Jump to content

22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை.

breaking

 

யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது. 1991ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் நடைபெற்ற சண்டையினால் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கட்டைக்காடு போன்ற கிராமமக்களும் நாகர்கோயிலிலேயே தஞ்சமடைந்தனர். 1993ஆம் ஆண்டுக்குப் பின்பு மாணவர்களின் எண்ணிக்கை எண்ணூற்றுமுப்பதாக அதிகரித்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துக் காணப்பட்டது.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் இருபத்தோராம் திகதி வடமராட்சியின் பல பாகங்களுக்கும் பலாலியிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். மறுநாள் இருபத்திரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை 6:30 மணிக்கு வடமராட்சி கிழக்குப் பகுதியில் விமானப்படையின் “புக்காரா” குண்டுவீச்சு விமானம் மணற்காடு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் தேவாலயம் சேதமடைந்ததுடன், மணற்காட்டைச் சேர்ந்த இரத்தினம் அன்ரனிதாஸ் (எட்டு வயது), மனோகரதாஸ் மரியஜித் (பத்து வயது), ஜோன்பொஸ்கோ கார்மிளா (ஐந்து வயது) ஆகிய மூவரும் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். அன்றைய தினம் (22.09.1995) வடமராட்சி கிழக்கில் காலை பதற்றமாக இருந்தபோதும் நாகர்கோயில் மகா வித்தியாலயத்துக்கு வழமைபோல மாணவர்கள் வந்தனர்

 அன்றையதினம் எண்ணூற்றுமுப்பது மாணவரில்; எண்ணூற்றுபத்து மாணவர்கள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் இறைவழிபாடு ஆரம்பித்தது. இறைவழிபாட்டினைத் தொடர்ந்து நற்சிந்தனை இடம்பெற்றது. அன்றைய நற்சிந்தனையினை ஏழாம்; ஆண்டில் கல்விகற்கும் “நவரத்தினசாமி உமாதேவி” எல்லோரையும் கவரக்கூடிய விதத்தில் இனிய குரலில் இருபத்தைந்து நிமிடம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.மதியம் 12:45 மணியளவில் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாகர்கோயில் வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் இரண்டு “புக்காரா” விமானங்களிலிருந்தும் மாறி, மாறி எட்டு றொக்கட் குண்டுகள் பாடசாலையையும், கிராமத்தையும் நோக்கி வீசப்பட்டதினால் அப்பிரதேசம் புகைமண்டலமானது. இத்தாக்குதலில் காலைப் பிரார்த்தனையில் எல்லோராலும் பாராட்டப்பட்;ட “நவரத்தினசாமி உமாதேவி” உட்பட எழு மாணவர்கள்; பாடசாலையினுள் உயிரிழந்தார்கள். படுகாயத்துடன் உயிருக்காகப் போராடிய பதின்மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், வைத்தியசாலையிலும் இறந்தனர். மேலும் நாற்பத்திரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இன்னும் சில மாணவர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்தனர். அன்று நடந்த புக்காராக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவர்களுடன் நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்ததுடன், எண்பத்தைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தார்கள். அன்றைய தாக்குதலில் இருபது மாணவர்கள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்தனர். நாற்பத்திரண்டு மாணவர்கள் உட்பட நூறு பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..

இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..

“அன்று புக்காரா விமானம் பாடசாலை அருகில் முதல் குண்டை போட்டவுடன் எல்லோரும் சிதறி ஓடினோம். அப்போது மீண்டும் விமான இரைச்சல் சத்தம் பெரிதாகக் கேட்ட போது நான் பாடசாலையிலுள்ள அத்திமரத்தின் கீழே விழுந்து படுத்துவிட்டேன். குண்டு பாடசாலை வளாகத்திற்குள் விழுந்து வெடித்தது பாடசாலை முழுக்க புகை மண்டலமாக இருந்தது, எங்கும் ஓரே அழுகுரல்கள் கேட்டது. நானிருந்த இடத்தில் இருந்து தலையைத் துக்கிப் பார்த்த போது எங்கும் இரத்தமாக இருந்தது. எனது உடம்பிலும் காலிலும் காயமடைந்திருந்தேன் அப்போது நான் அத்திமரத்தை விட்டு எனக்கருகிலிருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரியையும் கூட்டிகொண்டு ஓடும் நோக்குடன் எழும்ப முயன்ற போது என்னால் ஓடமுடியாமற் போய்விட்டது. அந்தநேரம் எனது அண்ணாதான் வந்து என்னைத் தூக்கிக்கொண்டுபோய் மந்திகை வைத்தியசாலையிற் சேர்த்தார். அங்கு எனது வலது காலினைக் கழற்றினார்கள். அத்துடன் எனது வலது கையையும் கழற்ற வேண்டுமென்று கூறினார்கள். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று குணமடைந்தேன்

https://www.thaarakam.com/news/7f8c726d-863c-4f1f-b701-e0d3371d3113

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.