Jump to content

சமத்துவம்- நோர்வே பாரளுமன்ற தேர்தல் -பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமத்துவம்- நோர்வே பாரளுமன்ற தேர்தல் 

“All men and women are born equal in the human sense”

மூன்றாம் உலக நாடுகளில் முக்கிய பதவிகளிலும் பாராளுமன்ற அங்கத்துவ பங்கீடுகளிலும் ஏனைய அதிகாரம் மிக்க துறைகளிலும் பெண்களின் சமத்துவ உரிமையானது புறக்கணிக்கப்படுகின்ற போதும் Rousseau என்ற தத்துவவியலாளரின் கோட்பாட்டுக்கு இணங்க பிறக்கும் போதே மனிதன் சகல சமத்துவமான உரிமையோடு தான் பிறக்கிறான் என்ற அடிப்படையில் நோர்வே நாட்டில் பெண்களின் சமத்துவ உரிமையானது அங்கீகரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

 ஸ்ரீ லங்காவை பொறுத்த வகையில் சிங்கள தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. அமைச்சு பதவிகளிலும் பெண்கள் புறக்கணிகப்படுகிறார்கள். அதி தீவிர மத வாதத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளில் பெண்கள் மனிதரில்லை என்றும் குழந்தை மட்டும் பெற்று தரும் ஒரு உற்பத்தி  பொருள் போன்று பார்க்கப்படுகிறார்கள்.(The only job of women is to give birth). இந்த அபத்தமான அநாகரிகமான செயல்களை அடியோடு நொருக்க வேண்டுமானால் அந்த பெண்கள் முன் வந்து போராட வேண்டும். இது இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் போராட வேண்டும் இதனால் பயத்தின் காரணமாக பலர் முன் வருவதில்லை.

வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமிப்பின் பேரில் வந்து அரேபிய ஆசிய ஆப்பிரிக்க பெண்களுக்கு அந்த நாட்டு ஆண்களிடம் இருந்து விடுதலை பெற்றுத்தர முடியாது. எந்த ஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கு அந்த பெண்களே முன் வந்து போராட வேண்டும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் சமத்தும் பாதுகாக்கப்படுகிறது. நோர்வேயை பொறுத்த வரையில் இன் நாடு எல்லா வழிகளிலும் பெண் சமத்துவத்தை முன்னிலைப் படுத்துகிறது. அமைச்சு உயர் பதவி உட்பட பெண்களின் விகுதாசாரம் சமத்தும் கொண்டதாகவே இருக்கிறது. வெளிநாட்டுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல பெண்கள் முக்கிய அமைச்சு பதவிகளில் இருக்கிறார்கள். அண்மையில் நோர்வே பாரளுமன்ற தேர்தலில் பல கட்சிகளை பிரதிநிதுத்துவம் படுத்தும் பெண் வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். புலம் பெயர்ந்து இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் நோர்வே பிரஜாவுருமையை பெற்றவர்களும் வெற்றி அடைந்துள்ளனர். இது வரவேற்கத் தக்க ஒரு வரலாற்று நிகழ்வாகும். 

அந்த அடிப்படையில் ஈழத்து பெண்மணி ஒருவரும் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார். இவரைப் போலவே இன்னும் பல வெளி நாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவருக்கும்  இவரைப் போல் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் பெண் உறுப்பினர்களுக்கும் பலர் வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியே. 

ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட நாட்டின் பின்னணியில் இருந்த வந்த பிணைப்புகளோடு பல சிறு பான்மை இன வேட்ப்பாளட்கள் இந்த கடினமான பாதைகளின் ஊடாகவே அவர்களின் அடையாள கலாச்சார  நம்பிக்கைகளோடும் மேலும் வாழும் இந்த நாடு கொடுத்த சக்தியோடும் கடந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் தம் தாய் நாடுகளில் முகம் கொடுத்த யுத்தம், அடக்கு முறை, ஒடுக்கு முறை, ஆண் ஆதிக்கம்,பேரினவாதம், இனவாத மோதல், இனவெறி, சமத்துவமின்மை போன்ற ஒடுக்கு முறைகளினாலும் மேலும் சிலர் தொழில் நிமிர்த்தம் கருதியும் புலம் பெயர்ந்த பின்னணியைக் கொண்டவர்கள். 

ஆதலால் இவர்கள் பணி தனியவே அன் நாட்டின் தேசிய அரசியலை மட்டும் பிரதிநிதிதுவது மட்டும் போல் அமையாது அறம் சார்ந்த அரசியலாக தம் மொழி தம் இனம் பெண் ஒடுக்கு முறை சார்ந்தும் இவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்த ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குகளினாலும் இவர்களின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.

உங்களுக்கு வாக்களித்த எல்லா மக்களின் உரிமை சார்ந்து நீங்கள் பேச வேண்டும். முன்பு இருந்த உலகை விட இன்று இந்த உலகு அரசியல் பொருளாதார சுய நல சுரண்டல்களும், உலகு வன்முறையும் , ஒடுக்கு முறையும் , அதி தீவிரவாத மதத்தை முன்னிலைப்படுத்திய வன்முறைகளும் பயங்கரவாதமும், கலவரங்களும், பெண் ஒடுக்கு முறையுமாக தர்மத்தின் அச்சில் உலகம் சுளரவில்லை ஆதலால் உலக சமாதானம் அமைதி வேண்டி குரல் கொடுப்பீர்.

நோர்வே சிறிய நாடக இருந்த போதிலும் சமாதானத்துக்கான நோபல் பரிசு உட்பட பல நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய தீர்வு முயற்சியில் குறிப்பாக பாலைதீன போராட்டம் உட்பட தமிழர் தீர்வு உட்பட முக்கிய பாத்திரத்தை வகித்த அல்லது எதிர் காலத்தில் வகிக்கக் கூடிய நாடும் கூட இருந்த போதிலும் இன்னும் பல மிகவும் சக்தி வல்லமை மிக்க நாடுகளான பிரித்தானிய பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அந்த அரசியலிலும் நாம் சொல்வாக்கு செலுத்துவர்களாக புலம் பெயர் தமிழர்கள் மாற வேண்டும்.

 உனக்கான விடுதலையை நீயே தேட வேண்டும் ஊக்கிவிக்க வேண்டும். அறிவுசார் ( Intellectual) புலமை சார் மனிதர் போல்  அடிக்கடி பெண் விடுதலை என்றும் அரசியல் கருத்தரங்கு என்றும் இலக்கியச் சந்திப்பு என்றும் கதைத்தும் எழுதியும் வந்தால் மாத்திரம் போதாது அதன் படி நடக்க வேண்டும். சுய நலன்களோடும் சந்தர்பவாதங்களோடும் கூடிய சமரசங்களோடு பெயருக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் மாத்திரம் இன்றி  பொய் முகங்களை கழட்டி உண்மை மனிதராக நாம் எல்லாம் மாறவேண்டும்.

பா.உதயன் ✍️


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.