Jump to content

பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்!

AdminSeptember 25, 2021

பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

அத்தோடு மிகவும் சுத்தமான முறையில் குறித்த உணவகம் பேணப்படுகிறது.

இது தமிழ்த்தேசிய உணர்வாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது எனவும், இவ்வாறான ஓர் உணவகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்று அதன் உரிமையாளர் உணர்வோடு எரிமலைக்குத் தெரிவித்தார்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)
spacer.png

 

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

http://www.errimalai.com/?p=67487

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் சொல்வதற்கில்லை 🤔🙄🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்றும் சொல்வதற்கில்லை 🤔🙄🙄🙄

சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவகத்திற்கு  இன்னும்  செல்லவில்லை

ஆனால்  சில  ஆண்டுகளுக்கு முன்பு ல சப்பலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து  விட்டு

பக்கத்தில்  இருக்கும்  உணவகத்தில் ரீ குடிக்க  சென்றோம்

அறிமுகமில்லாத கடை

ஆனால்  உள்ளே  போய் அமர்ந்ததும் தலைவரின் பெரிய போட்டோ ஒன்று கம்பீரமாக  இருந்தது மனதைக்கவர்ந்தது

 

அண்மையில் பரிசுக்கு வெளியே ஒரு தமிழ்க்கடைக்கு  சென்றிருந்தேன்

அங்கேயும் தலைவர்  படம்  மட்டுமல்ல

காசு பரிவர்த்தனை  செய்வதால் காசுப்பெறுமதி  மதிப்பீடு

இலங்கை என்பதற்கு  பதிலாக தமிழீழம்  என்று பெரிய திரையில்  ஓடிக்கொண்டிருந்தது

இன்றையநிலையில்  ல  சப்பலில்  இதைச்செய்வதால் தொல்லைகளும்  அவமானமுமே மிஞ்சும்?

ஆனால்  சிறிது  சிறிதாக இவ்வாறான முன்னெடுப்புக்கள் எமது நிலைப்பாடுகளை வெளிக்கொணர

நாம் சிலவற்றை மறப்பதற்கில்லை என சொல்ல  பயன்படக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் படம் கல்லாவிற்கு மேல் இருப்பது ஓகே.

ஆனால் சிறுவன் பாலசந்திரன் கடைசியாக பிஸ்கேட் சாப்பிட்ட படத்தை பார்த்த படி எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?🙁

 

18 minutes ago, விசுகு said:

இந்த உணவகத்திற்கு  இன்னும்  செல்லவில்லை

ஆனால்  சில  ஆண்டுகளுக்கு முன்பு ல சப்பலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து  விட்டு

பக்கத்தில்  இருக்கும்  உணவகத்தில் ரீ குடிக்க  சென்றோம்

அறிமுகமில்லாத கடை

ஆனால்  உள்ளே  போய் அமர்ந்ததும் தலைவரின் பெரிய போட்டோ ஒன்று கம்பீரமாக  இருந்தது மனதைக்கவர்ந்தது

 

அண்மையில் பரிசுக்கு வெளியே ஒரு தமிழ்க்கடைக்கு  சென்றிருந்தேன்

அங்கேயும் தலைவர்  படம்  மட்டுமல்ல

காசு பரிவர்த்தனை  செய்வதால் காசுப்பெறுமதி  மதிப்பீடு

இலங்கை என்பதற்கு  பதிலாக தமிழீழம்  என்று பெரிய திரையில்  ஓடிக்கொண்டிருந்தது

இன்றையநிலையில்  ல  சப்பலில்  இதைச்செய்வதால் தொல்லைகளும்  அவமானமுமே மிஞ்சும்?

ஆனால்  சிறிது  சிறிதாக இவ்வாறான முன்னெடுப்புக்கள் எமது நிலைப்பாடுகளை வெளிக்கொணர

நாம் சிலவற்றை மறப்பதற்கில்லை என சொல்ல  பயன்படக்கூடும்

 

அதே போலத்தான் தியாகி திலீபன், அன்னைபூபதி படங்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

தலைவரின் படம் கல்லாவிற்கு மேல் இருப்பது ஓகே.

ஆனால் சிறுவன் பாலசந்திரன் கடைசியாக பிஸ்கேட் சாப்பிட்ட படத்தை பார்த்த படி எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்?🙁

அதே போலத்தான் தியாகி திலீபன், அன்னைபூபதி படங்களும்.

பிரெஞ்சுக்காரர்களுக்கு????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

பிரெஞ்சுக்காரர்களுக்கு????

அவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் இருந்தால் ஏதோ படம் என கடந்து போவார்கள் - ஆனால் என்ன என்று கேட்டு கதையை சொன்னால் சஞ்சலப்படவே செய்வார்கள் என நினைக்கிறேன்.

குர்திஸ்/ பலஸ்தீனிய கொடுமைகள்/தியாகங்கள் படமாக தொங்கும் ஒரு கடைக்கு நீங்கள் ரெண்டாம் தரம் சாப்பிட போவீர்களா? நான் போக மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவர்களுக்கு அது என்னவென்று தெரியாமல் இருந்தால் ஏதோ படம் என கடந்து போவார்கள் - ஆனால் என்ன என்று கேட்டு கதையை சொன்னால் சஞ்சலப்படவே செய்வார்கள் என நினைக்கிறேன்.

குர்திஸ்/ பலஸ்தீனிய கொடுமைகள்/தியாகங்கள் படமாக தொங்கும் ஒரு கடைக்கு நீங்கள் ரெண்டாம் தரம் சாப்பிட போவீர்களா? நான் போக மாட்டேன்.

ம்ம்ம்

வியாபாரம் என்று  பார்த்தால்  நட்டத்தை  தவிர  வேறு ஒன்றும் வராது  இவருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

வியாபாரம் என்று  பார்த்தால்  நட்டத்தை  தவிர  வேறு ஒன்றும் வராது  இவருக்கு?

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பரப்புரைதான் குறிக்கோள் என்றால் வேறு வினைதிறனானவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை மடிச்சு வை.. பிரபாகரன் படத்தை ஒளிச்சு வை.. புலிகளை மற.. சிங்களவனை மன்னி.. இதுதான் இப்ப எங்கள் சிலரின் தாரக மந்திரம்.

இந்தச் சூழலில்.. இப்படி ஒரு சங்கதி சங்கடமாகத்தான் இருக்கும்..

ஆனால்.. இந்த ஓவியங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்றை தமிழில் எழுதுவதோடு இல்லாமல்.. பிரஞ்ச்.. ஆங்கிலத்தில் எழுதி வைப்பது.. தமிழர்களை விட.. தியாகங்களை அதிகம் மதிக்கத் தெரிந்த.. பிற நாட்டவர்களிடம்.. அது தகவலாகக் காவப்பட சாத்தியம் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் தவறான விஷயம்,

சொந்த வியாபார நோக்கத்துக்காக, தேச விடுதலைக்காய் இறந்தவர்களை விளம்பரமாக உபயோகிப்பது ஒருவகை குற்றமும்கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

படம்

படம் தான்

ஆனால்  பாருங்கோ

இன்றைய  ல  சப்பலின் நிலவரப்படி

மகிந்த  அல்லது  கோத்தபாய படத்துக்கு  தான் கியூ அதிகம்....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

முற்றிலும் தவறான விஷயம்,

சொந்த வியாபார நோக்கத்துக்காக, தேச விடுதலைக்காய் இறந்தவர்களை விளம்பரமாக உபயோகிப்பது ஒருவகை குற்றமும்கூட.

நானும் உங்கள் இருவரின் கோணத்திலும் யோசித்தேன். ஆனால் ஆர்வ மிகுதியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

1 hour ago, நந்தன் said:

படம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை, 

அவர் படம் காட்டட்டும் அல்லது வியாபர நோக்கமாக இருக்கட்டும், ஆனால் கிடைக்கும் இலாபத்தில் ஓர் 10% ஆவது தாயக மக்களுக்காக அனுப்பினால் போதும் 🙏.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

என்னைப் பொறுத்தவரை, 

அவர் படம் காட்டட்டும் அல்லது வியாபர நோக்கமாக இருக்கட்டும், ஆனால் கிடைக்கும் இலாபத்தில் ஓர் 10% ஆவது தாயக மக்களுக்காக அனுப்பினால் போதும் 🙏.

அப்ப பூர்வீகத்தை  ஒருக்கா  தேடிப்பார்ப்பம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சுவர்களில் இருப்பவர்களின் தியாகங்களால் நாங்கள் இன்று சிறந்த உணவுகளை பாரிஸில் உண்ணுகின்றோம் என்று தோத்திரம் சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்கலாம்🤭

ஒரு சிலருக்கு அப்படி இருக்கலாம் 

ஆனால் எனக்கு இவர்களையெல்லாம் இறக்க விட்டு விட்டோமே என்ற மனநிலையே அப்படியே ஊருல இடித்து ஒதுக்கப்பட்ட துயிலும் இல்லங்களை கடந்த நிலைதான்😴😴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.