Jump to content

பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்!

AdminSeptember 25, 2021

பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

அத்தோடு மிகவும் சுத்தமான முறையில் குறித்த உணவகம் பேணப்படுகிறது.

இது தமிழ்த்தேசிய உணர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது எனவும், இவ்வாறான ஓர் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று அதன் உரிமையாளர் உணர்வோடு எரிமலைக்குத் தெரிவித்தார்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)
spacer.png

 

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

http://www.errimalai.com/?p=67487

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் சொல்வதற்கில்லை 🤔🙄🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்றும் சொல்வதற்கில்லை 🤔🙄🙄🙄

சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவகத்திற்கு  இன்னும்  செல்லவில்லை

ஆனால்  சில  ஆண்டுகளுக்கு முன்பு ல சப்பலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து  விட்டு

பக்கத்தில்  இருக்கும்  உணவகத்தில் ரீ குடிக்க  சென்றோம்

அறிமுகமில்லாத கடை

ஆனால்  உள்ளே  போய் அமர்ந்ததும் தலைவரின் பெரிய போட்டோ ஒன்று கம்பீரமாக  இருந்தது மனதைக்கவர்ந்தது

 

அண்மையில் பரிசுக்கு வெளியே ஒரு தமிழ்க்கடைக்கு  சென்றிருந்தேன்

அங்கேயும் தலைவர்  படம்  மட்டுமல்ல

காசு பரிவர்த்தனை  செய்வதால் காசுப்பெறுமதி  மதிப்பீடு

இலங்கை என்பதற்கு  பதிலாக தமிழீழம்  என்று பெரிய திரையில்  ஓடிக்கொண்டிருந்தது

இன்றையநிலையில்  ல  சப்பலில்  இதைச்செய்வதால் தொல்லைகளும்  அவமானமுமே மிஞ்சும்?

ஆனால்  சிறிது  சிறிதாக இவ்வாறான முன்னெடுப்புக்கள் எமது நிலைப்பாடுகளை வெளிக்கொணர

நாம் சிலவற்றை மறப்பதற்கில்லை என சொல்ல  பயன்படக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் படம் கல்லாவிற்கு மேல் இருப்பது ஓகே.

ஆனால் சிறுவன் பாலசந்திரன் கடைசியாக பிஸ்கேட் சாப்பிட்ட படத்தை பார்த்த படி எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?🙁

 

18 minutes ago, விசுகு said:

இந்த உணவகத்திற்கு  இன்னும்  செல்லவில்லை

ஆனால்  சில  ஆண்டுகளுக்கு முன்பு ல சப்பலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து  விட்டு

பக்கத்தில்  இருக்கும்  உணவகத்தில் ரீ குடிக்க  சென்றோம்

அறிமுகமில்லாத கடை

ஆனால்  உள்ளே  போய் அமர்ந்ததும் தலைவரின் பெரிய போட்டோ ஒன்று கம்பீரமாக  இருந்தது மனதைக்கவர்ந்தது

 

அண்மையில் பரிசுக்கு வெளியே ஒரு தமிழ்க்கடைக்கு  சென்றிருந்தேன்

அங்கேயும் தலைவர்  படம்  மட்டுமல்ல

காசு பரிவர்த்தனை  செய்வதால் காசுப்பெறுமதி  மதிப்பீடு

இலங்கை என்பதற்கு  பதிலாக தமிழீழம்  என்று பெரிய திரையில்  ஓடிக்கொண்டிருந்தது

இன்றையநிலையில்  ல  சப்பலில்  இதைச்செய்வதால் தொல்லைகளும்  அவமானமுமே மிஞ்சும்?

ஆனால்  சிறிது  சிறிதாக இவ்வாறான முன்னெடுப்புக்கள் எமது நிலைப்பாடுகளை வெளிக்கொணர

நாம் சிலவற்றை மறப்பதற்கில்லை என சொல்ல  பயன்படக்கூடும்

 

அதே போலத்தான் தியாகி திலீபன், அன்னைபூபதி படங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

தலைவரின் படம் கல்லாவிற்கு மேல் இருப்பது ஓகே.

ஆனால் சிறுவன் பாலசந்திரன் கடைசியாக பிஸ்கேட் சாப்பிட்ட படத்தை பார்த்த படி எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?🙁

அதே போலத்தான் தியாகி திலீபன், அன்னைபூபதி படங்களும்.

