Jump to content

யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A

By Shana
jaffna-hindhu-college.jpg

 

நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.

கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
 

 

http://www.battinews.com/2021/09/56-9a.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் முன்னணி பாடசாலைகளில் 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை…
 
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி/Hartley College-21பேர்.
யாழ் இந்துக் கல்லூரி/Jaffna Hindu College-56பேர்.
வேம்படி மகளிர் கல்லூரி/Vembadi Girls' High School-58பேர்.
மகாஜனக் கல்லூரி/Mahajana College-2பேர்
 
வேம்படி முகநூலில் இருந்து.. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டிடம், குமாரசாமி மண்டபம்....

இனிய நிணைவுகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:
யாழ் முன்னணி பாடசாலைகளில் 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை…
 
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி/Hartley College-21பேர்.
யாழ் இந்துக் கல்லூரி/Jaffna Hindu College-56பேர்.
வேம்படி மகளிர் கல்லூரி/Vembadi Girls' High School-58பேர்.
மகாஜனக் கல்லூரி/Mahajana College-2பேர்
 
வேம்படி முகநூலில் இருந்து.. 

தம்பி கலியாணம் கட்டினாப் பிறகும்

வேம்படி முகநுhலுக்குள்ள தான் அலையிறீங்க போல.

நல்லது நல்லது.

உங்கள் கட்சி தொகையை போட்டு விட்டீர்கள்.

எங்கள் கட்சி தொகையை யாரும் போடலையே?

அதையும் ஒருக்கா போடுங்களேன் பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த கட்டிடம், குமாரசாமி மண்டபம்....

இனிய நிணைவுகள்....

நாங்கள் படித்த காலத்தில் குமாரசாமி மண்டபம் சங்கீதம் வரைதல் ஆகிய இரு பாடங்கள் மட்டுமே நடந்தன.

மேல்மாடி ஏதாவது வெளியார் அல்லது ஓஎல் சோதனைகளுக்காக மட்டுமே திறக்கப்படும்.

கட்டடங்கள் முடிவடையாத நிலையிலேயே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகள் கிடைப்பதில்லை வடகிழக்கில் இதை வைத்து உயர்தரம்  மட்டும் படிக்கலாம் அவ்வளவுதான்.

உயர்தர பரீட்சை முடிவுகளே தொழிலையும் மேற்படிப்பை உறுதி செய்கிறது

வாழ்த்துகள் அனைவருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உயர்தரத்தில் அதிகமான பெறுபேறுகள் கிடைப்பதில்லை வடகிழக்கில் இதை வைத்து உயர்தரம்  மட்டும் படிக்கலாம் அவ்வளவுதான்.

உயர்தர பரீட்சை முடிவுகளே தொழிலையும் மேற்படிப்பை உறுதி செய்கிறது

வாழ்த்துகள் அனைவருக்கும்

பிரிடனில்.... சாதாரண தரம் வரை கட்டாயம் பள்ளிக்கு போவதை பெற்றோர் உறுதி செய்யவேண்டும்.

அதன் பிறகு பெடி, பெட்டயள் தமது காரை தாமே ஓடவேண்டியது தான் நிலை.... (இது வெள்ளைகள் கதை).

ஆனாலும், இலங்கை, இந்தியா போலல்லாமல், இங்கே ஜம்பது வயதிலும் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடி கரை சேர முடியும்.

உங்களுக்கு வயசு போட்டுதே என்று, முதலாளி சொன்னால், சட்டப்படி குற்றம்.

 

Link to comment
Share on other sites

வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
 
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
May be an image of 1 person and standing
 
fb
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 16:27, ஈழப்பிரியன் said:

தம்பி கலியாணம் கட்டினாப் பிறகும்

வேம்படி முகநுhலுக்குள்ள தான் அலையிறீங்க போல.

அப்போதும் சரி.. இப்பவும் சரி... இந்த பின்னால அலையுறது நமக்கு சரிப்பட்டு வராத விடயம்.

