Jump to content

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

spacer.png
 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 24) இரவு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சந்தித்தபோது இருவரும் சரளமாக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தது உலகம் முழுதும் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் நரேந்திர மோடியை மாலை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருபெரும் நாடுகளின் தலைவர்களின் நகைச்சுவையால் வெடிச்சிரிப்புகள் ஜொலித்தன.

பைடன் பேசுகையில், "எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் நான் 1972 இல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்பதற்கு முன், மும்பையில் பைடன் என்ற நபரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவரை அதன் பின்னால் நான் தொடர முடியவில்லை என்று சொன்னேன். அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் ஐந்து பிடன்கள் இருப்பதாக என்னிடம் இந்திய பத்திரிக்கைகள் தெரிவித்தன, "என்று சொல்லி சிரித்தார் பைடன்.

இந்த கருத்துக்கு பிரதமர் மோடி சிரித்தார்.

அமெரிக்க அதிபர் தொடர்ந்தார், "அப்புறம் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக ஜார்ஜ் பைடன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன்” என்று மீண்டும் சிரித்தவர், “கடைசியில் அந்த ஜார்ஜ் பைடன் ஒரு இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். என்னால் அவரையும் அதன் பின்னால் கண்காணிக்க முடியவில்லை. அதனால் இந்த சந்திப்பு எனக்கு அவற்றை அறிந்துகொள்ள உதவும் ” என்றவர் மோடியைப் பார்க்க அரங்கமே சிரித்தது.

அதன் பின்னர், “ நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு வலுவாகவும் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். நாம் இருவரும் எவ்வித சவால்களையும் இணைந்தே சந்திப்போம்” என்றார் பைடன்.

இதன் பின் பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் பிடென் குடும்பப்பெயர்களைப் பற்றி பேசினீர்கள். நீங்கள் அதை என்னிடம் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அது தொடர்பான ஆவணங்களை சேகரிக்க முயன்றேன். இப்போது கூட நான் சில ஆவணங்களுடன் வந்திருக்கிறேன். ஒருவேளை அந்த ஆவணங்கள் உங்களுக்கு ஏதேனும் பயன் தரக்கூடும்" என்று ஜோக் அடித்தார்.

வழக்கமாக இது போன்ற முக்கிய தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டும் என்பதை ஏற்கனவே தயார் செய்து ஸ்க்ரிப்ட் ஆக வைத்திருப்பார்கள். அதைத் தாண்டி தலைவர்கள் வேறு எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் அந்த மரபுகளை உடைத்து இந்தியா பற்றிய தனது நினவைலைகளை நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார். மோடியும் அவருக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து மகிழ்ச்சியின் அளவைக் கூட்டினார்.

 

https://minnambalam.com/politics/2021/09/25/19/joe-biden-modi-joint-press-meet-much-laughter-five-bidens-india

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஒரு ஜோக்கர் என்பது பைடனுக்கும் தெரிஞ்சிட்டு🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.