியர்களை உசுப்பேற்றியே சதாகாலமும் ஆட்சியிலிருக்கலாம் என்று நினைத்த இனவாதிகள் இன்று கோவணத்திற்கும் வழியில்லாமல் நிக்கினம், இனி தங்களை Bail out பண்ண (பிரதியுபகாரம் பார்க்காமல் உதவ) கொட்டி  டயஸ்போறாக்களை விட சிறந்த இலங்கையர்களோ, மனிதர்களோ இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை என்று வாயால்  தேன் ஒழுக ஒழுக கதைப்பார்கள். கதையில் மனம்குளிர்ந்து அள்ளிக்கொடுத்துவிட்டு அம்போ என்று தலையில் கைவைத்துக்கொண்டு நிற்காதீங்கோ    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

சிறைச் சாலையில் கொல்லப்பட்டோர் யார்? எதற்காக கொல்லப்பட்டனர் என்றும் விளக்கிய பின் உந்த கருத்தை சொன்னால் கேட்பவர்கள்  விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும். நாடு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது இவர்கள் கொடுக்கும் விளக்கத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கஸ்ரப்பட்டு பெற்ற தீர்வு மாகாண சபை ....புதிய மாகாண அரசு தெரிவு செய்யும் வரை மாகாண அரசைக் கலைக்கது வைத்திருத்தல் வேண்டும் 

பல தடவைகள் பேசி தீர்வு எட்டப்பட்டுள்ளது ஆனால் செயல்ப்டடுக்கு வரவில்லை  காரணம் எதிர்ப்பு...புத்தபிக்குகளின் எதிர்ப்பு...இனிவரும் பேச்சுவார்த்தைகளிலும் இதுவே நடைபெறும் இப்படி நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை 

போர்குற்றவாளியுடன் நாங்கள் தமிழர்கள் நேரடியாக பேசினால் அவன் போர் குற்றவாளி இல்லை என்று ஆகி விடும் எனவே மனித உரிமை பேரவையின் விசாரணை  முடியும் வரை நாம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது

தமிழரின் தலையில் குண்டுகள் போட்டபோது யாருடன் பேசி குண்டுகள் போட்டாய். தமிழ் பெண்களை கற்பழி என்றும் தமிழ் ஆண்களை கொன்று முல்லைத்தீவுக் கடலில் போடுமாறு கூறியவனுடன் என்னத்தை..எப்படி பேச முடியும் 

தீர்வு உன்னிடம் இருந்தால் தமிழனுடன் பேசாமல் நடைமுறைப்படுத்தமுடியாத. புலம்பெயர் தமிழன் தலையில் குண்டு போடமுடியவில்லை. எனவே பேச்சுவார்த்தை என்னும் எலிப்பொறியை  வைக்கிறார் வேதனை என்னவென்றால் பல தமிழர்கள் எற்கனவே மாட்டிக்கொண்டு விட்டார்கள் கோத்தா மனித உரிமைபேரவையைப் பார்த்துக் கேட்க போகிறார் நான் தமிழருடன் பேசுகிறேன் நான் எப்படி போர் குற்றவாளி ஆக முடியும் 

சுமந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது காரணம் போர் குற்றம் நடத்துள்ளது நிருபிக்க முடியாது என்றும் எனவே போர்குற்ற விசாரணை தேவையில்லை‘ என்றவர்..எங்களுக்கு போர் குற்ற விசாரணை முடிவு பற்றி கவலையில்லை...விசாரணை நடைபெற வேண்டும்..6...7...வருடங்கள்  இழுத்தடித்து முடிவு வர வேண்டும் அங்கே நாங்கள் உரத்துக் பேச வேண்டும் 

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை

நாங்கள் போரை விரும்பவில்ல...போராட நிர்ப்பந்தம் செய்யப்பட்டோம்...இனக்கலவரங்கள் என்ற பெயரில் தமிழன் வக..தொகை இன்றி கொல்லப்பட்ட ஆன...  இப்படியாக சர்வதேச அரங்கில் எமது நியாயத்தை எடுத்துசொல்லும் மேடை போர் குற்ற விசாரணை ஆகும்  சுமந்திரன் அதனை இல்லாமல் செய்ய முயற்சி க்கிறார்