தகவல் திரட்ட அங்கால எட்டிப்பார்ப்பதுண்டு. அவ்வளவும் தான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா .....எல்லோருக்கும் சித்தி கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி விவசாயம் மீன்பிடிதான் தமிழர்பகுதியின் வேலைவாய்ப்பை பெறுகின்ற பிரதான மூலவளங்கள்.

எல்லோராலும் அனைத்து தொழிலும் செய்யமுடியாது,

ஏழை நடுத்தர வர்க்க  இளம்  சந்ததிக்கு இனி படிப்பைவிட்டால் எதிர்காலத்தில் தலைநிமிர வேறு வழியே இல்லை, அதனாலதான் வெறிதனமா படிச்சு தாறு மாறா ரிசல்ட் எகிறுதெண்டு நினைக்கிறன்.

தனிக்காட்டு ராஜா சொன்னமாதிரி A/L'லிலும் கலக்கினாதான் இலக்குகள் ஓரளவிற்கு முற்றுப்பெறும்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 21:05, nunavilan said:
வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!
 
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.
இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.
May be an image of 1 person and standing
 
fb

 

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும், ஏன் அந்த 3-4 பாடசாலைகள்?

குறிப்பாக, அந்த பாடசாலைகள் கற்பித்ததா, அல்லது மாணவர் தனியார் வகுப்புகளில் கற்று தேறியதை பாடசாலைகள் மூலம் accreditation செய்து உள்ளார்களா?   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text that says "AL Qualified Based on OL 2020 Results Jaffna 69.62% Kilinochchi 65.79% Legend Total 13,000 Mullaitivu 69.18% Vavuniya 69.51% Mannar 75.25 FirstTime Repeat Districts ALQualified% 65.79 66.66 69.18 Anuradapura Puttalam 72.16% Trincomalee 66.66% 71.70 71.71 Kurunegala 76.53% Polonnaruwa 71.7% 72.77 72.78 73.68 Batticaloa 71.71% Matale 71.34% Gampaha 72.77% 75.25 75.27 75.60 Kegalle 75.6% Kandy 76.84% Nuwara Eliya 72.78% Colombo 76.53 76.84 Ampara 76.13% Badulla 74.62% Ratnapura 73.74% Kalutara 73.6 3.68% 78.94 Monaragala 75.65% 81.93 78.94% Matara 81.17% This was produced based basemap& included praccals Hambantota 81.93% 1:1,500,000 0510 30 https://ctmcq.home.blo October 2021"

கடந்த ஜி சி ஈ சாதாரண தர முடிவுகளில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பொதுவாகப் பின்னடைந்துள்ளன.. சொறீலங்காவின் ஏனைய தெற்கு.. மேற்கு... மத்திய.. மாகாணங்களோடு ஒப்பிடும் போது.

இதற்கு வழமை போல் வெளிநாட்டுக் காசு.. சொகுசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் காது புளிக்கக் கேட்க முடியுது..

வெளிநாட்டுக் காசு தான் காரணம் என்றால்..

வடக்குக் கிழக்கில்.. போதிய மாணவர்கள் இன்மையால் ஏன்.. பாடசாலைகளை மூட வேண்டி இருக்குது..??!

எத்தனை பாடசாலைகள் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளன..?!

எத்தனை பாடசாலைகள்.. குறிப்பாக பிந்தங்கிய பிரதேசப் பாடசாலைகள்.. போதிய ஆசிரியர்கள் இன்றி உள்ளன..?!

எத்தனை போரால் சேதமாக்கப்பட்ட பாடசாலைகள் மீள திருத்தி.. போதிய வசதிகளோடு கையளிக்கப்பட்டுள்ளன..?!

எத்தனை வடக்குக் கிழக்கு மாணவர்கள்.. உள்ளூரில் இன்னும் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்..??!