பிரெஞ்சுக்காரர்களுக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

பிரெஞ்சுக்காரர்களுக்கு????

அவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் இருந்தால் ஏதோ படம் என கடந்து போவார்கள் - ஆனால் என்ன என்று கேட்டு கதையை சொன்னால் சஞ்சலப்படவே செய்வார்கள் என நினைக்கிறேன்.

குர்திஸ்/ பலஸ்தீனிய கொடுமைகள்/தியாகங்கள் படமாக தொங்கும் ஒரு கடைக்கு நீங்கள் ரெண்டாம் தரம் சாப்பிட போவீர்களா? நான் போக மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் இருந்தால் ஏதோ படம் என கடந்து போவார்கள் - ஆனால் என்ன என்று கேட்டு கதையை சொன்னால் சஞ்சலப்படவே செய்வார்கள் என நினைக்கிறேன்.

குர்திஸ்/ பலஸ்தீனிய கொடுமைகள்/தியாகங்கள் படமாக தொங்கும் ஒரு கடைக்கு நீங்கள் ரெண்டாம் தரம் சாப்பிட போவீர்களா? நான் போக மாட்டேன்.

ம்ம்ம்

வியாபாரம் என்று  பார்த்தால்  நட்டத்தை  தவிர  வேறு ஒன்றும் வராது  இவருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

வியாபாரம் என்று  பார்த்தால்  நட்டத்தை  தவிர  வேறு ஒன்றும் வராது  இவருக்கு?

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பரப்புரைதான் குறிக்கோள் என்றால் வேறு வினைதிறனானவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை மடிச்சு வை.. பிரபாகரன் படத்தை ஒளிச்சு வை.. புலிகளை மற.. சிங்களவனை மன்னி.. இதுதான் இப்ப எங்கள் சிலரின் தாரக மந்திரம்.

இந்தச் சூழலில்.. இப்படி ஒரு சங்கதி சங்கடமாகத்தான் இருக்கும்..

ஆனால்.. இந்த ஓவியங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்றை தமிழில் எழுதுவதோடு இல்லாமல்.. பிரஞ்ச்.. ஆங்கிலத்தில் எழுதி வைப்பது.. தமிழர்களை விட.. தியாகங்களை அதிகம் மதிக்கத் தெரிந்த.. பிற நாட்டவர்களிடம்.. அது தகவலாகக் காவப்பட சாத்தியம் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் தவறான விஷயம்,

சொந்த வியாபார நோக்கத்துக்காக, தேச விடுதலைக்காய் இறந்தவர்களை விளம்பரமாக உபயோகிப்பது ஒருவகை குற்றமும்கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

படம்

படம் தான்

ஆனால்  பாருங்கோ

இன்றைய  ல  சப்பலின் நிலவரப்படி

மகிந்த  அல்லது  கோத்தபாய படத்துக்கு  தான் கியூ அதிகம்....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

முற்றிலும் தவறான விஷயம்,

சொந்த வியாபார நோக்கத்துக்காக, தேச விடுதலைக்காய் இறந்தவர்களை விளம்பரமாக உபயோகிப்பது ஒருவகை குற்றமும்கூட.

நானும் உங்கள் இருவரின் கோணத்திலும் யோசித்தேன். ஆனால் ஆர்வ மிகுதியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

1 hour ago, நந்தன் said:

படம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை, 

அவர் படம் காட்டட்டும் அல்லது வியாபர நோக்கமாக இருக்கட்டும், ஆனால் கிடைக்கும் இலாபத்தில் ஓர் 10% ஆவது தாயக மக்களுக்காக அனுப்பினால் போதும் 🙏.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

என்னைப் பொறுத்தவரை, 

அவர் படம் காட்டட்டும் அல்லது வியாபர நோக்கமாக இருக்கட்டும், ஆனால் கிடைக்கும் இலாபத்தில் ஓர் 10% ஆவது தாயக மக்களுக்காக அனுப்பினால் போதும் 🙏.

அப்ப பூர்வீகத்தை  ஒருக்கா  தேடிப்பார்ப்பம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭

ஒரு சிலருக்கு அப்படி இருக்கலாம் 

ஆனால் எனக்கு இவர்களையெல்லாம் இறக்க விட்டு விட்டோமே என்ற மனநிலையே அப்படியே ஊருல இடித்து ஒதுக்கப்பட்ட துயிலும் இல்லங்களை கடந்த நிலைதான்😴😴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.