Jump to content

சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்தக் கடல்.. பெரிய அலையுடன் கூடிய.. ஆழமான பகுதியா?
இங்கிலாந்தில் வளர்ந்த பிள்ளை என்ற படியால்...
எப்படியும் அவருக்கு, நீச்சல்  தெரிந்திருக்கும்.. என நினைக்கின்றேன்.

26 வயது... அப்பதான் கஸ்ரப் பட்டு, படித்து முடித்து..
ஒரு சில வருடங்கள் தான்... வேலை செய்திருப்பார்.
அதற்குள்... இப்படி நடந்து விட்டது.

இது, மனதை நெருட வைத்த மரணம்.

எமது முல்லை தீவு பக்கம் இருக்கும் கடல் போல் பெரும் அலை எழும்பும் ஆண் கடல் அல்ல.

இவரின் சடலம் எடுக்கபட்ட துறைமுக பகுதியின் இறங்குதுறை ஒரு குடாவின் ஒரு கரை போலவும், மறு கரை தரையாகவும் இருக்கும் ஒரு களப்புக்கடல்.

இலங்கை கடல்களை நான் இப்படி அவதானிக்கவில்லை. ஆனால் யூகேயில் அலை ஏற்றம் இறக்கம் மிக அதிகமாகவும், சடுதியாகவும் இருக்கும். குறிப்பாக களப்புகளில். low tide எனப்படும் நேரம் கடல் உள்வாங்கி கனதூரம் போகும், பின் high tide நேரம் மிக வேகமாக உள்ளே வரும், தலைக்குமேல் உயரத்தில். 

2001 என நினைகிறேன் மோர்கம்பே எனும் இடத்தில் சிப்பி பொறுக்க போன 50 ற்கு மேற்பட்ட சீனர்கள் tide இல் அகபட்டு இறந்தார்கள்.

நான் எந்த கடற்கரை போனாலும் முன்பே இதை ஒருதரம் விசாரித்து விட்டே போவேன். மார்கேட்டிலும் இந்த சடுதியான மாற்றம் இருப்பதாக அறிந்தேன். 

இப்படி ஒரு tide இல் மாட்டினாரோ தெரியாது. செம்டெம்பர் இரவு குளிர் நீர், நீந்த தெரிந்தாலும் உடலை இறுக்கி விடும்.

அந்த இறங்கு துறையில் தொங்கலில் ஒரு சிலை இருக்கிறது அதற்கு அப்பால் நாம் போனபோது கும்மிருட்டாய் இருந்தது. வழுக்கி கூட விழுந்திருக்கலாம்.

எல்லாம் இனி நமது கற்பனைக்கு ஏற்ப ஊகம்தான் சொல்ல முடியும். மரண விசாரணை என்ன சொல்கிறது என பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அந்தக் கடல்.. பெரிய அலையுடன் கூடிய.. ஆழமான பகுதியா?
இங்கிலாந்தில் வளர்ந்த பிள்ளை என்ற படியால்...
எப்படியும் அவருக்கு, நீச்சல்  தெரிந்திருக்கும்.. என நினைக்கின்றேன்.

எவ்வளவு நீச்சல் தெரிந்தாலும் குளிர் தண்ணிக்கு கால் தசை கொழுவி பிடிக்கும்.அதற்கு பிறகு எதுவுமே செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எமது முல்லை தீவு பக்கம் இருக்கும் கடல் போல் பெரும் அலை எழும்பும் ஆண் கடல் அல்ல.

இவரின் சடலம் எடுக்கபட்ட துறைமுக பகுதியின் இறங்குதுறை ஒரு குடாவின் ஒரு கரை போலவும், மறு கரை தரையாகவும் இருக்கும் ஒரு களப்புக்கடல்.

இலங்கை கடல்களை நான் இப்படி அவதானிக்கவில்லை. ஆனால் யூகேயில் அலை ஏற்றம் இறக்கம் மிக அதிகமாகவும், சடுதியாகவும் இருக்கும். குறிப்பாக களப்புகளில். low tide எனப்படும் நேரம் கடல் உள்வாங்கி கனதூரம் போகும், பின் high tide நேரம் மிக வேகமாக உள்ளே வரும், தலைக்குமேல் உயரத்தில். 

2001 என நினைகிறேன் மோர்கம்பே எனும் இடத்தில் சிப்பி பொறுக்க போன 50 ற்கு மேற்பட்ட சீனர்கள் tide இல் அகபட்டு இறந்தார்கள்.

நான் எந்த கடற்கரை போனாலும் முன்பே இதை ஒருதரம் விசாரித்து விட்டே போவேன். மார்கேட்டிலும் இந்த சடுதியான மாற்றம் இருப்பதாக அறிந்தேன். 

இப்படி ஒரு tide இல் மாட்டினாரோ தெரியாது. செம்டெம்பர் இரவு குளிர் நீர், நீந்த தெரிந்தாலும் உடலை இறுக்கி விடும்.

அந்த இறங்கு துறையில் தொங்கலில் ஒரு சிலை இருக்கிறது அதற்கு அப்பால் நாம் போனபோது கும்மிருட்டாய் இருந்தது. வழுக்கி கூட விழுந்திருக்கலாம்.

