Jump to content

அனைத்து கைத்தொலைபேசிகளிற்கும் ஒரே சார்ஜர்: ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது.

அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு  ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய நடைமுறை, சுற்றுச்சூழலுக்குச் சிறந்தது. பயனீட்டாளர்களுக்கும் வசதி என்பது அவர்களின் கருத்து.

முன்மொழிவின் படி, யூ.எஸ்.பி-சி இணைப்பு அனைத்து ஸ்மார்ட்போன்கள், டப்லட்டுகள், கமராக்கள், ஹெட்ஃபோன்கள், கையடக்க ஸ்பீக்கர்கள் மற்றும் கையடக்க வீடியோ கேம் சாதனங்களிற்கான நிலையான சார்ஜராக மாறும்.

அதேவேளை, சார்ஜர்களும் மின்னணு சாதனங்களிலிருந்து தனித்தனியாக விற்கப்பட வேண்டும்.

ஆனால், ஒரே வகை சார்ஜர் திட்டம், புத்தாக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம் என்று அப்பிள் குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, 2018 இல் மொபைல் போன்களுடன் விற்கப்பட்ட பாதி சார்ஜர்களில் USB மைக்ரோ-பி இணைப்பு இருந்தது.
29 வீத போன்களுடன் USB-C கனெக்டர் மற்றும் 21% லைட்னிங் கனெக்டர் இருந்தது. சார்ஜர் வேறுபாடு பயனர்களை சிரமப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துமென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடுகிறது.

இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்களின் ஒப்புதல் தேவை. அது கிடைத்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் தங்கள் சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும்.

https://pagetamil.com/2021/09/23/அனைத்து-கைத்தொலைபேசிகளி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

உண்மைதான் பெருமாள். இது... வரவேற்க்கப் பட வேண்டிய விடயம். :)

கொரோனா பரப்பிய... நாட்டுக்காரனின், பெயர் சொல்லி குறிப்பிட பயப்பிடுகிறீர்களா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

நல்ல திட்டம். இப்படியான முற்போக்கு திட்டங்களால் தம் லாபத்தில் கைவைப்பதால்தான் பலருக்கு ஈயு மேல் கடுப்பு. 

பிரெக்சிற்றுக்கு ஆதரவாய் இருந்த பல முதலாளிகளை நோண்டினால் அவர்கள் செய்ய விரும்பிய ஏதோ ஒரு கெடுதலை ஈயு சட்டம் தடுக்கிறது என்ற கடுப்பு பின்ணனியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான் பெருமாள். இது... வரவேற்க்கப் பட வேண்டிய விடயம். :)

கொரோனா பரப்பிய... நாட்டுக்காரனின், பெயர் சொல்லி குறிப்பிட பயப்பிடுகிறீர்களா? 🤣

நேற்றோ முந்தநாள்  லித்துவேனியன் அரசு  சைனா மொபைல்களை தூக்கி குப்பையில் போட  சொல்லியுள்ளார்கள் அப்படி சொன்னதுக்கு அரசியலில் பலகாரணம்  உள்ளதென்றாலும் முக்கியம் சைனா தமக்கு எதிரானவர்களை இந்த மொபைல்கள் மூலம்  இலகுவாக அடையாளப்படுத்த கூடிய வல்லமையில் உள்ளது அப்படி அடையாளப்படுத்த பட்டவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளே ஆனாலும் பெயர் தெரியாத நோய்களுக்கு ஆட்படுகிறார்கள் நமக்கு பயம் கிடையாது one + மொபைல் தான் பயன்பாடு முழுக்க முழுக்க சைனா  தயாரிப்பு தன்னுடைய தயாரிப்பு நீண்டகாலம் பாவிக்கும் என்ற கொள்கையில் தயாரிக்கப்பட்டது ஐந்து வருடமாய் இருக்கு இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்கு மேல் விழுந்து இருக்கும் இரண்டுமுறை வான் சில்லு பதம் பார்த்தும் குடிகாரனிடம்  அடிவாங்கியும் எதுவுமே நடக்காதது போல் சாப்பாடு எடுத்துவைக்கும் பெண்டாட்டி போல் வேலை செய்யுது . அப்படி வேலை செய்யுற போனை வேலை செய்யாமல் பண்ணிடுவாங்களோ என்ற பயம் தான் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