Link to comment
Share on other sites

Global Tamil Forum (GTF) does not represent the Tamil Diaspora

https://www.einpresswire.com/article/552174901/global-tamil-forum-gtf-does-not-represent-the-tamil-diaspora

 

சுரேன் எனும் தனி நபர் நடாத்தும் இந்த அமைப்பு சிறிலங்கா அரசால் தற்போது வழி நடாத்தப் படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சிறீலங்கா அரசு எங்கு இருந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதைத்தொடர்ந்து அவசர அசரமாக சுரேன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது அவரின் அவசரம்.

இதுவரை காலமும் அதவது 2009இல் இருந்து இன்று வரை தாயக மக்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவோ GTF இன் செயற்பாடு யாது?

அரசுடன் எதை நோக்கி பேசப் போகிறார்?

ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மிஸ்டர் சுரேன் புலம்பெயர் சுமந்திரனா.....?    உருப்பட்ட மாதிரித்தான்  அப்போ பயப்படவே தேவையில்லை 
தாராளமாக போய் பேசுங்க மிஸ்டர் சுரேன், நோ பிராப்லம் அட் ஆல் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, narathar said:

Global Tamil Forum (GTF) does not represent the Tamil Diaspora

https://www.einpresswire.com/article/552174901/global-tamil-forum-gtf-does-not-represent-the-tamil-diaspora

 

சுரேன் எனும் தனி நபர் நடாத்தும் இந்த அமைப்பு சிறிலங்கா அரசால் தற்போது வழி நடாத்தப் படுகிறது.

நாரதர், நன்றி.  லவன் முத்து பொதுப்படையாக "இந்த அமைப்பு தமிழ் மக்களின் நன்மைக்காகச் செயல்படவில்லை" என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அத்தோடு ஊர் சங்கக் கடை அமைப்புகளில் வழமையாக முன்வைக்கப் படும் குற்றச்சாட்டான "கணக்குக் காட்டவில்லை" என்றும் சொல்லியிருக்கிறார். 

2012 இல் என்ன மாறியது?, நீங்கள் குறிப்பிட்டது போல, எப்படி சிறிலங்கா இவ்வமைப்பை வழி நடத்துகிறது என்று விபரம் தாருங்கள்! 

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழருக்கு தம்மிடையே ஒற்றுமை இல்லை, ஒருவரை ஒருவர் கள்ளன் என்றும் துரோகி என்றும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றார்கள் , அதற்குள் அவர்கள் தாயக அரசியல் வாதிகளுக்கு  பாடம் எடுக்கின்றார்கள். இவர்களுடன் ஒப்புடும் போது தாயக அரசியல் வாதிகள் பரவாய் இல்லை போல் உள்ளது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அறிக்கை விட்டிருக்கும் Reformed GTF இன் மின்னஞ்சல் முகவரி nainaimoon@gmail.com : நாய்நாய்மூன்?  பான் கீமூனுக்கு உள்குத்தா இது?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Breaking News: Tamil Diaspora Organization's Declaration of Common Principles of Tamils " 

 

NEW YORK, UNITED STATES OF AMERICA, September 23, 2021 /EINPresswire.com/ -- Six Tamil Diaspora organizations jointly issued Declaration of Common Principles of Tamils: 
 
1) An internationally conducted and monitored Referendum that allows people living in the north-eastern region of the island of Sri Lanka (Northern and Eastern province) prior to 1948 and their descendants to find a democratic, peaceful, permanent, and political solution that meets Tamils' aspirations. 
 
2) An interim International Protection Mechanism in the north-eastern region of the island. 
 
3) The Repeal of the Sixth Amendment to the Sri Lankan Constitution 
 
4) The referral of the situation in Sri Lanka to the International Criminal Court with respect to genocide, crimes against humanity and war crimes, and legal action against Sri Lanka before the International Court of Justice under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and the Convention against Torture. 
 
