Jump to content

திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

 

01__1_.jpeg

 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை  கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல்  பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதற்கு பொலிஸார் தடை விதித்தனர். 

 

20210923_143650.jpg

 

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வாக்கு மூலம் பெற்ற பின்னரே பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

என்.ராஜ்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு  கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து மூவரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Tamilmirror Online || திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க அரசுதடுப்பதை மக்கள் எதிர்ப்பது எல்லாம் உணர்வுபூர்வமான் விடயங்கள்.. ஆனால் கஜெந்திரன் நேற்று செய்ததை பார்த்தேன் அது ஒரு காமெடி வீடியோ.. இந்திய அரசியல்வாதிகள் செய்வதுபோல் அரசியல் ஸ்டண்டுக்கு அனுதாப ஆதரவு உண்டாக்க செய்ததுபோல் இருந்தது.. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு.. உப்பிடி எண்டா அந்த சண்டை நேரம் வீடுவீடா ஆமிஒட்டுக்குழு காடையனுவள் சுட்டுக்கொண்டு திரியேக்க கைதுகள் நடேக்கேக்க எங்கட பிள்ளையளிண்ட தாய்தேப்பன் கத்திகுழறினத என்னெண்டு சொல்லுறது.. இது இந்தாள் பொலிஸ் கைதுசெய்வான் எண்டு தெரிஞ்சு அரசியலுக்காக வீம்புக்கு அங்கபோய் கைதுசெய்யப்படுவதற்காக செய்ததுபோல் செய்றகையாக அப்பிடியே தெரியுது.. உதிலஒரு ஜீவன் இல்ல உண்மை இல்லை.. ஒரு வேளை மேலிடத்தால பொலிஸ்க்கு இதெல்லாம் அரசியலுக்குதான் வாறன் ரெடியா இருங்கோ எண்டு சொல்லிட்டுதான் வரப்பட்டதோ தெரியல..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க அரசுதடுப்பதை மக்கள் எதிர்ப்பது எல்லாம் உணர்வுபூர்வமான் விடயங்கள்.. ஆனால் கஜெந்திரன் நேற்று செய்ததை பார்த்தேன் அது ஒரு காமெடி வீடியோ.. இந்திய அரசியல்வாதிகள் செய்வதுபோல் அரசியல் ஸ்டண்டுக்கு அனுதாப ஆதரவு உண்டாக்க செய்ததுபோல் இருந்தது.. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு.. உப்பிடி எண்டா அந்த சண்டை நேரம் வீடுவீடா ஆமிஒட்டுக்குழு காடையனுவள் சுட்டுக்கொண்டு திரியேக்க கைதுகள் நடேக்கேக்க எங்கட பிள்ளையளிண்ட தாய்தேப்பன் கத்திகுழறினத என்னெண்டு சொல்லுறது.. இது இந்தாள் பொலிஸ் கைதுசெய்வான் எண்டு தெரிஞ்சு அரசியலுக்காக வீம்புக்கு அங்கபோய் கைதுசெய்யப்படுவதற்காக செய்ததுபோல் செய்றகையாக அப்பிடியே தெரியுது.. உதிலஒரு ஜீவன் இல்ல உண்மை இல்லை.. ஒரு வேளை மேலிடத்தால பொலிஸ்க்கு இதெல்லாம் அரசியலுக்குதான் வாறன் ரெடியா இருங்கோ எண்டு சொல்லிட்டுதான் வரப்பட்டதோ தெரியல..

 

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
 
Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
 

கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் ஆசனத்தை பறித்து தனதாக்கிக் கொண்டது உட்பட....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் சபையில் கேள்வி ஏழுப்புவோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 (எம்.நியூட்டன்)

தனிமைப்படுத்தல் சட்டத்தை பொலிசாரே மீறினர் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி ஏழுப்புவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில்  கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவுத் தூபிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடா வருடம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அது போல இம்முறையும் கடந்த நாட்களில் அஞ்சலி செலுத்திவந்தார்.