---ஐந்து வருடமாய் இருக்கு இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்கு மேல் விழுந்து இருக்கும் இரண்டுமுறை வான் சில்லு பதம் பார்த்தும் குடிகாரனிடம்  அடிவாங்கியும் எதுவுமே நடக்காதது போல் சாப்பாடு எடுத்துவைக்கும் பெண்டாட்டி போல் வேலை செய்யுது . அப்படி வேலை செய்யுற போனை வேலை செய்யாமல் பண்ணிடுவாங்களோ என்ற பயம் தான் .🤣

பெருமாள், இவ்வளவு... அடிவாங்கிய, அந்த கைத் தொலைபேசியின் படத்தை
ஒருக்கால்... பார்க்க வேண்டும் போல் ஆவலாக உள்ளது. 
இயலுமென்றால்... இணைத்து விடுங்கள், சுவாரசியமாக இருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள், இவ்வளவு... அடிவாங்கிய, அந்த கைத் தொலைபேசியின் படத்தை
ஒருக்கால்... பார்க்க வேண்டும் போல் ஆவலாக உள்ளது. 
இயலுமென்றால்... இணைத்து விடுங்கள், சுவாரசியமாக இருக்கும். :grin:

அப்படியே உங்கள் vacation சுற்றுலா ஆக்கத்தையும் பார்க்க ஆவலாக உள்ளோம்😄👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

அப்படியே உங்கள் vacation சுற்றுலா ஆக்கத்தையும் பார்க்க ஆவலாக உள்ளோம்😄👋

என்ரை... அருமை, தங்கச்சி.... யாயினி, :)
எல்லாரும்... அதை, மறந்து விட்டார்கள் என்று, நான் சந்தோசத்தில்... இருக்கும் போது,
திடீரென்று... ஒரு பெரிய குண்டை, அண்ணனுக்கு மேல் போடக்  கூடாது... ராசாத்தி. :grin:

வழக்கமாக... மாலை ஐந்து மணிக்கு முடிய வேண்டிய வேலை,
சில காரணங்களால்.... ஏழு மணி மட்டும், செய்ய வேண்டி வந்ததால்...
தலை... "கிர், கிர்.." என்று  இருக்கு. அம்மாச்சி. :)

இந்த நிலையில்... சுற்றுலா பற்றி எழுத,  மனமே வருகுது இல்லை.
சொன்ன வாக்கை... காப்பாற்றாமைக்காக, தயவு செய்து என்னை மன்னிக்கவும்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிரெக்சிற்றுக்கு ஆதரவாய் இருந்த பல முதலாளிகளை நோண்டினால் அவர்கள் செய்ய விரும்பிய ஏதோ ஒரு கெடுதலை ஈயு சட்டம் தடுக்கிறது என்ற கடுப்பு பின்ணனியாக இருக்கும்.

இது இப்பதான் உங்களுக்கு தெரியுதாக்கும்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இது இப்பதான் உங்களுக்கு தெரியுதாக்கும்...😁

அப்பவே தெரியும்….சொல்லி யார் கேட்டா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா தொடக்கி வைச்சால் உலகம் முழுக்க மாறுமோ?! மாறினால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள், இவ்வளவு... அடிவாங்கிய, அந்த கைத் தொலைபேசியின் படத்தை
ஒருக்கால்... பார்க்க வேண்டும் போல் ஆவலாக உள்ளது. 
இயலுமென்றால்... இணைத்து விடுங்கள், சுவாரசியமாக இருக்கும். :grin:

சும்மாயிருங்க  பாஸ் ஒரு பேச்சுக்கு பெண்டாட்டி அது இது என்று சொல்லி விட்டேன் ஆனாலும் கீழ் உள்ள காட்சியை பார்த்தபின் 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

என்ரை... அருமை, தங்கச்சி.... யாயினி, :)
எல்லாரும்... அதை, மறந்து விட்டார்கள் என்று, நான் சந்தோசத்தில்... இருக்கும் போது,
திடீரென்று... ஒரு பெரிய குண்டை, அண்ணனுக்கு மேல் போடக்  கூடாது... ராசாத்தி. :grin:

வழக்கமாக... மாலை ஐந்து மணிக்கு முடிய வேண்டிய வேலை,
சில காரணங்களால்.... ஏழு மணி மட்டும், செய்ய வேண்டி வந்ததால்...
தலை... "கிர், கிர்.." என்று  இருக்கு. அம்மாச்சி. :)

இந்த நிலையில்... சுற்றுலா பற்றி எழுத,  மனமே வருகுது இல்லை.
சொன்ன வாக்கை... காப்பாற்றாமைக்காக, தயவு செய்து என்னை மன்னிக்கவும்.  🙏

மறப்பதா? அஜித்தின் வலிமை அப்டேட்டை விட அண்ணாவின் குரோசியா அப்டேட்டுக்காக காத்திருப்போர்தான் அதிகம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சும்மாயிருங்க  பாஸ் ஒரு பேச்சுக்கு பெண்டாட்டி அது இது என்று சொல்லி விட்டேன் ஆனாலும் கீழ் உள்ள காட்சியை பார்த்தபின் 🤣

 

இந்த வீடியோ பாக்கும் பொடியள் யாரும் இனிமேல் கல்யாணம் செய்வாங்கள் என்று நினைக்கிறீங்களா?!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஐரோப்பா தொடக்கி வைச்சால் உலகம் முழுக்க மாறுமோ?! மாறினால் நன்றாக இருக்கும்.

அது உங்களுக்கு

எனக்கு???😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அது உங்களுக்கு

எனக்கு???😢

ஏனண்ணை உங்கள் வியாபாரம் அதனோடு தொடர்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

ஏனண்ணை உங்கள் வியாபாரம் அதனோடு தொடர்பா?

ஓம்

ஆனால் ஊரோடு ஒத்து  வாழ்

பலருக்கும் நன்மை  தருமெனெில்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

ஓம்

ஆனால் ஊரோடு ஒத்து  வாழ்

பலருக்கும் நன்மை  தருமெனெில்???

வியாபாரத்தில் ஒரு தடங்கல் வருகின்றது என்றால் வியாபாரம் பெருக லாபத்தை கொண்டுவர சந்தர்ப்பங்கள் ஒளித்து இருக்கும் தேடுதல் என்பது வாழ்க்கை முழுதும் இருக்கணும் அண்ணன் உங்களுக்கு அறிவுரை தேவையில்லை ஆனாலும் மனதில் பட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

வியாபாரத்தில் ஒரு தடங்கல் வருகின்றது என்றால் வியாபாரம் பெருக லாபத்தை கொண்டுவர சந்தர்ப்பங்கள் ஒளித்து இருக்கும் தேடுதல் என்பது வாழ்க்கை முழுதும் இருக்கணும் அண்ணன் உங்களுக்கு அறிவுரை தேவையில்லை ஆனாலும் மனதில் பட்டது .

 

அதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஓம்

ஆனால் ஊரோடு ஒத்து  வாழ்

பலருக்கும் நன்மை  தருமெனெில்???

இதனால் சார்ஜர் வியாபரத்தில் பெரிய மாற்றம் வருமா?

எல்லாரும் பாவிக்கும் சார்ஜரின் முனை ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதுதான் உத்தேசிக்கும் விதி என நினைக்கிறேன்.