Seetharam Sivam, President, United States Tamil Action Group(USTAG) 
 
Meena Ilancheyan, President Tamil Americans United PAC 
 
Viswanathan Rudrakumaran, Prime Minister Transnational Government of Tamil Eelam (TGTE) 
 
Rajendra Nadaraja, President Ilankai Thamil Sangam Ravi Subramaniam, 
 
President World Tamil Organization (WTO) 
 
Shanthini Jeyarajah, President North Carolinians for Peace 
 
BELOW, PLEASE FIND THE FULL DECLARATION:  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

chrome://external-file/EINPresswire-552173469-breaking-news-tamil-diaspora-organization-s-declaration-of-common-principles-of-tamils.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

Breaking News: Tamil Diaspora Organization's Declaration of Common Principles of Tamils " 

 

NEW YORK, UNITED STATES OF AMERICA, September 23, 2021 /EINPresswire.com/ -- Six Tamil Diaspora organizations jointly issued Declaration of Common Principles of Tamils: 
 
1) An internationally conducted and monitored Referendum that allows people living in the north-eastern region of the island of Sri Lanka (Northern and Eastern province) prior to 1948 and their descendants to find a democratic, peaceful, permanent, and political solution that meets Tamils' aspirations. 
 
2) An interim International Protection Mechanism in the north-eastern region of the island. 
 
3) The Repeal of the Sixth Amendment to the Sri Lankan Constitution 
 
4) The referral of the situation in Sri Lanka to the International Criminal Court with respect to genocide, crimes against humanity and war crimes, and legal action against Sri Lanka before the International Court of Justice under the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide and the Convention against Torture. 
 
Seetharam Sivam, President, United States Tamil Action Group(USTAG) 
 
Meena Ilancheyan, President Tamil Americans United PAC 
 
Viswanathan Rudrakumaran, Prime Minister Transnational Government of Tamil Eelam (TGTE) 
 
Rajendra Nadaraja, President Ilankai Thamil Sangam Ravi Subramaniam, 
 
President World Tamil Organization (WTO) 
 
Shanthini Jeyarajah, President North Carolinians for Peace 
 
BELOW, PLEASE FIND THE FULL DECLARATION:  

 

என்னுடைய தாழ்மையான கருத்து: இந்தத் தீர்மானம் எங்கேயும் நகரப் போவதில்லை!

மேலேயிருக்கும் நான்கில், மூன்றாவது நடந்தால் தான் மிகுதி மூன்றும் நடப்பதற்கான வெளியே திறக்கும்!

சிங்களவர்கள் ஒரு நாடு என்றிருக்கும் வரை மூன்றாவதை நிறவேற்றப் போவதில்லை! எனவே, இந்த அறிக்கை "இலங்கையோடு பேச மாட்டோம்" என்ற ஒரு வரிப் பதிலின் நீண்ட வடிவம் தான்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

என்னுடைய தாழ்மையான கருத்து: இந்தத் தீர்மானம் எங்கேயும் நகரப் போவதில்லை!

மேலேயிருக்கும் நான்கில், மூன்றாவது நடந்தால் தான் மிகுதி மூன்றும் நடப்பதற்கான வெளியே திறக்கும்!

சிங்களவர்கள் ஒரு நாடு என்றிருக்கும் வரை மூன்றாவதை நிறவேற்றப் போவதில்லை! எனவே, இந்த அறிக்கை "இலங்கையோடு பேச மாட்டோம்" என்ற ஒரு வரிப் பதிலின் நீண்ட வடிவம் தான்!
 

முதலே அரைவாசி என்று கேட்கப் போனால் அதிலும் குறைவாகவே தருவார்கள்.

ஆனபடியால் கூடுதலாக கேட்டால்த் தான் கொஞ்சம் குறைத்தேனும் கிடைக்கலாம்.

அவர்கள் விரும்பும் தீர்வுக்கு ஆமா போடுவதென்றால் அப்புறம் ஏன் பேச்சுவார்த்தை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலே அரைவாசி என்று கேட்கப் போனால் அதிலும் குறைவாகவே தருவார்கள்.