ஆனால் 23 ஆம் திகதி  அஞ்சலி செலுத்த முயன்ற போது அங்கிருந்த பொலிஸார் தடுத்தனர். எதற்காக தடுக்கிறீர்கள்? நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர்  பொலிஸாரிடம் வினாவினார். எனினும் பொலிஸார் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவு கூற முடியாது என கூறியே அவ்விடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை கைது செய்தனர்.

எனினும் கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில்  நினைவுகூறுவது தவறு என நாங்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைது செய்தோம் என பொலிஸார் கூறினர்.

கஜேந்திரன் எம்.பி சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். பொலிஸாருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால் பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டனர்.

அராஜகமாக கஜேந்திரனின் உடலை பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவ்விடத்திற்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் பொலிஸாரால் சட்டவிரோதமாக கையாளப்பட்டனர்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அவ் நினைவிடத்திற்குச் சென்ற பொழுதே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் கற்பூரம் ஏற்றி நினைவேந்தல் செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

கஜேந்திரன் எம்.பியை கைது செய்தமைக்கு கொரோனா விதிமுறைகள் காரணமல்ல, நினைவேந்தல் செய்தமையே காரணம் என தெரிகிறது. ஏனெனில் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்தில் கஜேந்திரன் எம்.பி மாத்திரம் இருக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இருந்தார்கள், திலீபனின் நினைவிடத்தில் பொலிஸார் வந்தததை அறிந்ததும் பல பொதுமக்களும் கூடினார்கள்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருந்தார்கள் எனில் ஏன் அங்கு கூடிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையில் கஜேந்திரன் எம்.பி சுகாதார விதிமுறைகளை மீறவில்லை. அவர் நினைவேந்தல் மேற்கொண்டமைக்காவே கைதுசெய்யப்பட்டார்.

யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ மற்றும்  சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். 27 ஆம் திகதி பொலிஸாரின் நடவடிக்கைகளை பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம் .

சபாநாயகருக்கும் தெரியாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரன் எம்.பியின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம்.

ஐ.நா. அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் கூட பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கஜேந்திரனை கண்ணியமாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது கற்பூரம் கொளுத்தும் போதே பொலிஸார் நினைவேந்தலை தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

தமிழ் தேசத்து மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல்தொடர்பில் சபையில் கேள்வி ஏழுப்புவோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு முகநூல்  பதிவு............

ஓம் நண்பர்களே மீண்டும் ஒரு தடவை ...
நீங்கள் சொல்வதுபோல் ..
கஜேந்திரன் செய்வது அரசியல்தான் .
2000மாம் ஆண்டில் முகமாலையில் சிக்குண்ட மக்களை தற்துணிவோடு மீட்கச்சென்றதும் சீற்றுக்காகத்தான் ...
சுடுகலன்கள் சூழ முதல் பொங்குதமிழ் செய்ததும் சீற்றுக்காகத்தான் ...
ராணுவக்கட்டுப்பாட்டினுள் 2000 இன் முன்னர் நிகழ்த்திய போராட்டங்கள் ஒவ்வொன்றும் சீற்றுக்காகத்தான் ..
2000 ஆயிரத்தின் பின்னர் மாணவர் பேரவையூடு நின்றதும் சீற்றுக்காக, பரமேஸ்வராச்சந்தியின் ராணுவ வாகனத்தால் இடித்து வீழ்த்தப்பட்ட வளைவுதனில் தொங்கியது சீற்றுக்காக , புங்குடுதீவு தர்சினிமுதல் சிவகாம்பிகை வரை பாலியல் வல்லுறவுக்கெதிராக போராடியது சீற்றுக்காக ..
பல்கலை மாணவர்களோடு கைகோர்த்து நின்றதும் சீற்றுக்காக.. ..
அந்தவகையில் நேற்று தீபம் ஏற்றச்சென்றது கைதாகியது எல்லாமும் சீற்றுக்காகத்தான் ..
90ஸ் அலப்பறைகள் ..
வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள் அலைப்பறைகட்கப்பாற்பட்டவன் இவன்..👇
 
 