எத்தனை மாணவர்கள் போரில் பெற்றோரை அல்லது காவலர்களை இழந்து.. தனிமைப்பட்டு அல்லது போதிய ஆதரவின்றி வாழ்கின்றனர்..?! இவர்களுக்கு என்ன அடிப்படைவசதிகள் அரசினால் செய்யப்பட்டுள்ளன.. மீண்டும் பாடசாலைக்கு போவதற்கு..??!

என் கண்ணால் கண்டேன்.. யாழ் நகரில் ஒரு பிரல்பல்ய பாடசாலை மாணவன்.. பாடசாலை முடிந்த கையோடு.. அதே சீருடையில் நின்று ஊதிபத்தி விற்கிறான். அவனிடம் விசாரித்த போது தனது தங்கைக்கு புத்தகப் பை இல்லை.. அதனை வாங்கிக் கொடுக்கவே உழைக்கிறேன் என்றான். அவனுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவினேன்.. அவன் சொன்னதை உண்மை என்றே நம்புகிறேன்.. ஏனெனில்.. அவன் கண்ணீர் அதனை செப்பியது.

இப்படி எத்தனை பிள்ளைகள்.. மேலும்.. போரில் கணவரை அல்லது மனைவியை இழந்து பிள்ளைகளை சரியாகக் கவனிக்க முடியாத பெற்றோர்..??! அவர்களின் வருவாய்க்கு.. பிள்ளைகளைப் படிப்பிக்க.. என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன...??!

எல்லாத்துக்கும் வெளிநாட்டுக்காரரும்.. வெளிநாட்டுக்காசும்.. வெளிநாட்டுப் பகட்டும்.. அல்ல பதில்..!

அவை காரணமில்லை என்று சொல்லவில்லை.. ஆனால்.. அதையும் தாண்டிய உள்ளூரில்.. சீரமைக்கப்பட வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியம் ஆகும்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தான் அதிகம் கல்வி வீழ்ச்சியை காண்பிக்கிறது குறிப்பாக 2009 மே க்குப் பின்.. ஏன்..??!

இதன் பின்னணியில்.. இராணுவ பிரசன்னம்.. அது சார்ந்து.. கஞ்சா.. பாலியல்.. பொழுதுப்போக்கு அம்சங்கள் என்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கும் நடவடிக்கைகளும்.. தாக்கம் செய்கின்றன. 

இவை எல்லாம் சேர்த்துப் பார்க்கப்பட்டு சீரமைக்கப்பாட்டால் இன்றி.. தமிழர் பிரதேச கல்வித்தரம் திடீர் என்று உயர்வு காண்பது சாத்தியமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரீட்சையில் யாழ் தான் கடைசி இடமாமே:shocked: [நம்ப முடிகிறதா ? மட்டு அதற்கு முன் உள்ளது ...இணைய மூலம் கற்பதில் குறைபாடுகள் இருக்கலாம் ...ஆசியர்களும் சூமில் சும்மா நேரத்தை கடத்தி இருப்பர்[அவர்களை கண்காணிக்க ஒருத்தரும் இல்லை.] அல்லது எப்படி படிப்பிப்பது  என்று தெரியாமல் இருக்கும்...பெற்றோர்களும் கவனமில்லை .பிள்ளைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதேயில்லை ....எல்லா மாணவர்களுக்கும் இணைய வசதி இல்லை ....எல்லாவற்றையும் விட வெளிநாட்டு காசு போன்றவை வீழ்ச்சிக்கு காரணம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

அவை காரணமில்லை என்று சொல்லவில்லை.. ஆனால்.. அதையும் தாண்டிய உள்ளூரில்.. சீரமைக்கப்பட வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவற்றிலும் கவனம் செலுத்தப்படுதல் அவசியம் ஆகும்.

நீங்கள் யாழ் இணையத்தில் இந்த இணைப்பை இணைத்திருந்தீர்கள்.. நன்றாக ஆராய்ந்து பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.. 

இதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? 

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவ சங்கங்கள் தொடங்கி சில பொறுப்புகளை உணர்ந்து செயல்களை செய்வதற்கு எது தடைபோடுகிறது? 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.