Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்கு கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும், எரி­பொ­
ரு­ளைக் கட­னா­கப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும் இந்­தியா மற்­றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­டன் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது.
இதன்­படி இந்­திய அர­சி­ட­மி­ருந்து 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பில் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என ஜனா­தி­பதியின் செய­லா­ளர் பி.பி.ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார் என்று ‘எக­னமி நெக்ஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

நிலு­வை­யில் உள்ள எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்­கான தொகை­யைச் செலுத்­து­வ­தற்­கும் புதி­தாக எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வ­தற்­குமே இந்­தக் கடன் தொகை பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என­வும் அவர் கூறி­யுள்­ளார்.
இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னம் இரண்டு முக்­கிய உள்­நாட்டு வங்­கி­க­ளில் கிட்­டத்­தட்ட 3.3 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளைக் கட­னா­கப் பெற்­றுள்­ளது என­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஊட­கங்­க­ளில் கூறப்­பட்­டுள்­ள­தைப் போன்று ஈரா­னி­ட­மி­ருந்து கடன் கோரப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்ள அவர், “கட்­டுப்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நாடு­க­ளு­டன் நாங்­கள் கடன்­கள் தொடர்­பான விட­யங்­க­ளைக் கையாள்­வோம்” என­வும் அவர் கூறி­யுள்­ளார். இதே­வேளை, எரி­சக்தி அமைச்­சர் உதய கம்­மன்­பில, ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­ட­மி­ருந்து கடன் அடிப்­ப­டை­யில் எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வது குறித்து பேச்­சு­களை முன்­னெ­டுத்­துள்­ளார்.

கடன் வச­தி­யில் கச்சா எண்­ணெயை கொள்­வ­னவு செய்­வது தொடர்­பில் எமி­ரேட் நேஷ­னல் எண்­ணெய் நிறு­வ­னத்­தின் மூத்த அதி­கா­ரி­க­ளு­ட­னான பேச்­சு­கள் சாத­க­மாக முடி­வ­டைந்­துள்­ளன என­வும் அமைச்­சர் கம்­மன்­பில சில நாள்­க­ளுக்கு முன்­னர் தனது ருவிற்­றர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு! - உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நாடு நாடாய் பிச்சை எடுத்தாலும் தமிழனை  அடக்கணும்  எனும் வெறி கோத்தாவுக்கு இன்னும் இறங்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இப்படி நாடு நாடாய் பிச்சை எடுத்தாலும் தமிழனை  அடக்கணும்  எனும் வெறி கோத்தாவுக்கு இன்னும் இறங்கவில்லை .

எரிபொருள்  தருவீர்களா? பிச்சையை  ஆரம்பித்தது அரசு என்று  தான்  வாசித்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

எரிபொருள்  தருவீர்களா? பிச்சையை  ஆரம்பித்தது அரசு என்று  தான்  வாசித்தேன்

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

இங்கெல்லாம் பல  வருடங்களுக்கு தேவையான அளவு ஒதுக்கி வைத்து  தான் மிச்சத்தை ஓட்டத்துக்கு விடுவார்கள்

சிறீலங்கா முதலில்  வாங்கியே  கடனையே  கொடுக்க வக்கில்லாமல்  உள்ளது

இதில் எங்க  ஒதுக்கிறது?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இங்கெல்லாம் பல  வருடங்களுக்கு தேவையான அளவு ஒதுக்கி வைத்து  தான் மிச்சத்தை ஓட்டத்துக்கு விடுவார்கள்

சிறீலங்கா முதலில்  வாங்கியே  கடனையே  கொடுக்க வக்கில்லாமல்  உள்ளது

இதில் எங்க  ஒதுக்கிறது?? 

பல கோடி வரை காசு அச்சடித்து உள்ளார்கள் இனி செல்லா காசுதான் இலங்கை காசு😒😒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

பல கோடி வரை காசு அச்சடித்து உள்ளார்கள் இனி செல்லா காசுதான் இலங்கை காசு😒😒

நீங்கள் மட்டும்  ஊரில்  இல்லையென்றால் இந்தநிலையை கொண்டாடி  விடுவேன்😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நீங்கள் மட்டும்  ஊரில்  இல்லையென்றால் இந்தநிலையை கொண்டாடி  விடுவேன்😭

நம்ம இனமே இங்கிருக்கு அண்ண 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

நம்ம இனமே இங்கிருக்கு அண்ண 

அது  தான்

மெல்லவும்  முடியாமல்

விழுங்கவும் முடியாமல்?????😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அது  தான்

மெல்லவும்  முடியாமல்

விழுங்கவும் முடியாமல்?????😭

எந்த பக்கமும் போனாலும் அணைகட்டப்பட்ட நிலைதான் இங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எந்த பக்கமும் போனாலும் அணைகட்டப்பட்ட நிலைதான் இங்க 

உலகத்தமிழ்   இனத்திற்கே  இந்தநிலை  தான்...

அழித்தவனுக்கே உதவவேண்டிய நிலையிலும்

அவனுக்கு  அடிபட்டால் வருந்தவேண்டிய  நிலையிலும்

நாம்...?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

எரிபொருள் தாங்கி ஓட்டுனர் பற்றாக்குறையால் விநியோகம் தடைப்பட்டுள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

எரிபொருள் தாங்கி ஓட்டுனர் பற்றாக்குறையால் விநியோகம் தடைப்பட்டுள்ளதாம்.