நான் அந்தக்காலங்களில் புலிகள் இருந்த நேரத்தில் அவரின் நடவடிக்கைகள் பற்றி பேசவில்லை.. அப்பொழுதெல்லாமிவரிடமும் இன்னும் பல அந்த நேரத்தில் இளம் அரசியல்துடிப்புகொண்ட பொதுவிடயங்களுக்காக போராடிய ஒவ்வொருவரிடமும் உண்மை இருந்தது.. ஓர்மம் இருந்து.. மண்ணையும் மக்களையும் நேசித்த நேர்மை இருந்தது.. இவற்றுக்கெல்லாம் பின்னால் போராளிகளின் வீரம் செறிந்த போராட்டம் தந்த உணர்வு,உத்வேகம்,வீரம்,அடங்காப்பற்று இருந்தது.. ஆனால் இன்று போராளிகளும் இல்லை போராட்டமும் இல்லை.. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும்.. இவர் வேறு இன்று முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.. முன்னர் செய்த நல்லவற்றுக்காக இன்று அவர் அரசியல்வாதியாக செய்யும் விடயங்கள் மேல் விமர்சனம் வைக்ககூடாது என்றால் கருணாவை இவரை விட 1000ம் மடங்கு கருணா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் ஆகிவிடுவார்.. 

நான் எந்த விருப்புவெறுப்புமில்லாமல் சாதாரண பொதுமகனாக அந்த வீடியோவை பாத்துதான் எனமனசில் பட்டதை சொன்னேன்.. ஈழத்து அரசியல்மேல் நம்பிக்கை புலிகளோடு எனக்கு போய்விட்டது.. இப்ப இருக்கும் எந்த அரசியல்வாதியும் எமக்கு அரசியல் தீர்வு எதையும் பெற்றுக்கொடுக்கபோவதில்லை என்பது என் நம்பிக்கை.. தீர்வு பெற்று தருவேன் என்று உசுப்பேத்தல் அரசியல்செய்பவர்களைவிட மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினையை தீர்த்துவைக்கும் அரசியல்வாதிமேல் தீர்வுபெற்றுதருவதாக சொல்லி ஏமாற்றி வாக்குவாங்கும் அரசியல்வாதிகளை விட பலமடங்கு நல்ல அபிப்பிராயம் இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நேற்று மு.பு பார்த்ததும் சிரிப்பு ,சிரிப்பாய் இருந்தது ...இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தமிழ்ப் படம் எடுக்க போகலாம் .. அவற்ற தம்பியைகாப்பாற்ற  மகிந்தாவின் காலில் விழுந்து எப்படி மீட்டார் என்று தெரியும்  ...அண்மையில்  கூட மகிந்தாவின் அலுவலகத்தில் போய் கூழை கும்பிடு போட்ட படம் வந்திருந்தது ....இவரை விட சும் எவ்வளவோ மேல். 

பொதுசனத்தையாவது அமைதியாய் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த விட்டு இருக்கலாம் ...எல்லாத்தையும் தன சுயநலனுக்காய் குழப்பிக் கொண்டு ...கேடு கெட்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதை நேற்று மு.பு பார்த்ததும் சிரிப்பு ,சிரிப்பாய் இருந்தது ...இந்த பிழைப்பு பிழைப்பதற்கு தமிழ்ப் படம் எடுக்க போகலாம் .. அவற்ற தம்பியைகாப்பாற்ற  மகிந்தாவின் காலில் விழுந்து எப்படி மீட்டார் என்று தெரியும்  ...அண்மையில்  கூட மகிந்தாவின் அலுவலகத்தில் போய் கூழை கும்பிடு போட்ட படம் வந்திருந்தது ....இவரை விட சும் எவ்வளவோ மேல். 

