Jump to content

பெண்களை அடிமைகளாக விற்க பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் - எச்சரித்த ஆப்பிள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை அடிமைகளாக விற்க பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் - எச்சரித்த ஆப்பிள்

  • ஓவன் பின்னெல்
  • பிபிசி செய்திகள், அரபு சேவை
22 நிமிடங்களுக்கு முன்னர்
வீட்டு வேலை செய்யும் பெண்கள் சட்ட விரோதமாக வாங்கப்படுவதை பிபிசி கண்டுபிடித்தது
 
படக்குறிப்பு,

வீட்டு வேலை செய்யும் பெண்கள் சட்ட விரோதமாக வாங்கப்படுவதை பிபிசி கண்டுபிடித்தது

வீட்டிலேயே அடிமையாக இருப்பவர்களை விற்பனை செய்ய ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் உட்பட பல தளங்கள் பயன்படுத்தப்படுவதை, கடந்த 2019ஆம் ஆண்டு பிபிசி கண்டுபிடித்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் தன் ஆப் ஸ்டோர் தளத்திலிருந்து ஃபேஸ்புக் மற்றும் அதன் சேவைகளை நீக்கப் போவதாக எச்சரித்தது.

இப்படி ஆப்பிள் நிறுவனம் எச்சரித்ததை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஃபேஸ்புக் ஃபைல்ஸ் என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் மிகத் தெளிவாகவும், வலுவாகவும் மனிதர்கள் சுரண்டப்படுவதை தடை செய்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் தன் தளங்களில் மனிதர்கள் கடத்தப்படுவதை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும் கூறியுள்ளது.

"எங்கள் தளத்தில் இருந்து கொண்டு, மற்றவர்களை சுரண்ட விரும்புபவர்களை தடுப்பது எங்கள் குறிக்கோளாக இருந்து வருகிறது" என்றும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.

அடிமைத்தனம்

இன்ஸ்டாகிராமில் சட்டவிரோதமாக விற்கப்படும் பெண் குறித்த விளம்பரம்
 
படக்குறிப்பு,

இன்ஸ்டாகிராமில் சட்டவிரோதமாக விற்கப்படும் பெண் குறித்த விளம்பரம்

வீட்டு வேலை செய்பவர்களை சட்டவிரோதமாக இணையத்தில் வாங்குவதும் விற்பதுமாக நடைபெறும் கருப்பு சந்தை வளர்ந்து வருவது குறித்து பிபிசி அரபு செய்திப் பிரிவு தன் விசாரணையில் வெளிக்கொணர்ந்தது.

பெண்கள் அடிமையைப் போல் வாழ்வது, திரைக்கு பின்னாலேயே வைக்கப்படுவது, அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது, அவ்விடத்தை விட்டு வெளியேற முடியாத சூழல், அதிகம் விலை கோருபவருக்கு விற்கப்படுவது போன்ற விஷயங்கள் மீது இவ்விசாரணை ஒளி பாய்ச்சியது.

இப்படி பெண்களை விற்பது ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உட்பட பல செயலிகளைப் பயன்படுத்தி நடந்துள்ளது.

இந்த சட்டவிரோத வணிகம் தொடர்பான ஹேஷ்டேகுகள் பெரும்பாலும் அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டன. இந்த ஹேஷ்டேகுகள் செளதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் பயன்படுத்தப்பட்டன.

பெரும்பாலும் பெண்கள் இனத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சில ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படுவார்கள்.

பிபிசியின் விசாரணைக்குப் பிறகு, மனித கடத்தல்களை எதிர்கொள்ள அது தொடர்பாக இன்னும் வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆப்பிள் நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்திடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.

அதன் பிறகும் ஃபேஸ்புக் வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மனித கடத்தல் பிரச்சனையை தீர்க்கவில்லை எனில், தன் ஆப் ஸ்டோரிலிருந்து ஃபேஸ்புக் சேவைகளை நீக்குவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்ததாக கூறியுள்ளது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

ஃபேஸ்புக் அறிக்கை

இன்ஸ்டாகிராம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இன்ஸ்டாகிராம்

பிபிசி விசாரணைக்கு முன்பே, 2019ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் உள்விவகார அறிக்கை ஒன்றில், பெண்களை அடிமையாக விற்பது தங்களுக்கு தெரியும் என்றும், அது டொடர்பாக விசாரணை நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளது ஃபேஸ்புக். அந்த உள்விவகார அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது வால் ஸ்ட்ரீக் ஜர்னல்.