எல்லாம் இனி நமது கற்பனைக்கு ஏற்ப ஊகம்தான் சொல்ல முடியும். மரண விசாரணை என்ன சொல்கிறது என பார்ப்போம்.

நான்.. பார்த்தவரையில்,
திருகோணமலை கடலும், கொழும்பு கடலும் மிகவும், 
ஆக்ரோசமானவை என நினைக்கின்றேன்.

ஹிக்கடுவ கடல்....  உள்வாங்கி, திடீரென்று.. அதன் உயரம் அதிகரிக்கும்.

எனக்கு விருப்பமான... கடல் என்றால், 
கீரிமலையை விட, காரை நகரில் உள்ள (கஸோரினா பீச்) கடல் தான்.
கீரிமலை எல்லாம்... இரண்டாம்  தெரிவு.

என்ன... இருந்தாலும், அந்தியேட்டிக்கு.. சாம்பலை அங்கு தான்...
கரைப்பார்கள்  என்பதால், கீரிமலையை, இரண்டாவதாக வைத்துள்ளேன்.
கீரிமலை... நம், உயிருடன்.. கலந்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நான்.. பார்த்தவரையில்,
திருகோணமலை கடலும், கொழும்பு கடலும் மிகவும், 
ஆக்ரோசமானவை என நினைக்கின்றேன்.

ஹிக்கடுவ கடல்....  உள்வாங்கி, திடீரென்று.. அதன் உயரம் அதிகரிக்கும்.

எனக்கு விருப்பமான... கடல் என்றால், 
கீரிமலையை விட, காரை நகரில் உள்ள (கஸோரினா பீச்) கடல் தான்.
கீரிமலை எல்லாம்... இரண்டாம்  தெரிவு.

என்ன... இருந்தாலும், அந்தியேட்டிக்கு.. சாம்பலை அங்கு தான்...
கரைப்பார்கள்  என்பதால், கீரிமலையை, இரண்டாவதாக வைத்துள்ளேன்.
கீரிமலை... நம், உயிருடன்.. கலந்தது.  

கசூரினா நல்ல பீச்தான். ஆனால் திருகோணமலையின் பளிங்கு கடற்கரை (மாபிள் பீச்) தான் எனக்கு நெ1.

பாசிகுடாவும் நல்லம். யாழில் சாட்டி நல்ல கடற்கரை. கடற்தாவரங்கள் ஒதுங்குவது சிலருக்கு பிடிக்காது. 

கீரிமலை ஒரே கல்லு. எனக்கு கடலை விட கேணி பிடிக்கும். ஆனால் அந்த மடத்தில் இருந்தால் பழைய நினைவுகள் வருவது ஒரு சந்தோசம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

கசூரினா நல்ல பீச்தான். ஆனால் திருகோணமலையின் பளிங்கு கடற்கரை (மாபிள் பீச்) தான் எனக்கு நெ1.

பாசிகுடாவும் நல்லம். யாழில் சாட்டி நல்ல கடற்கரை. கடற்தாவரங்கள் ஒதுங்குவது சிலருக்கு பிடிக்காது. 

கீரிமலை ஒரே கல்லு. எனக்கு கடலை விட கேணி பிடிக்கும். ஆனால் அந்த மடத்தில் இருந்தால் பழைய நினைவுகள் வருவது ஒரு சந்தோசம்தான்.

எனக்கு.... எட்டு, வயதாக இருக்கும் போது,
அப்பா... திருகோணமலையில் வேலை செய்தவர்.
அவர், வசித்த  வீடு.. திருகோணமலை, ஆஸ்பத்திரி வீதி.   
அந்த வீட்டிற்கு... முன்புறம், கடலும்...  பின் புறமும் வீதி  உள்ள வீடு.

அம்மா, தங்கச்சி, தம்பி எல்லோரும்,  பாடசாலை விடுமுறை நாட்களில்...
திருகோணமலைக்கு போய்... எமது விடுமுறையை, கழிப்பது வழக்கம்.

ஒருமுறை...  மாலை நேரத்தில், வீட்டு  சுவர் அருகில் இருந்து,
கடற்கரையில்... இருந்து, குடும்பமாக கதை பேசி, 
நண்டுக்  குஞ்சு பிடித்து, விளையாடிக் கொண்டிருந்த போது...
ஒரு, பெரிய அலை வந்து...  தம்பியை, அள்ளிக் கொண்டு போட்டுது.

எல்லாரும்... என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க,
அடுத்த அலை... எனது தம்பியை, திரும்பக் கொண்டு... கரையில் விட்டது...
திருக் கோணேஸ்வர பெருமானின்... அருள், என்றுதான் நான் சொல்வேன்.

அதற்குப் பிறகு... கடல் என்றால்,  பயம் தான்.
ஆனால்.. என்ன செய்வது,  கடல்  அழகானதும், ஆபத்தானதும் என்று தெரிந்தும்...
அதனை... நெருங்கி பார்க்க வேண்டும்  என்று தான், எல்லோரும் விரும்புகின்றார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.