பொதுசனத்தையாவது அமைதியாய் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த விட்டு இருக்கலாம் ...எல்லாத்தையும் தன சுயநலனுக்காய் குழப்பிக் கொண்டு ...கேடு கெட்டவர்கள் 

எனக்கு பிள்ளைகுட்டி குடும்பம் அம்மா அப்பா இருந்தும் எதிலும் ஒட்டாமல் எப்பவும் மரணம் அதன் பின் நான் இனிமேல் இல்லை என் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் அழிந்துவிடும் எதுவுமே நிரந்தரம் இல்லை எனும்போது எதுக்கிந்த உலகம் உருவானது போன்ற எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டு ஒரு ஞானிபோல் சூனியத்துள் எதிலும் ஒட்டாமல் வாழ்ந்தன்.. புல்லா எதிர்மறை எண்ணங்களால் சூழ்ப்ப்பட்டு.. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளியவர முயற்சிக்கிறன் அதுக்கு யாழும் யாழ் உறவுகளும்கூடஒருகாரணம்.. இன்னொரு திரியில் பல உறவுகள் சொன்னதுபோல் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த நிறைய முயற்சி எடுக்கிறன்..

அதுபோலத்தான் இவரும் இவர் கூட்டாளிகளும்.. பூரா எதிர்ப்பரசியலிலேயே காலத்தை ஓட்டுவது.. அவர்கள் காலம் பதவியில் இருந்தபடியே முடிந்துவிடும்.. ஆனால் இவர்கள் எதிர்ப்பரசியலை நம்பி பின்னால் போன மக்கள் காலத்துக்கும் ஏழைகளாகவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சத்தியமான, உண்மையைச் சொன்னால் எனக்கும் உதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது...

😒😂

நான் முதலில் அந்த அன்ரிமார் கத்திக்குழற ஏதோ ஒரு ஐயாவை இழுத்துக் கொண்டு போறாங்களே சிங்களவர் என்டுதான் நினைச்சனான். உடன வேசுபுக்கில் ஓடிப்போய் கைதுசெய்யப்பட்டவர் யாரென தேடிப் பார்த்தாப் பிறகுதான் தெரிந்தது, உது ஒரு முசுப்பாத்தி நாடகம் என்டு.🤦

குறிப்பா அந்த குனிஞ்சு எழும்புறதைப் பார்க்க தமிழ்நாட்டில சசிகலா சத்தியம் செய்தது போல இருக்கு😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.ndtv.com/world-news/3-arrested-for-holding-remembrance-event-for-ex-ltte-terrorist-get-bail-2552399

 

இந்தியாக்காரனின் பகிடிகள்😆

 

Thileepan, The Ex-Terrorist🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்க வேண்டிய தேசியப்பட்டியல் ஆசனத்தை பறித்து தனதாக்கிக் கொண்டது உட்பட....

@தனிக்காட்டு ராஜா எலக்சன் வெண்ட பின் ஒருக்கா அம்பாறைக்கு வந்து போன நியாபகம்.

அதுக்கு பிறகு இவர் அந்த பக்கம் ஏதேனும் எம்பி நிதி ஒதுக்கீட்ட செலவழித்தாரா? வந்தாரா? குறை கேட்டரா?

இவரை அம்பாறைக்கு ஜூனியர்-ஜூனியர் பொன்னர் நேந்து விட்டவர்🤣, அதுதான் கேக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

@தனிக்காட்டு ராஜா எலக்சன் வெண்ட பின் ஒருக்கா அம்பாறைக்கு வந்து போன நியாபகம்.

அதுக்கு பிறகு இவர் அந்த பக்கம் ஏதேனும் எம்பி நிதி ஒதுக்கீட்ட செலவழித்தாரா? வந்தாரா? குறை கேட்டரா?

இவரை அம்பாறைக்கு ஜூனியர்-ஜூனியர் பொன்னர் நேந்து விட்டவர்🤣, அதுதான் கேக்கிறன்.

 

ஒரு தடவை வந்தவர்  என நினைக்கிறன் மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக அதன் பிறகு ஆளே இல்ல. 

இங்கு அரசு தரும் நிதிகளை கூட திட்டமிட்டு செலவு செய்ய மாட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா காலம் உதவி செய்வார்கள் என பார்த்ததால் எல்லா அரசியல் வாதிகளையும் தான் சொல்கிறேன் யாரும் பெரிதாக  உதவி செய்ய வில்லை செய்வது அனைத்தும் புலம்பெயர்ந்த மக்களே இந்த இடத்துல அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இங்கு உள்ளவர்கள் எச்சி கையால்கூட காக்கை விரட்டாத ஆட்கள்.(செல்வந்தர்கள்).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தடவை வந்தவர்  என நினைக்கிறன் மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக அதன் பிறகு ஆளே இல்ல. 