அந்த அறிக்கையில், "ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெண்கள் அடிமையாக விற்கப்படுவது பிபிசி விசாரணை மற்றும் அப்பிள் பிரச்சனைக்கு முன்பே தெரியுமா?

"ஆம், பெண்கள் எப்படி வீட்டு அடிமைகளாக விற்கப்படுகிறார்கள், இந்த சட்டவிரோத நடவடிக்கை எப்படி ஃபேஸ்புக் தளத்துக்குள் வந்தது, எப்படி ஆட்களை தேர்வு செய்கிறார்கள், அவர்களுக்கு என்னவெல்லாம் செய்து கொடுக்கப்படுகிறது, அவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என 2018ஆம் ஆண்டு முழுவதும் மற்றும் 2019ஆம் ஆண்டில் முற்பகுதி வரை, நாங்கள் உலகம் முழுக்க ஒரு விழிப்புணர்வு செயல்பாட்டை நடத்தினோம்."

2019ஆம் ஆண்டு பிபிசியின் செய்தி வெளியீட்டுக்குப் பிறகு, ஃபேஸ்புக் பெண்களை அடிமைகளாக விற்க பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளை தடை செய்தது, இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்டன.

"எங்கள் தளங்களில் இது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க சட்ட அமலாக்கம், நிபுணர் குழுக்கள் மற்றும் தொழில்துறையினருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்" என விசாரணைக்கு பதிலளித்தது.

பிபிசி இது தொடர்பான செய்தியை வெளியிட்ட பிறகும், அத்தளத்தில் பெண்கள் விற்பனை தொடர்பான விளம்பரங்கள் இருந்ததை பிபிசி கண்டுபிடித்தது.

ஆப்பிள் நடவடிக்கை

ஆப்பிள் நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆப்பிள் நிறுவனம்

பிபிசி இந்த விவரங்களை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடம் கூறி எச்சரித்தது, ஏனெனில் பெண்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட பயன்பாடுகள் மற்றும் சேவைகள் அவர்களின் ஸ்மார்ட்போன் ஆப் ஸ்டோர்கள் மூலம் கிடைக்கின்றன.

சட்டவிரோத விற்பனை என்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் செயலி மேம்பாட்டாளர்கள் மற்றும் பயனர்களுக்கான விதிமுறைகளை மீறுவதாகும் - இரு நிறுவனங்களுமே சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க மேம்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறின.

"இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் கவலைக்குரியவை" என்றது கூகுள். செயலி மேம்பாட்டாளர்கள் அதை தடுக்க உடனடி நடிவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்ததாகக் கூறியது ஆப்பிள்.

ஃபேஸ்புக் நடவடிக்கை

ஃபேஸ்புக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஃபேஸ்புக்

2019ஆம் ஆண்டில் பிபிசி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டிய பிறகு ஃபேஸ்புக் தன் நடவடிக்கையை வேகப்படுத்தியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது.

மனிதர்களைக் கடத்துவது தொடர்பான தேடுவதல் வேட்டை நடத்தியபோது சுமார் 3,00,000 விதிமீறல்கள் அல்லது விதிமீறல் நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் சிக்கியதாகவும், 1,000 கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறுகிறது அப்பத்திரிகை.

பிபிசியின் அறிக்கை, இது தொடர்பாக ஐநா சபையில் கேள்வி எழுப்ப வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

"பிபிசியின் செய்தியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு விசாரணையை நடத்தியது. அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் தளம் ஒரு பெரிய பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் 700 இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கப்பட்டன, பல விதிமீறல் ஹேஷ்டேகுகள் நீக்கப்பட்டன" என்று கடந்த ஜூன் 2020-ல் தாம் வெளியிட்ட விவரங்களில் ஃபேஸ்புக் எழுதி இருந்தது.

அதற்கு அடுத்த மாதம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில், பெண்களை அடிமைகளாக நடத்துவது தொடர்பாக அரபு மொழியில் பேசப்பட்டிருந்த 1.3 லட்சம் ஆடியோ பதிவுகளை நீக்கிவிட்டதாக கூறியது ஃபேஸ்புக்.

அடிமைத்தனம் தொடர்பான பதிவுகளை முன்கூட்டியே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளதாக ஃபேஸ்புக் கூறியது. இது "அரபு மற்றும் ஆங்கிலத்தில் ஜனவரி 2020 முதல் இன்றுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்க" உதவியது எனவும் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-58685329

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.