ஆனால் சாஜரின் தன்மை, எவ்வளவு விரைவாக சார்ஜ் ஆகிறது, பாதுகாப்பு, நீடித்த உழைப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுபாடுகள் இருக்கும். 

கூடவே டெக்னோலிஜி மாறும் போது எல்லா சார்ஜரும் ஒண்டாக மாறும்?

அவசரத்துக்கு மாத்தி பாவிக்ககலாம் ஆனால் தாயும் சேயும் என்றாலும் போனும் சார்ஜரும் வேறு வேறு என்பது புது மொழி 🤣.

ஆகவே அதிக பாதிப்பு இராது என்றே நினைக்கிறேன்.

தவிரவும் இது உத்தேச திட்டம்தானே? இது “கண்டுபிடிக்கும் ஊக்கத்துக்கு எதிரானது” என அப்பிள் போன்றவர்கள் கோர்ட்டுக்கு போகலாம் என நினைக்கிறேன்.

தவிரவும் @பெருமாள் சொன்னது போல every challenge has an opportunity என்று பார்ப்பவர் நீங்கள். இப்போதே இதில் ஒரு சந்தர்ப்பத்தை கண்டு பிடிக்க தொடங்கி இருப்பீர்கள் என நம்புகிறேன் 😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இதனால் சார்ஜர் வியாபரத்தில் பெரிய மாற்றம் வருமா?

எல்லாரும் பாவிக்கும் சார்ஜரின் முனை ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதுதான் உத்தேசிக்கும் விதி என நினைக்கிறேன்.

ஆனால் சாஜரின் தன்மை, எவ்வளவு விரைவாக சார்ஜ் ஆகிறது, பாதுகாப்பு, நீடித்த உழைப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுபாடுகள் இருக்கும். 

கூடவே டெக்னோலிஜி மாறும் போது எல்லா சார்ஜரும் ஒண்டாக மாறும்?

அவசரத்துக்கு மாத்தி பாவிக்ககலாம் ஆனால் தாயும் சேயும் என்றாலும் போனும் சார்ஜரும் வேறு வேறு என்பது புது மொழி 🤣.

ஆகவே அதிக பாதிப்பு இராது என்றே நினைக்கிறேன்.

தவிரவும் இது உத்தேச திட்டம்தானே? இது “கண்டுபிடிக்கும் ஊக்கத்துக்கு எதிரானது” என அப்பிள் போன்றவர்கள் கோர்ட்டுக்கு போகலாம் என நினைக்கிறேன்.

தவிரவும் @பெருமாள் சொன்னது போல every challenge has an opportunity என்று பார்ப்பவர் நீங்கள். இப்போதே இதில் ஒரு சந்தர்ப்பத்தை கண்டு பிடிக்க தொடங்கி இருப்பீர்கள் என நம்புகிறேன் 😎.

 

இந்த  கண்டு  பிடிப்பு பலரது  பலகால விருப்பமும்

பச்சை  நிறத்தவரின் பலகால முயற்சியும்  கூட

நடக்குமா  என்றால்  தற்போதைக்கு சாத்தியமில்லை

நடந்தால்  நன்று

அதற்கிடையில் நான் பென்சனுக்கு  போய் விடுவேன்...🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதற்கிடையில் நான் பென்சனுக்கு  போய் விடுவேன்...🤪

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

 

அதை  நீங்க தான் தீர்மானிக்கணும்??

கொழுத்த  கொழுக்கட்டை தான் வேண்டுமென்றால் .....???🤣

எனக்கு  மோதகம்  போதும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

இப்ப 75இல்லையா🤤🤤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

 

அதை  நீங்க தான் தீர்மானிக்கணும்??

கொழுத்த  கொழுக்கட்டை தான் வேண்டுமென்றால் .....???🤣

எனக்கு  மோதகம்  போதும்😜

🤣 நான் பாதி மோதகத்தோட ஊரப்பக்கம் எஸ் ஆகிற பிளான் 🤣

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப 75இல்லையா🤤🤤

🤣 68. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.