Jump to content

”அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் அவமானகரமானது – மன்னிப்பு கோருகிறேன்” - நீதி அமைச்சர் அலி சப்ரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

”அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் அவமானகரமானது – மன்னிப்பு கோருகிறேன்”

September 23, 2021

spacer.png

அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளதோடு, இச்சம்பவம் அவமானமான ஒன்று எனவும் இதனை தான் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் மேலும் இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தாமாக முன்வந்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்த அவர், இச்சம்பவம் தொடர்பில் மேல்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேற்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (22.09.21) அமர்வில் கலந்துகொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கேட்கப்பட்ட விசேட கேள்விக்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ”அனுராதபுர சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவின் செயற்பாடு குறித்து நீதி அமைச்சர் என்றவகையில் இச்செயற்பாட்டை நான் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது. இதுவொரு அவமானமான செயற்பாடு. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக நான் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

”இச்சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேபோல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுயாதீனமாக முன்வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறைச்சாலை கைதிகள் அரசாங்கத்தின் கீழேயே உள்ளனர். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இதேவேளை எனது அமைச்சின் கீழ் உள்ள குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு தேசிய ஆணையமும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளை பாதுகாப்பு, கௌரவம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டுமென கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது. எனினும் இச்சம்பம் இனவாதத்தால் தூண்டப்பட்ட ஒன்றல்ல” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அனுராபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை அங்கேயே வைத்திருக்க வேண்டுமென அரசாங்கம் அடம்பிடிக்காது. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பான சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக அவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் உள்ள தமிழ் கைதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிகமாக பாதுகாப்புக்களை வழங்கபட்டுள்ளதோடு, அவர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது எனவும் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது, அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே அச்சடத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும்.

எந்தவொரு அரசாங்கமும் இந்த அலோசனைக் குழுவை அமைத்ததில்லை. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ அக்குழுவை நியமித்துள்ளார் எனச் சுட்டிக் காட்டி உள்ளார்.

 

https://globaltamilnews.net/2021/166354

Link to comment
Share on other sites

  • கிருபன் changed the title to ”அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் அவமானகரமானது – மன்னிப்பு கோருகிறேன்” - நீதி அமைச்சர் அலி சப்ரி
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கதை விடுறார், நாணா...

அப்படி ஒண்டுமே நடக்கவில்லை என்று லொகான் ரத்வத்தை சொல்லுறார்.

சொல்லேக்க மப்பில இல்லை எண்டது முக்கியம்.

எனக்கென்ன... விசரே, அப்படி செய்ய... எண்டுறார் ...தெளிவா...

நாணா... மண்டை பத்திரம்.... ரத்வத்தை உள்ள... பாராளுமன்றம்... உள்ள தான் இருக்கிறார்.

தண்ணிய போட்டால்.... உங்கள நாறப்பண்ணிடும்.

வளர்ப்பு அப்படி....

அலலாட காவல்ல.... நல்லமாதிரி இரிங்கவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

அனுராதபுர சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவின் செயற்பாடு குறித்து நீதி அமைச்சர் என்றவகையில் இச்செயற்பாட்டை நான் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது. இதுவொரு அவமானமான செயற்பாடு. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக நான் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

கேவலமான செயலை பற்றி சரியாக பேசி இருக்கிறார் நீதி அமைச்சர்.

 முபாறக் அப்துல் மஜீத் மௌலவி  நீதி அமைச்சராக இருந்தால் எப்படி பேசி இருப்பார் http://4.bp.blogspot.com/-FMFC6aTT7is/US8Nzt8JG2I/AAAAAAABmfw/A2Lt2WKJoNo/s1600/untitled.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.