ஆனபடியால் கூடுதலாக கேட்டால்த் தான் கொஞ்சம் குறைத்தேனும் கிடைக்கலாம்.

அவர்கள் விரும்பும் தீர்வுக்கு ஆமா போடுவதென்றால் அப்புறம் ஏன் பேச்சுவார்த்தை?

ஆமா போடுவதென்றால் பேசவே வேண்டியதில்லை - உண்மை! ஆனால், இந்த "செவ்வாய்க்கு மனிதரை அனுப்பும் தோரணை" கொண்ட நிபந்தனைகள் பேச்சு வார்த்தைக்குப் பூட்டு என்பதே என் கருத்து!.

ஆயுதப் போர் ஒரு துருப்புச் சீட்டாக இருந்த காலத்தில் புலிகளே "ஒற்றையாட்சிக்குள் தீர்வைப் பற்றிப் பேசுவோம்" என்றே 2002 இல் போனார்கள். இப்ப ஒரு துருப்புச் சீட்டும் இல்லாமல் எதை வைத்து இந்த 6 அமைப்புகளும் இந்த எட்ட முடியா நிபந்தனை போடுகிறார்களாம்?

அருகில் வசிக்கும் ராஜேந்திராவிடம் நான் கேட்கிறேன், ஏனையோரிடம் நீங்கள் ஒருக்கா அறிந்து சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

எல்லோரும் இணைந்தோ அல்லது தனியாகவோ  பேசி  வேண்டியவர்களுடன் பேசி சிறிது சிறிதாகவெனிலும் பெற கூடியதை பெறுவதே தமிழ் மக்களுக்கு  நல்லது.  ஆனால் அதை செய்ய போனால் துரோகியாக முத்துரை குத்தப்படுவோம் என்று புலம் பெயர் அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் நன்கு தெரியும். ( பாம்பில் கால் பாம்பறியும்  என்பார்கள். 😂

ஆகவே  தூர நின்று வெட்டி வீரம் பேசி காலத்தை போக்குவதே இவர்களது தமிழ் தேசியத்துக்கு அழகு. 

😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எல்லோரும் இணைந்தோ அல்லது தனியாகவோ  பேசி  வேண்டியவர்களுடன் பேசி சிறிது சிறிதாகவெனிலும் பெற கூடியதை பெறுவதே தமிழ் மக்களுக்கு  நல்லது.  ஆனால் அதை செய்ய போனால் துரோகியாக முத்துரை குத்தப்படுவோம் என்று புலம் பெயர் அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் நன்கு தெரியும். ( பாம்பில் கால் பாம்பறியும்  என்பார்கள். 😂

ஆகவே  தூர நின்று வெட்டி வீரம் பேசி காலத்தை போக்குவதே இவர்களது தமிழ் தேசியத்துக்கு அழகு. 

😂😂😂

தனியாக பேசி பெற்றா சந்தையில் கடை திறக்க போறீர்களாக்கும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஆயுதப் போர் ஒரு துருப்புச் சீட்டாக இருந்த காலத்தில் புலிகளே "ஒற்றையாட்சிக்குள் தீர்வைப் பற்றிப் பேசுவோம்" என்றே 2002 இல் போனார்கள். இப்ப ஒரு துருப்புச் சீட்டும் இல்லாமல் எதை வைத்து இந்த 6 அமைப்புகளும் இந்த எட்ட முடியா நிபந்தனை போடுகிறார்களாம்?

அந்தநேரம் புலிகள் பலமாக இருந்தார்கள்.

இப்போ அரசு பலவீனமாக இருக்கிறது.

3 hours ago, tulpen said:

எல்லோரும் இணைந்தோ அல்லது தனியாகவோ  பேசி  வேண்டியவர்களுடன் பேசி சிறிது சிறிதாகவெனிலும் பெற கூடியதை பெறுவதே தமிழ் மக்களுக்கு  நல்லது.  ஆனால் அதை செய்ய போனால் துரோகியாக முத்துரை குத்தப்படுவோம் என்று புலம் பெயர் அத்தனை தமிழ் அமைப்புக்களுக்கும் நன்கு தெரியும். ( பாம்பில் கால் பாம்பறியும்  என்பார்கள். 😂

ஆகவே  தூர நின்று வெட்டி வீரம் பேசி காலத்தை போக்குவதே இவர்களது தமிழ் தேசியத்துக்கு அழகு. 