இங்கு அரசு தரும் நிதிகளை கூட திட்டமிட்டு செலவு செய்ய மாட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோனா காலம் உதவி செய்வார்கள் என பார்த்ததால் எல்லா அரசியல் வாதிகளையும் தான் சொல்கிறேன் யாரும் பெரிதாக  உதவி செய்ய வில்லை செய்வது அனைத்தும் புலம்பெயர்ந்த மக்களே இந்த இடத்துல அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இங்கு உள்ளவர்கள் எச்சி கையால்கூட காக்கை விரட்டாத ஆட்கள்.(செல்வந்தர்கள்).

 

இவர்கள்தான் வாய் கிழிய வடக்கு-கிழக்கு ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

80 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் கஜேந்திரனின் தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க முழுகாரணம் கிழக்கில் அவர்கள் கட்சிக்கு விழுந்த வாக்குகளே.

நியாயாமாக இந்த சீட்டை கிழக்குக்கு கொடுத்திருக்க வேண்டும்.

அந்த கோரிக்கை எழுந்த போது - கஜேந்திரன் அம்பாறையின் எம்பி போல செயற்படுவார் என்றார்கள்.

குறைந்த பட்சம் வருடம் ஒரு தரம் வந்து, தன் நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களையாவது செய்திருப்பார் என நினைத்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இவர்கள்தான் வாய் கிழிய வடக்கு-கிழக்கு ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

80 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் கஜேந்திரனின் தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க முழுகாரணம் கிழக்கில் அவர்கள் கட்சிக்கு விழுந்த வாக்குகளே.

நியாயாமாக இந்த சீட்டை கிழக்குக்கு கொடுத்திருக்க வேண்டும்.

அந்த கோரிக்கை எழுந்த போது - கஜேந்திரன் அம்பாறையின் எம்பி போல செயற்படுவார் என்றார்கள்.

குறைந்த பட்சம் வருடம் ஒரு தரம் வந்து, தன் நிதி ஒதுக்கீட்டில் சில திட்டங்களையாவது செய்திருப்பார் என நினைத்தேன்.

 

நல்ல எதிர்பார்ப்பு ஆனால் எல்லா அரசியல் வாதியும் தன்னையும் தன் நலன் சார்ந்த அனைத்தையும் திறம்பட செய்வதில் முக்கியமாக இருக்கிறார்கள் உதாரணமாக கொரியா வேலைவாய்பு, அரச சலுகைகள், அரசாங்கம் ஒதுக்கும் அபிவிருத்திக்காக வேலைத்திட்டங்களில் பங்கு இவர்களை நம்பி பலன் இல்லை இதில் யாவரும் அடக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 03:19, பாலபத்ர ஓணாண்டி said:

. எல்லாம் செட்டப்பு.. ஒராள் வீடியோ எடுக்க கத்திகுழற ரெண்டுமூண்டு பொம்பிளையள்.. இத்தனைக்கும் பொலிஸ் அவரை அமைதியாகத்தான் கூட்டி செல்கிறது..இந்த பொம்பிளையள் ரெடியா நிண்டதுபோல் குழறிகூப்பாடு போடுதுகள்.. பூரா ஓவர் ரியாக்ஸன்😀 இதுகள் ஓவர் ரியாக்சன் போடாமல் விட்டிருந்தால் சம்பவம் இயல்பா இருந்திருக்கும் போல இருக்கு..

பாலபத்ர ஓணாண்டி, 

நீங்கள்தான் வீடியோவை போட்டனீங்கள். திரும்ப ஒருக்கா பாருங்கோ, கஜன் கற்பூரம் கொளுத்த, காவலர்கள் காலால  தட்டிவிடத்தான் பொம்பிளையள் கத்ததொடங்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

கஜேந்திரன்MP கைது திட்டமிட்ட செயலா?

 

திட்டமிட்டபடி திட்டத்தோடு போயிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.