இலங்கையை விட மோசமா லைன் நிற்குது🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையை விட மோசமா லைன் நிற்குது🥴

நேரத்தை  மினக்கெடுத்தாமல்

றைவர் வேலைக்கு  எழுதிப்போடுங்க  ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம இனமே இங்கிருக்கு அண்ண 

உங்களைப்பற்றி கவலைப்பட முடியாது.இலங்கை மண் கவ்வ வேணும்.அம்புட்டு தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்களைப்பற்றி கவலைப்பட முடியாது.இலங்கை மண் கவ்வ வேணும்.அம்புட்டு தேன்.

அது  உங்கள் நிலைப்பாடு?

ஆனால் எனக்கு 

இலங்கையென்றால் சேர்ந்து  இழுக்கலாம்

சிறீலங்கா  என்றால் மண் கவ்வணும்

தமிழீழத்தை  வளப்படுத்தணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரதி

வீட்டுத்தோட்டத்தை எல்லோரும் செய்திருந்தால் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கலாம் என்டது மாதிரி வீட்டிற்கு வீடு எண்ணை கிணறை தோண்டியிருக்க வேண்டுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையை விட மோசமா லைன் நிற்குது🥴

இது வேற பிரச்சனை தனி. எண்ணை உண்டு, ரைவர் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

@ரதி

வீட்டுத்தோட்டத்தை எல்லோரும் செய்திருந்தால் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கலாம் என்டது மாதிரி வீட்டிற்கு வீடு எண்ணை கிணறை தோண்டியிருக்க வேண்டுமா..?

மகிந்த குடும்பத்துக்கு இன்னும் அவகாசம் குடுங்கோ கிணத்திலை எண்ணை ஊறும் எண்டு சொல்லக்கூடிய ஆக்கள்....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது வேற பிரச்சனை தனி. எண்ணை உண்டு, ரைவர் இல்லை.

என்ன சாப்பாட்டு சாமான்கள் எல்லாம் தட்டுப்பாடாய் கிடக்காம்....மெய்யே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம இனமே இங்கிருக்கு அண்ண 

அந்த இனத்தை இல்லாதொழிக்க எடுத்த நடவடிக்கையே, சிறீ லங்காவை இங்க கொண்டு வந்து நிக்க விட்டிருக்கு. ஆனாலும் வெறி அடங்கவில்லை, தான் செய்தது சரியென்று நிறுவவே நிக்குது.  விட்டு வைத்த குறையையும் நசுக்கிடாமல் தொடருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

என்ன சாப்பாட்டு சாமான்கள் எல்லாம் தட்டுப்பாடாய் கிடக்காம்....மெய்யே? 😁

🤣 பெருசாய் இல்லை.

அங்கின, இங்கின சில சாமான்கள் இல்லாமல் போகலாம்.  எங்கள் சொப்பிங்கில் இன்னும் கடவுளே எண்டு ஒரு குறையும் இல்லை.

ஆனால் கிறிஸ்மஸ் நேரம் அள்ளி அடுக்கிறவைதானே…அப்ப இறுகும் எண்டுதான் சொல்லினம். விளையாட்டு சாமானும் வரத்து குறையுமாம்.

காஸ் விலை ஏற்றத்தால் CO2 பற்றாக்குறையால் பதப்படுத்தும் இறைச்சி போல சாமன்கள் தடைபடலாம் எண்டிச்சினம். ஆனால் இப்ப அரசாங்க காசு கொடுத்து CO2 வை பிறப்பிப்பதால் அது ஓகே போல படுகுது.

பாப்பாம் நாங்கள் கூப்பன் கடை வரிசைல 4 மணத்தியாலம் நிண்டு ஒரு போத்தல் மண் எண்ணை 125 ரூபாவுக்கு வேண்டின ஆக்கள்தானே. சமாளிக்கலாம்😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

🤣பெருசாய் இல்லை.

பைப் தண்ணியை குடிச்சாலும் உந்த பிரிட்டிஷ்காரங்கள் விட்டுக்குடுக்காங்கள்....றோயல் பைமிலி ரத்தம் எல்லாரிலையும் ஓடுது ...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

பைப் தண்ணியை குடிச்சாலும் உந்த பிரிட்டிஷ்காரங்கள் விட்டுக்குடுக்காங்கள்....றோயல் பைமிலி ரத்தம் எல்லாரிலையும் ஓடுது ...🤣

ரோயல் பேமிலியே விட்டு கொடுத்தாலும் நாங்கள் விடமாட்டம்🤣

வெள்ளையே பிளேண்டியும் பாணும் சாப்பிட்டாலும், ஸ்டிரோபெரியும், கிறீமும் இல்லை எண்டால் லண்டன் டமில்ஸ் நாங்கள் பதகளிச்சு போவம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ரோயல் பேமிலியே விட்டு கொடுத்தாலும் நாங்கள் விடமாட்டம்🤣

வெள்ளையே பிளேண்டியும் பாணும் சாப்பிட்டாலும், ஸ்டிரோபெரியும், கிறீமும் இல்லை எண்டால் லண்டன் டமில்ஸ் நாங்கள் பதகளிச்சு போவம்🤣.

அது தானே நாங்கள் ஆரெண்டு கேக்கிறன்? 🤣
நாங்கள் ஊரிலையே.....😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.