😂😂😂

சிங்களம் மட்டும் என்ன தமிழருக்கு எப்படியும் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்றா இறங்குகிறது.

பேச்சுவார்த்தை எனும் போர்வையில் புலம்பெயர் தமிழர்களை இழுத்து முதலீடு செய்ய வைப்பதில் தான் கரிசனையாக உள்ளது.

உண்மையிலேயே தீர்வு என்றால் யாருடனும் பேசவே தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சிங்களம் மட்டும் என்ன தமிழருக்கு எப்படியும் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்றா இறங்குகிறது.

பேச்சுவார்த்தை எனும் போர்வையில் புலம்பெயர் தமிழர்களை இழுத்து முதலீடு செய்ய வைப்பதில் தான் கரிசனையாக உள்ளது.

உண்மையிலேயே தீர்வு என்றால் யாருடனும் பேசவே தேவையில்லை.

சிங்களம் தட்டில் வைத்து கை வலிக்க காத்திருக்குது.  தமிழர்களுக்கு தான் அதை வாங்க தெரியவில்லை. நாங்க அதை வாங்க மயிக் ஒன்று வைத்திருக்கிறம். ஆனால் சொல்லமாட்டம் செய்யமாட்டம்.😡

Link to comment
Share on other sites

சிறி லங்கா வுடன் பேசி எதனையும் தமிழர் பெற முடியாது. சுரேன் GTF அறிக்கை கள் சிறிலங்கா வின் ஊடகங்கள் மூலமே வெளியிடப் படுகின்றன. மேலும் தடை செய்யப்பட்ட gtf இன் தலைவர் எவ்வாறு சிறிலங்காவில் வாழ்கிறார். சுரேன் பல சிறிலங்கா அரசியல் வாதிகளை பல முறை சந்தித்து உள்ளார். இவருக்கு இவ் அதிகாரத்தை எந்த அமைப்பு வழங்கியது ? GTF இல் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

அமெரிக்க அரசுடனான பேச்சு வார்த்தைகள் தான் நடக்க இருக்கின்றன. அதற்காக ன அடிப்படைகளே வெளியிடப்பட்டது.

Link to comment
Share on other sites

13 hours ago, MEERA said:

முதலில் சிறீலங்கா அரசு எங்கு இருந்து கொண்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதைத்தொடர்ந்து அவசர அசரமாக சுரேன் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது அவரின் அவசரம்.

இதுவரை காலமும் அதவது 2009இல் இருந்து இன்று வரை தாயக மக்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவோ GTF இன் செயற்பாடு யாது?

அரசுடன் எதை நோக்கி பேசப் போகிறார்?

ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

 


 

13 hours ago, MEERA said:

இதுவரை காலமும் அதவது 2009இல் இருந்து இன்று வரை தாயக மக்கள் தொடர்பாகவோ அல்லது புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவோ GTF இன் செயற்பாடு யாது?


தென்னாபிரிக்க அரசுக்கும், இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கும் GTF க்கும் என்ன சம்பந்தம் என்று இணையத்தில் தேடினால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமே? 

 

13 hours ago, MEERA said:

அரசுடன் எதை நோக்கி பேசப் போகிறார்?

மின்னஞ்சல் அனுப்பி கேட்டால் சொல்லிவிடுவாரே? கேட்கவில்லையா?

 

13 hours ago, MEERA said:

ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.

“ஒரு திட்டமும் இல்லாது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கையை மட்டும் வழங்குவதால்”😃 - எல்லோரையும் என்னைப்போன்ற யாழ்களத்து இராஜதந்திரிகள் என்று நினைத்து எழுதக்கூடாது. அவரிடம் உள்ள திட்டங்கள் பற்றி அவருடன் தொடர்பு கொண்டு கேட்டீர்களா? 🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.